வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?! 'அவன் இவன்' படத்தில் மாறுகண் பார்வை கொண்டவராக நடித்துள்ளார், விஷால். உலத் திரைப்பட வரலாற்றில் இத்தகைய கதாப்பாத்திரத்தில் முதலில் செய்தவர் என்ற வகையில், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பிக்க இருக்கிறார்களாம்! இதுகுறித்து நடிகர் விஷால் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "என்னை இயக்குனர் பாலா அழைத்தவுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றேன். ஒரு நடிகராக எனக்கு அடுத்த படத்தில் நடிப்பதற்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் பாலா படம் முடிந்து விட்டது. அடுத்தாக கேமராவை வேறு ஒரு பாத்திரத்துக்கு பார்க்க வேண்டியுள்ளது. எனது முதல் படமான செல்லமே படத்துக்கு பிறகு கூட இந்த அளவுக்கு பயந்தது இல்லை. அவன் இவன் படத்தின் கதையை விட, எனது கதாபாத்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
எல்லாளனை திரையிடுங்கள்… -லீனா மணிமேகலை வேண்டுகோள்! Monday, February 21, 2011, 14:42 விஎஸ் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வருகிற ஏப்ரல் 20 முதல் 25 ந் தேதி வரை தமிழ் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் எந்திரன், அங்காடித் தெரு, களவாணி, மதராஸப்பட்டினம், ஆடுகளம், மைனா, பாஸ் என்கிற பாஸ்கரன், விண்ணை தாண்டி வருவாயா, யுத்தம் செய், தா, பயணம், தென்மேற்கு பருவக்காற்று, என் சுவாசம், மற்றும் செங்கடல், எல்லாளன் ஆகிய படங்கள் போட்டியிடுகின்றன. இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சேரன், மிஷ்கின், வசந்தபாலன், ராஜேஷ்எம், சூரிய பிரபாகர், லீனா மணிமேகலை ஆகிய இயக்குனர்களும் கலந்து கொண்டார்கள். எல்லாளன் படம் குறித்து பேசிய சேரன், ஈழப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பாடகர்களுள் ஒருவர் மலேசியா வாசுதேவன். எவ்வளவு கடினமாக பாடலையும் அழகாகப் பாடிய அசாத்திய திறமைசாலி. இவரது தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கும். மலேசியாவில் பிறந்த இவர், சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தார்..........more........ http://thatstamil.oneindia.in/movies/news/2011/02/20-malaysia-vasudsevan-passed-away-aid0136.html
-
- 19 replies
- 2.3k views
-
-
சனிக்கிழமை, 19, பிப்ரவரி 2011 (18:0 IST நார்வே தமிழ் திரைப்பட விழாவில் எம்.ஜி.ஆர். -சிவாஜி 2011-ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் 20-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் துவங்குகிறது. ரஜினியின் எந்திரன் உள்பட 15 தமிழ்த் திரைப்படங்கள் பங்கேற்கும் இந்த விழா ஏப்ரல் 25-ம் தேதி வரை நடக்கிறது. முழுக்க முழுக்க தமிழ் திரைப்படங்களுக்கென்று தனியானதொரு திரைப்பட விழா இல்லையே என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும், தமிழ் சினிமாவை உலகெங்கும் பரவலாக்கும் பேராவலிலும் உருவாக்கப்பட்டதுதான் நார்வே தமிழ் திரைப்பட விழா. இந்த விழாவின் முதல் பதிப்பு கடந்த 2010-ம் ஆண்டு நார்வே தலைநகர்…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலேகா பார்த்தசாரதியுடன் ஒரு நேர்காணல் http://www.youtube.com/watch?v=LssYUdVyGkE&feature=related http://www.youtube.com/watch?v=UJ7yaRtvBng&feature=relmfu http://www.youtube.com/watch?v=yoIO8JWdzjY&feature=relmfu http://www.youtube.com/watch?v=BKts_xIee5o&feature=relmfu http://www.youtube.com/watch?v=whlX17e_oRM&feature=relmfu http://www.youtube.com/watch?v=YW1SBUJqEo0&feature=relmfu
-
- 1 reply
- 1.1k views
-
-
அழகான கண்களை தானம் செய்தார் சினேகா! .புன்னகை அரசி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை சினேகா தனது கண்களை நேற்று தானம் செய்தார். இதற்கான படிவத்தின் கையெழுத்திட்டு ராஜன் ஐ கேர் மருத்துவமனைக்கு அவர் வழங்கினார். பல்வேறு சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் சினேகா சமீபத்தில் கூட போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் ரோட்டரி கிளப் முயற்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தன்னை அந்த அமைப்பில் இணைத்துக் கொண்டு நிதியுதவியும் செய்தார். இப்போது தனது கண்களை தானம் செய்துள்ளார் சினேகா. இதற்கான நிகழ்ச்சி இன்று காலை சென்னை ராஜன் ஐ கேர் மருத்துவமனையில் நடந்தது. கண்தான பத்திரத்தில் கையெழுத்திட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சினேகா, "கண்தானம் செய்வதன் மூலம், வா…
-
- 2 replies
- 1.6k views
-
-
தென்னிந்திய தாரகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தி டர்ட்டி பிக்சர்' Silk Smithaஎன்ற பெயரில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள். சில்க் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார். வேக வேகமாக வளர்ந்து வருகிற இந்த படம் குறித்த தகவல்கள் மீடியாவில் வெளியாகிக் கொண்டிருக்க, தனது முரட்டு மீசையை முறுக்கிக் கொண்டு படத்திற்கு தடை கோர தயாராகிக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி. சில்க் கதையை யார் படமாக்கினால் இவருக்கென்ன என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தாலும், இவர் இல்லையென்றால் சில்க் என்ற நடிகையே இல்லை என்பது கோடம்பாக்கத்திற்கு நன்றாகவே தெரியும். அவரது கோபத்தை கேள்விப்பட்ட நாம் தமிழ்சினிமா.காம் சார்பாக அவரை சந்தித்தோம். துக்கமும் ஆத…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகக் கோப்பைப் போட்டியால் தள்ளிப் போன 7 படங்கள்! உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால் 7 தமிழ்ப் படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளன. புலிவேஷம், எங்கேயும் காதல், வானம், கோ, ஊலலல்லா, மாப்பிள்ளை, எத்தன் போன்ற படங்கள் இந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகவிருந்தன. குறிப்பாக, காதலர் தினமான பிப்ரவர் 14-ம் தேதி வானம், ஊலலல்லா, கோ மற்றும் எங்கேயும் காதல் வெளியாகவிருந்தன. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காரணமாக இந்தப் படங்கள் ஏப்ரல் மாதம் தள்ளிப் போடப்பட்டன. மார்ச் முதல் வாரத்தில் வெளியாகவிருந்த ஆர் கே.யின் புலி வேஷம் படமும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பி வாசு இயக்கியுள்ளார். சதா, கார்த்திக் உள்பட பெரும் நட்சத்திரப்…
-
- 5 replies
- 2.5k views
-
-
செல்வராகவனுக்கும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் இன்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகளின் இல்லத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று, இப்போது 'நண்பர்களாக' உள்ளனர். இந்த நிலையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வந்தார் கீதாஞ்சலி. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் இவர். செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் நாளடையில் காதல் மலர்ந்தது. பெற்றோர் துணையுடன் இருவரும…
-
- 0 replies
- 995 views
-
-
மொழி,அபியும் நானும் போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் படங்களை எடுத்த ராதா மோகன் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் பயணம். தீவிரவாதியின் விடுதலை கோரி ஒரு விமானம் கடத்தப்படுகிறது.பயணிகளின் தவிப்பு,அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைதான் திரைக்கதை. நாகார்ஜூன் தெலுங்கில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் இந்தப்படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் பாடி லேங்குவேஜ்ஜில் அவர் காட்டிய மிடுக்கை கொஞ்சம் கெட்டப்பிலும் காட்டி இருக்கலாம்.நேஷனல் செக்யூரிட்டி கார்டாக வரும் அவர் க்ளோஸ் ஹேர் கட் பண்ணி இருந்தால் கூடுதல் கம்பீரம் சேர்த்திருக்கும்.படத்தில் அவருக்கு ஜோடி ஏதும் இல்லை என்பது டூயட்டை வெறுக்கும் பார்ட்டிகளுக்கு நிம்மதி. படத்தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆடுகளம் பார்த்தேன்... [Aadu kalam] நீண்டகால இடைவெளிக்குப் பின் யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் ‘ஆடுகளம்’ எனும் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்ததும் முப்பத்தைந்து ஆண்டு கால நினைவுகள் என்நினைவுத் திரையில் நிழலாடின. எனது நண்பரும் ஒரு சாலை மாணாக்கரும் உறவினருமான கவிஞர் வ.ஐ.ச. ஜெயாபாலன் இந்தப் படத்திலே தனுஷ் உடன் இணைந்து முக்கியபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரை மாவட்டத்திலே ஒரு கிராமத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற கோழிச்சண்டையை (சேவற்சண்டையை) மையமாகவைத்துப் பின்னப்பட்ட கதையிலே பரம்பரை பரம்பரையாகக் கோழிச் சண்டையை நடத்தி வரும் பேட்டையாராக இலங்கையைச் சேர்ந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது தோற்றம் அந்தப்பாத்திரத்திற்கு உயிர் கொடு…
-
- 0 replies
- 816 views
-
-
கே.துரை, விருதுநகர். ''தலைக்கனம் பிடித்தவராமே நீங்கள்?'' ''பின்னாடி கால் கிலோ கறி... நல்லி எலும்பு மாதிரி கையும் காலும். அதுக்கு ஒரு தலை... அதுல ஒரு கனம் வேறயா?'' எஸ்.மரிய இருதயம், தூத்துக்குடி. ''அறியாமையை அறிந்துவிடுவார்கள் என்பதால்தான் அதிகம் பேசுவது இல்லையா?'' ''கண்டுபிடிச்சுட்டியே ராசா!'' வி.திவ்யா ஷங்கர், சென்னை-17. ''புதுமுகங்களைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்தும் தைரியம் உங்களுக்கு இல்லையா?'' ''விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் எல்லோரும் என்னிடம் புதுமுகங்கள்போல்தான் வந்தார்கள். எனக்குத் தேவைப்பட்ட விதத்தில் அவர்களை நான் வடிவமைத்துக்கொண்டேன். அதற்கான அர்ப்பணிப்பு அவர்களிடம் இருந்ததையும் குறிப்பிட வேண்டும். என் திரை…
-
- 16 replies
- 3.3k views
-
-
பசங்க படம் மூலம் லைம்லைட்டுக்கு வந்த நடிகை வேகா இப்போது திரைப்படங்களில் நடிப்பதைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு முழு நேர பைலட்டாகப் போகிறாராம். சரோஜா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் வேகா. ஆனால் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது பசங்க படம்தான். அதில் பால்வாடி டீச்சர் வேடத்தில் வந்து, விமலுக்கு ஜோடியாக அவர் நடித்த நடிப்பு அவருக்கு நிறையப் பெயரை வாங்கிக் கொடுத்தது. பசங்க படத்திற்குப் பின்னர் தனி நாயகியாக நடிக்க அவர் உறுதியாக இருந்தாலும், பட வாய்ப்புகள் பிரமாதமாக வரவில்லை. தற்போது வானம் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சினிமாவை விட்டுவிட்டு பைலட்டாக முடிவு செய்துள்ளாராம் வேகா. இதற்கான பயிற்சியிலும் அவர் தீவிரமாக ஈ…
-
- 3 replies
- 1k views
-
-
-
காவலன் வெளியாகி இத்தனை வாரங்கள் கழித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். தன் படத்தை யார் வெளிவர விடாமல் தடுத்தார்கள் என்பதையும் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். எப்பவுமே மிஸ்டர் அமைதியாக இருக்கும் விஜய், இப்போது ஆவேசப் பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கப் போவது மட்டும் நிச்சயம். இனி அந்த பேட்டி- 'இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்' படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போற…
-
- 13 replies
- 2.1k views
-
-
பாலிவுட்டின் இந்த வருட 'மோஸ்ட் வான்டட்’ திரைப்படம் 'Ra. One’. 'Random Access Version 1.0’ என்பதன் சுருக்கம்தான் 'ரா-1’. ஷங்கரின் 'ரோபோ’வை (இந்தி 'எந்திரன்’)விட பவர்ஃபுல் சினிமாவாக 'ரா-1’ இருக்க வேண்டும் என்று தூக்கம் பார்க்காமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக் கான். ஷங்கர் சொன்ன 'எந்திரன்’ கதை பிடிக்காமல், அதில் இருந்து விலகினாலும், அந்தக் கதையின் ஒன் லைனைத் தழுவித்தான் ஷாரூக் இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்று ஏற்கெனவே ஒரு பேச்சு பரவிக்கிடக்கிறது. அதனால், 'எந்திரன்’ படத்தின் அட்வான்ஸ்டு ரீ-மேக்தான் ரா.1 என்ற கிண்டல் பேச்சை அடித்துத் தூள் தூளாக்கும் வெறியுடன் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக். பெரும் பட்ஜெட் படம் பற்றிய சிறு துளித் தகவல்கள்! …
-
- 2 replies
- 973 views
-
-
ஒரே கடல். சென்ற வியாழன் இரவு அபுதாபி கலாச்சார மையத்தில் இந்திய திரைப்படவிழா நடைபெற்றது. பதேர் பாஞ்சாலி மற்றும் ஒரே கடல் என்ற இரண்டு படங்கள் திரையிடப்பட்டன. மிகவும் கவர்ந்த படமாக ஒரே கடல் பற்றி சில வார்த்தைகள். உலகத்தில் சில விஷயங்கள் தொடர்ச்சியான விகிதத்தில் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. நமக்கான அனுபவங்கள் வரும்போது அவை புதிது போல தெரிகிறது நிஜத்திலே எத்தனையாவது முறை இந்த உலகத்தில் ஏற்பட்டது என்று யாராலும் சொல்ல முடியாது. நாதன் (மம்முட்டி) சிறந்த பொருளாதார மேதை. வாழ்க்கையை கொண்டாடும் மனிதன். இந்த உலகத்தில் எதுவுமே புனிதமில்லை என்று நம்புபவன். வீடு முழுக்க புத்தகங்கள் மதுப்புட்டிகள் என கணிப்பொறியுடன் வாழ்பவன். உறவு, காதல், போன்றவை மேல் நம்ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஒரு சில படங்கள் நம் மனதை விட்டு அகலாமல் உழன்று கொண்டேயிருக்கும். சில படங்கள் பார்க்கும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் படம் விட்டு வெளியே வந்ததும் ஞாபக அடுக்குகளிலிருந்து தேட வேண்டியிருக்கும். இன்னும் சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும். இதில் யுத்தம் செய் எந்த விதம்? சென்னையில் ஒரு முக்கிய சரகத்தில் தொடர்ந்து மனித கைகள், ஒரு டப்பாவில் போடப்பட்டிருக்க, ஏற்கனவே தொலைந்து போன தன் தங்கையை கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஜே.கே எனும் சிபிசிஐடி ஆபீஸரான சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது ஒரு வாய்ப்புடன். இந்த கேஸை கண்டுபிடித்தால் அவரது தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்க அனுமதி தருவதாய் சொல்கிறார் சிபிசிஐட…
-
- 0 replies
- 1.2k views
-
-
Inception (2010) - விமரிசனத்துக்கு அப்பால்... சமீபத்தில் பார்த்து அதிசயித்த படம், இந்த Inception. Christopher Nolan தான் இந்த கிரியேட்டர். மேக்கிங்கில் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், தன் திரைக்கதையால் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர் தான் இந்த நோலன் இந்த படத்தை பற்றி ஏற்கனவே ஜெய் அவர் ஸ்டைல்ல எழுதிய அழகான விமர்சனம். இருந்தாலும், சில விஷயங்களை சொல்லவேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு உதவியாக சில டெக்னிக்கல் விஷயங்கள். இந்த பதிவு இந்த படத்தை பற்றின என் 'ஆராய்ச்சியின்' பதிவும் கூட (சிரிக்கப்படாது). கதையும் அதன் முடிச்சும் பிரமிக்க வைப்பவை. ஒரு கனவை ஒருவர் காணமுடியும். இரு வேறு மனிதர்கள் 'சேர்ந்து' ஒரு கனவை காணமுடியுமா? சினிம…
-
- 14 replies
- 2.4k views
-
-
ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் ஈட்டிய லாபம் எவ்வளவு என்பதை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. எந்திரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியானது. மூன்று மொழிகளிலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. வெளிநாடுகளிலும் வசூலை குவித்தது எந்திரன். மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை சன் பிக்சர்ஸுக்கு எந்திரன் ஈட்டித் தந்த லாபம் 179 கோடிகள். இதில் சேட்டிலைட் ரைட்ஸான 15 கோடியை சன் பிக்சர்ஸ் சேர்க்கவில்லை. அவர்களே சன் தொலைக்காட்சியில் படத்தை திரையிட இருக்கிறார்கள். இந்தத் தொகை சன் பிக்சர்ஸுக்கு மட்டும் கிடைத்த லாபம். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் லாபம் தனி. எந்திரன் படத்துக்கு சன் பிக்சர்ஸ செலவழித்தது…
-
- 5 replies
- 698 views
-
-
கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் பட உலகின் பேரரசான டிஸ்னி நிறுவனத்தின் 50 வது பெருமைமிகு படைப்புதான் TANGLED 3-D. விருதுகள். அனிமேஷன் பட வரலாற்றில் அதிகம் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் இது. பட்ஜெட் $260 மில்லியன். அமெரிக்காவில் நவம்பரில் வெளிவந்து போட்ட பணத்திற்கும் மேல் எடுத்துவிட்டு தற்போது இந்தியாவில் ரிலீஸ் ஆகி உள்ளது. சூரியனில் இருந்து விழும் ஒரு துளி ஒளி மலையில் உள்ள ஒரு பசுமையான இடத்தில் விழுகிறது. அதன் மூலம் ஒரு அதிசய மலர் உண்டாகிறது. நோயற்ற வாழ்வு, என்றும் இளமை எனும் பல அதிசயங்களை தரும் அரிய சக்தி உடையது அந்த மலர். இதை ஒரு மூதாட்டி பார்த்து விடுகிறாள். அதன் மூலம் தன் இளமையை மீட்டெடுக்கிறாள். அதே சமயம் அரண்மனை காவலாளிகள் அங்கு வர அவள் சென்றுவிடுகிறாள். அந்த பூவை…
-
- 0 replies
- 570 views
-
-
மல்லிகா ஷெராவத்தின் 17 லிப் டு லிப் சாதனையை முறியடித்திருக்கிறது பாலிவுட் இளம்ஜோடிகளின் காதல் படம். இப்படத்தில் 22 லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சினிமாவில் ‘லிப் டு லிப்’ முத்தம் அரிதாக இருந்தது ஒரு காலம். தமிழில் கமல் படங்களில் மட்டும் வரும். பரபரப்பாக பேசப்படும். இப்போது சர்வசாதாரணம். நமக்கு முன்பே இந்த கலாசாரத்தை துவக்கிவைத்த பாலிவுட்டில் இது இப்போது மேலும் அமோகமாய் நடக்கிறது. வெறுமனே ‘இச்’ பதிப்பதோடு இல்லாமல், யார் ‘இச்’சாதனையை படைப்பது என்ற போட்டியும் அங்கு அதிகரித்திருக்கிறது. ‘காயிஷ்’ (ஆசை) என்ற படத்தில் புதுமுக ஹீரோவுடன் நடித்த கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத் ஒன்று, இரண்டு இல்ல.. விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு 17 லிப் டு லிப் முத…
-
- 0 replies
- 652 views
-
-
வடிவேலு 25 வித்யாசமான ரோல்களில் நடிக்கும் புதியபடம் "உலகம்". இப்படத்தை புதுமுக இயக்குநர் ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். ஒரு வருடத்திற்கு முன்பே இப்படத்தின் தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை பா.ம.கா.வை கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான போட்டோசேஷன் நடைபெற்றது. போட்டோக்களை பார்த்து வடிவேலு பிரமித்து போனாராம். மேலும் இயக்குநர் ஆதம் பாவாவின் கற்பனையை வெகுவாக பாராட்டினாராம். இதற்கிடையில் செல்வராகவன் "இரண்டாம் உலகம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை கேள்விபட்ட "உலகம்" படத்தின் தயாரிப்பாளரும், பா.ம.க., முக்கிய பிரமுகரும், செல்வராகவனை நேரில் சந்தித்து என்னுடைய படத்திற்கு ஏற்கனவே "உலகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது நீ…
-
- 0 replies
- 481 views
-
-
ராவணன் படத்தின் மூலம் பத்து தலைகளில் வலி ஏற்பட்ட மாதிரி மணிரத்னம் முடங்கி விடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அசராத மனிதர் அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் என்னத்தோடு நவீன எழுத்தாளர் ஜெயமோகனிடம் இந்தக்கதைக்கு மூன்று மணிநேரத்தில் முடிக்கிறமாதிரி திரைக்கதை எழுதித்தர முடியுமா என்று ஆலோசித்திருக்கிறார். அவரோ நிச்சய்மாக முடியும் என்று கூறி, திரைக்கதை வடிவத்துக்கான சுருக்கத்தை எழுதிக்கொடுத்து விட்டாராம். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை தற்போது மக்கள் தொலைகாட்சிக்காக ஒரு தரப்பினர் சீரியாலாக எடுக்க முயன்று கொண்டிருக்க, ஏற்கனவே பலர் இதை சினிமாவாக எடுக்க நினைத்து தோற்றுப் போய் இருக்கிறார்கள் என்பதையும், இந்தநாவலை நவின நாடகமாக போட்ட வ…
-
- 0 replies
- 944 views
-
-
அரசாங்கம் படத்தில் விஜய்காந்த் ஜோடியாக நடித்த நவநீத் கவுருக்கும் மராட்டிய மாநில சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணாவுக்கும் திருமணம் நடக்கிறது. பஞ்சாபைச் சேர்ந்தவர் நவநீத் கவுர். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்தார். பிரபல சாமியார் பாபா ராம்தேவிடம் விதர்பா அருகே உள்ள அமராவதி ஆசிரமத்தில் யோகா கலை கற்று வந்தார் நவநீத் கவுர். அப்போது அங்கே யோகா கற்க வந்த சுயேச்சை எம்எல்ஏவான ரவி ராணாவுக்கும் நவநீத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அதை வெறும் தனிப்பட்ட நிகழ்வாக செய்யாமல், பல ஏழை ஜோடிகளுடன் சேர்ந்து செய்து கொள்ள விரும்பினர்.அமரா…
-
- 0 replies
- 697 views
-