Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டு தடைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு - சுமந்திரன் வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு அண்மை நாட்களாக நெடுங்கேணி பொலிசார் தடைவிதித்து வருகின்றனர். இந் நிலையில் இவ் வழிபாட்டுத் தடைக்கு எதிராக விரைவில் அடிப்படை உரிமைமீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த ஆலயத்தில் வழிபாட்டிற்கு செல்வதற்கு பொலிசார் தடை விதித்துள்ளமை தொடர்பில், ஆலய நிர்வாகத்தினர் 16.10.2020 இன்றையதினம் வவுனியா தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சுமந்திரனைச் சந்தித்து முறையிட…

  2. மட்டக்களப்பு அரசாங்க அதிபராக கே. கருணாகரன் கடமையைப் பொறுப்பேற்றார் DicksithOctober 17, 2020 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்று (17) மாவட்ட செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவை விசேட தர உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி, காணி மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். கடந்த 14 ஆந்திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையினால் நியமனக் கடிதத்தினைப…

  3. தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழில் தொடங்கியது! சுமந்திரன் பங்கேற்பு.! முன்னணி புறக்கணிப்பு.! அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் தொடங்கியுள்ளது. தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை 10.30மணியளவில் ஆரம்பமாக விருந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முதற் தடவையாக வந்திருந்ததை அடுத்து ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து வெளியேறினார். இதேவேளை கூட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பங்கேற்கவில்லை. கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் …

  4. எமது உறவுகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்றால் தொடர்பை ஏற்படுத்தி தாருங்கிள் -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எமது உறவுகள் வெளிநாட்டில் உள்ளனர் என்றால் தொடர்புகளை ஏற்படுத்தி தாருங்கள் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். இன்று கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். மேலும் அவர் அரசிற்கு விடுத்த கோரிக்கையில், ஹெகலிய ரம்புக்வெல அண்மையில் ஒரு கருத்தினை முன்வைத்திருந்தார். அதாவது காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என்று. அவ்வாறு அவர்கள் வெளிநாடு சென்றிருந்தால் சிறீலங்கா விமான நிலையத்தினூடாக சென்றிருக்க வே…

    • 1 reply
    • 722 views
  5. அரசையும், சிங்கள மக்களையும் சீற்றமடைய செய்யும் வகையிலேயே தமிழர்கள் நடக்கிறார்கள். அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து, அரசியலமைப்பை மதித்து நேர்வழியில் நடந்தால் அவர்களிற்கான அரசியல் தீர்வு தானாகவே கிடைக்கும். ஆனால் அந்த தீர்வு ஒற்றையாட்சி தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்கள் செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வை கேட்க வேண்டி வரும் என சபை முதல்வரும், வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அரசியலமைப்பை மதித்து, அரசை மதித்து தமிழர்கள் நேர்வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் ஒன்று நடந்திருக்க வாய்ப்பே …

    • 89 replies
    • 6.3k views
  6. யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்றைய தினம் மாலை பல்கலைகழக மாணவர்கள் சிலருக்கிடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடி தர்க்கத்தை சுமுகமாக தீர்க்க முயன்றபோது துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள், காவலாளி ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவதுடன், துணைவேந்தர் மாணவன் மீது தாக்குதல் நடாத்தி க…

  7. பிரதமரின் இணைப்பாளராக கருணா October 13, 2020 கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13) அலரிமாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30000 அளவிலான வாக்குகளைபெற்ற அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டிருந்தார். இதற்கமைய விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு இப்பதவியை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது #கருணா #மகிந்தராஜபக்ச #இணைப்பாளர் https://globaltamilnews.net/20…

  8. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களான, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில், அக்காணிகளுக்குரிய விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காகச் செல்லும்போது அரச திணைக்களங்களால் தடுக்கப்படுதல் மற்றும், அங்குள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாயநிலங்கள் அபகரிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் மற்றும் கொக்குத்தொடுவாய் கமக்காரஅமைப்பின் தலைவர் கி.சிவகுரு ஆகியோர் அடங்கிய க…

  9. ரியாஜின் மனுவை நிராகரிக்குமாறு அருட்தந்தை மனு தாக்கல் தான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீனின் சகோதரன் ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் லோரன்ஸ் ரமநாயக்க அருட்தந்தை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ள லோரன்ஸ் ரமநாயக்க அருட்தந்தை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ர…

  10. 20’ஐ எதிர்க்கும் மதத் தலைவர்கள் புதிய அரசமைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்- கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்து.! “இலங்கையில் மீண்டும் சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள பௌத்த பீடங்களும், கத்தோலிக்க ஆயர் பேரவையும் நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கும் பாடுபட வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசமைப்பின் 20ஆவது திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பெளத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் கூட்டறிக்கை ஊடாக அரசியல் தலைவர்களையும் பொதுமக்களைய…

  11. வவுனியாக் குளத்தினுள் மண் கொட்டி மூடும் விவகாரம்- வலுக்கும் எதிர்ப்பு வவுனியாக் குளத்தின் மூன்று ஏக்கரினுள் ஆயிரத்து நூறு ரிப்பர் மண் கொட்டி இரண்டு அடிக்கும் மேலாக நீர் தேங்கி நிற்கக்கூடிய இடத்தை மூடியமைக்கு கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டச் செயலாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் வவுனியாவில் பண முதலைகளின் குள ஆக்கிரமிப்பினால் பல ஏக்கர் குள நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பது தெரிந்த விடயமே. பாலை விடவும் குடிநீர் விலையேறியிருக்கக்கூடிய இச் சூழலில் சாதாரண மக்கள் நிலத்தடி நீர் மூலம் பெறும் குடிநீருக்கும் நாசம் விளைவிக்கும் செயற்பாட்டை வவுனியா நகரசபை, நீர்ப்பா…

  12. 20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று (16) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்திற்கு மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவை என்ற அடிப்படையில் வீசப்படுகின்றன. ஆனால், கன…

    • 1 reply
    • 642 views
  13. சிறுபான்மையினருக்காக குரல் கொடுப்பவரை அடக்க நினைப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்- மக்கள் காங்கிரஸ் by : Yuganthini சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக குரல் கொடுக்கின்றவரை அடக்கி ஒடுக்க நினைப்பதை நாம் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்கள், “முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினை கைது செய்யவேண்டும் என்பதற்காக பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் அரசு உட்பட பாதுகாப்பு தரப்புகளிற்கு நாம்…

    • 0 replies
    • 906 views
  14. கப்பலின் கெப்டன் கோடி ரூபா பணத்தை செலுத்தியுள்ளார் அண்மையில் தீப்பரவலுக்கு உள்ளான MT New Daimond கப்பல் கெப்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கேட்டுள்ளது. குறித்த கப்பலின் கிரேக்க இன கெப்டனான தீரோஸ் ஹில்லியாஸ் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த இடையீட்டு மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது. இந்த மனு கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையி இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கப்பல் கெப்டன் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர் பிழையை ஒப்புக் கொண்டு 12 மில்லியன் ரூபா தண்டப் பணத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் செலுத்தி முடித்துள்ளதாக மன்றுக்க…

    • 0 replies
    • 600 views
  15. கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க நாடு முழுவதும் உள்ள 12 வைத்தியசாலைகளில் 168 படுக்கைகள் மாத்திரம் எஞ்சியுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் இன்று அதிகாலை 5.00 மணிவரையான தரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிக்காட்டியுள்ளது. மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலின் விளைவாக வைத்தியசாலைகளில் இவ்வாறு படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/92150 https://www.virakesari.lk/article/92150

  16. மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு தமிழ் காங்கிரஸ் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவிப்பு யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.இந்தக் கடிதம் கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திகதியிடப்பட்டுள்ளது. அன்றைய தினமே யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணனை நீக்கக் கோரும் எழுத்தாணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளப்பெறப்பட்டிருந்தது.இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரிவாகிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்…

  17. ஆடை தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள் -மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் Rajeevan Arasaratnam October 16, 2020 ஆடை தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள் -மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள்2020-10-16T12:12:09+05:30அரசியல் களம் FacebookTwitterMore ஆடை தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளை போல நடத்துவதை நிறுத்துமாறு சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள்வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட விதம் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் கரிசனை வெளியிட்டுள்ளன. ஊடகங்கள் அவர்களை குற்றவாளிகளா…

  18. அரியாலை கிழக்கு பிரதேசம் கடல் நீரால் அழியும் அபாயம்.! நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரியாலை கிழக்கு பிரதேசத்தில் சட்டத்திற்கு உட்பட்டும், சட்ட விரோதமாகவும் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் இந்த மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. இரவு வேளைகளில் களவாக தனியார் காணிகளில் இவ்வாறு மணல் அகழ்வு இடம்பெறுவதோடு, பொய்யான காணி உறுதிகளையும், முறையற்ற காணிமாற்று முறைகளையும் பயன்படுத்தி கனியவள திணைக்களத்தில் அனுமதிபெற்று பெறப்பட்ட அனுமதிக்கு மேலாகவும் மணல் அள்ளப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினராலும் முடியாதுள்ளது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவங்களும், மணல் கொள்ளையர்மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்ற சம்பவ…

  19. சிறை கைதிகள் தொலைபேசி ஊடாக குடும்பத்தினருடன் உரையாட நடவடிக்கை சிறை கைதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசி ஊடாக உரையாட முடியும் என்று சிறைச்சாலைத்துறை தெரிவித்துள்ளது. கைதிகளுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய கைதிகள் 3 நிமிட காலத்திற்குள் குடும்ப உறுப்பினர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையும் இவ்வாறு சிறை கைதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சந்தன ஏகநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்…

  20. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்த சர்ச்சைகள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் இட்ட பதிவு இது- “கிரிகட்டர் முரளி” பற்றிய கதை படமாக போகிறது. அதில் நடிக்க உள்ள நடிகர் “தமிழரா, இல்லையா” என்று விவாதிக்கும் அளவுக்கு விவாதம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபற்றி என் நெருங்கிய வட்டாரத்தில் கலந்துரையாடல் நடந்தது. தமிழகத்திலிருந்து அரசியல் நண்பர் ஒருவர் தொலை(யில்)பேசி என் கருத்தும் கேட்டார். முதலில், இப்பட திரைகதை, அரசியல் அல்ல என நான் அறிந்தேன். அதில் இலங்கை இனப்பிரச்சினை அரசியல் பேசி, கதையோட்டம் அமைய, ஒருபுறம் இந்திய அரசு சென்…

  21. புதிய COVID-19 தடுப்பு விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. புதிய வர்த்தமானி அறிவிப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று கையெழுத்திட்டார். புதிய கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளுள் தனிநபர்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வர்த்தமானியின் படி, கொரோனா தொற்று கட்டுபாட்டு விதிமுறைகளை மீறும் நபர்கள் 06 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது 10,000 ரூபா அபராதம் விதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வர்த்தக மற்றும் பணி இடங்களுக்குள் பிரவேசித்தல் மற்றும் பேணுதல் போன்ற விடயங்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம்…

  22. 20 இற்கு எதிராக மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்திப்பீர்; சுமந்திரன் எம்.பி.! "அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பை வலுக்கச் செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறிலின் அலுவலகத்துக்கு சுமந்திரன் எம்.பி. இன்று விஜயம் செய்திருந்தார். அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகப் பல்வேறு பிரசாரங்களைச் செய்து வருக…

  23. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம்! by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Batticalao-Journalist-Protest.jpg முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்னால் சமூக இடைவெளியைப் பேணி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (வியாழக்கிழமை) காலை இந்தப் போராட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக அமையம் மற்றும் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்…

  24. நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் கூட்டுதாபனத்தின் 19 கிளைகளில் 13 கிளைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இலாபமீட்டும் நிலைக்கு வந்துவிட்டது..! நட்டத்தில் இயங்கி வந்த கடற்றொழில் கூட்டுதாபனத்தின் 19 பிரதான விற்பனை நிலைய கிளைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கைகளால் 13 விற்பனை நிலையங்கள் இலாபம் ஈட்டும் நிலைக்கு சென்றுள்ளதாக அமைச்சு தொிவித்துள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, சுமார் 13 பிரதான விற்பனை நிலையங்கள் இலாபமீட்டும் நிலைக்கு மாறியுள்ளதுடன் 01 கிளையில் ஏற்படுகின்ற நட்டம் குறைக்கப்பட்டுள்ளதுடன் 5 விற்பனை நிலையங்கள் மாத்திரமே தற்போது நட்டத்தில் இயங்கி வருவதாகவும் அவற்றையும் இலாபமீட்டும் நிலையங்களாக மாற்றவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள…

    • 1 reply
    • 397 views
  25. தமிழரசுக்கட்சியின் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் சி.வி.கே.! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சீ.வீ.கே. சிவஞானம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரான சீ.வீ.கே. சிவஞானம் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்த நிலையில் ஒழுக்காற்றுக் குழுவின் நடவடிக்கையாக கட்சியின் இரு சிரேஷ்ட உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் தொடர்பிலும், கட்சியின் இரு இடைநிலை உறுப்பினர்களான சி.ஹரிகரன், க.குணாளன் தொடர்பிலும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார். இதனடிப்படையில் இரு சிரேஷ்ட உறுப்பினர்களும் எதிர்காலத்தில் கட்சிக்கு முரண்பட்ட விதத்தில் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.