ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
யாழில் மேலும் 6 பேருக்கு பரிசோதனை: 50 பேருக்கு தொற்று இல்லையென்பது உறுதி! by : Litharsan யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்கு தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனிடையே, கொரோனோ வைரஸ் அறிகுறி சந்தேகத்தில் நேற்று 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்குத் தொற்று இல்லை எனபது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற கொரோனோ தொற்றுநோய் சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்…
-
- 0 replies
- 306 views
-
-
கொழும்பில் சிக்கியுள்ள மலையகம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகள்- ஜனகன் முக்கிய கோரிக்கை! by : Litharsan மலையகத்திலிருந்தும் வடக்கு கிழக்கில் இருந்தும் வந்து, கொழும்பில் தொழில் நிமிர்த்தமாகத் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நிர்க்கதி நிலையில் இருக்கின்றனர் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமையால், கொழும்பில் தங்கியிருக்கும் இந்த இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்ற நிலையில் இவர்களுக்கான உடனடி நிவாரணத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை…
-
- 0 replies
- 293 views
-
-
யாழ் மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அந்த நோய் பச்சிலைப் பள்ளிப் பிரதேசத்துக்கும் பரவாமால் தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அச்ச சூழ்நிலை முடிவடையும் வரை பச்சிலைப்பளிப் பிரதேசத்துக்குள் வருவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என பிரதேச செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார்.பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கமநல சேவைகள் நிலையப் பெரும்பாக அலுவலர், சுகாதார மருத்துவ அதிகாரி, பண…
-
- 0 replies
- 240 views
-
-
ஊரடங்கு சட்டத்தினை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி பிரயோகம் – மூவர் காயம்! பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்த கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டதையும் மீறி பயணித்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த காரில் 4 பேர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/ஊரடங்கு-சட்டத்தினை-மீறி/
-
- 1 reply
- 599 views
-
-
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எனக் கூறி நிதி திரட்டு – அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எனக் கூறி நிதி சேகரிக்கும் சில நிகழ்வுகள் குறித்த தகவல்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதியத்திற்கு நேரடியாக பணம் மூலமாகவோ காசோலைகள் மூலமோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேறு வழிகளின் ஊடாக பங்களிப்பதை தவிர வேறு எவறுக்கும் அல்லது நிறுவனத்திற்கும் நிதியை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசாங்கம் “சுகாதார நோய்த்தடுப்புக்காக” அனைத்து மக்க…
-
- 0 replies
- 398 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடளாவிய ரீியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் அத்தே கலகொட ஞானசார தேரர் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார். அந்தவகையில் முஸ்லிம் குடும்பத் தலைவிகளுக்கு உலருணவுப் பொருட்களை அவர் வழங்கிவைத்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140421
-
- 4 replies
- 582 views
-
-
1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயை இழந்தது ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் சுமார் 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தினை இழந்துள்ளதாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரெஹான் லக்கானி தெரிவிக்கையில், சீனாவில் ஊற்றெடுத்த கொரோனா வைரஸ் மேற்குலகத்தினையும் மோசமாக பாதித்துள்ளது. இதனால் இலங்கை ஆடை ஏற்றுமதித்துறையானது மிகுந்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளது. குறிப்பாக மார்ச் முதல் எதிர்வரும் ஜூன் வரையில் எமக்கு வருமானமாக கிடைக்கவிருந்த 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் முழுமையாக சீர்குலைந்துள்ளது. இதனைவிடவும் தற்போதைய நிலையில் 200 முதல் 500பில்லின் அமெரிக்க டொல…
-
- 3 replies
- 478 views
-
-
இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்றுக் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளர். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவத் துறையினருடன் தொடர்புகொண்டு ஜனாஸா எரியூட்டப்படுவதைத் தடுப்பதற்…
-
- 25 replies
- 2.1k views
-
-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. தேவார முதலிகளில் முதல்வரான திருஞானசம்பந்தரால் கோணமாமலை அமர்ந்தார் என போற்றிப் பாடப்பட்ட திருக்கோணேஸ்வரர் ஆலயம் வரலாற்று தொன்மைமிக்கதாகும். கிழக்கின் அடையாளச்சின்னமாக விளங்கும் இந்த பாரம்பரிய திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குனி உத்தரமான எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தது. எனினும்,கொரோனா தொற்று அச்சத்தால் மக்களின் நலன் கருதி திருவிழாவை இந்த வருடம் ஒத்திவைக்க நம்பிக்கை ப…
-
- 0 replies
- 335 views
-
-
மிருசுவில் படுகொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி! by : Jeyachandran Vithushan மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி யாழ். மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, 8 அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நா…
-
- 41 replies
- 3.5k views
-
-
கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்றாவது நபரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது. மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலமே இன்று(வியாழக்கிழமை) இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லேரியா பகுதியிலுள்ள கொட்டிகாவத்தை மயானத்தில் அவரது சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது. http://athavannews.com/கொரோனாவினால்-உயிரிழந்த-ம/
-
- 3 replies
- 584 views
-
-
மலையகத்திலிருந்து வந்து, கொழும்பில் தொழில் நிமிர்த்தமாகத் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நிர்க்கதி நிலையில் இருக்கின்றனர். ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமலில் உள்ளமையால், கொழும்பில் தங்கியிருக்கும் மலையக இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கான உடனடி நிவாரணத்தை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன், வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கொழும்பில் பணி நிமிர்த்தமாகத் தங்கியுள்ள மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்,…
-
- 0 replies
- 271 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகே ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்திற்காக ஊரடங்குச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பில் இந்து ஆலயங்கள் பலவற்றால் வருமானத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் வருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாக சபை பல இலட்சம் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை இன்று (வியா…
-
- 1 reply
- 433 views
-
-
தற்கொலைதாரிகளுக்கு உதவிய இருவர் கைது Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 05:24 - 0 - 46 கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொதட்டுவ மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து இவர்கள் இன்று (02) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். சினமன் கிரேண்ட் ஹோட்டல் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபருக்கு உதவிய நபர் கொதட்டுவ பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய…
-
- 0 replies
- 410 views
-
-
யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாழ்ப்பாணம், அரியாலையில் அமைந்துள்ள தேவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற ஆராதனையை நடத்திய சுவிஸிலிருந்து வருகை தந்திருந்த மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 20 பேரை காங்கேசன்துறையிலுள்ள ஓர் தனிமைப்படுத்தல் மையத்தில் கடந்த 23 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தோம். இவர்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கான எந்தவொரு அறிகுறிகளும் இதுவரை தமக்க…
-
- 0 replies
- 683 views
-
-
எமது பாதுகாப்பையும் சமூகத்தின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு அனைவரும் தனித்திருக்க வேண்டும் என மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “எங்களை ஊரடங்குச் சட்டம் ஊடாகவும், அறிவுறுத்தல்கள் வழியாகவும் வீட்டிலே இருக்குமாறு தெரிவிப்பதை நாங்கள் செவிமடுக்கின்றோம். அதற்கு எமது ஒத்துழைப்பைக் கொடுப்போம். நாங்கள் தனித்திருப்பதும் எங்களை நாங்கள் பாதுகாப்புடன் வைத்திருப்பதும் மிகவும் அவசியமாக உள்ளது. ஒருவரினுடைய தவறினாலே பலபேருக்கு தொற்றக் கூடியது இந்த வைரஸ். ஆகையால்தான்…
-
- 0 replies
- 281 views
-
-
மினுவாங்கொடையில் மறைந்திருந்த 31 வெளிநாட்டவர்கள் சிக்கினர் கனகராசா சரவணன் மினுவாங்கொடை, நில்பனாவ பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த வெளிநாட்டுப் பிரைஜகள் 31 பேரை, இன்று (02) கண்டுபிடித்துள்ளதாக, மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீட்டை, பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்திய போது, அங்கு ஒளிந்திருந்த நேபாளம் நாட்டுப் பிரஜைகள் 30 பேரும் இந்தியப் பிரஜை ஒருவரும் உட்பட 31 பேரைக் கண்டுபிடித்துள்ளனர். குறித்த வெளிநாட்டவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தும் முகாங்கள…
-
- 0 replies
- 358 views
-
-
(எம்.மனோசித்ரா) தமது பாதுகாப்பிற்கான அடிப்படை வசதிகள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு வழங்கப்படாவிட்டால் இம் மாதம் 04 ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 ஒழிப்பு தொடர்பான அனைத்து சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜீ.யு.ரோஹனவினால் இது தொடர்பில் நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சின் செயலாருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி கால வரையரையின்றி தமது க…
-
- 0 replies
- 226 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் நேற்றைய தினம் (30) விளக்கு வைத்து பண்டமெடுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. புளியம்பொக்கணையில் இருந்து மீசாலை புத்தூர் சந்திக்கு மாட்டு வண்டில்களில் பண்டம் எடுத்து செல்வது வழமை ஆயினும் இந்த ஆண்டு நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக புளியம்பொக்கணை கற்பக விநாயகர் ஆலத்திற்கே கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/புளியம்பொக்கணை-நாகதம்பி/ இந்த நேரத்திலுமா? 🙄
-
- 6 replies
- 975 views
-
-
சிங்கபூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுக்குள்ளாd குறித்த இலங்கையர் மூவரும் 33,37 மற்றும் 44 வயதுடையவர்கள் என சிங்கபூர் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/79120
-
- 0 replies
- 265 views
-
-
கொரோனா அச்சுறுத்தல் – திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. தேவார முதலிகளில் முதல்வரான திருஞானசம்பந்தரால் கோணமாமலை அமர்ந்தார் என போற்றிப் பாடப்பட்ட திருக்கோணேஸ்வரர் ஆலயம் வரலாற்று தொன்மைமிக்கதாகும். கிழக்கின் அடையாளச்சின்னமாக விளங்கும் இந்த பாரம்பரிய திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குனி உத்தரமான எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தது. எனினும்,கொரோனா தொற்று அச்சத்தால் …
-
- 1 reply
- 285 views
-
-
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்! by : Litharsan மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுப் பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த கஜபா அணியைச் சேர்ந்த சுனில் ரத்னநாயக்க என்னும் இராணுவச் சிப்பாய் அண்மையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமன்னிப்பு அளித்து விடுத…
-
- 2 replies
- 730 views
-
-
யாழ். மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை! யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே இந்த வைரஸின் தீவிரத்தன்மையை யாழ்.மக்கள் உணர்ந்து ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதால் …
-
- 1 reply
- 266 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையான களுபோவில வைத்தியசாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றின் இரு சிகிச்சை அறைகள் சீல் வைக்கப்பட்டு, அந்த இரு அறைகளிலும் இருந்த நோயாளர்கள், தாதிகள் உள்ளிட்ட பணிக்குழுவினர், வைத்தியர்கள் என அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் 2 ஆம் மரணமாக பதிவான கொரோனா தொற்றாளர் மற்றும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட கொழும்பு 6 ஐச் சேர்ந்த தொற்றாளர் ஆகியோரின் நடவடிக்கை காரணமாக இந்தநிலைமை ஏற்பட்டதாக அவ்விரு வைத்தியசாலைகளினதும் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். இதனிடையே வெள்ளவத்தை பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிப தம்பதியினர் கண்டறியப்பட்டுள்ளத…
-
- 3 replies
- 880 views
-
-
தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. …
-
- 51 replies
- 3.8k views
-