Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் – சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரத்தியேக சந்திப்பு ஆகியவை தொடர்பாக முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் குறித்து தமிழ் பத்திரிகைக்கு பதிலளிக்கையில் நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.ஆகவே எமது செயற்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அப்பால் அவைபற்றிய சரியான புரிதல் பொதுமக்களுக்கு உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள அத்தனை தமிழ் கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதையே பிர…

    • 6 replies
    • 776 views
  2. ஸ்ரீலங்காவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்வதால், மார்ச் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு மக்கள் தத்தம் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். சுமார் ஒரு மாதகாலமாக அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் பின்னர் பகுதி பகுதியாக முதலில் 6மணிநேரம் தளர்த்தப்பட்டு, பின்னர் மீண்டும் முழுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து தற்போது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்படுகின்றது. இந்நிலையிலேயே, நாளைய தினம் முதல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனவும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது கடமைகளை வழமை போன்று ஆரம்பி…

    • 2 replies
    • 1k views
  3. உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம்: இலாபம் தேடுவோருக்கு பதிலளிக்கமாட்டோம்- சம்பந்தன் தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய தரப்பினருடன் உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் இலாபங்களை அடைவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரத்தியேக சந்திப்பு ஆகியவை தொடர்பாக முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் குறித்து தமிழ் தேசிய பத்தி…

    • 7 replies
    • 958 views
  4. அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள முற்படுவது அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையை எடுத்துகாட்டுவதாக, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, அதனை ஜனாதிபதி செயலாளரின் தனிப்பட்ட கோரிக்கையாக கருத முடியாதென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார்அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தேர்தலை நடத்த அரசாங்கம் முற்படும் நிலையில் இவ்வாறு அரச ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை கேட்பது தேர்தலுக்கான செலவீனத்தை ஈடு செய்யவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்…

    • 13 replies
    • 1.9k views
  5. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீலங்காவிலும் அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில், அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் அன்று மாலை பிரதமர் மகிந்தவுடன் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் மீண்டும் தனிமையில் சந்தித்துப் பேசியிருந்தனர். இதன்போது பேசப்பட்டது என்ன? கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு என்ன? வடக்கு கிழக்கில் கொரோனா தொற்றின் நிலவரம் என்ன? இராணுவத்தின் பிரசன்னம் எந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் இருக்கின்றன. இதுபோன்ற பல தகவல்களை ஐபிசி இணையத்தளத்தோடு பக…

  6. (இராஜதுரை ஹஷான்) பௌத்த தர்மத்தை பாதுகாக்க அரசாங்கமாக உறுதியளித்த போதிலும் நாளை வெசாக் தினத்தை கொண்டாட முடியாத நிலை தோன்றியுள்ளது. வெசாக் தினம் சிங்கள மக்களுக்கானது மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களின் மதிப்பை பெற்ற தினமாகும். ஆகவே வெசாக் தினம் உலக விடுமுறை தினமாக கொண்டாடப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று பௌத்த மத தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றிய அவர், வெசாக் தினத்தில் இலட்சக்கணக்கான மக்கள் வழிபடுகளை மேற்கொள்ளும் தினமாகும். மேலும் நாடு முழுவதிலும் வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்டு தன்சல்கள் வழங்கப்படும். அதனால் வெசாக் தினத்த…

    • 10 replies
    • 1.1k views
  7. நாளை முதல் பொதுமக்கள் வீதிகளில் ஒன்றுகூட அனுமதிக்க போவதில்லை – இராணுவ தளபதி அனைத்து மாவட்டங்களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கட்டுப்பாடுடன் திறப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அடையாள அட்டையை பயன்படுத்தும் விதம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரகாரம் செல்லுமாறும் அதிகளவில் பொதுமக்கள் வீதிகளில் ஒன்றுகூட அனுமதிக்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். அரச தனியார…

    • 3 replies
    • 455 views
  8. பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டாவிட்டால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சுமந்திரன் கடந்தவாரம் வீரவசனம் பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தினார். …

  9. Editorial / 2020 மே 03 , பி.ப. 04:18 - 0 - 57 கனகராசா சரவணன், எஸ்.சபேசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி, கசிப்புத் தயாரிப்பு - விற்பனை, கஞ்சா, ஹெரோய்ன் போதைப்பொருள் பாவனை, மணல் அகழ்வு, மரக் கடத்தல், கால்நடைகள் கடத்தல், திருட்டுகள் என பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கும் பொலிஸார், அவற்றைத் தடுக்கும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய, கசிப்பு, கஞ்சா, ஹெரோய்னுடன், வெள்ளிக்கிழமை (01) காலை 6 மணி தொடக்கம் நேற்று (02) காலை 6 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர், களு…

    • 16 replies
    • 1.6k views
  10. த.தே.கூட்டமைப்பினர் மற்றவர்களைப் போல் அரசியல் சராணாகதி அடைந்தவர்கள் அல்லர்- சிவமோகன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மற்றவர்களைப் போல் அரசியல் சரணாகதி அடைந்தவர்கள் அல்லர் என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திகலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக அரசாங்கத்துடன் அண்மையில் சந்திப்பொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டிருந்தது. அதனை சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்திருக்கும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலத்திற்கு காலம் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்து தனது சேவையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகிறது. …

    • 7 replies
    • 1k views
  11. அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம்! நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்காக அரச, தனியார் சேவைகளுக்கு செல்லும் பிரிவினருக்கு மாத்திரம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். http://athavannews.com/அடுத்த-இரண்டு-வாரங்களுக்/

  12. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது அவற்றை எவ்வாறு பாதுகாப்பது – விசேட சுற்றறிக்கை கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கு மத்தியில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு முடிவு என்னும் எடுக்கப்படவில்லை கல்வி அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கபட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான வழிமுறைகளுடன் கூடிய ஒரு சுற்றறிக்கை நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது. குறித்த சுற்றறிக்கையில் கிருமி நீக்கம், மாணவர்களுக்கு நீர் வழங்க பயன்படும் நீர் குழாய் இணைப்புகள் மற்றும் ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த வழிமுறைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப…

  13. புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய. “பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.” – இப்படிக் கூறியுள்ளார் மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல. ‘கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றாத காரணத்தாலேயே நாட்டு மக்கள் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…

    • 26 replies
    • 3.9k views
  14. (நா.தனுஜா) நாட்டில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் மிகவும் அருவருக்கத்தக்கவை என்பதுடன்இ கௌதம புத்தரின் உன்னத போதனைகளுக்கும் முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: எமது சமூகத்தில் தொடக்க நிலையிலுள்ள இனவாதமானது எமது தாய்நாட்டின் மக்கள் மத்தியில் இன, மத, சமூகப்பிரிவினைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இது எமது தேசிய நலனுக்கு எதிரானதும்இ அதற்குக் குந்தகம் விளைவிப்பதும் ஆகும். மனிதத் தன்மைக்கும், உயர் மனித விழுமியங்களுக்கும் கூட அது எதிரானது. எமது முஸ்லிம் சகோதரர்கள…

    • 2 replies
    • 467 views
  15. அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷ இரட்டை பிரஜா உரிமை கொண்டிருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய கோரி, அதற்காக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http…

    • 7 replies
    • 912 views
  16. தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் முன் வைக்கப்ப்டும் விமர்சனங்களின் பின்னணி என்ன?

    • 1 reply
    • 442 views
  17. விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிப்பு இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களின் விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்சமயம் இலங்கைக்கு வந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடிக்காலம் மே 12 முதல் ஜூன் 11 வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது அவை வருமாறு, http://athavannews.com/விசாவின்-செல்லுபடியாகும/

    • 1 reply
    • 500 views
  18. (செ.தேன்மொழி) கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகு தேவையான முதற்கட்ட செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் பெற்றுக் கொடுக்குமாறு முன்னாள் இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரால் (ஓய்வு) சுமித் அத்தபத்து தெரிவித்தார். எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலுமத் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் முன்அனடுத்துவரும் செயற்பாடுகளில் இராணுவத்தினர் முன்னின்று செயற்பட்டு வருகின்றனர். அதனால் பெரும்பாளான இராணுவத்தினர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியும் உள்ளனர். நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக செயற்பட்டு வரும் இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டியது…

    • 2 replies
    • 472 views
  19. In இலங்கை May 9, 2020 3:28 am GMT 0 Comments 1071 by : Benitlas இலங்கைக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே மருந்து பொருட்களுடன் நேற்று(வெள்ளிக்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தனது கடமையை பொறுப்பேற்க முடியாத நிலையில் காணப்பட்ட புதிய தூதுவர் இந்தியாவிலிருந்து 12.5 தொன் மருந்துப்பொருட்களுடன் இலங்கை வந்த விமானப்படை விமானத்தில் இலங்கையினை வந்தடைந்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளராகவும் இந்திய பிரதமர் அலுவலகத்திலும் பணியாற்றிய பாக்லே கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டார். இந்நி…

  20. வட-கிழக்கில் வீட்டுத் தோட்டம் | செல்வின் இரெனூஸுடன் ஒரு உரையாடல் இலங்கையின் வட-கிழக்கில் வீட்டுத் தோட்ட முயற்சிகள் பற்றி, அதனை முன்னெடுத்துவரும் அமைப்புக்களில் ஒன்றான வட-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவத்தின் (North East Economic Development Centre (NEED)) பணிப்பாளரும், ஒருங்கிணைப்பாளருமான செல்வின் இரெனூஸ் மரியாம்பிள்ளை அவர்களுடன் சிறப்பு நேர்காணல். செல்வின் பற்றி.. செல்வின் இரென்யூஸ் மரியாம்பிள்ளை வட-கிழக்கு அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான செல்வின், தேசிய மற்றும், சர்வதேச பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், சமூகவியல், பொருளியல், வணிக நிர்வாகம், அபிவிருத்தி, சமாதானம் மற்றும் முரண் தவிர்ப்பு துறைகளில்,…

    • 0 replies
    • 773 views
  21. இலங்கையில் அரச அதிகாரிகள் ஒரு மாத சம்பளத்தினை எடுக்காமல் உதவ வேண்டுமாம்

    • 1 reply
    • 523 views
  22. கண்டி மஹய்யாவ பள்ளிவாசலுக்குச் சொந்தமான இறைச்சிக் கடையில் போயா தினத்தன்று, இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைச்சி விற்பனை இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த பௌத்த பிக்கு ஒருவர் இந்த விடயம் தொடர்பில் கண்டி பொலிஸாக்கு வழங்கிய தகவலுக்கு அமைய இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொரோனா தொற்றையடுத்து நாட்டில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமைவரை ஸ்ரீலங்காவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதோடு, பௌத்தர்களின் முக்கிய தினமாக கருதப்படும் வெசாக் போயா தினம் நேற்றாகும். ஸ்ரீலங்காவில் பொதுவாக போயா தினங்களில் இறைச்சிக் கடைகளை திறப்பது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை …

    • 1 reply
    • 519 views
  23. இரண்டு மாதங்களின் பின்னர் வழமைக்குத் திரும்பும் யாழ்ப்பாணம்! யாழ்ப்பாணம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ். மாவட்டம் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது. அனைத்து செயற்பாடுகளும் வழமைபோன்று இடம்பெறும். எனினும், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய ப…

    • 1 reply
    • 472 views
  24. யாழில் வீடு புகுந்து தாக்குதல் – இராணுவத்தினரின் அடையாளமிடப்பட்ட தொப்பி மற்றும் தொலைபேசி மீட்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியில் நேற்று இரவு வீடுகளுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி அடாவடியில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்தில் வயோதிப பெண்உட்பட பலர் காயமடைந்துள்ளனர், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியது இராணுவத்தினர் என்றும், அவர்கள் இராணுவ இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் கையடக்க தொலைபேசியை கைவிட்டு சென்றுள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த வயோதிப பெண் சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில்…

  25. வடக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுமக்களினால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் நாளைமறுதினம் மே 11ஆம் திகதி முதல் நாட்டின் பொருளாதாரத்தினையும் மக்களின் வாழ்வாதரத்தினையும் மேம்படுத்தும் நோக்குடன் ஊரடங்குசட்டம் உள்ளிட்ட பலகட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.நாட்டில் கோரோனா பரம்பல் அபாயம் நீங்கிவிடவில்லை என்பதனை பொதுமக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். எனவே மக்களை மிகவும் விழிப்புடனும் அவதானத்துடனும் பின்வரும் நடைமுறைகளினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வின்போது பொதுமக்களினால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வெளியிட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.