ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் அதிரடி தீர்மானம் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பின்னணியில், 19 பிளஸ் என்ற திருத்தத்தை மேற்கொள்ள பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பத்திரிகை நிறுவனங்களின் பிரதானிகளை எதிர்கட்சி அலுவலகத்தில் நேற்று (08) சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், அதற்கு பதிலாக தாம் 19 பிளஸ் என்ற திருத்த வரைவை தயாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 378 views
-
-
மக்கள் ஆணையை புறந்தள்ளிவிட முடியாது – கெஹலிய by : Vithushagan அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை விரிவாக நீக்குவதற்காக மக்கள் வழங்கியுள்ள ஆணையை புறம் தள்ள அரசாங்கம் தயாரில்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டத் துறைச்சார்ந்தோர் இதற்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.இதற்கமைவாகவே இதற்கான திருத்த வரைவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். 19 ஆவது அரசியல் அமைப்பு நீக்கப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கம் தெரிவித்தி…
-
- 2 replies
- 444 views
-
-
பிரதமர் மகிந்த பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாராட்டு; - சச்சிதானந்தன்.! பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பிரதமரை பாராட்டுவதாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார் . சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார். இலங்கைச் சைவர்கள் அனைவரும் இதனால் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் எமது நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எ…
-
- 19 replies
- 2k views
-
-
கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது September 8, 2020 இன்று (8-9-2020) நாடாளுமன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய பகுதிகளில் 601 தமிழரகளுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர் பயிரச் செய்கை நிலங்களில் தமிழர்கள் மீளவும் குடியமரவும், விவசாயம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தொிவித்துள்ளார்.. மேற்படி நிலங்களில் ஆமையன் குளம், முந்திரிகைக்குளம், சாம்பன் குளம், மணற்கேணி, ஆகிய பகுதிகளில் உறுதியுடையதும் அனுமதிப்பத்திரமுடையதுமான 784 ஏக்கர் நிலம் அந்தப் பகுதியைச் சேராத …
-
- 1 reply
- 704 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி – ஹக்கீம் வெளியிட்ட தகவல் ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் சஹ்ரான் ஹாசிமுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்த வேறு ஒரு அமைப்பே ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்டது என தெரிவித்துள்ளார். எந்த அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் நாட்டை பலவீனப்படுத்த…
-
- 7 replies
- 1.6k views
-
-
பிரபாகரனை... மஹிந்த, சந்திக்க முயன்றது ஏன்? – சிவாஜிலிங்கம் கேள்வி 2005ம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டது ஏன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளித்தமையை கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த பெருமை இலங்கைக்கு உரித்தாகுமென நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பில் நான் ஒரு கேள்வியைக்…
-
- 1 reply
- 343 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சாணக்கியனுக்கு நாடாளுமன்றத்தில் உயர் பதவி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அமர்வில் பிரசன்னமாகாத சந்தர்ப்பத்தில் அவையை கொண்டு நடத்தும் பொறுப்பு இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனது நாடாளுமன்ற கன்னி உரையில் நாடாளுமன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்றிய இரா.சாணக்கியன் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் பிரேமலால் ஜயசேகரவிற்கும் உள்ளது – சபாநாயகர் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவாகியுள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் அவருக்கும் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசியலமைப்பின் குறித்த சரத்தை சபையில் வாசித்துக் காட்டி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்…
-
- 0 replies
- 373 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் இனிவரும் காலங்களில் வெகுஜனப்போராட்டங்களாகப் பற்றி எரியுமா ? சென்ற 30 /08/2020 அன்று தமிழீழமெங்கும் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பெருமெடுப்பிலான கவனயீர்ப்புப் போராட்டங்கள் இந்த இறுதிக்காலாண்டுக்கான பேசுபொருளாக எழுந்திருக்கின்றதை அனைவராலும் உணரமுடிகின்றது. அதுமட்டுமன்றி இப்போராட்டமானது தமிழர் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் பெருமெடுப்பிலான கவனயீர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் தன்னார்வத்துடன் முன்வந்து நடாத்தியிருந்தனர். இதில் வடக்கு,கிழக்கு இணைந்த தமிழர் தாயகப்பகுதியில் கட்சிபேதங்களின்றித் தமிழ் அரசியல் தரப்பினர் பங்குபற்றி இருந்தமை வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது…
-
- 0 replies
- 325 views
-
-
வடமகாண சபையைக் கைப்பற்ற பொது ஜன முன்னணி புதுவியூகம்; தமிழ்க் கட்சிகளின் நிலை என்ன? வடக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்ற பஸில் ராஜபக்ஷ தரப்பு புதுவியூகம் வகுத்துள்ளது. இதற்காக மிகப்பெரும் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கவும் கட்சி சாராத பிரபலம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவும் திட்டமிடப்படுகின்றது என பஸிலுக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. அதேநேரம் தற்போது நாட்டை ஆளும் தரப்பு, அதற்கு சார்பான கட்சிகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வாக்குகளை பெற்றன. இந்த வெற்றியை சாதகமாகப் பயன்படுத்தியே வடக்கு மாகாண சபையைக் கைப்பற்ற பஸில் திட்டம் வகுத்துள்ளார். நடந…
-
- 0 replies
- 349 views
-
-
அரச படைகளின் அட்டூழியங்களுக்குக் கிடைத்த பதில்தான் மனித குண்டுகள்; விக்கினேஸ்வரன் அரச படைகளின் அட்டூழியங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் மனித குண்டுகளும் பதிலாகக் கிடைத்தன. தேசிய தலைவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டனர். அவ்வாறு இலக்குகளாக மாறுமுன் அவர்கள் என்ன செய்தனர் என்று கண்டுபிடியுங்கள். ஒரு தரப்பினரை பயங்கரவாதிகள் என்று கூறு முன் மறுதரப்பு இழைத்தகுற்றங்களை பாருங்கள். அவர்கள்தான் மிகப் பெரிய பயங்கரவாதிகள்” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். “புலிகளை அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் பயங்கரவாத இயக்கமாகவே தரப்படுத்தியிருக்கிறார்கள். தற்கொலைப் படையை உருவாக்கினார்கள். …
-
- 0 replies
- 503 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்) தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை அரசாங்கம் அபகரித்தது, எமது மக்களின் தங்கங்களை ஏன் மீண்டும் எமது மக்களுக்கு கொடுக்க மறுக்கின்றீர்கள், அந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்வடாறு தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் நுண் கடனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தத்தைக் காரணங்காட்டி வடக்கு, கிழக்க…
-
- 3 replies
- 972 views
-
-
(எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும் 19 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று 19 பிளஸ் என்ற செயற்திட்டத்தை வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று மாலை 4 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள மாதுலுவாவே சோபித தேரருடைய உருவச்சிலைக்கு முன்னால் உறுதிமொழியெடுத்ததோடு இந்த ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷர் சரத் பொன்சேக்க , ராஜித சேனாரத்ன , ரஞ்சித் மத்தும பண்டார , வடிவேல் சுரேஷ் , அரவிந்தகுமார் , கபிர் ஹசிம் , முஜிபுர் ரஹ்மான் , ஹெக்டர் அப்புஹாமி, கயந்த …
-
- 0 replies
- 363 views
-
-
-என்.ராஜ் அச்சுவேலி, பலாலி, நவக்கிரி ஆகிய பகுதிகளில் தக்காளி செய்கையில் ஈடுபடுவோர் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக, செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நீண்ட வரட்சி நிலையின் பின்னர் அண்மையில் திடீரென ஏற்பட்ட மழை வீழ்ச்சியின் காரணமாக தமது தக்காளி பழங்கள் அழுகி பழுதடைந்துள்ளதோடு சந்தைப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி தக்காளி செய்கையாளர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளார். குறிப்பாக தக்காளி செடியை ஒரு வகையான பங்கஸ் நோய் தாக்குவதனால் அதனாலும் தமது செய்கையில் பாதிப்பினை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/Tomato-growers-affected-by-rains/71-255214
-
- 0 replies
- 384 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நுண் கடன் திட்டங்களை உடணடியாக நிறுத்துமாறு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தனியார் நிறுவனங்களுக்கு கன்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் திட்டமிலாய்வு கூட்டம் இன்று (08) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.https://newuthayan.com/நுண்நிதி-கடன்-வழங்குவதை/
-
- 0 replies
- 310 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட, பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சுவிஸர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் விவகார விசாரணைகள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி மன்றுக்கு அளிக்குமாறு சி.ஐ.டி. க்கு இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிவான் இந்த உத்தரவை பி…
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கையில் கால்நடைகளை படுகொலை செய்வதற்கு தடை விதிக்கும் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கும் திட்டத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்தார். ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோது இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது .https://www.virakesari.lk/article/89490
-
- 23 replies
- 2.9k views
-
-
ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு மரண அச்சுறுத்தல்! சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால், சிறைச்சாலை அத்தியட்சகர், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (08) நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாதாளக் குழுத் தலைவர்களான திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பொடி லெஷி மற்றும் கொஸ்கொட தாரக ஆகியோரினால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பிலேயே இன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து தற்போது பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெஷி மற்றும் கொஸ்கொட தாரக ஆகியோரை எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு காலி பிரதான நீதிவான் ஹர்ஷண கெக்குணவெல இன்று உத்தரவு பிறப்பித்த…
-
- 0 replies
- 463 views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு by : Jeyachandran Vithushan மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜெயசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராக பதிவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிரேமலால் ஜெயசேகராவுக்கு நாடாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வ…
-
- 4 replies
- 637 views
-
-
20 தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுரேஸ்! இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களின் மீதும் அக்கறை உள்ள அனைவரும் கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நாடு படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: இலங்கையில் ஏற்படவிருக்கி…
-
- 0 replies
- 397 views
-
-
மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தம் நிறைவடையும் காலத்தின்போது சந்திரசிறி கஜதீர, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார். இந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக அவரிடம் சரணடைந்தனர். இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், 13 ஆயி…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள்வது இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது; ரெலோ யாழ். மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ் அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தொரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நவலர் மண்டபத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வரவேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேல…
-
- 0 replies
- 349 views
-
-
கோப்பாயில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் பலி கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகாலிங்கம் வின்சன் கோமகன் உயிர…
-
- 0 replies
- 453 views
-
-
20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும்- மாவை 20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கவுள்ளது அதன் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராசா இந்த வாரம் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது அதன் போது இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்துக்கு எதிரான சட்டநடவடிக்கை குறித்தும் ஆராயப்…
-
- 6 replies
- 644 views
-
-
அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் வழமைபோல்; முகக் கவசம் அணிவது கட்டாயம் இன்று தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் வழமை போல் ஆரம்பமாகின்றன. இந்நிலையில், அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதும், அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் இன்னும் பல நாடுகளில் பரவலாக இருப்பதால், இந்த நோய் நம்நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கருத முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி ஹரிதா அலுத்ஜ் கூறுகிறார். பாடசாலைகளின் கல்வியின் இயல்பான தொடக்கமாக சமூக இடைவெளி ஒரு மீற்றருக்கு இடையில் உள்ள தூரம் குறைக்கப்பட …
-
- 0 replies
- 655 views
-