ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
ஆடி அமாவாசை தினத்தில் கடலோரங்களில் பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு அனுமதி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால் குளங்கள் மற்றும் கடலோரங்களில் பிதிர்க் கடனை செய்வதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி மறுத்திருந்தனர்.இந்நிலையில் ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் குறித்த தரப்பினரது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமைச்சரவையில் அது தொடர்பில் பரஸ்தாபித்திருந்தார். இதையடுத்து குளங்கள் குறுகிய பரப்பை கொண்டுள்ளதால் கொரோனா தொற்று பரவும் சாத்தியம் அங்கு அதி…
-
- 0 replies
- 259 views
-
-
2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் வெற்றிபெறவில்லை வெற்றிபெறவைக்கப்பட்டார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் பிரபல யாழ் சட்டத்தரனி சுகாஸ். மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லாத நிலையில் இருந்த சுமந்தினை வெற்றிபெறவைப்பதற்காக சில தூதராலயங்கள் களத்தில் இறங்கிச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு சட்டத்தரனி சுகாஸ் வழங்கியிருந்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பான சுமந்திரனின் கருத்தினைக் கேட்பதற்காக சுமந்திரனை தொடர்புகொள்ள முற்பட்டபோது, எமது அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/election/01/250…
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து; பல கடைகளுக்குப் பரவல்: தீ அணைப்புப் படை போராட்டம் (படங்கள், வீடியோ) July 5, 2020 கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள வணிக நிறுவனம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு பத்து தீயணைப்புப் படை வாகனங்கள் விரைந்துள்ளன. போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாகனங்கள் கடற்கரை வீதியூடாக திருப்பி அனுப்பப்படுகின்றன. ஆடைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள மேலும் பல கடைகளுக்குப் பரவியுள்ளது. இதனை அணைப்பதற்காக தீ அணைப்புப் படையினர் போராடி வருகின்றார்கள். அப்பகுதியில் பெருந்தொகையான பொதுமக்கள் குவிந்திருப்பதையும், நிலைமைகளைக் கட்டுப்ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு தமிழர் இருவரை பரிந்துரைக்குமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் யாரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி இரு சிறுபான்மையினரை…
-
- 0 replies
- 284 views
-
-
விபத்து மரணங்களை தவிர்க்க கிளி. வைத்திய நிபுணர்களின் சிபாரிசுகள்! வட மாகாணத்தில் அதிகரித்துவரும் பாரவூர்திகளால் ஏற்படுத்தப்படும் தவிர்க்கப்படக்கூடிய உயிரிழப்புக்கள் குறித்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் சிபாரிசுகள் இன்று (08) வெளியிட்டு வைக்கப்பட்டது. கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுனர்கள் இணைந்து குறித்த அறிக்கையினை தயாரித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் விபத்துக்களினால் அதிகளவான மரணங்கள் பதிவாகிவரும் நிலையில், அவற்றை தவிர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடி்ககைகள் தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, அண்மைக்காலமாக அதிகரித்துவரும் மக்களைப் பீதிக…
-
- 1 reply
- 407 views
-
-
சிவாஜிக்கு அழைப்பாணை – புலிகளை மீள உருவாக்க முயற்சி என வழக்கு! யாழ்ப்பாணம் – நவாலி தேவாலயத்துக்கு முன்னால் நாளை (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதுடன், புலிகளை மீள உருவாக்கவும் முயற்சிப்பதாக மானிப்பாய் பொலிஸார் அறிகையிட்டு தொடுத்த வழக்கில் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (08) மதியம் 12 மணிக்கு மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/சிவாஜிக்கு-அழைப்பாணை/
-
- 2 replies
- 421 views
-
-
ரயில் தடம் புரண்டதால் வடபகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு! வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரம் இன்று(புதன்கிழமை) காலை புகையிரத கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை 5.50 வவுனியா புகையிரத நியைத்திலிருந்து கடுகதி புகையிரதம் கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டபோது 6.15 மணியளவில் ஈரப்பெரியகுளம் பகுதியில் புகையிரதம் புகையிரத பாதையை விட்டு தடம் புரண்டு இரண்டு கிலோ மீற்றர் தூரம் புகையிர பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளன. இதனால் புகையிரதத்தில் பயணித்த பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவ…
-
- 1 reply
- 431 views
-
-
தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது – சீ.வி.விக்னேஸ்வரன் தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ள நிலையில் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள் இடம்பெறுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை.நேற்று நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சென்ற ஐந்து வருடகாலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலைபோல் நம்பிய புத…
-
- 1 reply
- 419 views
-
-
சங்குப்பிட்டி விபத்தில் மூவர் படுகாயம்; நொருங்கியது ஆட்டோ! கிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணல் ஏற்றிவந்த டிப்பர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25-வயது), உதயநகரை சேர்ந்த ப.தர்சிகன் (24-வயது), ஆனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.செல்வகுமார் (24-வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர். https://newuthayan.com/சங்கு…
-
- 1 reply
- 389 views
-
-
பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து அரசியல் பின்புலங்கள் கண்டறியப்பட வேண்டும்..!- சம்பிக்க நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடிப்படைவாத தாக்குதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய அரசியல் பின்புலங்கள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளர். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடாத்தப்பட்டு சூத்திரதாரிகள் …
-
- 0 replies
- 273 views
-
-
வெற்றிலைக்கேணியில் சட்டவிரோத மீன்பிடி; 13 பேர் கைது! யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 13 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் 3 படகுகள் மீட்கப்பட்டதுடன், சிலிண்டர்கள் உட்பட சட்டவிரோத தொழில் உபகரணங்களும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. https://newuthayan.com/வெற்றிலைக்கேணியில்-சட்ட/
-
- 0 replies
- 318 views
-
-
(ஆர்.யசி) கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை செயலணிக்கு வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியிருந்தது. ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் எவரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. எனவே இந்த விடயம் அரசியல் ரீதியில் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த காரணிகளை அமைச்சர் டக்லஸ் தேவானந…
-
- 0 replies
- 315 views
-
-
8 மாதங்களாக எதனையும் சாதிக்காத அரசாங்கம் 5 வருடங்களில் எதனை சாதிக்கப் போகிறது?- ரணில் by : Dhackshala 8 மாதங்களாக எதனையும் சாதித்துவிடாத அரசாங்கம், அடுத்த 5 வருடங்களுக்கு எதனை புதிதாக சாதித்துவிடப் போகிறது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுபோவில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தாமரை மொட்டு அரசாங்கம் இன்று எதனை செய்கிறது? மக்களிடமிருந்து பணத்தை கொள்கையடிக்கிறார்கள். மின்சாரக் கட்டணத்தைக்கூட மூன்று மடங்காக அதிகரித்து, அதனை செலுத்துமாறு கூறுகிறார்கள். மக்க…
-
- 1 reply
- 422 views
-
-
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரக் கோரி போராட்டம்! கொரோனா வைரஸ் நிலைமையால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரக்கோரி சுதந்திரத்துக்கான மகளிர் அமைப்பு இன்று (08) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் சேமலாப திணைக்கள முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://newuthayan.com/வெளிநாட்டில்-உள்ள-இலங்கை/
-
- 0 replies
- 373 views
-
-
(நா.தனுஜா) ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ நண்பர்களுக்கும் மேலும் தடையற்ற அதிகாரத்தை வழங்குகிறது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார். ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தின் வழமையான கொள்கைகளையும் கடந்து, அதிகாரம் மிக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட செயலணிகள் ஊடாக தன்னாட்சி அதிகாரம் உடையவர் போன்று இலங்கையின் ஜனாதிபதி நாட்டை எவ்வாறு ஆட்சி செய்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு விளக்கப்படமொன்றை சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட…
-
- 1 reply
- 509 views
-
-
வறுமை ஒழிப்பு திட்டம் குறித்து மீளாய்வு! இலங்கை – கொரிய நாட்டு அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய உலக உணவுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் 2020ம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வறுமை ஒழிப்புத்திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (07) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அங்கீகாரத்தில் சுமார் 144 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் வறுமைக் கோட்டின் கீழ் மக்கள் வாழும் ஐந்து மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வறுமை ஒழிப்புத்திட்டம் தற்பொழுது துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதனடிப்படையில் மட்டக்ளப…
-
- 0 replies
- 412 views
-
-
சிறந்த எம்.பியாக சிறீதரன் தெரிவு -எஸ்.என்.நிபோஜன் இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத் தரப்படுத்தலில், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், சிறந்த செயற்ப்பாட்டாளர் தரப்படுத்தலில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன், 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன், இலங்கையில் உள்ள தமிழ்ப் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2ஆவது இடத்தையும் கட்சியின் தரப்படுத்தலில் முதலாமிடத்தையும், இவர் பெற்றுள்ளார். இவருக்கான வெற்றி பதக்கமும் விருதும், தபால் மூலம் அனுப்பப்பட்டு, அவரது அலுவலக…
-
- 1 reply
- 871 views
-
-
லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தனவின் கருத்திற்கு சம்பந்தன் பதில்! தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்த கருத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பதிலளித்துள்ளார். அது தொடர்பில் அவர் வௌியிட்ட அறிக்கை பின்வருமாறு.... தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினை விசேடமாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நாடு சுதந்திரமடைந்த காலம் முதற்கொண்டு நீடித்து வருகின்றது. 1956ம் ஆண்டு தொடக்கம் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த நாட்டில் ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக ஜனநாயக ரீதியாக கோரிக்கைகளை வைத்து தமிழ் மக்கள் தங்களுடைய ஏகோபித்த ஆதரவை அந்த கட்சிகளிற்கும் கொள்கைகளிற்கும் வழங்கி வந்துள்ளார்கள். ஐக்கிய நா…
-
- 0 replies
- 413 views
-
-
ருபெல்லாவை இலங்கை ஒழித்தது – உலக சுகாதார ஸ்பானம் உறுதி! இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் ருபெல்லா தொற்று நோயை கட்டுப்படுத்தியிருப்பதை உலக சுகாதார ஸ்தாபனம் இன்று (08) உறுதி செய்துள்ளது. 2023ம் ஆண்டளவில் அந்த இலக்கினை குறித்த இரு நாடுகளும் அடையும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தாலும் 2020ம் அண்டளவிலேயே அந்த இலக்கை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ருபெல்லாவை ஒழித்த முதல் நாடுகளாக இலங்கையும் மாலைதீவும் இடம்பிடித்துள்ளன. https://newuthayan.com/ருபெல்லாவை-இலங்கை-ஒழித்த/
-
- 1 reply
- 539 views
-
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை by : Dhackshala புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், 19ஆவது திருத்தத்தில் இருந்து அல்லாமல் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஒவ்வொரு பகுதியை இணைக்காமல், நாட்டுக்கு பொரு…
-
- 0 replies
- 345 views
-
-
எம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன் (ஆர்.யசி) தமிழ் மக்களை நோக்கிய ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாகி வருகின்றது. எம்மை நோக்கிய பெளத்த, இராணுவ ஆக்கிரமிப்புகள் படையெடுத்து வருகின்றது. இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைபின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாட்டும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இரு…
-
- 0 replies
- 448 views
-
-
கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். என்று வவுனியாவில் கடந்த 1236 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் இன்றையதினம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், புதிய அரசியல் சாசனத்தை அதாவது அடிமை சாசனத்தை கொண்டுவருவதற்காகவே. தமிழர்களை பலவீனப்படுத்தி அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கொழும்பின் நிகழ்ச்சிநிரலில் சிந்திக்கவிடாமல் அடிமை வாக்களார்களாக கடந்த 11 வருடங்களாக கூட்டமைப்பு வைத்திருந்ததாக பெருமை கொள்கின்றது. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்…
-
- 2 replies
- 476 views
-
-
மதரஸாக்கள், புர்கா மற்றும் காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் July 8, 2020 முஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அத்துரலிய ரத்ன தேரர் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் உடனடியாக பேராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரிக்கைவிடுத்துள்ளார். கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முஸ்லீம் சமூகத்தில் உள்ள சில சக்திகள் மதவாதத்தை ஊக்குவித்தன என குற்றம்சாட்டியுள்ள அவர் அரசாங்கம் இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கையை எடு…
-
- 0 replies
- 344 views
-
-
இன்னுமொரு சுமந்திரனே விக்னேஸ்வரன் – மயூரன் காட்டம் by : Benitlas விக்னேஸ்வரனிற்கு போடுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் இன்னொரு சுமந்திரனை உருவாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் என வன்னி மாவட்ட வேட்பாளர் செ.மயூரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வன்னி தேர்தல் களத்தில் இன்று பலர் பல கட்சிகளில் போட்டியிடுகின்றனர். இதில் பெரமுனவில் போட்டியிடுகின்ற ஜனகநந்தகுமாரவுக்கு வன்னியில் வாக்களிப்பதற்கு தகுதியில்லை. அதேபோல் மான் சி…
-
- 4 replies
- 631 views
- 1 follower
-
-
கிளிநொச்சி வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி உயிரிழப்பு கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நாட்டு வெடிபொருள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்தார் என பளை பொலிஸார் தெரிவித்தனர். இயக்கச்சியைச் சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கடந்த 3ஆம் திகதி மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி இவர் காயமடைந்திருந்தார். இதனையடுத்து, படுகாயமடைந்த அவர், கிளிநொச்ச…
-
- 0 replies
- 403 views
-