ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
வெளியானது விசேட வர்த்தமானி Daya Dharshini November 18, 2020வெளியானது விசேட வர்த்தமானி2020-11-18T07:49:08+05:30 FacebookTwitterMore துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய விசேட வர்த்த மானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்டிப இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு தன்மையிலான சேவையின் சகல சேவைகள், வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 531 views
-
-
மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகள் வீண் – வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட மக்களால் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்பட வாக்குகள் வீண் வாக்குகள். அவர்களால் நூற்றுக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போய்யுள்ளது, பலரின் அடுப்பு எரியும் நிலமை இல்லாமல் போயுள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிதுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைக் கிராமத்தில் அவரது ஏறாவூர்பற்றுக்கான காரியாலயத் திறந்து விழா (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது பிறப்பின் நோக…
-
- 11 replies
- 1.5k views
-
-
வலி கிழக்கின் வரவு செலவுத்திட்டம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது 46 Views வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் மேலதிக பெரும்பான்மை பலத்துடன் இன்று நிறைவேறியது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (17) சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களின் விவாதங்களுக்கு தவிசாளரால் அனுமதியளிக்கப்பட்டது. விவாதத்தில் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் வேலைகள் உரிய காலத்தில் நிறைவுறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. மேலும், பிரதே…
-
- 0 replies
- 314 views
-
-
எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் தமிழர்களை அணுகவில்லை – கலையரசன் by : Vithushagan நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களை எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் அணுகவில்லை. நாங்கள் யாரையும் அடக்கி ஒடுக்கி அதிகாரத்தைப் பறிப்பவர்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”எதிர்காலத்தில் எமது பாதிக்கப்பட்ட போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவிகள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு எமது பணிகளை முன்ன…
-
- 1 reply
- 430 views
-
-
ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன் November 16, 2020 ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக சுமந்திரன் ‘தினக்குரல்’ இணையத்துக்கு தெரிவித்தார். அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக தற்போது இல்லா…
-
- 9 replies
- 1.7k views
-
-
மஞ்சள் தூள் இறக்குமதி செய்ய தடை; இந்திய வர்த்தகர்களுக்கு பல கோடி ரூபா நட்டம் November 16, 2020 இலங்கையில் மஞ்சள் தூள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால் இந்திய வர்த்தகர்களுக்குப் பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகம் ஈரோடில் அதிகளவில் மஞ்சள் வர்த்தகம் இடம் பெறுகின்ற நிலையில், அங்கிருந்து கடந்த காலங்களில் இலங்கைக்கு மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இலங்கையில் மஞ்சள் தூள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வர்த்தகர்களுக்கு சுமார் 50 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டி ருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவலை வெளி யிட்டுள்ளது. எனினும் இலங்கையில் தற்போது மஞ்சள்…
-
- 8 replies
- 942 views
- 1 follower
-
-
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுற்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை சின்னத்தம்பனை கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்குள் பிரவேசித்த யானைகள் பயன்தரும் தென்னம்பிள்ளைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளது. அதேவேளை வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளன. வவுனியா மாவட்டத்தில் பாரம்பரிய கிராமங்களில் ஒன்றான சின்னத்தம்பனை விவசாயக் கிராமத்தில் கடந்த பல வருடங்களாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் தற்போது பகல் நேரங்களிலும் யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து பயன்தரும் மரங்களையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றது. இந் நிலையில் கி…
-
- 1 reply
- 508 views
-
-
வடக்கு விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூரில் ரின் மீன் உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களை பாதிக்கும் வகையிலான எந்தவகையான தீர்மானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.யாழ். மாவட்டத்தினை சேர்ந்த விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்குகளை வழங்குவற்காக சுமார் 60 மில்லியன் ரூபாய் விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிதி ஒதுக்கப்பட்டமைக்காக நேற்றைய …
-
- 0 replies
- 301 views
-
-
உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்டோருக்கு, உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும்…. November 17, 2020 உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை நேற்று (16.11.20) இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நீதி நடைமுறைக்க…
-
- 0 replies
- 463 views
-
-
மாவீரர் வாரத்திற்கு தடைவிதிக்க கூடாது என கோரி மனு… November 17, 2020 பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் காவற்துறை மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தமது சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பேராணை மனுவை வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர். …
-
- 0 replies
- 351 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்: சந்தேகநபர் இஹ்ஸான் வீட்டுக்கு அடிக்கடி சென்ற ரிஷாட், ஹலீம்….! முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் மொஹமட் ஹலீம் ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முஹினுதீன் இஹ்ஸான் அஹமட்டின் வீட்டிற்கு சென்றிருந்தமை தற்போது தெரியவந்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை முன்னிலையாகியிருந்த இஹ்சானின் வீடு அமைந்துள்ள பகுதியின் கிராமசேவகர் நிலாந்த சஞ்சீவா பொன்சேகா, சாட்சியமளித்தபோதே இந்த விடயத்தை குறிப்பிட்டார். இஹ்ஸான் வீட்டில் தங்கியிருந்தபோது இளைஞர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, குறித்த நபர் ஒரு தனியார் நிறு…
-
- 2 replies
- 545 views
-
-
முஸ்லிம்களின் உடல்களை, தலைமன்னாரில் அடக்கம் செய்யும் திட்டம்: அமைச்சரவையில் ஆராய்வு கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை, தலைமன்னாரில் அடக்கம் செய்யும் திட்டம் தொடர்பாக அமைச்சரவை ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை, தகனம் செய்யும் செயற்பாட்டுக்கு சில அரசியல் கட்சிகள், பல அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தொடர்ந்து எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கொழும்பில் உள்ள முஸ்லிம் மையவாடியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டவேளை, பெரும்பாலான அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த நடவ…
-
- 2 replies
- 956 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய 2 ஊடகவியலாளர்கள் மீது மரக்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் நீதிமன்றின் உத்தரவின் பெயரில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட ஊடகவியலாளர்களால் தேக்குமரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்ட வனப்பகுதிகள் உள்ளடங்கலான நாகஞ்சோலை வன பகுதியில் 180 ஏக்கர் அரச காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர். சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை (17) இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசா…
-
- 2 replies
- 659 views
-
-
(க.பிரசன்னா) இலங்கைக்கான புதிய அரசியலமைப்பிற்காக முன்வைக்கப்பட்ட மாற்று முன்மொழிவுகள் உள்ளடங்கிய நூல் நேற்று திங்கட்கிழமை பௌத்த மகா சம்மேளனத் தலைவர் ஜகத் சுமதிபாலவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/138728/20th_Constitution_mahi.jpg பௌத்த சாசன செயலணி மற்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி மஹா சங்கத்தினரால் குறித்த நூல் கையளிக்கப்பட்டது. அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் தேசிய கொள்கை திட்டமிடல் குழு, சட்டம், அரச நிர்வாகம், தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கொள்கை துணைக் குழுவினால் இந்த நூ…
-
- 0 replies
- 350 views
-
-
கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டம் முழுவதும் தொடர்சியாக பெய்து வரும் இடியுடன் கூடிய மழை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. தொடர்சியாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மாற்றம் காரணமாக மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மழை தொடரும் பட்சத்தில் மன்னாரில் தாழ் நில கிராமங்கள் சில வெள்ளத்தில் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. குறிப்பாக மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர் போன்ற கிராமங்களும் நானாட்டான் பகுதியில் மடுக்கரை , அருவி ஆற்று பகுதி போன்ற பகுதிகளும் மடு பிரதேசத்தில் தம்பன்னைக்குளம், முள்ளிக்குளம், பண்டிவிருச்சான் ,தச்சனா மருதம…
-
- 0 replies
- 687 views
-
-
மாவீரர்களை நினைவுகூரும் உரித்தை தடுத்து நிறுத்த இராணுவத் தளபதிக்கு எந்த அருகதையும் இல்லை.!- இரா.சம்பந்தன்.! தமிழினத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை - தமது உறவுகளை நினைவுகூர வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமையுண்டு. அதைச் சட்டங்கள் கொண்டு தடுத்துநிறுத்த இராணுவத் தளபதிக்கோ அல்லது வேறு எவருக்குமோ எந்த அதிகாரமும் இல்லை." - இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள். தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நாள். ஆனால், இம்முறை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் மாவீரர் நாளைப் பொதுவெளிய…
-
- 6 replies
- 716 views
-
-
2021 முதலாவது காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு..... உலகளாவிய கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாடு மேலும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து, நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவினால் மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பங்கேற்புடன் வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் நேற்று (15) மாத்தளை சுற்றுலா மேம்பாட்டு வளாக கேட்ப…
-
- 0 replies
- 339 views
-
-
2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் http://athavannews.com/wp-content/uploads/2020/11/mahinda-parliment.jpg நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான உரையை தற்போது நிகழ்த்தி வருகின்றார். உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் பின்னர் நிர்வாகமற்ற அரச அதிகாரிகளுக்கு மேலதிக தொழில்களில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிறுவனச் சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை கண்காணிக்க வலுவான புதிய சட்டங்கள் அமுலில் இருக்க வேண்டும் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க நடவடிக்கை இரத்தினக்கல் ம…
-
- 0 replies
- 463 views
-
-
மாவீரர் நினைவேந்தலை பொது வெளியில் நடத்துவதற்கு இடமில்லை - இராணுவ தளபதி அறிவிப்பு .! போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கா…
-
- 2 replies
- 691 views
-
-
புதிய அரசியலமைப்பிற்கான மாற்று முன்மொழிவுகள் பிரதமரிடம் கையளிப்பு Bharati November 17, 2020புதிய அரசியலமைப்பிற்கான மாற்று முன்மொழிவுகள் பிரதமரிடம் கையளிப்பு2020-11-17T05:34:26+05:30 FacebookTwitterMore இலங்கைக்கான புதிய அரசியலமைப்பிற்காக முன்வைக்கப்பட்ட மாற்று முன்மொழிவுகள் உள்ளடங்கிய நூல் நேற்று பௌத்த மகா சம்மேளனத் தலைவர் ஜகத் சுமதிபால அவர்களினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கப்பட்டது. பௌத்த சாசன செயலணி மற்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி மதிப்பிற்குரிய மஹா சங்கத்தினரால் விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இந்நூல் கௌரவ பிரதமரிடம் க…
-
- 1 reply
- 440 views
-
-
2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று – ராஜபக்ஷக்களுக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு Bharati November 17, 20202021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று – ராஜபக்ஷக்களுக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு2020-11-17T04:59:32+05:30 FacebookTwitterMore கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்காக 267804 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகையில் 78227 கோடியே 8091000 ரூபா ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் இன்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்தி…
-
- 0 replies
- 494 views
-
-
கருணா தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் - வியாழேந்திரன் மட்டக்களப்பு , கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என. இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் பிறந்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை 15.11.2020ம் திகதி இடம்பெற்ற இரத்ததான முகாமில் இரத்ததானம் வழங்கிய பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், வினாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை…
-
- 6 replies
- 856 views
-
-
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் பணி குழுவினரால் இன்றையதினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள் இணைந்து தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்று அங்கே வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து சிரமதான பணிகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த தர்மபுரம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இராணுவப் புலனாய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த குழுவினரை அழைத்து சிரமதான பணிகளை முன்னெடுத்தவர்களிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். குற…
-
- 1 reply
- 801 views
-
-
(க.பிரசன்னா) இலங்கையில் ஆண் பாலியல் தொழிலாளர்களினால் எதிர்வரும் வாரங்களில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் அல்லது எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் சுமார் 4000 பேரும் 15 வயதுக்கும் குறைவான சுமார் 100 பேரும் எச்.ஐ.வி. அல்லது எயிட்ஸ் உடன் வாழும் நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் 2000 பேர் வரையானோர் மட்டுமே சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். நாட்டில் தற்போது நிலவி வருகின்ற கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளைகளில் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில் அதிகமாக …
-
- 0 replies
- 521 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் சிரமதான பணிமூலம் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை சூழ படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து இந்த துப்பரவு பணியினை முன்னெடுத்தனர். இதன் போது வன்னிவிளாங்ளும் வீதி முழுவதும் பொலிசார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்பவர்களை விசாரிக்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். காலை முதல் நண்பகல் ஒரு மணிவரை நடைபெற்ற சிரமதான பணியின் போது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சிர…
-
- 0 replies
- 517 views
-