Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தெல்லிப்பழையில் திடீர் சோதனை!- ஆவா குழுவின் வாள்கள் மீட்பு யாழில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையின்போது அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இராணுவப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/தெல்லிப்பழையில்-திடீர்-ச/ ############ ################ ################ ############## என்ன மாதிரியான... ஆயுதங்கள் எல்லாம், செய்து வைத்திருக்கிறார்கள். அவற்றை பா…

  2. வெறிச்சோடி காட்சியளிக்கும் கந்தே விஹாரை துசித குமார பொசோன் பௌர்ணமி தினமான இன்று (05), நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்; வரலாற்று சிறப்புமிக்க அளுத்கமை கந்தே விஹாரை இன்று வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஹாரைக்கு வழமையாக அதிகளவான பக்தர்கள் வருகைதருகின்றபோதிலும் இம்முறை வெசாக் பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பொசோன் பௌர்ணமி தின வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பௌத்த மக்களுக்கு மகா சங்கரத்ன தேரரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/வறசசட-கடசயளககம-கநத-வஹர/95-251440

  3. பொன் சிவகுமாரனின் நினைவு தினம் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. Posted on June 4, 2020 by தென்னவள் 15 0 முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன் சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சயனட் அருந்தி மாலை 6.15 மணிக்கு வீரச்சாவடைந்தார். அவரின் திருவுருவச்சிலை உரும்பிராய் சந்தியில் அமையப்பெற்றுள்ளது. இச் சிலை வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை கால…

  4. மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று மதியம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் சுமார் 130 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி நிதிகள் இணைந்து குறித்த பேரூந்து நிலையத்தை திரை நீக்கம் செய்து நாடா வெட்டி திறந்து வைத்தனர். குறித்த…

    • 0 replies
    • 318 views
  5. கொரோணா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் ஏற்கனவே கொடூர யுத்தம் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலை மிகவும் அவர்களை வறுமையில் வாட்டுகிறது இதனை கருத்தில்கொண்டு தன்னெழுச்சியாக பல இளைஞர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்கின்றனர் அந்த வகையில் முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரும் சமூக செயற்பாட்டாளரும் ஆகிய கிருஷ்ணமீனன் அவர்கள் இளைஞர்களை இணைத்து மனிதாபிமானப் பணியில் மக்களோடு மக்களாக ஈடுபட்டுள்ளார். "தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" - என்னும் சுப்பிரமணிய பா…

    • 49 replies
    • 4.9k views
  6. அரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக, மேலதிக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதியளித்தே பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கடமையாற்றிய ஏ.வெலி அங்க நேற்று (05) 60 வயதைப் பூர்த்தி செய்த நிலையில் ஓய்வுபெற்றார். இதனையடுத்தே கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற, இலங்கை அறிவியல் சேவை தரம் ஒன…

    • 4 replies
    • 1.2k views
  7. தேசியம் பேசிப் பேசி, மக்களை ‘உசுப்பேத்தியோர் வாழ்கின்றனர்’ மக்களை உசுப்பேத்தி வாக்குப் பெற்றவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்றும் வாக்களித்த மக்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள் என்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் ஞானமத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார். களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உதட்டால் தேசியம் பேசிப் பேசி, மக்களை உசுப்பேத்தி, வாக்குகளைப் பெற்று வாழ்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள் என்றும் தெரிவி…

  8. Jameel Kalkudah - மட்டக்களப்பு தாழங்குடாவில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ் முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரியும் கல்லூரிக்கு அட்டாளைச்சேனை முஸ்லிம் முதல்வரை இடமாற்றியமை தொடர்பிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று 06.06.2020 பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியினை பாதுகாக்கும் அமைப்பு என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் கல்லூரிக்கு முன்பாக நடைபெற்றது. தமிழர்கள் அதிகமாக வாழும் இப்பகுதிகளில் உள்ள தமிழர்களின் கலாசாரத்தினையும் பாரம்பரியத்தினையும் கொண்ட தேசிய கல்வியியல் கல்லூரியில் முதல்வராக தமிழரே நியமிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். 1992ஆ…

    • 0 replies
    • 415 views
  9. படுகொலையான அருட்தந்தை சந்திரா அடிகாளரின் நினைவேந்தல் மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றிய அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகளாரின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (06) அனுஷ்டிக்கப்பட்டது. புனித மரியாள் பேராலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது சமாதானத்தின் காவலன் சமாதியில் பங்குத்தந்தை வணபிதா சிலமன் அன்னதாஸ் தலைமையில் நேற்று மாலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தையின் உறவினர்கள், வணபிதாக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்னர் சமாதியில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பங்க…

  10. வான் பரப்பில் அடையாளம் காணப்பட்ட ஓர் பாெருள்..! இலங்கையின் வான் பரப்பின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹம்பாந்தொடை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://newuthayan.com/வான்-பரப்பில்-அடையாளம்-க/ ??????

  11. லண்டனில் இருந்து 278 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 278 இலங்கையர்களுடன் விசேட விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் லண்டனில் சிக்கியிருந்த, 278 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பி.சீ.ஆர் அறிக்கை கிடைக்கும் வரை இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகிலுள்ள 4 ஹோட்டலில் தங்கவைக்க, விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்…

  12. இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை Jun 07, 20200 உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவியதையடுத்து, நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இறை வழிபாட்டுத் தலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை தற்போது வழமைக்கு திரும்பி வரும் நிலையில் இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வழிப்பாட்டு நடவட…

  13. ஓகஸ்ட்டில் பொதுத்தேர்தல் : நாளை வர்த்தமானி அறிவித்தல் பொதுத்தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனினும், திகதி குறித்த இறுதித் தீர்மானம் நாளை திங்கட்கிழமை, ஆணைக்குழு கூடி முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல் குறிப்புக்களை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது பரிசீலித்து வருவதாகவும் இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தபபடலாம் என்றும் தெரியவருகிறது. அந்த குறிப்புக்களின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் ஒவ்வொரு பெரிய கூட்டங்கள் வைக்க அனுமதிப்பதுடன், அதில் அதிகபட்சமாக 500 பேரே கலந்து கொள்ளலாமென தெரிவிக்கப்பட்ட…

  14. இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது – பெரமுனவை கடுப்பேற்றிய ஹூல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான இரட்ணஜீவன் ஹூல் நேற்று (05) யாழ்ப்பாண ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் தொடர்பில் பதிலளித்த அவர், ‘தேர்தலில் பலர் அளாப்புவது (ஏமாற்றுவது) வளமை. அந்த அளாப்பத்தை தடுப்பது எமது கடமை. எனவே அளாப்புபவர்கள் எங்களை மிரட்டினால், தாம் அளாப்புவதை தடுக்க மாட்டோம் என்று நினைக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் சில ஊடகங்கள் பச்சையாக பொய்களை எழுதி வருகின்றார்கள். இவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது. உங்களது வாக்கு…

  15. "பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ராஜபக்ச அரசின் இந்த படுமோசமான செயல்களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டமான அறிக்கையை விரைவில் நாம் வெளியிடவுள்ளோம்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நீதியான, சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதில் முந்நாள், இந்நாள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் உள்ளடக்கிய 13 பேரை ஜனாதிபதி நியம…

    • 7 replies
    • 1.2k views
  16. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து உரிய முற்பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை வரவேற்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை தயாராக இருக்கிறது. இதன்போது அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்பதுடன் அவர்கள் குழுக்களாகவோ, குடும்பமாகவோ அல்லது தனியாகவோ வருகைதர முடியும்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டிற்குப் பெருமளவு வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறி…

  17. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவையை வழமை போன்று முன்னெடுப்பதற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.அடுத்துவரும் சில தினங்களில் மக்களின் செயற்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை, இனி…

  18. இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி: தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணமானது, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என பல சமூகங்கள் வாழும் ஒரு பகுதியாக காணப்படுகின்ற நிலையில், அந்த மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான பல தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன. எனினும், கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களை அடையாளம் கண்டு அவற்றை முகாமைத்துவம் செய்யும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிய…

    • 1 reply
    • 613 views
  19. சேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது…! புடவை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றி பெற்று விட முடியாது. எனவே தேர்தல் குறித்து கூடிய அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் ஜக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்தவையாகவே மக்கள் கருதுகின்றனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதே போன்று ஜனாதிபதியின் வர்த்தகமானி அறிவிப்பு காலவதியாகியுள்ளது. அரசியலமைப்பினை மீறாது பாதுகாக்க வேண்டுமாயின் நாடாளுமன்ற அமர்வை ஆகஸ்ட் வரை ஒத்தி வைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். இருப்பினும் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தே ஆக வேண்டும் என ரணில் கூறினார். ஜ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்ப…

  20. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் நிர்வாண நபரை (கிரிஸ் பேய்) கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர். நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ பெலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வார காலங்களாக நெலுவ மற்றும் ஹினிதும பொலிஸ் பிரதேசங்களில் வீடுகளுக்கு நிர்வாணமாக நுழையும் நபர்கள் அங்குள்ளவர்களை அச்சுறுத்துவதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக திடீர் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிரிஸ் பேய்களின் நடமாட்டம் காரணமாக பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள…

  21. தந்தை, மகள் உட்பட மூவர் பலியான சோகம்! பதுளை – மடுல்சீமை, எல்ல பகுதியில் குளம் ஒன்றில் நீராடச் சென்ற தந்தை மற்றும் மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (06) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தந்தை (38-வயது, மகள் (13-வயது) மற்றும் உறவுமுறை சிறுமி (12-வயது) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் பசறை வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டுள்ளன. https://newuthayan.com/தந்தை-மகள்-உட்பட-மூவர்/

  22. காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் மரணம்….! மொறட்டுவை-ஏகொடஉயன பகுதியில் நீரில் மூழ்கிய காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் உயிரிழந்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (05) இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் நேற்று கடலுக்கு சென்றிருந்த வேளையில் காதலி கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட காதலன் தனது காதலியை கரைசேர்த்ததாகவும், அதன்பின்னர் வந்த அலையால் அவர் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மொறட்டுவை-ஏகொடஉயன பகுதியை சேர்ந்த 23 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நீரில் மூழ்கிய குறித்த நபரின் காதலி பாணந்துரை பொது மருத்துவமனையில் சிக…

  23. வீடுபுகுந்து தாக்குதல்; நால்வர் கைது! யாழ்ப்பாணம் – நெடுந்தீவு 6ம் வட்டாரத்தில் வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் அங்கிருந்த உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள், கல்வேலிகள், நீர் பம்பி, மின்சார இணைப்புக்கள் என பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (04) இரவுவேளையே குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் நேற்று (05) காலையில் வீட்டு உரிமையாளர் அறிந்துள்ளார். வீட்டு உரிமையாளரால் நெடுந்தீவு பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வி…

  24. தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ் பொது நூலகம் தமிழர்களின் கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாழ் நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்கள், வார மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய காலம் அது. பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த எமது பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றிலும், கல்வியிலும் முக்கியம் வகிக்கும் யாழ் பொது நூலகம் பற்றி ஒரு நோக்கு.. நூலக வரலாறு இந்த நிறுவனத்துக்கான கருப்பொருள் க.மு. செல்லப்பா என்னும் ஆர்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.