Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. முதல் பார்வை: சத்ரு உதிரன்சென்னை குழந்தைகளைக் கடத்தும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் காவல் உதவி ஆய்வாளரின் கதையே 'சத்ரு'. ராயபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார் கதிரேசன் (கதிர்). அவர் நேர்மைக்குப் பரிசாக பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளில் 2 முறை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிரபாகரன் (லகுபரன்) தன் நண்பர்கள் 4 பேருடன் இணைந்து பணத்துக்காகப் பள்ளிக் குழந்தைகளைக் கடத்துகிறார். லகுபரன் 5 கோடி பணம் வேண்டும் என்று டீல் பேசுகிறார். இந்த சூழலை சாமர்த்தியமாகக் கையாண்டு குழந்தையையும், பணத்தையும் மீட்கிறார் கதிர். இதில் லகுபரனின் நண்பன் கொல்லப்படுகிறார். இதனால் ஆவேசமாகும் லகுபரன், கதிர் குடும்பத்தைக் கொலை செய்யப் போவதாக சவால் விடுக்கிறார். கதிர் தன் குடும்பத…

  2. திருமணம் சில திருத்தங்களுடன் - திரை விமர்சனம்! திருமணம் நடக்கும் விதத்தில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் படம் எப்படி இருக்கிறது? திருமணம் நடத்துவது நிச்சயம் எளிமையான விஷயம் அல்ல. காதலர்கள், வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்வதுகொள்வது என்பதும் கடினம்தான். அப்படி ஒரு திருமணத்தில் எத்தனை தடங்கல்கள் ஏற்படும் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் திருமணம் சில திருத்தங்களுடன். உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, மனோபாலா முதலானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் சேரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜமீன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அக்காவின் பாசத்தம்பியாக அன்பிலும் …

  3. 90 எம்எல்: திரை விமர்சனம்! பாலுறவு உள்ளிட்ட சிக்கல்களைப் பெண்களின் பார்வையில் பேசும் இந்தப் படம் எப்படி உள்ளது? பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும்படியாக ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளது. நிவிஸ் என்டர்டெய்ன்மென்ட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் நான்கு தோழிகளுடன் புதிதாக வந்த ரீட்டா நட்பாகிறார். அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வலம் வரும் ரீட்டாவை மற்ற பெண்களுக்குப் பிடித்துப் போகிறது. அவளைப் போல் தம்மால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. ரீட்டாவின் குணநலன்கள் அவர்களையும் மாற்ற, துணிச்சலுடன் சுதந…

  4. ஆஸ்கர் 2019: விருதுகளைக் குவித்த படங்கள்! திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், திரைக் கலைஞர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது ஆஸ்கர் விருதுகளைத்தான். 91ஆவது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று (பிப்ரவரி 25) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சியை ஹாலிவுட் நடிகர் ஹெவின் ஹர்ட் தொகுத்து வழங்குவதாக இருந்தது. 2009 -2011 காலகட்டத்தில் அவர் LGBT சமூகத்தவர்களை தரக்குறைவாகப் பேசியது கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில் பரவியது. இது தொடர்பாக சர்ச்சை உருவான நிலையில் அவர் மன்னிப்பு கேட்டதோடு ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தான் இந்த முறை தொகுத்து …

    • 1 reply
    • 726 views
  5. முதல் பார்வை: டுலெட் உதிரன்சென்னை வாடகைக்கு வீடு தேடும் படலத்தில் அவதிப்படும் ஒரு குடும்பத்தின் கதையே 'டுலெட்'. சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ். அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண் யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில் வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ். ஆனால், அப்போதும் ஒரு…

  6. இலங்கையை ஆட்சி செய்த கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் மும்மொழியிலும் உருவான திரைப்படம் தான் கிரிவெசிபுர. இத்திரைப்படத்தின் உத்தியோகபூர்வ முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை தேவிந்த கோங்காகே இயக்கியுள்ளார். இவரே கதை,திரை கதை,வசனம் எழுதியுள்ளார். இக்கதைப்பற்றி 4 1/2 வருடங்கள் ஆராய்ச்சியும் செய்துள்ளார். கிரிவெசிபுர படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக புபுது சத்துரங்க (ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன்) மஹேந்திர பெரேரா (பிலிமதலவ்வை),புத்திக லொகுகெட்டிய (டொன் டி யெஸ்) ஆகியோர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் ஸ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் பட்டத்து ராணி ஸ்ரீ வெங்கட் ரங்கம்மாளாக இலங்கை தமிழ் சினிமாவின் ந…

    • 0 replies
    • 530 views
  7. சத்தியராஜ் மகளின் உன்னத கனவு நனவானது!! பிரபல நடிகர் சத்தியராஜ்ஜின் மகள் திவ்யா தென்னிந்தியாவில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் என்பதுடன், இலாப நோக்கமற்ற உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின் தூதுவராகவும் உள்ளார். இந்நிலையில் திவ்யா, கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தமிழ்நாட்டின் அரச பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் அதற்கு அனுமதியும் வழங்கினார். இதையடுத்து அக்சய பாத்ரா தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து இன்று முதல் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க ஆரம்பித்துள்ளன. இதன் தொடக்க விழாவை இ…

  8. முதல் பார்வை: எல்கேஜி உதிரன் லால்குடியில் சாதாரண வார்டு கவுன்சிலராக இருக்கும் இளைஞன் வியூகம் வகுத்து தமிழக முதல்வராக உயர்ந்தால் அதுவே 'எல்கேஜி'. லால்குடி கருப்பையா காந்தி (ஆர்ஜே பாலாஜி) வார்டு கவுன்சிலராக இருக்கிறார். தன் அப்பா அழகு மெய்யப்பன் (நாஞ்சில் சம்பத்) மாதிரி தோற்றுப்போன அரசியல்வாதியாக இல்லாமல் வெற்றிபெற்ற அரசியல் தலைவராக வலம் வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக கார்ப்பரேட் கம்பெனியுடன் பேசி தமிழகத்தின் ஆளுமையாக குறுகிய காலத்திலேயே வளரத் திட்டமிடுகிறார். முதல்வர் ஆவுடையப்பன் (அனந்த் வைத்தியநாதன்) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் முதல்வருக்கு வந்த நோயை எதிர்த்து நூதனப்…

  9. படத்தின் காப்புரிமை Frazer Harrison/ Getty Images 91வது 'அகாடமி அவார்ட்ஸ்' எனப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள ஹாலிவுட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், நிபுணர்கள் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் 'கிரீன் புக்' திரைப்படம் சிறந்த திரைப்படம், உண்மைத் திர…

  10. Published : 22 Feb 2019 18:02 IST Updated : 22 Feb 2019 18:02 IST காதலியின் தீராத நோயைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கும் இளைஞனின் கதையே 'கண்ணே கலைமானே'. அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை மாவட்டம் சோழவந்தானில் மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார். முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று ஊருக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார். …

  11. மீடூ புகாருக்கு விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக் செய்திகள் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடி உள்ள பிரபல பாடகர் கார்த்திக் மீது ‘மீ டூ’வில் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறப்பட்டது. வெளிநாட்டு தமிழ் பாடகி இந்த புகாரை கூறியிருந்தார். இதனை பாடகி சின்மயி வெளியிட்டார். இதற்கு தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:- “புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிர் துறந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்மீது கூறப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். என்னை சுற்றி எப்போதும் மகிழ்ச்சி பரவ வேண்டும் என்று விரும்புப…

  12. ஆஸ்கார் விருதுகள் 2019 – கோ. கமலக்கண்ணன் February 17, 2019 1 ஆஸ்கார் எப்போதும் ஒரு வித கலவையான ரசனையுடனேயே படத்தேர்வில் ஈடுபடுகிறது. முழுக்க சிறந்த திரைப்படங்களை மட்டுமோ, அல்லது முழுக்க வணிக வெற்றி படங்களையோ கொண்டோ அது தன் பட்டியலை நிரப்புவதில்லை. அது அதிகளவிலான மக்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டாடிக் கொள்வதற்கான தருணமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவதற்கான பிரயத்தனங்களிலேயே எப்போதும் ஈடுபடுகிறது. ஆஸ்காரின் தேர்வுகள் ஏதோவொரு அரசியல் நோக்கத்தைத் தன்னுள்ளே வைத்தே செயல்பட்டு வருகிறது என்பது இன்று புரிந்து கொள்ள முடியாத கருத்தமைவல்ல. அது கூடிய மட்டும் மக்கள் கூட்டத்தை அதிகமாக உள்ளடக்கிக் கொள்ளும் பொருளாதாரப் பணியில் தன் கவனத்தைக் கூர்கிறது. அதனால்தான், ஹோ…

  13. நாம் புலிகளாக இருந்தோம்! - இயக்குநர் செழியன் நேர்காணல் சந்திப்பு: ஆர்.சி.ஜெயந்தன் இது உலக சினிமாக்களை வியந்து கொண்டாடும் தலைமுறை யின் காலம். இப்போது தமிழ் சினிமா ஒன்றை உலகமே உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படம் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர் செழியனின் படைப்பாக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டுலெட்’. உலக அளவில் 100 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 84-ல் அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட படம். சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது உட்பட, மொத்தம் 32 சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் முதல் தமிழ் சினிமா. உலகம் சுற்றித் திரும்பியிருக்கும் ‘டுலெட்’ பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் இயக்குநர் செழியனைச்…

  14. திரை விமர்சனத்தின் எல்லை எது? - அ. குமரேசன் ‘பேரன்பு’ திரைப்படத்தை முன்னிட்டு விமர்சன வெளியில் ஒரு பயணம் எந்தவொரு படைப்பானாலும் கொண்டாடப்படுவதற்கு உரிமை கோருவது போலவே, ஏற்பின்மையையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இரண்டும் கலந்ததே விமர்சனம் அல்லது திறனாய்வு. நம் ஊரில் விமர்சனம் என்றாலே போட்டுத்தாக்குகிற வேலையாகவும், திறனாய்வு என்றாலே ஏதோ நுண்மாண் நுழைபுலம் வாய்க்கப்பெற்றவர்களின் வேலையாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இயக்குநர் ராமின் ‘பேரன்பு’ திரைப்படம் தொடர்பாகத் தேர்ந்த திரைப்பட விமர்சகர்களாக அறியப்பட்டவர்களும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அப்படியாக அறியப்படாத அம்மாக்களும் அப்பாக்களும் பிள்ளைகளும் விவாதிக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு, இசைக் க…

  15. இளையராஜா 75 நிகழ்ச்சியில் சர்ச்சை... பார்த்திபனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

  16. Published : 08 Feb 2019 17:40 IST Updated : 08 Feb 2019 17:40 IST செளந்தர்யாவின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார் ரஜினிகாந்த். கிராபிக் டிசைனர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவருக்கு வருகிற 10-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகரும் தொழிலதிபருமான விசாகனைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் செளந்தர்யா. இதற்காக திருநாவுக்கரசர், கமல்ஹாசன், இளையராஜா என நெருங்கிய நண்பர்களுக்கு கடந்த சில நாட்களாக நேரில் சென்று…

  17. ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலுக்கு இசைஞானி இசையமைக்க வில்லையா? திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் நாசர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘அவதாரம்’. நாடக கலைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் அமைந்திருந்த இந்தப் படம் விமர்சக ரீதியாக பேசப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரேவதி, பார்வை தெரியாதவராக நடித்திருந்தார். இசைஞானி இளையராஜா இசை மற்றும் குரலில், படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் இன்றளவும் எவர்கிரீன் மெலடி பாடலாக பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் குறித்து இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் …

    • 0 replies
    • 1.1k views
  18. என்னைப் புரிந்துகொள்ள முடியாது!- நேர்காணல்: இளையராஜா சந்திப்பு: ஜெயந்தன் ‘பாடல்கள் ஒரு கோடி.. எதுவும் புதிதில்லை… ராகங்கள் கோடி… கோடி… அதுவும் புதிதில்லை. எனது ஜீவன் நீதான்.. என்றும் புதிது’ எனத் தனது ரசிகர்களைப் பார்த்து உருகும் ஒப்பற்ற கலைஞர் இசைஞானி இளையராஜா. 75 வயதுக்குரிய முதுமை, தன்னைத் தொட்டுப் பார்க்க அனுமதிக்காத இந்த இளமை ராஜா, இசையுலகின் எட்டாவது சுரம். தலைமுறைகள் கடந்து கணினியில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையின் ஸ்மார்ட் போனிலும் லேப் டாப்பிலும் குடியிருக்கும் ராகதேவன். அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் காத்திருக…

  19. திரைப்பார்வை: போதையைத் துரத்தும் காதல்! (சிம்பா - தமிழ்) ரசிகா அவ்வப்போது புதிய முயற்சிகள் தமிழ் சினிமாவில் நடப்பதுண்டு. எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் அதற்காக ஓடி ஒளிந்துவிடாமல் ‘சிம்பா’வை துணிந்து முயற்சித்துப் பார்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். அவர் தந்திருப்பது தமிழ் சினிமாவுக்கான முதல் ‘ஸ்டோனர்’ வகைத் திரைப்படம். கஞ்சா போன்ற புகைக்கும் போதைப்பொருளின் பிடியில் சிக்கி அல்லாடும் மனிதர்களின் மாயத் தோற்றங்கள் நிறைந்த உலகையும் போதை களைந்ததும் விரியும் நிஜவாழ்வில் ஊடாடும் அவர்களது ஏக்கங்கள், துக்கங்கள், இயலாமைகள், கனவுகள், குற்றங்களைச் சித்தரிக்கும் படங்கள் அவை. போதைப் புகையின் மடியில் தன் தனிமையைப் போக்கிக்கொள்ளும் ஒரு பணக்…

  20. பாலாவின் ‘வர்மா’ கைவிடப்பட்டது! பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்தைக் கைவிடுவதாக E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா ‘வர்மா’ என்ற பெயரில் இயக்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். படத்தின் பணிகள் நிறைவடைந்து காதலர் தினத்துக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் விலங்குகள் நல வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கை ‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையில் தயாரித்து கொடுப்பதாகப் ப…

  21. 30 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுப்பாளர் இன்றி ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா February 7, 2019 30 ஆண்டுகளுக்கு பின்னர் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹொலிவூட் திரையுலகின் கௌரவம் மிக்க விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதானது கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் 24ம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி…

    • 1 reply
    • 578 views
  22. தொடர்ந்து கடும் நஷ்டத்தை சந்திக்கும் ரஜினி படங்கள், என்ன தான் தீர்வு? Tony ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் சூப்பர் ஸ்டார். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் இந்தியாவே எதிர்ப்பார்க்கும். ரஜினிக்கு சிவாஜி படத்தின் மூலம் வட இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது, ஆனால், கேரளா, ஆந்திராவில் ரஜினிக்கு தமிழகத்தில் எப்படி ஒரு ரசிகர்கள் பலம் உள்ளதோ அதே அளவிற்கு உள்ளது. ஆனால், ரஜினியின் லிங்கா, கோச்சடையான், கபாலி, காலா, 2.0 தற்போது வந்த பேட்ட வரை ஆந்திரா மற்றும் கேரளாவில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதில் ஒரு சில படங்கள் ட்ரைக்ட் ரிலிஸ் என்றாலும், ரஜினியின் மார்க்கெட் கேரளா மற்று…

  23. சிறப்புப் பார்வை: ‘இளையராஜா 75’ல் ரிலீஸாகாத பின்னணி! -இராமானுஜம் தமிழ் திரையுலகம் சாதனையாளர்களை கௌரவிக்க, தங்கள் துறைக்கு நன்மை செய்தவர்களை பாராட்ட, விழாக்கள் பலவற்றை நடத்தியிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாராட்டு விழாக்களை பலமுறை நடத்தியிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர்கள் இருவரும் சம்பளமாக பணம் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இளையராஜாவின் பாராட்டு விழா அப்படிப்பட்டதாக இருக்கவில்லை. 1976 மே 14 அன்று வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் மறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய சினிமாவில் 42 ஆண்டு காலம் பல மொழ…

    • 9 replies
    • 2.3k views
  24. Published : 03 Feb 2019 20:32 IST Updated : 03 Feb 2019 20:33 IST இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தவறவிடாதீர் நேற்று 2ம் தேதியும் இன்று 3ம் தேதியும் என இரண்டு நாள் விழா இது. …

  25. பேரன்பு - சினிமா விமர்சனம் 'கற்றது தமிழ்' ராம் இயக்கத்தில், மம்முட்டி கதாநாயகனாக நடித்து வெளிவரும் பேரன்பு திரைப்படம், இயற்கையின் பல குணங்களை விவரிக்கும் தனித்தனி அத்தியாயங்களின் வழியாக கதை சொல்லும் பாணியைக் கடைபிடிக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையின் உன்னதத்தைப் பற்றிப் பேசுகிற படம். 'நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்..' என்கிற அமுதவனின் (மம்மூட்டி) குரலுடன் தொடங்கும் படம், இயற்கையை பல அத்தியாயங்களாக பிரித்து பேரன்புமிக்க ஒரு வாழ்வின் தரிசனத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது. உலகமயமாக்கல் எப்படி தனி மனிதர்களின் வாழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.