Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிவாஜி, ரஜினி, விஜய்க்கு திரைக்கு பின் நடந்த கதை! சினிமா... அன்றும், இன்றும் மக்களின் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகவே இருந்துவருகிறது. 'கடவுள் யாரது, யார் பார்த்தார்... அதைக் கண்ணில் காட்டியது இந்த சினிமாதான்'. சினிமாவை ஒரே வரியில் இப்படித்தான் வர்ணிக்க முடியும். சினிமா ஏன் இப்படி மெச்சப்படுகிறது... தமிழ் சினிமாவின் பெரிய சாதனையாளர்கள் எப்படி உருவானார்கள்... இன்றைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது... இவற்றை மூன்று பதிவுகளாகக் காணலாம், முதல் பதிவு இதோ! சினிமாவில் நுணுக்கமான விஷயங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அவை எல்லாமே ஒன்றிணைந்து அழகாய் வெளிவரும்போதுதான் முழுமையான சினிமாவாகிறது. காதல…

  2. ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்? மின்னம்பலம்2022-07-04 சமூகத்தின் அவல நிலையை அப்பட்டமாகத் தோலுரிக்கும் படங்கள் எடுப்பதில் பெயர் போனவர் லீனா மணிமேகலை. தற்போது அவர் இயக்கி நடித்திருக்கும் காளி என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ட்விட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் கவிஞர், திரைப்பட இயக்குநர், சமூக செயற்பாட்டாளர், பெண்ணியவாதி எனப் பல தளங்களில் இயங்கக்கூடியவர் லீனா மணிமேகலை. இவர் தனது தேவதைகள், பறை, பலிபீடம் போன்ற ஆவணப் படங்களுக்காக பாராட்டப்பட்டவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த செங்கடல், மாடத்தி போன்ற திரைப்படங்கள் பார்வையாளர்களிடையே கவனம் பெற்றது. …

  3. சினிமாவில் அறிமுகமான சிவகுமாரின் மற்றொரு வாரிசு!!! நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான திருமதி பிருந்தா பின்னணி பாடகியாக திரைதுறையில் அறிமுகமாகியிருக்கிறார். கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் "மிஸ்டர் சந்திரமௌலி", திரு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு "விக்ரம் வேதா" புகழ் சாம் சி .எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், திருமதி பிருந்தா அவர்கள் கடவுள் வாழ்த்து பாடுவார் என்…

  4. லியோ படத்தில் கை வைத்த சென்சார்! விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலின் சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் சர்ச்சை வருவதற்கு முன்பு பாடல் வரிகளை சென்சார் போர்டு ஏன் நீக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. …

  5. திரை விமர்சனம்: ஈட்டி உடலில் சிறு காயம் பட்டாலும் ரத்தம் உறையாமல் வடிந்து கொண்டே இருக்கும் பிரச்சினை கொண்ட ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் ‘ஈட்டி’. புகழேந்தி (அதர்வா) தஞ்சாவூரில் கல்லூரி மாணவர். தடை ஓட்ட வீரரான அவர் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்று தயாராகிவருகிறார். அவருக்கு ரத்த உறைவின்மை நோய் இருப்பது சிறு வயதிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. மகனின் உடலில் சிறு காயம்கூடப் பட்டுவிடக்கூடாது என்று பார்த்து பார்த்து வளர்க்கிறார், காவல் துறையில் வேலைபார்க்கும் அப்பா ஜெயப்பிரகாஷ். இதற்கிடையில், சென்னையில் படித்துவரும் நாயகி காயத்ரி (ஸ்ரீதிவ்யா) யாரையோ திட்டுவதற்குப் பதில் தவறுதல…

  6. இலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்! ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பராசக்தி’. இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்!'அமரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப…

  7. [size=4]தாண்டவம் கதைத் திருட்டும் - சில அந்தர் பல்டிகளும் தாண்டவம் கதைத் திருட்டு கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இயக்குனர்கள் சங்கம் என்ற சினிமா சங்கத்தில் இயக்குனர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் இடையே உள்ள ஆழமான பிளவை இந்த விவகாரம் மேலே கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சனையை முன்னிறுத்தி மேலும் பல பிரச்சனைகள் வெளிவரவும், அலசப்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு பிள்ளையார் சுழிபோட்ட தாண்டவம் கதைத் திருட்டு குறித்துப் பார்ப்போம். ராதாமோகனின் உதவி இயக்குனரான பொன்னுசாமி பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவரைப் பற்றிய கதையை தயார் செய்து யு டிவி தனஞ்செயனிடம் கூறியிருக்கிறார். கதையை கேட்டவர் அப்புறம் பார்க்கலாம் என்று வழியனுப்பியிருக்கிறார். கவனிக்கவும், கதை நன்றாக…

  8. போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ஸ்டைலில் அறிவுரை கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீட…

  9. சினிமா தமிழ் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. படங்களில் வரும் பல விஷயங்களை ரசிகர்கள் தங்களது வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்கள். 10 நல்ல விஷயங்கள் இருந்தால் 20 கெட்ட விஷயங்களும் படங்களில் காட்டப்படுகிறது. ஒரு தவறான செயல் மக்களிடம் உடனே போய் சென்றுவிடுகிறது. அப்படி சினிமாவை பார்த்து நடிகர்கள் செய்வது பிடித்துப்போய் இளைஞர்கள் சிகரெட், மது எல்லாம் குடிக்கிறார்கள். பெரிய நடிகர்கள் ரசிகர்களுக்கு நல்ல விஷயங்கள் கற்றுத் தர வேண்டும் என்றால் முதலில் சிகரெட், மது அருந்தும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என நிறைய பேர் வேண்டுகோள் வைத்தார்கள். ரஜினி அவர்கள் பல விழா மேடைகளிலேயே சிகரெட் எல்லாம் பிடிக்காதீர்கள் என்றே கூறியுள்ளார். ரசிகர்களுக்க…

  10. [size=5]ரஜினி எனும் தொன்மமும் இந்தியக் குடும்பமும்[/size] ஆர்.அபிலாஷ் ஒவ்வொரு சினிமா நட்சத்திரமும் ஒரு தொன்மம் எனும்போது ரஜினிதான் நம் சமூகத்தின் ஆக சுவாரஸ்யமான தொன்மம். ஒரு புனைவு. அவரது எல்லா சிறந்த படங்களும் மெல்ல மெல்ல கூடுதலாகப் பல வர்ணங்களை இந்தப் புனைவில் சேர்த்துவிட்டுச் செல்லுகின்றன என நமக்குத் தெரியும். அவரது ஆன்மீகம், விட்டேத்தி மனோபாவம், வாழ்வில் ஒட்டாமை, பணிவு, எளிமை, முதிர்ச்சி இவையும் சேர்த்துதான். இத்தொன்மத்தில் நிஜத்தில் நாம் அறிந்த ரஜினியும் சினிமா ரஜினியும் பிரித்தறிய முடியாதபடி ஒரு இலையின் இரு பக்கங்களாகி வெகுநாட்களாகி விட்டன. இது போல் மேலும் சில நாயகர்களுக்கும் தொன்மங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர். பரோ பகாரியாக, கண்ணியமானவராக, வீரராக, மென்மையான, நேர்…

  11. மறுமணம் செய்து கொள்வீர்களா? - மனம் திறக்கும் இமான்

    • 0 replies
    • 735 views
  12. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் நார்த்தப் என்ற கறுப்பின இளைஞனின் 12 வருட அடிமை வாழக்கையை அடிப்படையாகக் கொண்டு 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் திரைப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் அடிமை வியாபாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் மீது நடத்திய குரூரமான வரலாறின் சிறு துளி என இந்தப் படத்தை சொல்லலாம். FILE சாலமன் நார்த்தப் நியூயார்க் நகரில் வசித்த சுதந்திரமான மனிதன். மனைவி இரு குழந்தைகளுடன் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்த வேளையில் இரு வெள்ளையர்கள் அவரை வாஷிங்டன் அழைத்துச் சென்று தந்திரமாக விற்று விடுகிறார்கள். தானொரு சுதந்திரமான மனிதன் என்று நார்த்தப் சொல்வதை அவனை வாங்கியவர்கள் கேட்க தயாராக இல்லை. நார்த்தப் லூசியானாவில் உள்ள பண…

    • 0 replies
    • 1.6k views
  13. வரிசை கட்டும் விவசாய படங்கள்... ’நெசமாத் தான் சொல்றியா’ மொமெண்ட்! நம்ம தமிழ் சினிமாவுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு போல... கடந்த ஆண்டு இறுதியில் பெண்ணிய படங்களாக ரிலீஸ் ஆகி நமக்கு இன்ப அதிர்ச்சி அளித்தன. இப்போது விவசாயம் சார்ந்த கதையம்சம் உடைய படங்களாக தயாராகி வருகின்றன. பொங்கலன்று வெளியான விளம்பரங்களே அதற்கு சாட்சி. வெள்ளை யானை தனுஷ் இயக்கும் நடிக்கும் படங்களுக்கு எல்லாமுமாக இருந்த சுப்ரமணிய சிவா 'பேக் டூ ஃபார்மாக' இயக்கும் படம் வெள்ளை யானை. சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கிறார். தஞ்சை மண்ணைச் சார்ந்தவர் சுப்ரமணிய சிவா. சமீபத்தில் கூட கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை தனுஷிடம் எடுத்துச் சென்று தனுஷ் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வைத்தவர். எனவே விவசாய…

  14. பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ள ரிஷிவரன் மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் வெளியாகி பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. மறைந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டார். அவர்களது மகனான சாய் ரிஷிவரனின் படம் வெளியில் வந்தது இல்லை. இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் ரிஷியின் புகைப்படம் தற்போது வெளியாகி பலருத கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் ரகுவரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவ்வாறு குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தினைப் பெற்றிருந்தார். நடிப்பில் வல்லவரான ரகுவரனை தெரிந்த எமக்கு அவருக்கு இருந்த இசை ஆர்வம் பற்றி அதிகம் தெரியாது. இ…

  15. பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் யு.சீனிவாஸின் தம்பி மாண்டலின் யு.ராஜேஷுக்கும், நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் திருப்பதியில் கல்யாணம் முடிந்து விட்டது. இந்தத் திருமணத்தை விரைவில் இருவரும் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளனர். ரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு மளமளவென நிறையப் படங்களில் நடித்து முடித்து விட்டார். முன்னணி நடிகையாக தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வரும் மீரா ஜாஸ்மின் அவ்வப்போது கிசுகிசுக்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட மீரா ஜாஸ்மின், மலையாள இயக்குநர் லோகிததாஸுடன் படு நெருக்கமாக இணைத்துப் பேசப்பட்டார். இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகக் கூட கூறப்பட்டது. கடைசிய…

    • 0 replies
    • 1.5k views
  16. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு... நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர் டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய…

  17. நயன்தாராவிற்கும் காதல் கிசுகிசு செய்திகளுக்கும் ஏக பொருத்தம். நயன்தாரா மீண்டும் சிம்புவிடம் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியான போது, "இப்படி நடக்கும்னு தெரிந்தது தானே! "என்பது தான் கோலிவுட்டின் பதிலாக இருந்தது. 'வல்லவன்' படத்தில் சிம்புவிடன் காதலை முறித்து கொண்டவர், 'வில்லு' படத்தின்போது பிரபுதேவாவுடன் நெருக்கம் காட்டி வந்தார். பிரபுதேவா உடன் காதல் உறுதியாகி திருமணம் வரை சென்றது. பிரபு தேவாவின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டார். அவருக்காக மதம் மாறினார். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. 'ராம ராஜ்ஜியம்' படம் தான் கடைசி என்று அறிவித்தார். ஆனால், பிரபுதேவாவுடன் காதல் தோல்வியை அடுத்து மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போத…

  18. 'என் குழந்தைகள் நல்லா இருக்கணும்னுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!' - 'மதுரை' முத்து #VikatanExclusive சின்னத்திரையில் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் மதுரை முத்து, சொந்த வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய அடுத்தக் கட்டப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவிலும் தன்னுடைய திறமையைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒரு மதிய இடைவேளையின்போது அவரிடம் பேசினோம், ''எதுக்கு உங்க மேல இவ்வளவு வதந்தி?'' ''அதுதான் எனக்கும் தெரியல. எது எப்படி இருந்தாலும், என்னைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். என்னோட முதல் மனைவியைப் பத்தியும் தெரியும். முதல் மனைவி பற்றிய சில தேவையில்லாத வத…

  19. உலகப் போரில் தன் கணவனை இழந்து அநாதையான கர்ப்பிணிப் பெண் காட்யா, வெட்ட வெளிப் பொட்டல் சாலையில் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் காட்சியோடுதான் தி தீஃப் (The Thief) படம் தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போர் ரஷ்யாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தாலும், பொருளாதார ரீதியாக ரஷ்யா மிகவும் பலவீனமாகிவிட்டது. மக்களின் அன்றாடப் பாடே கஷ்டமாகிப் போனது. காட்யாவும் தன் மகன் சன்யாவுடன் பிழைப்புக்காகப் பெரும் பாடுபடுகிறாள். சன்யாவுக்கு ஐந்து வயதாகும் போது வேலை தேடி நகரத்திற்குச் செல்ல முடிவெடுத்து ரயிலில் பயணிக்கிறாள். அந்தப் பயணத்தில் ஒரு ராணுவ வீரனைச் (டொய்லன்) சந்திக்கிறாள். முதல் சந்திப்பிலேயே அவன்மீது காட்யாவுக்கு ஈடுபாடு தோன்றுகிறது. மீதமிருக்கும் காலத்தில் தனக்கும், தன் மகன் சன்யாவுக்குமான பாதுக…

    • 0 replies
    • 500 views
  20. தென்னிந்திய நடிகைகளில் டுவிட்டரில் ஸ்ருதி ஹாசன் முதலிடம் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தை பிடித்துள்ளார். #7MillionHeartsforShruthi தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவுடன் ‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் ‘3’, விஷாலுடன் ‘பூஜை’, விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, மீண்டும் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் தம…

  21. ஐஃபாவில் இருந்து அமிதாப் பச்சன் விலகினார் இந்தியா சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஃபா) தூதராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக அறவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற ஐஃபா விழாவினை தமிழர்கள் கடுமையாக எதிர்த்ததையடுத்து, அவ்விழாவில் கலந்து கொள்ளாமல் அமிதாப் பச்சன் புறக்கணித்தார். அவருக்கு பதிலாக இந்தி நடிகர் சல்மான் கான் ஐஃபா தூதராக பொறுப்பேற்றார். ஆயினும் கொழும்பு ஐஃபா விழா படுதோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், டிவிட்டர் இணையத் தளத்தில், “ஐஃபாவிற்கு நாங்கள் வரவில்லை. எங்களுடைய சேவை ஐஃபாவிற்குத் தேவைப்படவில்லை” என்று அமிதாப் கூறியுள்ளார். “இந்த முடிவை நான் எடுக்கவில்லை... ஐஃபாவின் அடு…

    • 0 replies
    • 897 views
  22. Posted by சங்கீதா on 29/06/2011 in புதினங்கள் இந்த வருடம் நடந்த (2011) 58ம் இந்திய தேசிய திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் 14 விருதுகளைப் பெற்றுள்ளன. இந்த வரலாறு காணாத சாதனையை வட இந்தியத் திரைப்படவுலகம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்திரன், ஆடுகளம், மைனா, தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும் இந்த 14 விருதுகளையும் பெற்றுள்ளன. எந்திரன், ஆடுகளம் ஆகிய படங்களை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மைனா என்ற படத்தைக் கருணாநிதியின் மகன் ஸ்ராலினின் புதல்வன் உதயநிதி தயாரித்தார். சிறந்த நடிகராக ஆடுகளம் படக் கதாநாயகன் தனுஷ் பெற்றுள்ளார். ரஜினிகாந்தின் முதலாவது மகளின் கணவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தென் மேற்குப் பருவக் காற்ற…

  23. இடையில் கொஞ்சம் துவண்டு போயிருந்த அமலாபாலின் மார்க்கெட், தெலுங்கில் இப்போது சற்றே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.பூரி ஜெகன் இயக்கத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக டாப்ஸி நடிப்பதாக இருந்த கேரக்டரில், திடீரென்று அமலா கமிட் பண்ணப்பட்டுள்ளார். ‘ இத்தரு அம்மாயிலத்தோ’ என்ற அப்படத்துக்காக கொஞ்சம் வெயிட் குறைக்கச்சொல்லி டாப்ஸியை பூரிஜெகன் கேட்டுக்கொள்ள, உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளான டாப்ஸி படத்தை விட்டு வெளியேற, அந்த அதிர்ஷ்டம் அமலாவுக்கு அடித்திருக்கிறது. ஆனால் அமலாவை நேரில் வரவழைத்த பூரியார், ‘’ இன்னையிலருந்து தினமும் ஜிம்முக்குப் போய் வெயிட்டை கூடுமானவரைக்கும் குறைச்சிக்கிட்டு, ரெகுலரா என்னை வந்து பாக்கனும். நான் ஷூட்டிங் கிளம்புறப்ப, நீ ஓ.கே.ன்னு தோணினாத்தான் நீ ஹீரோயின். ஸ்ல…

  24. பையா படத்தில் நடிக்க மறுத்ததால் நயன்தாராவுக்கு தடை விதிப்பது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது.லிங்குசாமி தயாரித்து இயக்கும் படம் பையா. இதில் கார்த¢தி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் வேடத்துக்கு நயன்தாரா ஒப்பந்தமானார். இப்படத்துக்காக ரூ. 1 கோடியே 25 லட்சம் அவருக்கு சம்பளமாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ரூ. 25 லட்சத்தை அட்வான்சாக அவருக்கு வழங்கப்பட்டதாம். இப்படத்தின் ஷ¨ட்டிங் அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அப்பட ஷ¨ட்டிங் முடியாததால் பையா பட ஷ¨ட்டிங் தள்ளிப்போனது. Ôதனது கால்ஷீட்டை வீணடித்து விட்டதாகவும் இனி அப்படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லைÕ என்றும் நயன்தாரா கூற¤னார். இதையடுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.