ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
கூட்டமைப்பில் இருக்கும் சிலர் கட்சியை பலவீனப்படுத்துகின்றர்! – செல்வம் குற்றச்சாட்டு by : Vithushagan தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு ஒரு சிலர் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே மக்களாகிய நீங்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும்? யாரை தெரிவு செய்யக் கூடாது என்கின்ற தீர்மானத்தை எடுப்பது உங்கள் கைகளில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தா…
-
- 1 reply
- 458 views
-
-
ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை by : Yuganthini முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்ன…
-
- 0 replies
- 376 views
-
-
சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்…! கொரோனா தொற்றினால் தற்போது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. இலங்கை ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர், டொக்டர் சந்திமா மது விக்ரமதிலக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் சிறுவர்களின் போசாக்கு தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்கள் சிற்றுண்டிகளை உட்கொள்வது அதிகம் என்பதால் எடை அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 407 views
-
-
யாழில் மாடுகளைப் பதம் பார்த்த ரயில்! யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயில் இரு பசு மாடுகளை மோதித் தள்ளியுள்ளது. யாழ். நாவலர் வீதிப் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் பசு மாடு அங்கேயே உயிரிழந்துள்ளது. மற்றைய மாடு எழுந்து நடக்க முடியாத நிலையில் அங்கேயே கிடந்துள்ளது. காயமடைந்து நடக்க முடியாத நிலையில் கிடந்த மாட்டை, சம்பவ இடத்துக்கு வந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், கால்நடை வைத்தியர்களான மாறன் மற்றும் பிரியந்தினி ஆகியோர் அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்டு அருகில் உள்ள மர நிழலுக்கு அடியில் கொண்டு சென்று சேர்த்தனர். அத்துடன், காயமடைந்த மாட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. …
-
- 0 replies
- 450 views
-
-
டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா- வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் அண்மையில் அரபு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பல இலங்கையர், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொரோனா தடுப்பு சிக்கிச்சை நிலைங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் நாடு திரும்பிய 168 பேர், வவுனியா- வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக…
-
- 0 replies
- 470 views
-
-
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வந்த மக்கள் பிரதிநிதிகள் சிலரின் தகுதிகளை ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த சில பிரதிநிதிகள் மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்தவர்களும், நாட்டுக்கு போதைபொருள் கடத்தி வந்தவர்களும், ரயிலில் தங்கச் சங்கிலியை பறித்தவர்களுமாகவே இருந்தனரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேரும், மணல் அகழும் அனு…
-
- 1 reply
- 357 views
-
-
9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை; ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து June 19, 2020 “9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த மதத்த…
-
- 5 replies
- 718 views
-
-
பொதுத்தேர்தல்: சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு இம்முறையும் சர்வதேச கணிப்பாளர்கள் வருகை தரவுள்ளனர். இருப்பினும், அவர்கள் இரண்டு வாரகால தனிமைப்படுத்தல் விதிமுறையை நிறைவு செய்து,கொரோனாத் தொற்று அற்றவர்கள் என்பதை உறுதி செய்த பின்னரே தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட முடியுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கும் தேர்தல் ஆணையாருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இம்முறையும் பொதுநலவாய அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம்,தென்கொரியாவின் அன்பிறில் அமைப்பு ஆகியவற்றின் சர்வதேசக் கண்காணிப்புப் பிரதிநிதிகள் தேர்தல் கண்காணிப்பில்…
-
- 0 replies
- 308 views
-
-
படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள்: வரைபடத்தை வெளியிட்டன சர்வதேச அமைப்புகள் இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன. எதிர்வரும் ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இரு அமைப்புகளும் இலங்கையின் சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டுள்ளன. இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்களை சித்திரவதை செய்வதற்காக கடந்த மூன்று தாசப்தகாலமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் படையினருடன் இணைந்து செயற்படும் ஆயுத குழுக்களும் பயன்படுத்தும் 219 இடங்கள் அடங்கிய வரைபடத்தை குறித்த அமை…
-
- 1 reply
- 362 views
-
-
திரையரங்குகளை மீண்டும் திறக்க நடவடிக்கை! எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படவுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அறிறுத்தல்களைப்பின்பற்றி திரையரங்குகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார். திரையரங்குகளை திறப்பதற்கு முன்பாக கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை திரையரங்குகளுக்கு வருகைதருவோர் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாத…
-
- 2 replies
- 472 views
-
-
சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வரவிருக்கும் பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். மேலும் இலங்கையில், கொரோனா வைரஸ் என்ற கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கையை முன்னெடுத்தமைக்காகவும் சீன ஜனாதிபதி தமது கடிதத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹூ வை இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் அவர்கள் அனுப்பி வைத்த கடிதத்தை பதில் தூதுவர் ஜனாதிபதியிடம் வழங்கினார். கொவிட் 1…
-
- 1 reply
- 647 views
-
-
யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை!! இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள். அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அன்பார்ந்த யாழ் மக்களே! இம்முறை நாடாளுமன்ற தேர்தல் என்பது வழமைபோன்ற ஒரு தேர்தல் அல்ல. தமிழர்களாகிய நாங்கள் மிக மிக அவதானமாகச் செயற்பட்டேயாக வேண்டிய ஒரு தேர்தல். சீனாவின் பக்கம் முழுவதுமாகவே சென்றுவிட்டுள்ள ஸ்ரீலங்காவை வழிக்கொண்டு வருவதற்கு தமிழ் மக்க…
-
- 25 replies
- 2.1k views
-
-
யாழில் 10 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம் – ருவன் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக இன்று (18) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், எதிர்காலத்திலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. – என்றார். …
-
- 8 replies
- 1.3k views
-
-
இலங்கை அகழாய்வில் ஆதிமனிதர்களின் 48,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுதங்கள் ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைOSHAN WEDAGE இலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு மிருகங்களை வேட்டையடி…
-
- 2 replies
- 637 views
- 1 follower
-
-
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை வாயால் சொல்ல முடியாதளவுக்கு படுமோசமாக இருக்கின்றது.மக்கள் நிம்மதியுடன் வாழ வேண்டுமெனில் இந்த நாடு உருப்படியாக இருக்கவேண்டும் இனிமேல் மங்கள முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் நான் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. மங்கள அரசியலில் இருந்து விலகுவதான திடீர் அறிவிப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை வாயால் சொல்ல முடியாதளவுக்கு படுமோசமாக இருக்கின்றது. இந்தநிலையில் நாடாளுமன்ற அரசியலிலிருந்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர விலகியதை நான் வரவேற்கின்றேன். அவர் அவ்வாறு விலகுவது எனக்கு விருப்பம் இல்லை. எனினும்,…
-
- 2 replies
- 1k views
-
-
In ஆசிரியர் தெரிவு June 18, 2020 6:21 am GMT 0 Comments 1338 by : Litharsan கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பாக திருகோணமலை பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிக்கின்ற அதேவேளை, தமிழரின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாகும் அரசியல் வேலைத் திட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆனி 2ஆம் திகதி, 2020ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம், கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாத்து எதிர்கா…
-
- 0 replies
- 550 views
-
-
இலங்கையில் மீண்டும் வெள்ளைவான் கடத்தல் கலாசாரமும், அடக்குமுறை ஆட்சியும் உருவெடுத்துவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளரான தரிஸா பெஸ்டியனின் இல்லத்தில் நுழைந்து இரகசிய பொலிஸார் சோதனையிட்ட விடயத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக கண்டித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவரின் முழுமையான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடன் இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது, https://www.ibctamil.com/srilanka/80/145391
-
- 1 reply
- 507 views
-
-
In இலங்கை June 18, 2020 1:44 pm GMT 0 Comments 1114 by : Vithushagan தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே என்.சிறிக்காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர், ”கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டிபய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் வெள்ளைவான் கடத்தல் ஆரம்பமாகும் என்று சொல்லி தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு இருந்தனர்.அதே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்போது கோத்தபாய…
-
- 2 replies
- 669 views
-
-
பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எதிர்காலத்தில் சகல சமூகங்களும் பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் போதைப் பொருட்கள், பாதாள உலக நடவடிக்கைகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் பணம் கொள்ளை இல்லாத சமூகத்தை உருவாக்குவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன உறுதியளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது பாதுகாப்புச் செயலாளர், பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது …
-
- 3 replies
- 567 views
-
-
வட, கிழக்கு சுவீகரிப்பைத் தடுப்பதற்கு த.தே.கூவுக்கே வல்லமையுள்ளது’ ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம் வடக்கு, கிழக்கிலே தமிழ் மக்களின் வாழ்விடங்களை சுவீகரிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துகின்ற வல்லமை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்தான் இருப்பதாக, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். பல தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை உடைப்பதற்க்காக அரசாங்கத்தால் களமிறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 8 replies
- 1.5k views
-
-
மைத்திரி, ரணிலிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது. இதேவேளை, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது மேலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மததர-ரணலடம-வககமலம-…
-
- 0 replies
- 450 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் சின்னாபின்னமாக்கிவிட்டார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மைத்திரிபால சிறிசேன இல்லாது செய்தது போல, ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க சின்னா பின்ன மாக்கிவிட்டார். எனவே, மலையக மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவு வழங்கவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தலவாக்கலையிலேயே அதிகளவு தமிழ் மக்கள் வாழ்கின்றனர். மலையகத்தின் இதயம் இந்த நகரம்தான். தலவாக்கலையை அடையாளப்படுத்திய பெருமை அமரர் சந்திரசேகரனையே சாரும். எனவே, இங்கு தேர்தல் பிரசாரத்த…
-
- 0 replies
- 773 views
-
-
வடக்கில் வளர்ச்சிக்கான துறைசார் திட்டங்களைத் தயாரிக்க ஆளுநர் வலியுறுத்து!- விவசாயம் குறித்தும் அவதானம் by : Litharsan வடமாகாண வளாச்சிக்கான உரிய துறைகள் சார்பில் பொருத்தமான கொள்கைத் திட்டங்களை தாமதமின்றித் தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தேசிய கொள்கைகளிலிருந்து விலகாமல் வட மாகாண வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் அனைத்து மாகாண அமைச்சுக்களும் துறைசார் கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாகாண அமைச்சுகளின் செயற்பாடுகள் தொடர்பான மாதாந்த மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் செயலகத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில் நேற்று (ப…
-
- 0 replies
- 371 views
-
-
’இதுவரை 10ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்பு’ -என்.ராஜ் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படையினரால் 10ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார் நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பில், இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி முப்படை உயர் அதிகாரிகள் தலைமையில் பல…
-
- 0 replies
- 311 views
-
-
“1000 ரூபாய்” குறித்து 25ம் திகதி பிரதமருடன் பேச்சு – மருதபாண்டி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ம் திகதி நடைபெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (18) அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளம் தொடர்பாக ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
-
- 0 replies
- 456 views
-