ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143651 topics in this forum
-
ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர் முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக, அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்க…
-
- 17 replies
- 1.8k views
-
-
‘சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு இராணுவத்தின் உதவியை நாடவுள்ளோம்’ -மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு, இராணுவத்தினரின் உதவியை நாடவுள்ளதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (18) நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். http:/…
-
- 2 replies
- 403 views
-
-
ஞானசார தேரர்தான் என்னை கடத்தினார்- ரதனசார தேரர் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோரால் நான் கடத்தப்பட்டேன் என அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார். எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரான வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் வசிக்கும் விகாரையில் இருந்த அரம்பேபொல ரதனசார தேரர், இனந்தெரியாத குழுவினரினால் தாக்கப்பட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்ற அரம்பேபொல ரதனசார தேரரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்கள் சக்தி மக்கள் கட்சியில் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை மையமாக …
-
- 5 replies
- 844 views
-
-
’15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தை பயன்படுத்த முடியவில்லை’ -மு.தமிழ்ச்செல்வன் 2016ஆம் ஆண்டில், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள பாடசாலையில், சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மலசலக் கூடங்கள், இன்று வரை மாணவர்கள் பயன்படுத்த முடியாதுள்ளது என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணியில், பொதுமக்கள் அடாத்தாக பிடித்து குடியிருந்த நிலையில், அவர்களுக்கு நக…
-
- 2 replies
- 511 views
-
-
(நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் கடந்த ஜுன் மாதத்தில் ஓரளவு முன்னேற்றகரமான நிலையைப் பதிவுசெய்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. உற்பத்தி மற்றும் சேவைத்துறை இரண்டினதும் கொள்வனவு முகாமைச் சுட்டெண்கள் கடந்த ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஓரளவிற்கு இயல்புநிலைக்குத் திரும்பியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் வியாபார நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிப்படைந்திருந்த நிலையில் கொள்வனவு முகாமைச் சுட்டெண்ணில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றமானது தயாரிப்பு செயற்பாடுகள் கொவிட் - 19 தொற்றுக்கு முன்னரான மட்டத்தை நோக்கிச்செல்வதை அறியமுடிகின்றது. …
-
- 0 replies
- 406 views
-
-
சுரேனுக்கு தேசிய பட்டியல் வழங்கியதால் சுதந்திர கட்சி கொந்தளிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கியமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து மேலும், “தேசிய பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை சுதந்திரகட்சி பரிந்துரை செய்திருந்தது. ஆனால்இஎங்களுடைய பரிந்துரையை புறக்கணித்துவிட்டு, தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு சுரேன் ராகவனின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொதுஜனபெரமுன அனுப்பியுள்ளது. எனினும் இவ்விடயம் தொடர்பாக பொ…
-
- 2 replies
- 441 views
-
-
பட்டதாரிகள் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல் தகுதிவாய்ந்த பட்டதாரிகளுக்கு அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 150,000 பேருக்கான தொழில்வாய்ப்பு திட்டம் குறித்து ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழுள்ள பொருத்தமானவர்களை இதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 314 views
-
-
20 ஆவது திருத்தத்தை கொண்டுவரவுள்ளமைக்கான காரணம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவிற்கு பதவியும் பசில் ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்திற்கு நுழையும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு திருத்தைத்தை கொண்டுவருவதாயின் தாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை எனவும் அவ்வாறு இல்லாவிடின் தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 315 views
-
-
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை: பல அரசியல்வாதிகளுக்கு அழைப்பு அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அடுத்த மாதம் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் உட்பட பலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர, பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார திசாநாயக்க, இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம் மற்றும் மேலும் ஒரு சிலருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 07 ஆம் திகதி அன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்கள் கோரப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 286 views
-
-
கல்வி முறையை திருத்தியமைக்க வேண்டும் தற்போதைய கல்வி முறையை திருத்தியமைக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வியை வழங்க முடியாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=132385
-
- 0 replies
- 285 views
-
-
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ; வடக்கு - கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான எதிர்வரும் ஆவணி 30ஆம் திகதி வடக்கு - கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காலை 11மணிக்கு முன்னேடுக்கப்படவுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி யாழ்மாவட்ட செயலகத்தில் ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறும். அதேபோல் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்பமாகி காந்திபூங்கவரை சென்று ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறும். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் மழை,வெயில்,பனி பாராது தமது உறவுகள் கிடைப்…
-
- 0 replies
- 311 views
-
-
கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி, தேசிய பட்டியல் ஆசனம் ரெலோவின் புதிய ஆசை..! 20ம் திகதி நிறைவேற்றப்படுமா..? தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பதவி மற்றும் தேசிய பட்டியல் ஆசனத்தின் இறுதி இரண்டரை ஆண்டுகள் தமது கட்சிக்கு வழங்கப்படவேண்டும். என எதிர்வரும் 20ம் திகதி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் கோருவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளது. ரெலோவின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன் தினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோ இம்முறை 3 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் புளொட் கட்சியும் ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் முதல் தடவை எதிர்வரும்…
-
- 0 replies
- 349 views
-
-
நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்! நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட கரிசனையின் அடிப்படையில் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக் கட்ட கள ஆய்வுப் பணிகள் நேற்று முன்தினம் இடம்பெற்றன. கடற்றொழில் திணைக்களம், மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், வன வளத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கடற்றொழிலாளர…
-
- 0 replies
- 426 views
-
-
வடக்கு ஆளுநராக முன்னாள் கட்டளைத் தளபதி நியமனம்? வடக்கு மாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவ பின்னணியைக் கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற சூழல் தற்போது நாட்டில் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் 5ஆவது ஆளுநராக செயற்பட்ட ரெஜினோல்ட் குரேவுக்குப் பின்…
-
- 0 replies
- 368 views
-
-
படையினரை ஒருபோதும் கைவிடமாட்டோம்- அரசாங்கம் நாட்டின் அரசியலமைப்பை மீறும் அல்லது படையினரை காப்பாற்றுவதனை எக்காரணத்துக்காகவும் கைவிடமாட்டோமென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக தினேஸ் குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை நெருக்கடியான அல்லது மகிழ்ச்சியான சந்தர்ப்பம் என எதுவாயினும் அனைத்து நாடுகளுடனும் நட்புறவையே பேணும். மேலும் ஜனாதிபதியும் அணிசேரா பக்கச்சார்பற்ற நட்புறவை கொண்ட வெளிவிவகார கொள்கையைதான் அறிவித்துள்ளார். ஆகவேதான், எங்களுக்கு எதிரிகள் இல்லை. நண்பர்கள் மாத்திரமே உள்ளனர். இதனால்தான் உலகம் முழுவதும் …
-
- 0 replies
- 375 views
-
-
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் கொழும்பில் – பதவிநிலைகளில் மாற்றம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான தீர்மானம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய செயற்குழு நேற்று கூடியவேளையில் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்ததீர்மானம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் மு…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்தார் நாமல் விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையில் காணப்பட்ட தமிழ் பிழையை உடனடியாக திருத்தி தமிழ் மொழிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முக்கியத்துவம் வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர்களாக இருந்த எவரும், பெயர் பலகையில் காணப்பட்ட தமிழ் பிழையை சரிசெய்ய முன்வராத நிலையில் நாமல் ராஜபக்ஷ இதனை செய்துள்ளமையை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். மேலும் நாட்டில் மும்மொழி கொள்கை நடைமுறையில் இருக்கின்றது என்பதை நாமலின் செயற்பாடு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ கடந்த 18ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 426 views
-
-
காணி விவகாரத்தில் பொதுமக்களின் நியாயத்திற்கே முதலிடம் – சமல் காணி விவகாரத்தில் பொதுமக்களின் பக்கமுள்ள நியாயத்திற்கே முதலிடம் வழங்கப்படும் என நீர்பாசன துறை அமைச்சு மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, வடக்கு கிழக்கு காணி பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துவோம் எனவும் அவர் கூறினார். நீர்பாசன துறை அமைச்சு மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரச காணி அபகரிப்பும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளது. …
-
- 0 replies
- 458 views
-
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள ஒற்றுமையாக பயணிக்கவேண்டும் – சார்ள்ஸ் நிர்மலநாதன் கூட்டமைப்பானது கடந்த தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட நிலையில் இம்முறை 10 ஆசனங்களையே பெற்றுள்ளது. வன்னியில் கூட ஒரு ஆசனத்தை இம்முறை நாம் இழந்திருக்கின்றோம்.இந்த தேர்தலில் ஆட்சியாளர்கள் அதிகாரபலம் மற்றும் பணபலம் எனபவற்றை பயன்படுத்தியிருந்தார்கள். அதனை விட எம்மவர்கள் பிரிந்து நின்று இந்த தேர்தலை சந்தித்தார்கள். இப்படியான சூழலிலும் கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைத்து தமிழ் உறவுகளிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.அத்துடன் வடக்கு- கிழக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன…
-
- 1 reply
- 459 views
-
-
சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி… நாம் தமிழர் சீமான் அவர்களின் ஆதரவை பெற்ற கட்சியான தமிழ் தேசிய முன்னணி ஈழத்தில் பெருவெற்றி,இரு எம்பி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,இரண்டாம்கட்ட தலைவர்களும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளனர்.நாம் தமிழருக்கும் தமிழ் தேசிய முன்னணிக்கும் ஒற்றுமைகள் உள்ளன.இரண்டுமே இளைஞர்களால் கட்டமைக்கப்பட்ட கடந்த பத்து வருடத்தினுள் தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளாகும்.நிலையான தீர்வை அடிப்படை பிரச்சினைகளை அறிந்து,அதற்குரிய வரைபுகளையும் கொள்கையில் விட்டுகொடுக்கா தன்மையையும் கொண்டு நடாத்தப்படுகின்ற கட்சிகள்.தமிழ் தேசிய முன்னணக்கு இன்று ஈழ அரங்கில் கிடைத்துள்ள பாரிய மக்கள் ஆதரவுக்கும் கட்சி சரியான பாதையில் தொடர்ந்து வ…
-
- 222 replies
- 23.9k views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) எனக்கு கிடைத்த நீதி அமைச்சுப்பதவி சமுதாயத்துக்கு கிடைத்த கெளரவம். இதனை எனக்கு வழங்கக்கூடாது என எம்மில் இருக்கும் தீய சக்திகள் செயற்பட்டனர். அதனை ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரித்து எமது சமூகத்தை கெளரவப்படுத்தி இருக்கின்றனர். நீதி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டு ஒருபோதும் சமூகத்தை காட்டிக்கொடுக்கமாட்டேன். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வேன் அத்துடன் அடுத்துவரும் 20வருடங்களுக்கு இந்த அரசாங்கமே பதவியில் இருக்கப்போகின்றது. அதனால் முஸ்லிகள் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியில் பாராளுமன்றத…
-
- 3 replies
- 451 views
-
-
பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வெளியானது தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் இணையதளத்தில் இந்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் நியமனக்கடிதங்கள் அமைச்சினால் எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர…
-
- 3 replies
- 1k views
-
-
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவுக்கு கடுமையாக அழுத்தம் கிடைத்து வருவதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அமையப் பெற்றுள்ள போதிலும், அது இன்று கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளதை காண முடிகின்றது. இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரினால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது…
-
- 2 replies
- 579 views
-
-
அரசமைப்பின் 19ம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் எனறு வடக்கின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், 19ம் திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால் அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம் தான் இன்று நாட்டில் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது என்றும் தெரிவித்தார். https://newuthayan.com/19ம்-திருத்தத்தை-முழுமையா/
-
- 0 replies
- 654 views
-
-
(எம்.மனோசித்ரா) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. வழமையைப் போன்று கோலாகல வைபங்கள் மற்றும் மரியாதை அணிவகுப்புக்கள் இன்றி எளிமையான முறையில் புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது. அணிவகுப்புக்கள் எவையும் இன்றி எளிமையான முறையில் முதலாவது பாராளுமன்ற அமர்விற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். புதிய பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்குக் கூடவுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70வது உறுப்புரை…
-
- 0 replies
- 305 views
-