வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைவாழ்வின் வெற்றியை கொண்டாடும் இசைப் பெருவிழாவும் சுப்பர் சிங்கர் இசைக் கொண்டாட்டமும். - கனடாவில் தனித்துவம் மிக்க இசை நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட ஆர்யா கனடா நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 13 - 14 ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் பெயர் கிரவுண்ட் மைதானத்தில் இரண்டு பிரம்டமாண்டமான இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளது. 13ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை வல்லுனர் வெங்கடே~; பட் அவர்களுடன் ரொரன்ரோவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேர் தமது சமையல் திறமையினை வெளிப்படுத்தும் சமையல் போட்டி நிகழ்ச்சி நடைபெறவ…
-
- 0 replies
- 575 views
-
-
தமிழ் சினிமா 2016-ன் 10 நிகழ்வுகள்: பிரச்சினை முதல் பேரிழப்பு வரை 2016ம் ஆண்டு தமிழ் திரையுலகில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் பலராலும் கவனிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட 10 முக்கிய நிகழ்வுகளின் பட்டியல் இதோ! நடிகர் சங்கப் பிரச்சினை நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்றவுடன், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தது. ஆனால், இந்தாண்டும் அதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது எனச் சொல்லலாம். சரத்குமார் உள்ளிட்ட பழைய நிர்வாகிகள் கணக்குகளை இன்னும் சரிவர ஒப்படைக்கவில்லை என்று புதிய நிர்வாகம் குற்றம்சாட்டியது.…
-
- 0 replies
- 300 views
-
-
தமிழகத்தில் வெளியாக முடியாத 'செங்கடல்' இப்போது அமெரிக்கா முழுவதும் ரிலீஸ்! Posted by: Shankar Published: Saturday, May 25, 2013, 16:13 [iST] டல்லாஸ் (யு.எஸ்): லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் திரைப்படம் அமெரிக்கா முழுவதும் தமிழர் அமைப்புகளால் திரையிடப்படுகிறது. தமிழகத்தில் உருவான செங்கடல் திரைப்படம், தணிக்கைக் குழுவின் தடையை தாண்டி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வெளிவந்தது. ஆனாலும் தமிழகத்தில் திரையிடப்படவில்லை. செய்தியாளர் காட்சி மட்டுமே திரையிடப்பட்டது. இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு அமைப்புக்களின் உதவியுடன் செங்கடல் திரையிடப்பட்டு வருகிறது. ஜப்பான் டூ அமெரிக்கா ஜப்பானிய, கொரிய, சீன, ஃப்ரெஞ்ச் உட்பட 6 மொழிகளில் சப் டைட்டில்களுடன் ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள…
-
- 0 replies
- 514 views
-
-
இன்றைய கிராபிக்ஸ் உலகத்தில் எத்தனையோ கிராபிக்ஸ் காட்சிகளை சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். ரசிகர்களுக்காக நடிகர்கள் காட்டும் வித்தைகளில் பல, சமயங்களில் கண் கட்டு வித்தைகள் தான். அப்படித் தான், 1989ல் வெளிவந்த ‘அபூர்வ சகோதர்கள் ‘ படமும் கூட. கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில், வில்லன்களின் சூழ்ச்சியால் ஒரு கமல் மட்டும் சற்று வளார்ச்சி குறைந்து குள்ளமானவராக காட்சியளிப்பார். இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கமல், குள்ளமாக நடித்தது எப்படி என்ற ரகசியத்தை இத்தனை நாள் பொத்தி, பொத்திப் பாதுகாத்து வந்தார். ஆனால், தற்போது அந்த ‘சிதம்பர’ ரகசியத்தை போட்டுடைத்திருக்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம். இது குறித்து அவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த…
-
- 0 replies
- 621 views
-
-
இரண்டு படங்கள் - இருவேறு விமர்சனப் பார்வைகள் கிருஷ்ணன் 2014ஆம் ஆண்டின் முதல் வெற்றிப் படங்களான விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் தர அளவுகோல்களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத சாதாரண வெகுஜன திரைப்படங்களாகவே வந்துபோயின. வெகுஜன ரசனைக்கும் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்களை குதூகலிக்க வைப்பதற்கும் ஏற்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததே இந்தப் படங்களின் வெற்றிக்குப் போதுமானதாக அமைந்துவிட்டது. இவ்விரு படங்களின் பேரலை சற்று ஓய்ந்தபோது சனவரி 24 அன்று இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று 80களில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய ஸ்ரீப்ரியா இயக்கிய முதல் படம் மாலினி 22 பாளையங்கோட்டை, மற்றொன்று ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய இரண்டாவது படமான கோலி சோடா. இரண்டு படங்களிலும் ப…
-
- 0 replies
- 707 views
-
-
'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம் குவார்ட்டர் கட்டிங் என்று படத்திற்குப் பெயர் வைத்த பின்னர் கேளிக்கை வரி விலக்கு சலுகையையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தலைப்புக்கு முன்னால் பெரிதாக 'வ' என்ற எழுத்தைப் போட்டு சமாளித்துள்ளனர் காயத்ரி-புஷ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள குவார்ட்டர் கட்டிங் படக் குழுவினர். இப்படத்தை தயாரித்திருப்பது தயாநிதி அழகிரி [^]. எனவே பெரிய அளவில் விதிமுறைகள் பார்க்கப்படாது என படக் குழுவினர் நினைத்திருக்கலாம். இருந்தாலும் குற்றம் [^] சாட்டி விரல்கள் நீண்டு விடுமே என்ற யோசனையில் குவார்ட்டர் கட்டிங் டைட்டிலுக்கு மேலே 'வ' என்ற எழுத்தைப் போட்டு விட்டனர். அதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இ…
-
- 0 replies
- 708 views
-
-
காக்கிச் சட்டை மீது வெறுப்போடு இருக்கும் ஹீரோ, பின்னர் காவல் துறையில் சிகரம் தொடும் அதே போலீஸ் கதை! கடமை தவறாத போலீஸ் சத்யராஜ். குழந்தை பிறந்தவுடனேயே அவனுக்கு கற்பனையில் போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி ரசிக்கும் அளவுக்கு காவல் துறை மீது அவருக்குக் காதல். ஆனால் மகன் விக்ரம் பிரபு, அப்பாவுக்காக போலீஸ் வேலையில் சேருவதுபோல நடிக்கிறார்; திடீர் திருப்பத்தில் போலீஸும் ஆகிவிடுகிறார். ஒரே மாதத்தில் வேலையில் இருந்து விலகிவிடலாம் எனத் திட்டமிட்டிருக்கும்போது, ஏ.டி.எம் கொள்ளையர்கள் பற்றிய வழக்கு விக்ரம் பிரபுவிடம் வருகிறது. அது, அவர் உடலில் போலீஸ் யூனிஃபார்மை எப்படி கவசகுண்டலம்போல ஒட்டவைக்கிறது என்பதுதான் மீதிக் கதை! காதலும் காக்கியும் கலக்கும் 'காக்கிச் சட்டை போட்ட மச்சான்’ வகைக் கதைதான…
-
- 0 replies
- 1.4k views
-
-
''விக்ரம் பிரபு... உங்க மேல அக்கறையோட ஒரு அட்வைஸ்!’’ - 'பக்கா’ விமர்சனம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டார்கள். பல நூறு கோடி ரூபாய் முதலீடு அந்தரத்தில் தொங்கியது. சொன்ன தேதிக்கு ரிலீஸ் செய்யமுடியாமல் படங்கள் முடங்கின. அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் க்யூப் போன்ற அமைப்புகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இத்தனையையும் கடந்து சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. ரீ-என்ட்ரி நல்லதுதான். ஆனால், 'பக்கா' போன்ற படத்தோடு கோலிவுட் திரும்ப ரீ-என்ட்ரி ஆகியிருக்க வேண்டாம். விக்ரம் பிரபு ஊர் ஊராகச் சென்று திருவிழாவில் பொம்மை விற்கும் 'பொம்மைக்கடை' பாண்டி. ஃப்ரேமில் தனியாக நின்…
-
- 0 replies
- 629 views
-
-
அடிமைப் பெண் - 1969 . 1968 ஆம் ஆண்டு எட்டு படங்களில் நடித்த எம்ஜிஆர், அடுத்த ஆண்டில் நடித்தது இரண்டே படங்களில்தான். அதில் ஒன்று அவரது சொந்தத் தயாரிப்பில் வெளி யான "அடிமைப் பெண்' ஆகும். "நாடோடி மன்னன்' படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் தயாரித்த படமான "அடிமைப் பெண்' பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. எனினும் கதை, நடிகர், நடிகைகள் என பல முறை மாற்றப்பட்டு, எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவைச் சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோரால் தொய்வில்லாமல் உருவாக்கப்பட்ட கதை இதோ. . வேங்கை நாட்டு ராணி மங்கம்மா மீது சூரக்காட்டு மன்னன் செங்கோடன் மோகம் கொள் கிறான். வேங்கை மலை மன்னனுக்கு மனைவியாகி, ஆண் குழந்தைக்குத் தாயான பிறகும் மங்க…
-
- 0 replies
- 4k views
-
-
678 EGYPT -2010 ஒரு முறை மங்களூருக்கு சென்றிருந்த போது, ஆள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு ரோட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி,“இந்த இடத்தில் தான் ஒரு பெண்ணை எங்கிருந்தோ வந்த ஒருவன் அவள் மார்பகத்தை அழுத்திவிட்டு ஓடினான்”என்றார்என் அண்ணன் ஒருவர். வழக்கமாகஅதே ரோட்டில் வரும் அவள் அதன் பிறகு எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை என்றும் சொன்னார். பல முறை பேருந்துகளில், ரயில்களில், ஷாப்பிங் மால்களில் சம்பந்தமே இல்லாமல்சிலபெண்கள் சில ஆண்களை முறைத்துக்கொண்டே போவதை தினம் தினம் பார்க்கிறோம். சம்பந்தமே இல்லாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் நம்மையும் சில பெண்கள் முறைப்பதையும், அதைப் பார்த்து நம் அருகில் நிற்கும் சிலர் விஷமச் சிரிப்பு சிரிப்பதையும் பார்க்கிறோம். இவை நம் நா…
-
- 0 replies
- 741 views
-
-
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்! தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம்.சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு குறித்த செய்தி திரைப்படத் துறையினர், ரசிகர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பிரபல இயக்குனர்-தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்பனின் மகனாவார் சரவணன். நாட்டின் மிகப் பழமையான கலையரங்குகளில் ஒன்றான பிரபலமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை அவர் நிறுவினார். இன்று வரை சென்னையில் இது ஒரு அடையாளமாக இது உள்ளது. சரவணன் தனது தந்தை விட்டுச் சென்ற செழுமையான சினிமா பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதில…
-
- 0 replies
- 111 views
-
-
'மரண ஆபத்து, வேடிக்கை தான்' : ஹாலிவுட் பெண் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல் பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images கட்டுரை தகவல் ஹிஸ்டரி'ஸ் டஃபஸ்ட் ஹீரோஸ் பிபிசி ரேடியோ 4 13 டிசம்பர் 2025 அமெரிக்காவின் வெறிச்சோடிய பாலைவனத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் காது கேளாத ஓ'நீல் எனும் பெண் சண்டை கலைஞரால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு உறுதியாக காட்டியது. அவர் காது கேளாதவர் என்பது அவருக்கு தடையாக இருக்கும் என்ற தவறான கருத்துகளை முறியடித்ததோடு, பெண்களிடையே ரேஸிங் காரை அதிவேகமாக ஓட்டுவதில் மஞ்சள் நிற உடை அணிந்த அந்த சிறிய உருவம் துணிச்சலுடன் சவால் விடுத்து முந்தைய சாதனைகளை முறியடித்தது. ஆனால், இது அசாத்தியமான சாகசங்களை மேற்கொள்ள தூண்டுதலாக அமைந்த ஓ'நீலின் தைரியம் மற்றும்…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
தெலுங்கில் தற்போது பிரியாமணி நடித்துவரும் "சாண்டி" படம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் இதன் ஆரம்ப விழா நடந்தபோது பிரியாமணி - படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திலேயே வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. உளவுத்துறை மூலம் டில்லிக்குச் சென்ற இந்த விடயத்தினக் குறித்து, உடனடியாக விசாரித்து முழு தகவலையும் அனுப்புமாறு டில்லி உயர் அதிகாரிகள் ஆந்திர பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆந்திர பொலிசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும்இ நடிகை பிரியாமணியிடமும் கதை பற்றி விசார…
-
- 0 replies
- 662 views
-
-
அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் விஜய்சேதுபதி! மின்னம்பலம் விஜய்சேதுபதிக்கு இந்த வருடம் விஜய்க்கு வில்லனாக நடித்த மாஸ்டர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தும் வருகிறது மாஸ்டர். விஜய்க்கான படமென்றாலும், விஜய்சேதுபதிக்கும் சினிமா கேரியரில் பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது மாஸ்டர். தமிழ் சினிமாவில் அதிகப் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி. இந்த வருடம் அதிக ரிலீஸூம் விஜய்சேதுபதிக்கு தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஹீரோவாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல், வில்லன், பிற மொழிப் படங்கள் என சுறுசுறுப்பாக நடித்துவருகிறார். விஜய்சேதுபதி கைவசம் ரிலீஸூக்கு ரெடியாக சீனுராமசாமி இயக்கத்தில் ‘இடம்…
-
- 0 replies
- 368 views
-
-
பல நடிகர்கள்... வெவ்வேறு கதைகள்...11 படங்கள்... ஒரே நாளில் - ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! தமிழ் சினிமா அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. ஹாலிவுட்டுக்கு இணையான காட்சிகளும் தமிழ் சினிமாவில் வைக்கப்படுகின்றன. முன்பெல்லாம் வருடத்துக்கே ஒரு குறிப்பிட்ட அளவுடைய படங்கள்தான் வெளிவரும். அதனாலேயே ஹிட் அடித்த படங்கள் மாதக்கணக்கில் திரையரங்கில் ஓடும். பிறகு, காலப்போக்கில் சினிமா மோகம் அதிகரித்து பல நடிகர்களும் இயக்குநர்களும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்கள். பின், மாதம் 20 படங்கள் வரை எனத் திரைக்கு வந்துகொண்டிருந்தது. ஆனால், தற்போது ஒரே நாளில் பல படங்கள் வெளிவர ஆரம்பித்து திரைத்துறையை ஆட்டுவித்து வருகிறது. இந்நிலையில், அடுத்…
-
- 0 replies
- 447 views
-
-
தமிழ் சினிமா சர்வதேச அரங்கில் சாதனை நிகழ்த்துவது எப்போது? ஜூன் 16, 2022 மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியிடப்படும் பிற மொழி படங்கள் தமிழ் படங்களுக்கு நிகரான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், ,கே.ஜி.எஃப் – 2 ஆகிய மூன்று படங்களும் தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு சர்வசாதாரணமாக அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தில் வருவாய் ஈட்டியுள்ளது. நேரடி தமிழ் படங்கள்அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டு அதிகபட்ச கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டாலும் 100 கோடி வசூலையும், அதிகபட்ச பார்வையாளர் எண்ணிக்கையையும் எட்டிப் பிடிப்பது கடும் போராட்ட…
-
- 0 replies
- 247 views
-
-
என் இனிய இயந்திரா... இந்த தூர்தர்சன் சீரியல்...பள்ளிகாலங்களில் 8 அல்லது 9 வகுப்போ என சரியாக நினைவில் இல்லை...சிவரஞ்சனி... நடித்திருப்பார்.. நல்லதொரு தொல்லை காட்சி தொடர்.. முன்கூடியே ரொம்ப அட்வான்சாக சுஜாதாவினால் எழுதப்பட்டது... 3000 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்பதானா ஒரு தொடர்... அப்போது உலகம் முழுவதும் இயந்திர மனிதன் (ரோபோ) கட்டுபாட்டில் இருக்கும்... மனிதர்கள் அதற்கு அடிமைகளாக இருப்பார்கள்..60 வயதிற்குமேல் யாரும் உயிரோடு இருக்கமுடியாது ... எல்லாம் மக்கள் தொகை பெருக்கம் தான்... ரோபாக்கள் அழைத்து சென்று கொன்றுவிடும்.. அதே போல பிள்ளை பெறுவதற்கு இயந்திர அரசாங்கத்திடம் லைசன்ஸ் பெறவேண்டும்... ஜீனோ என்ற நாய்குட்டி அதுவும் ரோபோதான் ... ஆனால் மனிததன்மையோடு அவர்களுக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
NEW MOVIE THIRUDI WATCH FULL SCREEN
-
- 0 replies
- 1.1k views
-
-
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாய்த்தர்க்கம் ராதிகா ஓர் சிங்களப் பெண் - பாலு ; என் தந்தை ஓர் பச்சைத் தமிழன் - ராதிகா 7/6/2008 5:46:56 PM - சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு தடுத்ததை அடுத்து பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிலிம் சேம்பரில் நேற்று நடைபெற்றது. செயலாளர் பதவிக்கு போட்டிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் வாக்களித்தனர். நடிகை ராதிகா வாக்களித…
-
- 0 replies
- 861 views
-
-
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள். இவர் குறித்த சில முக்கியத் தகவல்கள் இதோ. எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம். இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பா…
-
- 0 replies
- 544 views
-
-
திரை விமர்சனம்: சுல்தான் சல்மான் கானும், அனுஷ்கா ஷர்மாவும் மல்யுத்த வீரர்களாக நடிக்கிறார்கள் என்பதாலேயே ரசிகர்களிடம் ‘சுல்தான்’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அத்துடன், ‘ரேப்’என்ற புண்படுத்தும் ஒப்பீட்டை வைத்து சல்மான் கான் வெளியிட்ட குறித்த சல்மானின் மோசமான கருத்துகளும் படத்துக்கு சர்ச்சைக்குரிய விளம்பரமாக அமைந்திருந்தன. ‘மேரி பிரதர் கி துல்ஹன்’, ‘குண்டே’ போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆகாஷ் ஓபராய் (அமித் சத்) ‘புரோ டேக் டவுன்’ என்ற மிக்ஸ்டு மார்ஷியல் லீகை இந்தியாவில் பிரபலப்படுத்தும் கனவில் இருக்கும் இளம் விளம்பரதாரர். ஆனால், பல்வேறு காரணங்களால்…
-
- 0 replies
- 248 views
-
-
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனு…
-
- 0 replies
- 401 views
-
-
‘வர்லாம் வர்லாம் வா’ என்ற பிறகும் வெளியாகாமல் காத்திருக்கும் படங்கள்! இப்போ ரிலீஸாகி விடும், அப்போ ரிலீஸாகி விடும் என ரொம்ப நாட்களாகவே நம்மை எதிர்பார்க்கவைத்து, இன்று வரை ரிலீஸாகாமல் இருக்கும் சில தமிழ் சினிமாக்கள் லிஸ்ட் இதோ... ரெண்டாவது படம் : 'காதலுடன் கூடிய ஆன்மிக ஆக்ஷன் நிறைந்த கிராமிய அனிமேஷன் காவியம்' என ஆரம்பத்திலேயே அலப்பறையாக போஸ்டர் அடித்தார் இந்த படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன். 'தமிழ் படம்' படத்திற்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கிய இந்த படத்தில் விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் டிரெய்லரும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. முதல் படத்தை …
-
- 0 replies
- 554 views
-
-
-
- 0 replies
- 4.5k views
-
-
யோகி - திரைப்பட விமர்சனம் பணத்துக்காக எதையும் செய்யும் தாதா கும்பலின் தலைவன் யோகி. வேட்டை என்று சொல்லப்படும் தங்களது தாதா பணிக்காக ஒரு நாள் கிளம்புகிறார்கள். சுனாமி என்கிற ஹோட்டலுக்குள் புகுந்து வேலையாட்களைக் கட்டிப் போட்டுவிட்டு, ஹோட்டல் அறைகளுக்குள் தடாலடியாக நுழைந்து தங்கியிருந்தவர்களைத் தாக்கித் தங்களது வேட்டையை நடத்துகிறார்கள் யோகியும், அவனது ஆட்கள் மூன்று பேரும். காருக்குரிய பெண் வேகமாக வெளியே ஓடி வர பின்னால் துரத்தி வந்த போலீஸ் காரால் தாக்கப்பட்டு கீழே விழுகிறாள். யோகி வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு ஓட முயல.. காரின் பின் சீட்டில் அம்சமாகப் படுத்திருக்கும் கைக்குழந்தை வீரிட்டு அழுக.. இனிதான் கதையே.. அந்தக் குழந்தையை அங்கேயே விட்டு…
-
- 0 replies
- 942 views
-