Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தஞ்சையில் உள்ள ஈழப்போர் நினைவிடம் போல் முள்ளிவாய்க்காலிலும் நினைவிடம்- நினைவுகூரல் அறிக்கையில் மாவை தமிழ்நாட்டில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளமை போல், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டு அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுவதற்கு பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்தள்ள அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில், வரும் 18 ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்தில் (18.18.18) தமிழின விடுதலைக்கு வித்துடல் விதைத்த மக்களுக்காக கோயில்களில், வீடுகளில் அமைதியாக விளக்…

    • 2 replies
    • 572 views
  2. புதினம் பார்க்க...மக்கள் கூடினர். கூடவே சொறீலங்கா பொலிஸ் மற்றும் இராணுவம் போர்க்கால அடிப்படையில் ஆயுதங்களுடன் குவிப்பு. நன்றி: முகநூல்.

    • 35 replies
    • 3.8k views
  3. இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட வேண்டும் -மாவை சேனாதிராஜா முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்தள்ள அறிக்கையில் வரும் 18 ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்தில் தமிழின விடுதலைக்கு வித்துடல் விதைத்த மக்களுக்காக கோயில்களில், வீடுகளில் அமைதியாக விளக்கேற்றி அஞ்சலிப்போம் என அவர் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் தமிழ்நாட்டில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளமை போல், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டு அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுவதற்கு பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது த…

  4. மீட்பு நிவாரண பணிகளில் கடற்படையினர் சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும் நிவாரணப்பணிகளை முன்னெடுப்பதற்கும் இலங்கை கடற்படையின் பல பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மோசமான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளிற்காக கடற்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என கடற்படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. தென்மாகாணத்தில் தவளம, உடுகம,நாகொட பகுதிகளிலும் சப்பிரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரவிலும் கடற்படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது. துரித நடவடிக்கை மீட்பு பிரிவினரும்,விசேட படைப்பிரிவொன்றை சேர்ந்தவர்களும் நடவடிக்கையில் ஈடுபடுத…

  5. மே 18 தமிழர் வரலாற்றில் உச்சம் தொட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி – இன்றுடன் – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்று 11 வருடங்கள் நிறைவடைகின்றது. காலம்காலமாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்குள் ஈழத்தமிழினம் சிக்குண்டு பல்வேறு படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் . இத்தகைய இனப்படுகொலைகளின் உச்சம்தொட்டு ஈழத்தமிழர்கள் மிக மோசமாக 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேசம் பார்த்திருக்க முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட வலிநிறைந்த நினைவு நாளே இன்றாகும். மகாவம்ச மனநிலைகொண்ட, சிங்கள-பௌத்த பேரினவாத அரசால் இந்த நூற்றாண்டின் இன அழிப்பு ஈழத்தமிழர் தாயகத்தில் மிகக் கொடூரமான முறையில் நிகழ்த்தப்…

  6. யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றன. இந்நிலையில் சங்கானை, உரும்பிராய் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான நோயாளிகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகம…

  7. தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்களை புரிந்து கொள்ளாத ஒருவரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக பணியாற்றுவதாக அரசியல் கைதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். ஆயுதப் போராட்டம் குறித்த சுமந்திரனின் கருத்திற்கு கண்டனம் வெளியிடும் வகையில் அரசியல் கைதிகள் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், சுமந்திரனின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். இருப்பினும், தனது கருத்தானது திருவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சுமந்திரன் விளக்கமளித்திருந்தார். …

    • 0 replies
    • 480 views
  8. தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக சுமந்திரனோ அல்லது யாரோ கருத்துக்களை சொன்னாலோ அதனை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன் அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் கேட்ட கேள்விக்கே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/143316

  9. (செ.தேன்மொழி) கொரோனா வைரஸ் பரவலை வெற்றிக் கொண்டது போன்று, பொருளாதார யுத்தத்தையும் வெற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி நேரிடும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க, அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முயற்சிப்பதுடன், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பொருளாதார திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஐக்கிய தேசியக்க கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கமைய பெருந்தொகைய…

    • 2 replies
    • 975 views
  10. குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்விகளுக்கு நேர்மையாக சுமந்திரன் பதிலளித்துள்ளார் ; சம்பந்தன் அறிக்கை “பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் இந்த நாட்டு மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் எற்படுத்தும் நோக்கத்தோடும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். சுமந்திரனால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ நேர்காணல் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

    • 3 replies
    • 940 views
  11. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை பற்றி சமூக வலைத் தளங்கள் பரிகசித்து வருகின்றன. அதற்கு அவர் அளித்து வரும் பதில் மிகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. சஜித் பிரேமதாச கடுமையான ஆங்கிலச் சொற்களைத் தனது சமூகவலைத் தளங்களில் பிரயோகித்து வருவதாகவும், அது எளிய மக்களுக்கு மட்டுமல்ல இங்கிலாந்தின் மகாராணியாருக்கோ அல்லது அமெரிக்க ஜனாதிபதிக்கோ புரியுமோ தெரியாது எனவும், அவரைக் கேலி செய்து கடந்த வாரம் முதல் வலைத் தளங்களில் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இருப்பினும், இப்படியான ஒரு எதிர்வினையைப் பிரேமதாச எதிர்பார்த்திருந்ததாகவும், தனது ஆங்கில மொழிப்பிரயோகம் சாதாரண மக்களின் அறிவித்தளத்துக்கு அப்பாற்பட்டது எனத் தனக்குத் தெரியுமெனவும், அதன் பின்னால் ஒரு கார…

    • 0 replies
    • 397 views
  12. ஜே வி பி தூக்கினது என்ன பொல்லாங்கட்டையா.. அல்லது இரும்புக் கம்பியா..??! இதுக்கு தன்னிலை விளக்கம் என்ன சார்.. சும். !! நல்ல சமாளிப்புக்கேசன்.. சும் அங்கிள்.

    • 20 replies
    • 2.8k views
  13. ரிஷாட், ஹக்கீம் அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் சமூகத்தினரை தூண்டிவிடுகின்றனர் – மொஹமட் முஸம்மில் by : Benitlas கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடலை மாத்திரம் தகனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. தகனம் செய்யப்பட்ட உடல்களை கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முஸ்லிம் சமூகத்தினரை தூண்டிவிடுகின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…

    • 3 replies
    • 927 views
  14. குமுதினிப்படகு படுகொலை நினைவுகூர்வதற்கு மதகுருவுக்கு அச்சுறுத்தல் கெடுபிடி மத்தியில் ஏற்பாட்டுக்குழுவின் சிலருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. நெடுந்தீவு கடற்பரப்பில் 1985 ஆம் ஆண்டு இதே நாள் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்றால் கைதுசெய்யப்படுவீர்கள் என்று அந்தப் பகுதி பங்குத் தந்தைக்கு பொலிஸாரால் மிரட்டல் விடுக்கப்பட்டதால் நிகழ்விற்கு செல்லாது பங்குத்தந்தை திரும்பிச் சென்றுள்ளார். நெடுந்தீவு துறைமுகப்பகுதியில் குறித்த படுகொலை நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அந்தத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து ச…

    • 1 reply
    • 522 views
  15. இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போகலே தனது சான்றுகளை இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றார். கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார். இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என இரா. சம்பந்தன் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார். https://www.ibctamil.com/srilanka/80/143241

  16. கொரோனா வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு தொடர்பாக விசேட விசாரணைகளை ஆரம்பிக்க இலங்கை கணக்காய்வாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவுகளை வழங்கும் போது பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் கிடைக்க வேண்டியவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காத நிலையில், வேறு நபர்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த முறைகேடுகள் சம்பந்தமாக மக்களிடம் இருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள கணக்காய்வாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. முறைப்பாடுகளை செய்வோர் http://www.auditorgeneral.gov.lk/ என்ற இணையத்தளத…

    • 0 replies
    • 414 views
  17. எனது கொள்கைகளை பின்பற்றுங்கள் அல்லது உங்களால் முடியாது என தெரிவித்துவிட்டுபதவிவிலகுங்கள் – அரச அதிகாரிகளிற்கு ஜனாதிபதி கடும் உத்தரவு Rajeevan Arasaratnam May 15, 2020 எனது கொள்கைகளை பின்பற்றுங்கள் அல்லது உங்களால் முடியாது என தெரிவித்துவிட்டுபதவிவிலகுங்கள் – அரச அதிகாரிகளிற்கு ஜனாதிபதி கடும் உத்தரவு2020-05-15T06:32:34+00:00உள்ளூர் எனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துங்கள் அல்லது பதவிகளில் இருந்து விலகுங்கள் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரச அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார். வியாழக்கிழமை அரச அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தனது கொள்கைகளை பின்பற்றவேண்டும் அல்லது பதவி விலகவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …

    • 3 replies
    • 521 views
  18. அரசாங்கத்தின் பாரிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வதற்கான கொள்கைகள் நாட்டில் முன் வைக்கப்பட்டுள்ளதால், அவற்றை அடைந்து கொள்ளும் பயணத்தில் தர்க்க ரீதியற்ற சட்ட திட்டங்களை தடையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட, கைத்தொழில் துறைக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (14) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நடடன-பரளதரம-வழசசயடய-இடமளகக-மடயத/175-250286

    • 2 replies
    • 505 views
  19. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

  20. அரசாங்க ஊழியர்களின் மே மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள்.! ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஜெயசுந்தேரா அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் சில உள்ளடக்கங்கள் இங்கே.. நாட்டின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையையும் நாடுகளின் கடன் நிர்வாகத்தையும் குறைக்கும் முயற்சியில், மே மாதத்திற்கான சம்பளத்தை அல்லது அதன் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குமாறு அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கத்திற்கு குறைந்தது ரூ .100 பில்லியன் தேவைப்படுகிறது,” வெளிநா…

    • 15 replies
    • 1.9k views
  21. மங்கள சமரவீர CIDயில் முன்னிலை by : Dhackshala முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மங்கள-சமரவீர-cidயி…

    • 2 replies
    • 1k views
  22. நள்ளிரவில் நகை, பைசிக்கிள், போன் 10லட்சருபா கொள்ளை; காரைதீவில் சம்பவம்: மக்கள் அச்சத்தில் Bharati May 15, 2020 நள்ளிரவில் நகை, பைசிக்கிள், போன் 10லட்சருபா கொள்ளை; காரைதீவில் சம்பவம்: மக்கள் அச்சத்தில்2020-05-15T12:45:48+00:00உள்ளூர் காரைதீவு சகா நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை பைசிக்கிள் மற்றும் போன் உள்ளிட்ட சுமார் 10 லட்சருபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றுநள்ளிரவு காரைதீவில் இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காரைதீவு 9ஆம் பிரிவில் வசிக்கும் மனோகரன் பிரபாகரன் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. …

  23. உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அதிகளவில் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். அரசியல் புகலிடம் கோரி வெளிநாடு சென்றவர்கள், புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் உள்ளிட்டவர்களும் இவ்வாறு நாடு திரும்பியவர்களில் உள்ளடங்குகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 7ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்ப…

  24. அர்ப்பணிப்பு இல்லாமல் ஒருபோதும் தமிழர் உரிமையை பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். பொத்துவில் சொந்தக் காணியில் அமைக்கப்படும் செங்காமம் ஆலயத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்களால் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து அப் பிரதேசத்தின் றொட்டைக் கிராமத்திற்கு புதன்கிழமை(13) மாலை சென்றிருந்தார். இதன்போதே, இவ்வாறு தெரிவித்தார். இதன் போது விநாயகமூர்த்தி முரளிதரன் அங்குள்ள பொதுமக்களை நேரில் சென்று சந்தித்ததுடன் அங்கு பல வருட காலமாக அக்கிராமத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் ஒன்றான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில்…

  25. குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்படுகின்றனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர். அங்கு வந்த மூவர், இளைஞர்கள் இருவரையும் அச்சுறுத்தி அவர்களை துரத்திவிட்டு, சிறுமிகள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அதன் பின்னர் சிறுமிகள் இருவரையும் கட்டிவைத்துவிட்டு ஊரவர்களை அழைத்து பச்சை மட்டையால் தாக்கியுள்ளனர். சிறுமிகள் இருவரும் தமது நண்பர்களுடன் தகாத உறவில் இருந்தனர் என்று கூறி பொலிஸாருக்கு அந்த இளைஞர்கள் மூவரும் தக…

    • 1 reply
    • 756 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.