வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சினிமா என்பது சிலரை மட்டும் உச்சத்தில் வைத்துவிட்டு பலரை அனாதையாய் , ஏழைகளாய், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாய் படுகுழியில் தள்ளிவிடுகிறது. அதில் கனகாவும் ஒருவர், தனது தாயாரின் இறப்போடு அரைநிலை மனநிலைபாதிக்கப்பட்டவராக, கிடைத்த ஒருசில சினிமா வாய்ப்புக்களும் இல்லாதுபோக தன்னை தனிமை சிறையில் தானே அடைத்துக்கொண்டு வெளியுலக தொடர்புகள் எதுவுமே வைத்துக்கொள்ளாது ஒரு பாழடைந்த பங்களாவில் வாழ்ந்தார் கனகா. நீண்ட நாட்களின் பின்னர் நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்தபோது இப்படியிருந்தார். பெயரை மட்டும் குறிப்பிடாது விட்டிருந்தால் இவர் யாரென்று ஊகிப்பதே மிக கடினமாகியிருக்கும் பலருக்கு.
-
- 0 replies
- 191 views
-
-
ஆர் சுந்தரராஜன், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர்களில் ஒருவர். 'பயணங்கள் முடிவதில்லை', 'மெல்ல திறந்தது கதவு', 'வைதேகி காத்திருந்தாள்', 'ராஜாதி ராஜா', 'அம்மன் கோயில் கிழக்காலே', 'குங்குமச் சிமிழ்', 'என் ஆசை மச்சான்' என வெள்ளி விழா படங்களைத் தந்தவர். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு, இயக்குநராக அவர் ரீ-எண்ட்ரியாகும் படம் 'உயிர் எழுத்து'. "நட்பையும், அதன் தியாகங்களையும் சொல்லும் ஒரு யதார்த்தமான படைப்பு 'உயிர் எழுத்து' என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதை இது: ஒரு அழகான கிராமம். அங்கே ரவுசு கிளப்புற நான்கு நண்பர்கள். ஆட்டம் பாட்டம் கொண்ட்டாம் என ஊர்ல வம்பு இழுப்பதுதான் இவங்களுடைய வேலை. கிராமத்தில் விழா வர, இவர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகிறார்கள். விழாவில் கதாநாய…
-
- 0 replies
- 1k views
-
-
தம்பிக்குப் பேசாம கல்யாணம் செஞ்சு வச்சிருங்க.. சிம்பு குடும்பத்துக்கு ஜோசியர் அட்வைஸ்! சென்னை: திருமணம் செய்துவைத்தால் சிம்புவின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று குடும்ப ஜோதிடர் கூறியதால் தற்போது சிம்புவின் குடும்பமே அவருக்கு தீவிரமாக பெண் தேடி வருகின்றனராம். பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு தற்போது மிகவும் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். மேலும் அவர் நடித்து வரும் படங்களும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. தற்போது பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் வருகின்ற 19 ம் தேதி சிம்புவை நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.மேலும் தமிழ்நாடு முழுவதும் சிம்புவிற்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதால், நாளுக்குநாள் சிம்புவின் மீதான ப…
-
- 0 replies
- 370 views
-
-
தற்போது இணையத்தை கலக்கி வருகிறது சிம்பு, நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்து இருக்கும் புகைப்படம் தான். "பிரிந்த காதலர்கள் இணைந்து விட்டார்களா, பிரபுதேவாவை வெறுப்பு ஏற்றவா?" என்று இணையத்தில் ஆளாளுக்கு செய்தி உலவி வருகிறது. 'வல்லவன்' படத்தில் இருவரிடையே ஏற்பட்ட காதல், அப்படம் வெளிவருவதற்குள் முற்றுப் பெற்றது. அதன் பின்னர், பிரபுதேவா இயக்கத்தில் 'வில்லு' படத்தில் இணைந்தார் நயன். அங்கு அவருடன் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலும் முறிந்து போனது. இந்நிலையில், நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு, நயன்தாரா இருவரும் கலந்து கொண்டார்கள். பல்வேறு நடிகர்கள், நடிகைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நயன்தாராவும், சிம்புவும் திடீரென சந்தித்து பேசிக் க…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிம்புதேவன் இயக்கும் படத்தில் விவேக் ஹீரோவாக நடிக்கிறார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’ ஆகிய படங்களை தொடர்ந்து சிம்புதேவன் புதிய படமொன்றை இயக்குகிறார். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் விவேக் ஹீரோவாக நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதையான இது அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=245
-
- 0 replies
- 877 views
-
-
கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் பிரபல தெலுங்கு நடிகர் `ராம் சரண்`! Ilango BharathyDecember 29, 2020 கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் பிரபல தெலுங்கு நடிகர் `ராம் சரண்`!2020-12-29T08:52:11+05:30சினிமா FacebookTwitterMore பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாதநிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனத…
-
- 0 replies
- 467 views
-
-
கடற்கரையில் நீச்சல் உடையில் சமந்தா! (படங்கள்) நடிகைமார் நீச்சல் உடையில் அலையும் புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப்போது பிரபலமாக உலா வரும். அந்த வகையில் வெளிநாட்டு கடற்கரையில் நீச்சல் உடையில் நடிகை சமந்தாவின் படங்கள் தற்போது உலா வருகின்றன. http://tamil.adaderana.lk/kisukisu/?p=17190
-
- 0 replies
- 951 views
-
-
2016-ன் மிஸ் பண்ணக்கூடாத தெலுங்குப் படங்கள்! #2016Rewind வழக்கம் போலவே தெலுங்கு படங்களில் இந்த வருடமும் நிறைய மசாலா படங்கள் வந்தது. ஆச்சர்யமாக சில புது முயற்சிகளும் வந்தது. அவற்றில் எந்தெந்தப் படம் எப்படி? அந்த ஆச்சர்ய வரவுகள் என்ன என்ற லிஸ்ட் இதோ.... 12.கல்யாண வைபோகமே: சௌரியாவுக்கு அமெரிக்காவில் வேலைக்கு சேர விருப்பம், திவ்யாவுக்கு டாக்டாராக இன்னும் ஏதோ சாதிக்க விருப்பம். இருவருக்கும் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது மட்டும் பொதுவான ஒற்றுமை. இருவரும் ஒருவரை ஒருவர் வேண்டாம் என்று சொல்லியும் குடும்பத்தில் வரன் பார்ப்பது மட்டும் முடியவில்லை. இதைப் பார்க்கும் இருவரும், முதலில் திருமணம் செய்து கொள்ளலாம் பிறகு எங்களுக்குள் ஒத்துப் போகவில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டு(passport), வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருட்டு போனது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரது பை திருட்டு போனதாக கூறப்படுகிறது. அந்த பையில், அவரது கடவுச்சீட்டு, வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை இருந்ததாக தெரிகிறது. பாஸ்போர்ட் திருட்டு போனது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் அளித்தார். அதைய…
-
- 0 replies
- 261 views
-
-
யாராவது கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து இருந்தால் ''என்ன கப்பலா கவிழ்ந்துவிட்டது?'' என்று கேட்பார்கள். அப்படி கவிழ்ந்த கப்பலால் தான் ஒருவர் உலகிற்கு தன் திறமையை அடையாளம் காட்டினார் என்றால் நம்புவீர்களா? கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் கதையை படமாக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆஸ்கர் வெண்ரது இந்த படத்துக்கு தான்! இந்த சாதனையாளரின் வாழ்க்கையும் டைட்டானிக் கதையை போன்று போராட்டங்கள் நிறைந்ததுதான்! கனடாவின் ஒன்டாரியோவில் 1954ம் ஆண்டு பிறந்தவர் கேமரூன். சிறு வயதில் தன் குடும்பம் கலிஃபோர்னியாவுக்கு இடம் மாறியதால் அங்கு பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார். இடையில் படிப்பில் நாட்டமின்றி பாதியிலேயே படிப்பை நிறுத்தி பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். மீண்டும் பெற்றோரின் வற்புறுத்தலால் ப…
-
- 0 replies
- 581 views
-
-
படித்த புத்தகம் : டான் பிரவுன் (Dan brown) எழுதிய தி லாஸ்ட் சிம்பல் (The lost symbol) நாவல். செம த்ரில்லிங்கான மறக்க முடியாத க்ரைம் கதை. மறக்க முடியாத பயணம் : ஜூலை,ஆகஸ்டில் அமெரிக்காவில் தங்கியிருந்த இருபது நாட்கள். அங்குள்ள தமிழர்களின் கவனிப்பும் உபசரிப்பும் ரொம்பவே பிரமிக்க வச்சது.ஊர் விட்டு ஊர் போய் வாழ்றவங்களோட உண்மையான ஏக்கத்தை உணர்ந்தேன். உங்களை ஆச்சரியப்பட வைத்த திரைப்படம்: இன்செப்ஷன் (Inception) ஹாலிவுட் படம். கிரிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) டைரக்ட் பண்ண படம். ரொம்பவே மனசை பாதிச்சதுன்னு சொல்லலாம்.ஒவ்வொரு காட்சியும் எதிர்பாராத ஆச்சரியங்களை தந்துச்சு. அறிமுகமான நண்பர்கள் : நாகார்ஜுனா, சூர்யா, தமன்னா, சுமந்த், சுதீப் எல்லோ ரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிராமத்து பக்கம் எல்லாம் சில விஷயங்களைத்தான் திருவிழாவாக கொண்டாடுவார்கள். அது எது? என்னன்னு? பார்த்தீங்கன்னா வீட்டில யாருக்காவது உடல் நிலை சரியில்லைன்னா சாமிக்கிட்ட வேண்டிக்குவாங்க. உடம்பு சரியாயிடுச்சுன்னா கெடா வெட்டுறேன்... கோழி அடிக்கிறேன்... பொங்கல் வைக்கிறேன்னு சொல்லுவாங்க! இதெல்லாம் அவங்களுடைய மனசைப் பொறுத்தது. அந்த நோயை பொறுத்தது. ரொம்ப சீரியஸôன விஷயமாக இருந்தால் மொட்டை அடிச்சுக்கிறேன்னு வேண்டிப்பாங்க. வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு ஏதாவது பிரச்சினையோ, பிரசவ நேரமாகவோ இருந்தால் அதுக்கும் இந்த மாதிரி வேண்டிக்கொள்வார்கள். ஒரு பெரிய உயிரைக் காப்பாற்ற சின்ன உயிரை பறிப்பதாகவும் சில நேரங்களில் இருக்கும். இது கிராம வாழ்க்கையில் எளிதாக காணக்கிடைக்கிற விஷயம்!'' ஆசுவாசமா…
-
- 0 replies
- 736 views
-
-
செல்வராகவனுக்கும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் இன்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகளின் இல்லத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று, இப்போது 'நண்பர்களாக' உள்ளனர். இந்த நிலையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வந்தார் கீதாஞ்சலி. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் இவர். செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் நாளடையில் காதல் மலர்ந்தது. பெற்றோர் துணையுடன் இருவரும…
-
- 0 replies
- 996 views
-
-
தாதா சினிமாக்களுக்கான ஆகி வந்த களமான சென்னையின் நெருக்கடியான பகுதிதான் கதைக்களம். அங்கே மாமூல் வசூல் செய்யும் குட்டி தாதா மாரி (தனுஷ்). ரவுடியிசம் தவிர புறா பந்தயத்தில் அவருக்கு ஆர்வம் உண்டு. அந்தப் பகுதியில் நடக்கும் புறா பந்தயங் களை நடத்துவதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மாரியின் இடத் துக்கு வரவேண்டும் என்று காய்களை நகர்த்துகிறார் மற்றொரு ரவுடியான பறவை ரவி (மைம் கோபி). அந்தப் பகுதியின் காவல்நிலையத்துக்குப் புதிய இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜுன் (விஜய் யேசுதாஸ்) ஒரு கெட்ட போலீஸ் என்பதை அறிந்து அவருடன் கூட்டணி அமைக்கிறார். அர்ஜுன் திட்டமிட்டு மாரியை ஜெயி லுக்கு அனுப்புகிறார். மாரி இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரது மாமூல் வசூல், புறாப் பந்தயம் இரண்டையும…
-
- 0 replies
- 458 views
-
-
இயக்குநரின் விமர்சனத்தால் கடும் கோபத்துக்கு ஆளான விஜய்! (Vijay angry in famous director ) Comments சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. 'நண்பன்'தானே..? என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு நன்றி. யெஸ்... அதேதான். இந்த படத்தை சுமார் ஏழு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் அந்த பிரபல சேனல். (சன் அல்ல) அவ்வளவு பணத்தை கொட்டி வாங்கிவிட்டு பிரமோஷன் விஷயத்தில் சுணக்கம் காட்ட முடியுமா? கோடம்பாக்கத்தின் முக்கிய இயக்குநர்களை அழைத்து அவரவர் நண்பர்களை பற்றி அலச சொன்னது. நிகழ்ச்சிக்கு விஜய்யும் வந்திருந்தார். இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் ஒருவர் இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல. பறந்து வர்றது. நூறு …
-
- 0 replies
- 957 views
-
-
தசாவதாரம் - பலராலும் பல விதமாக விமர்சிக்கப்பட்டு விட்டது. என்னுடைய பங்கிற்கும் தசாவதாரம் படத்தைப் பார்த்த பொழுது, பார்த்து முடித்த பின்பு எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். கமல் மீது எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. தம்மைப் முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்கின்ற பார்ப்பனர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு தம்முடைய உண்மையான பார்ப்பனிய முகத்தை காட்டி விட்டுப் போயிருக்கின்ற வரலாற்றுப் பதிவுகள் கமலைப் பார்க்கின்ற பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கும். ஆரம்பத்தில் முற்போக்குச் சிந்தனைகளோடு கதைகளை தந்த சுஜாதா கடைசியில் திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த பொழுது பார்ப்பனிய சக்திகளுடன்தான் கைகோர்த்துக் கொண்டார். பார்ப்பன சங்கத்தில் மு…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தக் கேள்விக்கான பதில் பல பேருக்கு தெரியாமல் இருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் சிம்புவை தனுஷ் ஃபாலோ செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. விஜய்டிவியில் ‘லொள்ளுசபா’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சந்தானத்தை வம்படியாகக் கூப்பிட்டு தனது ‘மன்மதன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் சிம்பு. ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் “சிம்பு உங்களுக்கு அறிவில்லையா?” என்று திட்டியும் கூட சிம்பு சந்தானத்தை அந்தப்படத்தில் நடிக்க வைத்ததோடு மட்டுமில்லாமல் அவர் நடித்த அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பும் கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட சந்தானம் தான் இன்று தமிழ்சினிமாவில் அசைக்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அ…
-
- 0 replies
- 501 views
-
-
நடிகைகள் ஸ்ருதிஹாசனும், அஞ்சலியும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஏற்கனவே அஞ்சலி 'ஊர்சுற்றி புராணம்' என்ற தமிழ் படத்தில் நடித்தார். அப்படத்தில் தற்போது நடிக்க மறுப்பதால் பாதியில் நிற்கிறது. ஸ்ருதிஹாசனுக்கும் தமிழ் படங்கள் கைவசம் இல்லை. ஆனால் இருவரும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்கள். அஞ்சலி பலுபு, கோல்மால் என இரு படங்களில் நடிக்கிறார். 'பலுபு' படத்தில் ஸ்ருதிஹாசனும், அஞ்சலியும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகனாக ரவிதேஜா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. பலுபு படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் ஸ்ருதிஹாசனும், அஞ்சலியும் பங்கேற்றனர். ரவிதேஜாவுடன் அருகருகே இருவரும் அமர்ந்து இருந்தார்கள். பின்னர் ஸ்ருதிஹாசன் ம…
-
- 0 replies
- 740 views
-
-
என் டயலாக்கை பேசி விட்டு ரஜினி டயலாக் என்கிறார் லாரன்ஸ்! -ராதாரவி பி.வாசு இயக்கும் எல்லா படங்களிலுமே வில்லன், குணசித்ர வேடம் என நடித்து வருபவர் ராதாரவி. தற்போது அவர் இயக்கியுள்ள சிவலிங்கா படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும், சிவலிங்கா படத்தின் பிரஸ்மீட்டில், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நான் பேசிய டயலாக்கை பேசிவிட்டு, அண்ணன் ரஜினி பேசிய டயலாக் என்கிறார் லாரன்ஸ் என்றும் அவர் முன்னிலையில் கலகலப்பாக பேசினார் ராதாரவி. அவர் பேசுகையில், எனக்கு இயக்குனர், தயாரிப்பாளர்தான் இரண்டு கண்கள். சிவலிங்கா படம் சகோதரர் லாரன்சுடன் எனக்கு முதல் படம். அவர் டான்ஸ் ஆடுவார். பைட் பண்ணுவார். அந்த ரெண்டு வேலையும் இப்ப எனக்கு கிடையாது. நல்லவேளை இவர் வரும்போது நம்மை …
-
- 0 replies
- 405 views
-
-
திரை விமர்சனம்: ரூபாய் நாயகன் சந்திரனும், நண்பன் கிஷோர் ரவிச்சந்திரனும் டெம்போ வேனில் லோடு அடிப்பவர்கள். தேனியில் காய்கறி லோடு ஏற்றி சென்னை கோயம்பேடில் இறக்குகிறார்கள். அதற்கான கூலியை வைத்து டெம்போ வேனின் கடன் தவணையான ரூ.18 ஆயிரத்தை அடைக்க திட்டமிடுகிறார்கள். பணம் போதாததால், சென்னைக்குள் ஒருமுறை சவாரி அடிக்கிறார்கள். இந்தச் சூழலில், கடன் தொல்லை காரணமாக வீட்டை மாற்றும் சின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகள் ஆனந்தியின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்களிடம் வாடகை பேசி, வேனில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வீடு தேடுகிறார்கள். ஆனந்தியைப் பார்த்ததும் சந்திரனுக்கு காதல் தொற்றிக்கொள்கிறது. இதற்கிடையே, தனியார் நிதி நிறுவனத்தில் பெ…
-
- 0 replies
- 331 views
-
-
தில்லாலங்கடி திரைபடத்தினை முன்கூட்டியே காண விரும்புபவர்களுக்கு..... தில்லாலங்கடி - 1 தில்லாலங்கடி - 2 பிரம்மானந்தம் பாத்திரத்தில் வடிவேல்.. இலியானா பாத்திரத்தில் தமன்னா.. ரவிதேஜா பாத்திரத்தில் வழக்கம் போல அவரை காப்பி அடிக்கும் நம்ம ஜெயம் ரவி.....
-
- 0 replies
- 845 views
-
-
ஸெரியா கோசல் அமெரிக்கா, கனடாவிற்கு வருகை தருகிறார். Hello!! My US Canada 2014 tour begins this August! All set for it!! Come all of you, ok!
-
- 0 replies
- 438 views
-
-
முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்க வருகிறார். இந்தியிலோ, தமிழிலோ அவரை அறிமுகப்படுத்தாமல் முதலில் தெலுங்கில் களம் இறக்குகிறார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவிக்கு, கணவர் போனி கபூர் மூலம் 2 மகள்கள். இவர்களில் ஜான்வியை நடிகையாக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரீதேவி. அவரை தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக்க தீர்மானித்துள்ளார். தமிழில் நிறையப் படங்களில் நடித்தவரானாலும், தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தெலுங்கு சினிமா மூ்லம்தான் இந்திக்கு டிக்கெட் கிடைத்தது ஸ்ரீதேவிக்கு. காரணம், தமிழை விட தெலுங்கில்தான் ஸ்ரீதேவி நிறைய கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இதன் காரணமாக தெலுங்கு சினிமா மூலம் தனது மகளை நாயகியாக்கவுள்ளார் ஸ்ரீதேவி. நாகார்ஜூனாவின் மகன் அகில் வளர்ந்து வாலிப…
-
- 0 replies
- 702 views
-
-
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்) ஒன்றி ணைந்து ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. மாநில, தேசிய அரசியல் அரங்கில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த இணைப்புத் திட்டம் குறித்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன்... ‘‘1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டபோது இருந்த அரசியல் சூழல், காலகட்டம் வேறு. உதாரணமாக, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்ல கம்யூனிஸத்தின் ஆட்சி. ஆனால் இப்போ உள்ள நிலைமையில் நிறைய மாற்றங்கள். மக்களின் அன்றாட பிரச்னைகளில் தனியாக நின்று போராடினால் வேலைக்கு ஆகாது. இரண்ட…
-
- 0 replies
- 607 views
-
-
’தாரை தப்பட்டை’ பாலா பொளேர்!- ம.கா.செந்தில்குமார் எப்போதாவதுதான் பேசுவார். அப்போதும் அதிர்வேட்டு அதிரடிதான் இயக்குநர் பாலா ஸ்பெஷல். இதோ இப்போதும்..! ''கதையை ஒரு வரி, ஒன்றரை வரியில சொல்றதுக்கு நான் என்ன திருவள்ளுவரா? நான் ஒரு சாதாரண சினிமா கிறுக்கன். ஏதோ எனக்குத் தெரிஞ்ச சினிமாவை எடுத்து பொழப்பை ஓட்டிட்டு இருக்கேன்'' - எடுத்த எடுப்பிலேயே 'தாரை தப்பட்டை’ பதில். கரகாட்டப் பின்னணிக் கதை, இளையராஜாவின் 1,000-வது படம் என விசேஷங்கள் பல சூழ்ந்திருக்கும் படத்தின் பணிகளில் பரபரப்பாக இருந்தவரிடம் பேசியதில் இருந்து... ''திருவையாறு ஆராதனையில, டிசம்பர் சீஸன்ல வாசிச்சு, பத்மஸ்ரீ, பத்மபூஷண்னு விருதுகளை வாங்குபவர்களுக்கு மத்தியில், தங்கள் வாழ்க்கையைத் தொலைச்சு நிக்கிற தஞ்சை மண்ணின்…
-
- 0 replies
- 2.2k views
-