Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது! வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, 2011, 17:54[iST] டெல்லி: 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது. கடந்த 45 ஆண்டுகளாக திரைத் துறையில் உள்ள பாலசந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார். அசாதாரண கதைகளைப் படமாக்குவதில் பாலச்சந்தரின் துணிச்சலுக்கு நிகர் அவரே. மிகச் சிறந்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலை…

  2. நார்வே திரைப்பட விழா: எந்திரனுக்கு மூன்று விருதுகள்! [பிரசுரித்த திகதி: 2011-04-26 11:05:11 AM GMT ] ஆஸ்லோ: நார்வே சர்வதேச தமிழ்த்திரைப்பட விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த மேக்கப் மற்றும் சிறந்த தயாரிப்புக்கான விருதுகளை எந்திரன் வென்றது. நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஆஸ்லோவில் துவங்கி 25-ம் தேதி வரை நடந்தது. வசீகரன் சிவலிங்கம் என்ற நார்வே தமிழரின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் எனும் நிறுவனத்தின் அயராத முயற்சியால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த திரைப்பட விழா ஆஸ்லோவில் நடந்தது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தி…

  3. ''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால்இ குடிப்பதில் என்ன குற்றம்?'' அனல் அமீர் இரா.சரவணன் 'எது வந்தாலும் சரி’ என்கிற தைரியத்தில் இதயம் திறப்பவர் இயக்குநர் அமீர். ''அமளிதுமளிபிரசாரம்இ அமோக வாக்குப்பதிவு... அடுத்து யாருடைய ஆட்சின்னு நினைக்கிறீங்க?'' எனக் கேட்டதுதான் தாமதம்... சிதறு தேங்காயாகச் சீறத் தொடங்கிவிட்டார் அமீர். ''என்னோட 'ஆதிபகவான்’ படத்தைப் பற்றிக் கேட்பீங்கன்னு பார்த்தாஇ அடுத்த முதல்வர் யாரா? அதிகமான வாக்குப் பதிவு யாருக்குச் சாதகம்னு தெரியாமல் இரண்டு கட்சிகளுமே அல்லாடும் நிலையில்இ 'தலைப் பிள்ளை ஆண்... தப்பினால் பெண்’ என நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும்? இந்தத் தேர்தலில் ஜெயிச்சது வாக்காளர்களும் தேர்தல் ஆணையமும்தான். ஆனால்இ இந்தத் தேர்தலில் அ…

  4. செவாலியர் விருது பெறுகிறார் நந்திதா தாஸ் 18 ஏப்ரல் 2011 நடிகையாக இருந்து இயக்குராக மாறியவர் நந்திதா தாஸ். உள்ளுர் விருது முதல் வெளிநாட்டு விருதுகள் வரை பல பெற்ற நந்திதாவுக்கு மேலும் ஒரு கௌரவம் கிடைத்திருக்கிறது. இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான சினிமாவை மேம்படுத்தியதற்காக பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியர் விருது வழங்கி நந்திதா தாசை கவுரவித்துள்ளது பிரான்ஸ் அரசு. தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், விஸ்வ துளசி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், உருது என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பயர், எர்த், பவந்தர் உள்ளிட்ட பல்வேறு படங்கள் நந்திதா தாஸ்க்கு பெயர் பெற்று தந்தன.…

  5. Started by nunavilan,

    காஞ்சிவரம்

    • 0 replies
    • 1.6k views
  6. சனிக்கிழமை, 16, ஏப்ரல் 2011 (16:11 IST) இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கடும் எதிர்ப்பு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ’’வின்ட்ஸ் ஆப் சேஞ்ச்’’ படத்தின் சூட்டிங் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ரேயா, சூட்டிங்கிற்காக இலங்கை சென்றிருந்தார். அப்போது இலங்கை அரசை அவர் பாராட்டி பேசியதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்று நடிகர்,நடிகைகள் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். லிபியா போன்ற நாடுகளில் மக்கள…

  7. உலகிலேயே ஹாங்காங்கில் முதல் முறையாக “3டி” ஆபாச படம் தயாராகியுள்ளது.தற்போது ஆலிவுட் படங்கள் “3டி” எனப்படும் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தயாராக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்த தொழில்நுட்பம் மிக பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் இருப்பதால் மக்கள் அதிசயித்து ரசிக்கின்றனர். இதே தொழில் நுட்பத்தில் ஆபாச படங்களையும் தயாரித்தால் என்ன என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக தற்போது சீனாவின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஹாங்காங்கில் “3டி” முப்பரிமாணத்தில் ஆபாச படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.145 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படம் உலகின் முதல் ஆபாச “3டி” சினிமா என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படம் ரீலிஸ் செய்யப்பட்டு ஹாங்காங்கில் உள்ள தியேட்டர்களில் சமீபத்தில் திர…

    • 0 replies
    • 874 views
  8. ‘ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா?’ என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப். ரோபோ படம் வெளியானதிலிருந்து வட இந்தியாவில் ரஜினி ஜோக்ஸ் மிகப் பிரபலமாகிவிட்டது. இவற்றில் எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி. போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான். கடந்த சில வாரங்களாக இந்த ரஜினி ஜோக்குகள் சற்றே ஓய்ந்திருந்தன. ஆனால் ரஜினி உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்கப் போனதும், அந்தப் போட்டியில் இந்தியா…

  9. பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய பழைய குற்றவாளி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவருடைய பெயர், ராஜேஷ் தலால் (வயது 35). ஜாட் சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக, நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கடந்த 2006-ம் ஆண்டில் மும்பையில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதன்பின் 3 வருடங்களுக்குப்பிறகு தேர்வு ஒன்று எழுதுவதற்காக டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுப்படி 5 நாட்கள் பரோலில் சென்ற ராஜேஷ் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், சிறையில் அவருக்கு அறிமுகமான ராஜீவ் என்ற ஜோகிந்தருடன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார். டெல்லியில் ராஜேஷின் காதலியை கிண்டல் …

  10. 'விண்ட்ஸ் ஆப் சேஞ்ச்' -படப்பிடிப்புகாக இலங்கை போனார் ஸ்ரேயா! ரெடி என்ற படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை அசின் இலங்கை போனதும், அதைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளும் நினைவிருக்கலாம். இப்போது சத்தமில்லாமல் இன்னொரு நடிகை இலங்கைக்குப் போயிருக்கிறார். அவர் ஸ்ரேயா. தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் படத்தின் ஷூட்டிங்குக்காக அவர் இலங்கையில் இப்போது முகாமிட்டுள்ளார். கடந்த வாரம் சென்னையில நடந்த ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் அவர் ஷாரூக்கானுடன் சேர்ந்து நடனம் ஆடியது நினைவிருக்கலாம். இலங்கையில் படப்பிடிப்பிலிருந்து நேராக சென்னை வந்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இலங்கை சென்றுவிட்டாராம். இலங்கை மிக அழகான நாடு, படப்பிடிப்புக்கு ஏற்ற…

    • 1 reply
    • 3.2k views
  11. T.ராஜேந்தரின் பேட்டி

    • 2 replies
    • 1.5k views
  12. ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தயாரிப்பாளராகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். அடுத்த கட்டமாக படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஒய்.எம். மூவிஸ் என்ற பெயரில் புதிய படக்கம்பெனி துவங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்கிறார். முதலாவதாக தமிழ், படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.புது இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பார் என தெரிகிறது. ஏ.ஆர்.ரகுமான் படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=6810

    • 0 replies
    • 771 views
  13. கதாநாயகனாக, குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக, வில்லன் நடிகராக கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பன்முகப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார் நாசர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைத் தனக்குள் உள்வாங்கிக் கொள்பவர். அவர் தமிழ் சினிமா மீது கொண்டுள்ள அக்கறையை அவர் தயாரித்த, இயக்கிய சில திரைப்படங்களின் மூலம் அறிந்துகொள்ள முடியும். பொது நிகழ்வுகளில் அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் குறித்ததாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள இரு திரைப்படப் பள்ளிகளில் படித்தபோதும் உலகளாவிய திரைக்கலைப் பரிச்சயமும், நவீன நாடகக்குழுக்களில் தான் பெற்ற பயிற்சியும்தான் சினிமாவை, நடிப்பைத் தெரிந்துகொள்ள உதவியது என்று கூறும் நாசர், திரைப்படக் கல்லூரி நிறுவனங…

  14. தேர்தல் சமயம் வந்தாலே அரசியல் கட்சிகள் நடிகர்களை களத்தில் இறக்குவது வழக்கம். வரலாறு காணாத திடீர் திடீர் திருப்பங்களை இந்த தேர்தலில் சந்தித்திருக்கிறது தமிழகம். அதே சமயம் தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்திருக்கிறது. சின்ன புள்ளியில் துவங்கிய விஜயகாந்த் - வடிவேலு பிரச்சனை பெரிய பூதமாக வளந்தது. விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. புகைந்துகொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று வடிவேலு முன்பு அறிவித்திருந்தார். எந்த கட்சியோடும் சேராமல் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும் அவர் சொல்லியிருந்தார். அந்த முடிவில் இப்போது கொஞ்சம் மாறுதல். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறார். வரும் …

  15. உண்மையான உணர்வு இருந்தால் அசினுடன் நடிப்பாரா விஜய் - ராஜபக்‌ஷே! நடிகை அசின் இலங்கை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட சம்பவம் மற்றும் ராஜபக்‌ஷேவின் மனைவியுடன் சேர்ந்து யாழ்பாணம் சென்ற சம்பவத்தால் தமிழ் திரையுலகம் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அசின் நடித்த படத்தை திரையிட விட மாட்டோம், அசினை தமிழ் சினிமாக்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கங்கள் போட்டும் காவலன் எந்த தடையும் இல்லாமல் வெளியாகி வெற்றியும் பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சமீபத்தில் நாகப்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்…

    • 0 replies
    • 1.1k views
  16. சிங்கையில் குருஷேத்திரம் - விமர்சனம் நடிப்பு: விஷ்ணு, சிவகுமார், மதியழகன், விக்னேஷ்வரி, பிரகாஷ் அரசு பிஆர்ஓ: எஸ் செல்வரகு இசை: ரஃபீ கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இணை தயாரிப்பு - டிடி தவமணி தயாரிப்பு: மெட்ரோ பிலிம்ஸ், சிங்கப்பூர் பிலிம் கமிஷன் மற்றும் புளூ ரிவர் பிக்ஸர்ஸ் முழுக்க முழுக்க சிங்கப்பூர் கலைஞர்களை வைத்து, ஒளிவெள்ளம் பாயும் சிங்கப்பூரின் இருண்ட பக்கத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். மன்னிக்க முடியாத மரண தண்டனைக் குற்றம் என்று தெரிந்தும், போதை மருந்துத் தொழிலில் ஈடுபடும் சிங்கப்பூரின் நிழல் மனிதர்களைப் பற்றிய கதை. முதல் காட்சியே படு வித்தியாசமாக ஆரம்பிக்கிறது. எடுத்த எடுப்பில் சிங்கப்பூர் சிறையில் ஒரு தாய்க்க…

  17. பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா! தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தியில் ஜெனிலியா பிசியோ பிசி அகன்ற வாய் அழகி ஜெனிலியா கை நிறையப் படங்களுடன் பரபரப்பாக காணப்படுகிறார். தமிழில் ஆரம்பித்த இவரது திரையுலக வாழ்க்கை இன்று தமிழையும் தாண்டி தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கை நிறையப் படங்களுடன், பல மொழிகளில் படு பிசியாக நடித்து வருபவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். சந்தோஷ் சுப்ரமணியத்திற்குப் பிறகு ஜெனிலியாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலி…

    • 9 replies
    • 3.4k views
  18. உலகின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான 'ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்' பற்றி எழுத வேண்டும் என எத்தனை முறை அமர்ந்தாலும் தோல்வியே கண்டிருக்கிறேன். அதை அந்த பரவசத்தை சாதாராணமாக அணுகி விடக்கூடாது என்ற தயக்கமே காரணம். ஆஸ்கார் ஷிண்ட்லரை மனிதருள் மாணிக்கம் , மறக்கடிக்கப்பட்ட மகாத்மா என எத்தனை அழைத்தாலும் தகும். இப்படம் யூ1982ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாவலாசிரியர் தாமஸ் கென்னலி எழுதிய ஷிண்ட்லர்ஸ் ஆர்க்[ Schindler's Ark ] என்னும் புதினத்தை தழுவி,ஸ்டீவன் ஸைலியனின் [steven Zaillian]திரைக்கதையில்,ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி 1993ஆம் ஆண்டு வெளிவந்த சுயசரிதை-நாடக வகை திரைப்படம் இது. இப்படத்துக்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் தரப்பட்டன. இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு உலகாரங்கில் எத்தனையோ பாராட்ட…

  19. களறி கற்கும் நடிகைகள் நடிகைகள் களறி கற்றுக் கொண்டால் நல்லது. ஆனால் படத்திற்கு தேவைப்பட்டால் ஒழிய யாரும் அதை செய்வதில்லை. ஆணாதிக்க சினிமாவிலிருந்து விடுபட களறி உதவும் என்றாலும், எந்த நடிகையும் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதாகவும் இல்லை. இந்த வியாக்கியானத்தை மறந்துவிட்டு வேறொரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம். சந்தோஷ் சிவனின் உருமி படத்திற்காக களறி கற்றுக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா. கதைப்படி இவர் இளவரசியாம். இவருக்கு படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இருக்கிறதாம். ஜெனிலியா இப்படத்தில் நடிக்க கமிட் ஆனவுடன், அவசியம் களறி கற்றுக் கொள்ள வேண்டும் என்றாராம் சந்தோஷ் சிவன். இதற்காகவே நேரம் ஒதுக்கி கற்று தேர்ந்திருக்கிறார் ஜெனிலியா. இவரை போலவே நன்கு …

    • 16 replies
    • 6.1k views
  20. த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளை மிஞ்சிவிட்டார் நடிகை இலியானா. ஷங்கர் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வரும் இலியானாவுக்கு ரூ.1.5கோடி சம்பளம் தர ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாம். இதுவரை வேறு எந்தவொரு நடிகையும் இந்த சம்பளத்தை வாங்கியதில்லையாம். இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதில் ஹீரோக்களாக விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய மூன்று பேர் நடித்து வருகின்றனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் ரூ.2கோடி ‌வரை சம்பளம் கேட்டு இருந்தார். ஆனால் ரூ.50லட்சத்தை குறைத்து ரூ.1.5 கோடி சம்பளம் தர ஒப்புக்கொண…

    • 0 replies
    • 822 views
  21. தற்போது ஜப்பானில் நடைபெற்றுள்ள சுனாமி ஜப்பானின் அணுசக்தி நிலையத்தை தாக்கி அதை உடைத்து அணுக்கதிர்களை பரவச் செய்து பேரவலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெறும்போது இப்படியொரு கதையை இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே சிந்தித்து திரைப்படமாக தந்துள்ளார்கள் டென்மார்க்கில் உள்ள தமிழர்கள் என்று தமிழக திரைப்பட இயக்குநர் பாவல்சங்கர் தெரிவித்தார். அணு குண்டை வெடித்து செயற்கைச் சுனாமியை ஏற்படுத்தினால் என்னவாகும் என்று இளம்புயல் திரைப்படம் கூறியது. இப்போது அடுத்த பக்கமாக சுனாமியே புறப்பட்டுவந்து அணு உலையை உடைத்து அணுகுண்டு வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு குண்டும், சுனாமியும் சந்திக்கும்போது உருவாகும் பேரவலமே எதிர்கால உலகத்தின் பேரவலம் என்று இளம்புயல் திரைப்படம் கூறியது. …

    • 1 reply
    • 1.5k views
  22. அனுஷ்கா எனக்கு அம்மா மாதிரி என பல்டி அடித்து காதலை முறித்த காதலன் அனுஷ்காவும் இயக்குனர் க்ரிஷ்ஷும் காலிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் இயக்கியவர் க்ரிஷ். இவர் தெலுங்கில் இயக்கிய வேதம் மெகா ஹிட் ஆனது. அதில் அனுஷ்கா ஹீரோயின். அதே படத்தைப் இப்போது தமிழில் சிம்பு நடிக்க வானம் என்ற பெயரில் எடுத்து வருகிறார் க்ரிஷ். இதிலும் அனுஷ்கா தான் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்ட போது, இருவருமே எந்த மறுப்பும் சொல்லாமலே இருந்து வந்தார்கள். ஆனால் இப்போது இயக்குனர் க்ரிஷ் அதை மறுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாது அனுஷ்கா எனது அம்மா மாதிரி என்றும் எங்களுக்குள் நல்ல நட்பு மட்டுமே இருந்து வந்தது என்…

  23. ரஹ்மான் வருகைக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன் -கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி *மகிழ்ச்சி, துயரம், கொண்டாட்டம், காதல், களி என வெவ்வேறு உணர்வுநிலைகளை பாடல்களில் வழங்கியிருக்கிறீர்கள். ஆயிரம் பாடல்களில் உங்கள் சொந்த மனநிலைகளும் பிரதிபலித்திருக்கும். அதுபற்றி யோசிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? கவிதை என்பது பொது உணர்ச்சி என்றும் பாட்டு என்பது தன்னுணர்ச்சி என்றும் கருதப்படுகிறது. இதைத்தான் ஆயிரம் பாடல்கள் முன்னுரையிலும் நான் எழுதியிருக்கிறேன். லிரிக் என்பது ஓர் ஆங்கிலச் சொல். இந்த லிரிக் என்பதற்கு தன்னுணர்ச்சிப் பாட்டு என்றுதான் பொருள். இந்த லிரிக் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தபோது கிரேக்க மொழியிலிருந்து இந்தச் சொல் பிறந்ததாக அறியமுடிந்தது. கிரேக்கத்தில் ல…

  24. தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி கோலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நமீதாவுக்கு ஒரு புது பட்டப்பெயரைச் சூட்டியுள்ளனர், இளம் ரசிகர்கள். அதுவும் மாணவர்கள். அது... 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி'! ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நமீதா. அப்போதுதான் இந்தப் பட்டப் பெயரைச் சூட்டி தங்கள் 'பக்தி'யை வெளிப்படுத்தினர் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள். சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது. இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.