Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு எதிராக இலங்கை போலீஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர். மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார். கண்டி மாவட்டம் - கொலங்கொட எனு…

  2. 9வது நாடாளுமன்றில் 11% இளைஞர் எம்பிகள் இலங்கையின் 9வது நாடாளுமன்றம் 11 வீதம் இளைஞர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதாக நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. 25 முதல் 40 வயதுக்குட்பட்ட இருபத்தைந்து உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதேவேளை 04 உறுப்பினர்கள் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதில் 9 பேர் முதல் முறையாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41-50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 54 உறுப்பினர்கள் 5…

  3. கிளிநொச்சியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி – ஒருவருக்கு படுகாயம் August 19, 2020 கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வீதி வளைவில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்…

  4. (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 20வது திருத்தம் உருவாக்கத்துக்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் அலிசப்ரி, கல்வியமைச்சர் பேராசிரியர். ஜி .எல். பீறிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது. அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20வது திருத்தம் உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதை தொடர்ந்து. சட்ட வரைபு நடவடிக்கைகளை …

    • 1 reply
    • 415 views
  5. மஹிந்த யாப்பா அடுத்த சபாநாயகர், குழுக்கள் பிரதித் தலைவர் அங்கஜன்! இலங்கையின் 09 வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது தனது பெயர் முன்மொழியப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குழுக்கள் பிரதித் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் மஹிந்…

  6. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் பிள்ளையான். -காணொளி- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) சிறைச்சாலை அதிகாரிகளால் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார். இந்த நிலையில், சிறைச்ச…

  7. (நா.தனுஜா) மனித உரிமைகளை வலுப்படுத்தல், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் போன்றவற்றைக் காரணங்களாகக்கூறி பலம்வாய்ந்த நாடுகள் வறிய அல்லது அபிவிருத்தியடைந்துவரும் சிறிய நாடுகளின் மீது தமது வல்லாதிக்கத்தைச் செலுத்த முற்படுகின்றன. மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியவையே என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. எனினும் அவை எமது நாட்டின் சுயாதீனத்துவத்தைப் பாதிக்காத வகையில், எமக்கு ஏற்புடையதாக அமைந்திருக்க வேண்டும் என்று பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் தார…

  8. (எம்.மனோசித்ரா) சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுவதற்கான வசதிகள் காணப்படும் பட்சத்தில் 200 க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளிலும் அனைத்து வகுப்புக்களுக்கும் கல்வி நடடிக்கையை ஆரம்பிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் இது தொடர்பில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச பாடசாலைகளையும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய பாடசாலையொன்றில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 …

  9. நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு பிள்ளையானுக்கு அனுமதி நாடாளுமன்ற உறுப்பிராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றம் …

  10. ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிற்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரப்படையினருக்கு எதிராக யாழ்.மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ( இலங்கை தமிழ் அரசுக் கட்சி ) , முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி உறுப்பினர் தனுபன் ( தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ) ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 6 - 08- 2020 திகதி யாழ்.மத்திய கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் வாக்கெண்ணுதலை பார்வையிடுகின்ற முகவர்களாக நியமிக்கப்பட்டு அதன் நிமித்தம் பணியில் இருந்தோம். …

  11. மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைகள் ஒத்திவைப்பு நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரனைகளை எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (19) கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனினும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். அதன் காரணமாகவே இன்றைய தினம் அவரா…

  12. வடகிழக்கு தமிழ்மக்களின் அரசியலை தென்பகுதியுடன் ஒப்பிடுவது மூடத்தனம்; அரியநேத்திரன் August 19, 2020 பா.மோகனதாஸ் அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள், வடக்கு கிழக்கு தாயக மக்கள் உரிமைக்காக பல தியாகங்களையும் உயிரழிவுகளையும் சந்தித்த இனம் என்பதை சகல அரசியல் தலைவர்களும் உணர்ந்து கொள்ளுங்கள் என, இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார். பாராளுமன்ற பொதுத்தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடகிழக்கு தமிழ்மக்களின் அரசியலை தென்பகுதி சிங்கள …

  13. பிள்ளையானைத் தொடர்ந்து மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கும் நாடாளுமன்றம் செல்ல அனுமதி கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட எச்.எல்.பிரேமலால் ஜயசேகரவிற்கும் நாளை ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்தார். தற்பொழுது தடுப்புக் காவலில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) நாடாளுமன்றில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எல்.பிரேமலால் ஜய…

  14. புதிய பேச்சாளர்கள் நியமனம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு புதிய பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அமைச்சரவை பேச்சாளராக கெஹலிய ரம்புக்வெல்ல , அமைச்சரவையின் இணை பேச்சாளர்களாக ரமேஷ் பத்திரண மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே 19ஆவ…

    • 2 replies
    • 552 views
  15. அதிபர் ஒருவரின் நெகிழ்ச்சி செயல்! மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமமொன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் காரணத்தினை அறிந்த ஆசிரியர் சலூன்காரராக மாறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய கட்டுமுறிவு கிராமத்திலுள்ள கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஜே.ஜீவனேஸ்வரன் (ஜீவன்) தமது பாடசாலை மாணவர்கள் ஒரு வார காலமாக பாடசாலைக்கு வரவில்லை என்பதால் வீடு தேடிச் சென்று காரணம் கேட்ட போது முடி வெட்டவில்லை. அதனால் பாடசாலைக்கு வரவில்லை. அத்தோடு முடி வெட்டுவதானால் 20 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கதிரவெளி கிராமத்திலுள்ள சலூன் கடைக்குப் போக வேண்டும். அதற்கு …

  16. பாட்டளி சம்பிக்க ரணவக்கவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கவனயீனத்துடன் வாகனம் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை இம்மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (19) உத்தரவிட்டார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி அவர்களை நாளைய தினம் (20) நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து இதற்கு முன்னர் அழைப்பாணை வௌியிட்டிருந்தார். எனினும், …

    • 0 replies
    • 298 views
  17. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) சிறைச்சாலை அதிகாரிகளால் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார். இந்த ந…

    • 0 replies
    • 195 views
  18. 19ஐ நீக்கி, 20ஐ உருவாக்க அமைச்சரவை அனுமதி அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/19ஐ-நீக்கி-20ஐ-உருவாக்க-அமைச்சரவை-அனுமதி/150-254507 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கும் மற்றும் 20 ஆவது அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளத…

    • 0 replies
    • 319 views
  19. (நா.தனுஜா) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் முதற்தடவையாக அவரைச் சந்தித்த அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், முந்தைய அரசாங்கத்தின் மீதான மக்களின் நிராகரிப்பை தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். 2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக்கொண்ட பின்னர் முதற்தடவையாக நேற்று முன்தினம் அலரிமாளிகையில் அவரைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் கலந்துரையாடியிருக்கிறார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வரலாற்று வெற்றிக்குப் பின்னர் முதற்தடவையாக …

    • 3 replies
    • 776 views
  20. யாழ்ப்பாணம் – கொட்டடி மீனாச்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் உள்ள தனியார் காணியில் பெண் ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்துக்கடியிலிருந்து வெளிப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் இன்று (18) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில் கால்ப் பகுதி எலும்புகள் மீட்கப்பட்டன. அத்துடன் பற்பசை பக்கட், பல் விளக்கும் பிறஸ், சீப்பு, பவுடர் பேணி, 3 மேற்சட்டைகள், பாவடை ஒன்று உள்ளிட்டவை துணியிலான கைப்பையில் காணப்பட்டுள்ளன. அவற்றை வைத்து ஒப்பிடும் போது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் நிபுணத்துவ ஆய்வு ஊடாகவே மனித எச்சங்கள் எந்தக் காலப் பகுதிக்கு உரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டு விசார…

    • 4 replies
    • 600 views
  21. நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையையடுத்து பல பிரதேசங்களில் நீர் விநியோகத் தடையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வத்தளை, கெரவலபிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தின் மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டில் பல மணி நேர மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பல பிரதேசங்களில் நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போது நிலவும் மின்சார துண்டிப்பு இன்னும் சில மணி நேரங்களில் சீர் செய்யப்படும் எனவும் மின்சார நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்ப இரவு 8 ஆகும் எனவும் மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்ந…

  22. பிள்ளையானின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவீரர் குடும்பத்திற்கு வீடு! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. குறித்த அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (செவ்வாக்கிழமை) மட்டக்களப்பு கோரகல்லிமடு கிராமத்தில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவீரர் குடும்பங்களின் இணைப்பாளர் எஸ்.குமரேசன், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜே.ஜெயராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார் வைத்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜே.ஜெயராஜ்…

    • 1 reply
    • 648 views
  23. நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது! நல்லூர் கந்தசுவாமி தெற்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. தெற்கு புறமான வீதி வளைவு கோயில் வீதியில் கைலாச பிள்ளையார் கோவிலடியில் அமையவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்களான நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்படவுள்ளன. இதன் முதல் கட்டமாக கிழக்கு புறம் செம்மணி வீதியில் வீதி வளைவு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. http://athavannews.com/நல்லூர்-தெற்கு-நுழைவாயில/

  24. புதிய உறுப்பினரை நியமிக்க டெலோ நடவடிக்கை -எஸ்.றொசேரியன் லெம்பேட் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் கட்சியில் இருந்து விலகி, நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட மனோ ஐங்கர சர்மாவுக்குப் பதிலாக புதிய நகர சபை உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு டெலோ நடவடிக்கை எடுத்துள்ளது. மன்னார் நகர சபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் மனோ ஐங்கர சர்மா போட்யிட்டு வெற்றி…

  25. அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர். எனவே அனைத்து முன்னாள் போராளிகளும் ஒன்றினைந்து தனித்துவத்தோடு எங்களுடன் இணைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் ஊடகம் ஒன்றிற்கு இன்று (18) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “வெளி நாடுகளில் விடுதலைப்புலிகள் மீண்டும் வருவதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார். அதன் பிண்ணனியில் இங்கு இருக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.