ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143685 topics in this forum
-
மட்டக்களப்பு – வாகரை, மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன. மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்போது, மின்னர் தாக்கத்தினால் தமது 27 பசு மாடுகள் இறந்துள்ளதாக பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த பசு மாடுகளின் உடலங்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர். http://www.battinews.com/2020/09/27.html
-
- 7 replies
- 820 views
-
-
-
- 0 replies
- 727 views
- 1 follower
-
-
அம்பாறை – கல்முனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 305 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (01) கையளிக்கப்பட்டன. கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.https://newuthayan.com/கல்முனையில்-305-பேருக்கு-நி/
-
- 22 replies
- 1.8k views
-
-
(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பதில் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, கடத்தல் காரர்களின் 102 வங்கி கணக்குகள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறினார். இது தொடர்பில் ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது , திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலை இல்லாதொழிப்பதற்காக நாடுபூராகவும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களிடமிருந்து தகவலை அறிந்து கொள்வதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் இரு தொலைபேசி இலக்கங்கள் வெளிய…
-
- 0 replies
- 719 views
-
-
(எம்.மனோசித்ரா) வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்களிடமிருந்து சமூகத்தில் கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா , கடந்த 24 மணித்தியாலங்களில் 53 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையை சாதாரணமாகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படவில்லை என்றும் , அது போன்ற சூழலை மேலும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார். சாலியபுர கஜபா படையணி முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை புதிய கட்டடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் …
-
- 0 replies
- 362 views
-
-
(எம்.மனோசித்ரா) தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக நேரத்தை செலவிடுவதற்கு மேலதிகமாக விழாக்கள், பரிசு வழங்கும் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு ஜனாதிபதி எதிர்பார்க்கவில்லை என்பதால் அவற்றுக்கு அழைப்பு விடுக்க வேண்டாமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அன்றாட உத்தியோகபூர்வ பணிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளது. தேசிய பொறுப்பை ந…
-
- 0 replies
- 351 views
-
-
மாகாணசபை தேர்தலை இலக்கு வைத்து தமிழ் மக்களை நான் தூண்டி விடுகிறேன் என்ற கூற்று தவறானது. நான் என் மொழியின், இனத்தின் தொன்மையில் பெருமையடைகிறேன். அதை பகிரங்கமாக கூறியிருக்கிறேன். கௌதம புத்தர் இந்துவாக பிறந்தார் என்ற வரலாற்று உண்மையை சொன்னால் அது தவறா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன். இன்று ஆங்கிலத்தில் அவர் வெளியிட்ட கேள்வி-பதில் பகுதியில் இதனை தெரிவித்துள்ளார். அதன் சுருக்கமான வடிவம் வருமாறு, இது புத்தர் ஒரு இந்துவாக பிறந்தார் என்பது வரலாற்று உண்மை. புத்தர் ஒரு பௌத்தர் என்பதை நீங்கள் நிரூபிக்க முடியாது. அவர் ஒரு இந்துவாக பிறந்தார். எனவே இந்த தீவின் அசல் குடிமக்களின் மொழியும் தமிழ். …
-
- 1 reply
- 460 views
-
-
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் - வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதுபற்றி தெரிவிக்கையில் திருத்த சட்ட மூலத்தை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலுவான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்துள்ளார். நாட்டின் சகல பகுதிகளி…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு? – மக்களுக்கு எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதுவிடின், கடந்த மாதங்களைப் போன்று மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அந்தப் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா மற்றும் நியுஸிலாந்து போன்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நாடுகளில்கூட மீண்டும் கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து …
-
- 0 replies
- 433 views
-
-
மூன்று முக்கிய அமைச்சுக்களை நீக்கியது ஏன்: பிற தேசிய இனங்களை அச்சுறுத்துவதே நோக்கமா? – சுரேஷ் கேள்வி பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கமா என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்து மத விவகாரம், அரச கருமமொழிகள் அமுலாக்கம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஆகிய அமைச்சுக்கள் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 403 views
-
-
இனவாதத்தை தூண்டுவதற்கு சி.வி. விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார் நாட்டில் ஜாதி மதம் பாராது ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இடையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் பாராளுமன்றில் கன்னி அமர்வின் போது அவர் தெரிவித்த கருத்து முற்றிலும் பிழையான ஒரு கருத்து எனவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எஸ்.பீ. திஷாநாயக்க தெரிவித்துள்ளார். மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் இன்று (01) விஷேட வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது, மேலும் கருத்து தெரிவித்த அவர், சி.வி. விக்னேஸ்வரன் தேவையில்லாத ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.…
-
- 1 reply
- 355 views
-
-
புலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி புலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக இருப்பதன் காரணமாகவே நாங்கள் தொடர்ந்து போராடிவருகின்றோம். இனியொரு கடத்தல் காணாமல்போதல் நடைபெறக்கூடாது என்ற காரணத்தினாலேயே நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளரும் அச்சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவியுமான திருமதி அமலதாஸ் அமலநாயகி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். கேள்வி: தற்போது சிறீலங்கா அரசியலில் தோன்றியுள்ள சூழ்நிலையில் உங்கள் போராட்டத்தை மே…
-
- 0 replies
- 385 views
-
-
யாழ். அபிவிருத்தி; அங்கையனின் அறிவிப்பால் சீற்றமடைந்த டக்ளஸ் கோட்டாவிடம் முறையீடு வடக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தனக்கு தெரியப்படுத்தப்படவேண்டுமெனவும் தனது அனுமதியுடனேயே அவை செயற்படுத்தப்பட வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் யாழ். மாவட்ட செயலருக்கு உத்தரவிட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தனது கடுமையான எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார் எனக் கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அமைச்சர் டக்ளஸின் முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து மாவட்டக் க…
-
- 5 replies
- 643 views
-
-
வவுனியாவில் மினி சூறாவளி – 38 வீடுகள் சேதம் வவுனியா கணேசபுரம் பகுதியில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகளின் கூரை தகடுகள் காற்றில் அடித்துச்செல்லபட்டுள்ளதுடன், பயன்தரும் மரங்களும் முற்றாக சரிந்துள்ளன. அதற்கமைய கணேசபுரத்தில் வீசிய கடும் காற்றினால் 34 வீடுகளும் சமயபுரத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறித்த வீடுகளின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டமையால் வீடுகளிற்குள் தண்ணீர் சென்றுள்ள நிலையில் மக்கள் இருப்பதற்கு வசிப்பிடமின்றி அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை பலமான காற்று வீசியதால் வாழை, தென்னை போன்ற பயன் தரும் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதேவேளை, பாதிப்பு விபரங்கள் தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவ…
-
- 1 reply
- 458 views
-
-
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்பாவி பொதுமக்கள் – சி.வி. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த நேர்காணலில், விடுதலைப் புலிகள…
-
- 17 replies
- 2.1k views
-
-
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 444 சிறைக் கைதிகளுக்கு இன்று விடுதலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறு தவறுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் இன்று (செவ்வாய்கிகழமை) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறசை்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார். அதற்கமைய 29 சிறைச்சாலைகளை சேர்ந்த 18 பெண்கள் உட்பட 44 கைதிகளே இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். அவர்களுள் 83 பேர் வெலிகட சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு த…
-
- 0 replies
- 327 views
-
-
த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவாகச் செயற்படுகிறார் எனக் குற்றச்சாட்டு – வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி பறிபோகலாம்? வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவியைத் துஷ்பிரயோகம் செய்கின்றார் எனப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. வட மாகாணத்தில் ஆளுனர் சார்ள்ஸ் செய்த பணிகளை முன்னிட்டு தற்போதய அரசு அவருக்கு இப் பதவியை வழங்கியிருந்தது. இருப்பினும், பதவியேற்றதிலிருந்து இப் பிரதேசத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் காத்திரமாக எதையும் செய்யவில்லை எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆளுனர் சார்ள்ஸ், பல விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார் என ஆளும் கட்சிக்குச் சார்பான அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றமைய…
-
- 0 replies
- 359 views
-
-
சிறிலங்கா அரசு வெள்ளை வானை இனி அனுப்ப முடியாது – ஜஸ்மின் சூக்கா போர் முடிவடைந்த பின்னர் ஒருதசாப்த காலத்திற்கும் மேலாக போரில் தமது உடன் பிறப்புக்கள் காணாமற்போன தமிழ் இளைஞர்கள் உண்மையைக் கேட்டதற்காக ஒரு பயங்கரமான விலையைக் கொடுத்திருக்கின்றார்கள்’ எனவும் சர்வதேச காணாமலாக்கப்பட் டோர் தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் சூக்கா கூறியுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாதவது:- தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மட்டும் அறிய விரும்பியவர்கள் மீது இலங்கை அரசானது வெள்ளை வானை அனுப்பி துன்புறுத்துவதை தொடரமுடியாது என காணாமற்போனவர்களுக்கான இந்த சர்வதேச நாளில் நாம் இலங்கை…
-
- 1 reply
- 674 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கும் முயற்சியில் இலங்கை: விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன. 1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டுக்கு அமையவே, 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக கூறிவருகிறது. இதையடுத்தே, இலங்கை அரசாங்கத்துடன் 13 ஆவது திருத்தச் சட்…
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடந்தது. அதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரம் மற்றும் தேர்தலிகளின் பின்னடைவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. தேசியப்பட்டியல் விவகாரம் விவாதிக்கப் பட்டது அப்போது ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கூட்டாக இணைந்து தேசியப்பட்டியல் வழங்கும் போது கையாளப்பட்ட மறை தவறே அன்றி தெரிவு செய்யப்பட்ட மாவட்டமோ மற்றும் தெரிவு செய்யப்பட்ட தேசியப்பட்டடியல் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனோ சிக்கலுக்குரிய தல்ல என மத்திய செயற்குழுவின் சார்பில் தமது கருத்தை பதிவு செய்தனர். அதன…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கைக்குத் தலையிடியைத் தரப்போகும் சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்க வர்த்தகத் தடை ஆகஸ்ட் 31, 2020: சீன அரசின் கீழ் இயங்கும் கட்டுமான ஒப்பந்த நிறுவனமான, சீன தகவல் தொடர்பு, கட்டுமான கம்பனி (Chinese Communications Construction Company (CCCC) மீது, அமெரிக்கா வர்த்தகத் தடையை விதித்துள்ளமை அந் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றைப் பாரதூரமாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் சீனக்கடல் பிராந்தியம் பல நாடுகளின் பொதுப்பாவனையிலிருக்கும் தென்சீனக் கடலில், அந் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, சீனா அத்துமீறிப் பல செயற்கைத் தீவுகளை உருவாக்கி வருகிறது. தன் பட்டி வீதித் திட்டத்தின் ஒரு ப…
-
- 2 replies
- 639 views
-
-
விக்னேஸ்வரன் ஒரு பண்பாட்டுத் தோற்றத்தோடு இனமொழி அடையாளத்தோடு நாடாளுமன்றத்தில் தோன்றி ஆற்றி வரும் உரைகள் ஆழமானவை, காரமானவை, அதேநேரம் செறிவானவை என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோரின் நாடாளுமன்ற உரைகள் சிங்கள இனவாதிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக விக்னேஸ்வரனின் தோற்றத்துக்கு அந்த இடத்தில் ஓர் பண்பாட்டு பொலிவும், அரசியல் அழுத்தமும் இருந்தது. தனிப்பட்ட முறையில் நான் அவருடைய திருநீறையும் சந்தனப் பொட்டையும் விமர்சிப்பதுண்டு. அந்த மதச் சின்னங்கள் அவரை கிறிஸ்தவ வாக்காளர்களிடம் இருந்து விலக்கி வைக்கின்றன என்று ஒரு அவதானிப்பு உண்டு. …
-
- 8 replies
- 887 views
-
-
யாழ். சிறுமியின் நேர்மையான செயல்! குவியும் பாராட்டுக்கள் யாழில் பாடசாலை விட்டு வீடு செல்லும் போது வீதியில் கண்டெடுத்த தங்க நகையை பொலிசாரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் ஜெகதீஸ் ஜெகதீபா என்ற 12 வயதுச் சிறுமியே இவ்வாறு செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீட்டுக்கு வரும் வழியில் மறவன்புலோ மேற்கு பகுதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் நகைப் பெட்டி ஒன்றினை அவதானித்துள்ளார். சிறுமி அதனை திறந்து பார்த்த போது அதனுள் மூன்று தங்க மோதிரங்கள் மற்றும் சங்கிலி ஆகியன இருந்துள்ளன. இருப்பினும் சிறுமி அதனை அச்சத்தில் வீட்டுக்கு கொண்டு செல்லாமல் அவ்விடத்திலே…
-
- 8 replies
- 750 views
-
-
நேர்காணல் : ஆர்.ராம் 9ஆவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு நான் காரணமல்ல. அரசியலமைப்பு உள்ளிட்ட செயற்பாடுகளில் பங்கேற்று முன்னெடுத்தமையும், ஐ.நா.விடயங்களை கையாண்டமையும், சிங்கள ஊடகத்திற்கு வழங்கய செவ்வியும் தவறானவையாக இருந்திருந்தால் மக்களின் அங்கீகாரம் எனக்கு கிடைத்திருக்காது. நான் தோல்வி அடைந்திருப்பேன். ஆனால் கடந்த காலத்தில் நடைபெற்ற அனைத்து விடயங்களுக்கும் நானே பொறுப்பாளி என்று என்னை பிழையாக சித்தரித்தவர்களே தோல்வி அடைந்திருக்கின்றார்கள் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்…
-
- 19 replies
- 1.6k views
-
-
தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான sridaladamaligawa.lk மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தலதா மாளிகையின் முகப்புத்தகபக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதுடன், குறித்த இணைத்தளம் முடக்கப்பட்டுள்ளது. Share https://www.virakesari.lk/article/89065
-
- 6 replies
- 1.4k views
-