ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143649 topics in this forum
-
நினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி 14 Views பொலிஸாரின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்த நீதிவான் , நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க மறுத்து கட்டளை வழங்கினார். நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை எதிர்வரும் 27ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் நடத்த தடை விதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய…
-
- 0 replies
- 430 views
-
-
ஜனாதிபதியால் லீ குவான் யூ ஆக முடியாது: சாணக்கியன் சபையில் தெரிவிப்பு
-
- 2 replies
- 1.1k views
-
-
எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் ! பசீர் காக்கா November 20, 202012:21 pm மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும் உணர்வாளர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உலகையே ஆட்டிப்படைக்கும் கெரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேலதிகமாக இனவாத வைரஸையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு சட்டங்களும் அதன் உண்மையான நோக்கிலிருந்து திசை திரும்பி தமிழருக்கு எதிராகப் பாய்வது போலவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அதன் இலக்கிலிருந்து திசை திரும்புவதை அவதானிக்க முடிகின்றது. யுத்தம் முடிந்து ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
மாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தங்களின் வீடுகளில் நினைவேந்தல்களை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன் தெரிவித்துள்ளார். மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தாங்கள் தனியாக நினைவேந்தல்களை செய்வதனை மன்று ஏற்றுகொள்வதாகவும் ஆனால் கூட்டாக சேர்ந்து, மாவீரர் நினைவேந்தல் என…
-
- 5 replies
- 1k views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) எமக்குள்ள மக்கள் ஆணையினைக் கொண்டு அமெரிக்கா கொண்டுவந்த ஜெனிவா தீர்மானத்தில் இருந்து வெளியேறவும், இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும், நியாயத்தை கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்பதையும் அரசாங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் என நீர் வளங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயகார சபையில் தெரிவித்தார். இன்றுள்ள நெருக்கடியான பொருளாதார நிலைமையில் 20 பில்லியன் ரூபாவிற்கு அதிகமான இறக்குமதிகளை செய்ய முடியாது எனவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போத…
-
- 0 replies
- 410 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) சர்வதேச கடன்களில் எமது நாடு சிக்குக்கொண்டுள்ள போதிலும் கடன்களை நம்பியே எம்மால் முன்னோக்கி நகரவும் முடியும், கடன்களை தவிர்த்து எம்மால் பயணிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர சபையில் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தில் குறைபாடுகள் உள்ளது உண்மையே, ஆனால் அதனை சகலரும் ஏற்றுக்கொண்டு பயணித்தாக வேண்டும் எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று , 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முழு உலகமுமே வீழ்ச்சி கண்டுள்ள நிலைலேயே எமது அரசாங்கம் வரவு செலவு திட்டமொன்றை முன்வைத்துள்ளது. இ…
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கைக்கு தற்போதைக்கு கொரோனா மருந்து தேவையில்லை – வாசுதேவ இலங்கைக்கு தற்போதைக்கு கொரோனா வைரஸ் மருந்துகள் அவசியமில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடுகொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் முதலாவது அலையின் போது அரசாங்கம் துரிதமாக வேகமாக செயற்பட்டு அதனை கட்டுப்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதுவரை தெரியவராத காரணங்களால் வைரஸ்மீண்டும் தலைதூக்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசிற்கு எதிரான தற்போதைய நடவடிக்கைகளும் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன என வாசுதேவ தெரிவித்துள்ளார். பல உலக நாடுகள் தங்கள் பொருளாதார பலத்தை அடிப்படையாக வைத்து கொரோனா வைரஸ் மரு…
-
- 4 replies
- 962 views
-
-
50 ரூபாவைக் கூட பெற்றுக்கொடுக்காதவர்கள் 1000 ரூபாவை விமர்சிப்பது இயலாமையே : அனுஷா சந்திரசேகரன் ஆட்சியில் அங்கம் வகித்த போது 50 ரூபாவைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாத பலவீனத்தை ஆயிரம் ரூபாவை விமர்சித்து சமாளிப்பது இயலாமையின் வெளிப்பாடே என்று சட்டத்தரணியும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தினால் தீர்மானிக்கப்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே இது போட்டா போட்டியான விடயமாகவும் தொழிலாளர்கள் திருப்தியடையாத விடயமாகவும் மாறிவிட்டது. முழு மலையகத்தையே ஸ்தம்பிக்கச் செய்து தேசிய மட்டத்தில் பல அமைப்புகளினதும் முழுமையான ஆதரவையும் பெற்று நடைபெற்ற அட்டன் சத்தியாக்கிரகப் போர…
-
- 0 replies
- 552 views
-
-
யாருடன் போராடுவதற்காக பாதுகாப்புக்காக 355 பில்லியன் நிதி ஒதுக்கீடு – பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் கேள்வி 2021 ஆம் ஆண்டு யாருடன் போராடுவதற்காக 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளீர்கள். தமிழர்களுடனா, இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா போராடப்போகின்றீர்கள் என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். அத்துடன் தமிழர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. நாம் நாட்டைப்பிரிக்க கேட்கவில்லை. ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே கேட்கின்றோம். அவ்வாறு செய்தால் நாமும் …
-
- 5 replies
- 1k views
-
-
பாதுகாப்பான பயணப் பட்டியலில் இலங்கை J.A. George இங்கிலாந்தின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இலங்கை நேற்று (19) சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், இஸ்ரேல் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளும் இந்த பட்டியில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வாரம் எந்த நாடுகளும் பாதுகாப்பான பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்று பிரிட்டிஷ் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதேவேளை, நமீபியா, ருவாண்டா, பொனெய்ர், செயின்ட் யூஸ்டேடியஸ் & சபா, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் யு.எஸ். வெர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்து சனிக்கிழமை முதல் இங்கிலாந்துக்கு வரும்போது சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்…
-
- 0 replies
- 239 views
-
-
தமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு by : Yuganthini காலங்கள் போகலாம். சந்தர்ப்பங்கள் மாறலாம். ஆனால் தமிழர்களின் தாகமும், விவேகமும், எண்ணமும் ஒரு போதும் மாறாது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மேலும், மன்னாரில் மாவீரர் தினம் நினைவு கூற தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (23 ஆம் திகதி) மேன் முறையீடு செய்ய இருக்கின்றோம். அந்த மேன் முறையீட்டின் ஊடாக தடையை நீக்கி 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை நடத்த அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழம…
-
- 0 replies
- 274 views
-
-
எனது தாய் மொழியான தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் தாருங்கள் - ரிஷாத் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோரிக்கை ( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நேற்று சாட்சியமளிக்க ஆரம்பித்தார். இதன்போது, தனது தாய் மொழியான தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்கும் வண்ணம் தனக்கு மொழி பெயர்ப்பு வசதிகளை செய்து தருமாறு ரிஷாத் பதியுதீன் ஆணைக் குழுவில் விஷேட கோரிக்கையினை தனது சட்டத்தரணி ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் முன்வைத்தார். தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக் குழுவில் சேவையில் இருக்காத நிலையில், அவருக்கு சிங்கள மொழியில் சாட்சியமளிக்க பரிந்து…
-
- 23 replies
- 2.5k views
- 1 follower
-
-
தமிழின இருப்பு மற்றும் பாதுகாப்புக்காக தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப வேண்டும் – சிவசக்தி ஆனந்தன் இலங்கை-இந்திய ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வாக இல்லாவிட்டாலும், ஒரு ஆரம்பப் புள்ளியாக வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது.இதன்படி, எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறுபட்ட நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் நோக்குடனேயே அதனை தோழர் பத்மநாபாவும் ஏற்றுக்கொண்டார்.இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33 வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையிலே தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கமானது இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சம…
-
- 0 replies
- 288 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தல் மனு மீதான விசாரணை! நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள சுமந்திரன் பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளது. எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்…
-
- 3 replies
- 741 views
-
-
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான் November 19, 202012:13 pm பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் வீரமுனை பகுதியில் 232 தமிழர்கள் கொல்லப்பட்டு 30ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் புதன்கிழமை(18) இரவு பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர…
-
- 165 replies
- 18.9k views
- 1 follower
-
-
தமிழரின் காணிகளை அபகரித்து புத்தருக்கு கோயில்கட்டி சிறுபான்மையின மனங்களைப் புண்ணாக்காதீர் – சுரேஷ் பிரேமச்சந்திரன் November 19, 2020 “தமிழ் பேசும் மக்களின் நிரந்தர வாழிடங்களான வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தின் எல்லையில் உள்ள குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பொதுக்காணிகளையும் அபகரித்து பௌத்த கோயில்களை அமைக்கும் பணியையும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் அபகரித்து மேற்கொள்ள முயற்சிக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் கைவிட்டு சிறுபான்மை தேசிய இனங்களின் மகிழ்ச்சிக்கு வித்திடுமாறு ஈழ ம…
-
- 1 reply
- 540 views
-
-
மாவீரர் தினத்திற்கு எதிரான தடைஉத்தரவை பெற்றுள்ளோம்- பொலிஸ் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்திற்கு எதிரான தடையுத்தரவை பொலிஸார் பெற்றுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மன்னாரிலும் வவுனியாவிலும் மாவீரர் தினத்தினை தடை செய்யும் உத்தரவினை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன என அஜித்ரோகன தெரிவித்துள்ளார். மன்னாரில் ஐந்துபேருக்கு எதிராகவும் வவுனியாவில் எட்டுபேருக்கு எதிராகவும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்திற்கான நடவடிக்கைகளில் குறிப்பிட்ட நபர்கள் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்தே இந்த உத்தரவினை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தடைஉத்தரவை மீறுபவர்களிற்கு எதிராக பொலிஸார் கடும் ந…
-
- 10 replies
- 1.3k views
-
-
முதலீடுகளே எமக்கு தேவை: கடன் அல்ல – புதிய சீன தூதுவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார். அதனைத் தொடர்ந்து சீன தூதுவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பரஸ்பர நன்மையுடன் கூடிய நிலையான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “குறிப்பாக பிரிவினைவாத…
-
- 1 reply
- 501 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்த மனு விசாரணை ஒத்திவைப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. "நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும்" என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவ…
-
- 1 reply
- 403 views
-
-
இலங்கையின் இறக்குமதித் தடை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் கரிசனை.! உலக வர்த்தக நிறுவனத்தின் ஒழுங்கு விதிமுறைகளுக்கமைவாக இலங்கையின் நீண்ட கால இறக்குமதித் தடை அமைந்திருக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வர்த்தகம் என்பது ஒருவழித் தடமல்ல. தற்போது இலங்கையில் காணப்படும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை மற்றும் ஐரோப்பிய வியாபாரங்களில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வெளிநாட்டு நேரடி முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஐரோப்பிய ஒன்றியத் துதுவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனிய தூதரகங்கள் இணைந்து இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அற…
-
- 1 reply
- 536 views
-
-
எத்தடை வரினும் மாவீரர் நினைவேந்தலை நடத்துவோம் – சிவாஜிலிங்கம் சூளுரை November 19, 2020 எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதை யாரும் தடுக்க முடியாது. அதேபோல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறத் தேவையில்லை. எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமை போல் இடம்பெறும். எத்தடை வரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனை…
-
- 0 replies
- 508 views
-
-
பச்சை மீனை உட்கொண்டு காட்டிய முன்னாள் அமைச்சர் – நல்லதல்ல என GMOA எச்சரிக்கை! சமைக்காமல் பச்சை மீனை உட்கொள்வது நல்லது என்று கூறி சிலர் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். நன்கு சமைத்த மீன்களை உட்கொள்வதன் மூலம் கொரோனா தொற்று பரவாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீன்களின் தோலில் உள்ள பற்றீரியா மற்றும் நுண்ணுயிரிகள் செரிமான அமைப்பைக் கடுமையாகச் சேதப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீன் உட்கொள்ள வேண்டுமானால் மீன்களைக் கழுவி, சுத்தம் செய்து, சமைத…
-
- 0 replies
- 268 views
-
-
மரணப் பிடியிலிருந்து தமிழ் அரசியல் கைதிகளை காப்பாற்றுங்கள்-குரலற்றவர்களின் குரல் 51 Views இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிறையில் இருக்கும் கைதிகளுக்கே கொரோனா தொற்று அதிகம் ஏற்படுகின்றது. எனவே சிறையில் இருக்கும் கைதிகளை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் எனும் அமைப்பு இன்று மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில், தற்போது கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று மிக மோசமாகப் பரவ ஆரம்பித்துள்ளது குறிப்பாக வெலிக்கடை, போகம்பரை, கொழும்பு விளக்கமறியல் சிறை, பூசா, மகசின், குருவிட்ட போன்ற சிறைச்சாலைகளில் பரவ ஆரம்பித்துள்ளது. …
-
- 0 replies
- 332 views
-
-
யாசகம் வழங்கினால் நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை 33 Views இலங்கையில் யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடையாது என அவர் கூறியுள்ளார். வர்த்தக நோக்கத்துடன், யாசகம் பெறுவோர் தற்போது இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதான ஒருவரின் வழிநடத்தலின் கீழ், பெரும்பாலானோர் யாசகம் பெறுவதாகவும், யாசகம் ப…
-
- 0 replies
- 352 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஈழத்திற்காக போராடவில்லை அவர் தமிழீழத்திற்காக போராடினார் ;மஹிந்த தேஷப்பிரிய Mathi November 18, 202012:57 am ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா என்பதற்கு சிங்கள மொழியில் பல்வேறு பெயர்கள் உண்டு. அதேபோன்று இலங்கை என்பதற்கு ஈழம் என்ற ஓர் மாற்றுப் பெயர் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழம் என்ற சொல் தமிழ் பிரிவிணைவாதத்திற்காக பயன்படுத்தப்படுவதாக ஓர் மாயை உருவாக…
-
- 17 replies
- 2.2k views
-