ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143667 topics in this forum
-
வவுனியா பொலிஸாருக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன! வவுனியாவில் கொரொனோ வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸாருக்கு பாதுகாப்பு அங்கிகள் மற்றும் தெளிகருவிகள் இன்று(புதன்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன. கொரோனோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா நகரில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸாரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே அவர்களிற்கான பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. குறித்த பொருட்கள் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவால் இன்று காலை வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்…
-
- 0 replies
- 244 views
-
-
முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயம் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் – பிரதேச மக்கள் எதிர்ப்பு முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயத்தை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கு எதிராக பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் வருகை தந்து முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது பிரதேச மக்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அங்கு இராணுவ உயர் அதிகாரிகளும் பொலிஸாரும் இங்கு வருகைதந்து மக்களுடன் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பினை வேளியிட்டனர் அதன் பின் 14 நாட்களுக்கு மாத்திரம் அனுமதிக்குமாறு இராணுவத்தினர் கோரினர். பொதுமக்களின் முழுமையான சம…
-
- 0 replies
- 436 views
-
-
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஏன்? கைது செய்யவில்லையென என்பதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விளக்கமளித்துள்ளார். இவ்விடயம் குறித்து பலரும் தன்னிடம் வினவுவதாக, தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள, முன்னாள் எம்.பி உதய கம்மன்பில, அரசமைப்பின் 35(1) பிரிவின் பிரகாரம் அவர் தப்பித்துகொள்கிறார் என குறிப்பிட்டு பதிலளித்துள்ளார். அரசமைப்பின் 35(1)ஆம் பிரிவின் பிரகாரம், எவரேனுமாள் ஜனாதிபதி என்ற பதவியை வகிக்கின்றபோது, அவரது பதவி முறையில், அல்லது தனிப்பட்ட முறையில் செய்யப்பட்ட அல்லது செய்யாது விடப்பட்ட எவ்விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி…
-
- 8 replies
- 1.1k views
-
-
நியமனங்களை உறுதிப்படுத்துவதுடன் கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டும்: விஜயகலா Bharati April 29, 2020 நியமனங்களை உறுதிப்படுத்துவதுடன் கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டும்: விஜயகலா2020-04-29T08:47:37+00:00உள்ளூர் கொரோனா தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் எமது அரசாங்க காலத்தில் நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய சம்பளங்களை வழங்க வேண்டும். அத்துடன் செயற்றிட்ட உதவியாளர்களுக்கான நியமனத்தை உறுதிசெய்து அவர்களுக்கும் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெ…
-
- 0 replies
- 348 views
-
-
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை: செயலாளர் ஸ்டாலின் விளக்கம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் தரப்புகளை ஒரு கூட்டாக ஒன்றினைத்து பொதுச் சின்னமொன்றில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அந்த முயற்சி வெற்றியளிக்காத காரணத்தினால் கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக எவரும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் போட்டியிடவில்லை என்று அதன் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு போட்டியிடாத நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஈபிடிபி தனித்து போட்டியிடுவது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக…
-
- 0 replies
- 361 views
-
-
மதச் சபையினர் மீது விசாரணை வேண்டும்; கோருகிறார் சச்சி வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் – அரியாலையில் உள்ள பிலதெல்பியா ஆலயத்திற்கு முன்னால் இன்று (28) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்தச் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிலதெல்பியா சபையானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் அனு…
-
- 1 reply
- 357 views
-
-
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு பொலிஸாரால் குறித்தவீடு சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தினர். அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். இதன்போது அங்கிர…
-
- 44 replies
- 4.2k views
-
-
சித்தியடைந்தும் தற்கொலை செய்த மாணவி! முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கற்று வந்த சந்திரன் கம்ஷிகா (17-வயது) எனும் பாடசாலை மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (27) வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்று தனது பாடசாலை ரீதியில் 3ம் இடத்தை பிடித்திருந்த நிலையிலேயே தான் எதிர்பார்த்தது போல் 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாழ்த்து சொல்வதற்கு அவரது பாடசாலை ஆசிரியர்கள் அழைப்பெ…
-
- 11 replies
- 1.4k views
-
-
முன்னணி உறுப்பினர் செந்தூரனை காணவில்லை; மோ.சைக்கிள் மீட்பு! வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் இன்று (24) இரவு சற்றுமுன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, தொண்டமனாறு, மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்…
-
- 13 replies
- 1.8k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறுதொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த பிரதான பயங்கரவாதியான மொஹம்மட் சஹ்ரானின் பயிற்சி முகம் ஒன்று, தாக்குதல் நடாத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் திருகோணமலை - மூதூர் பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ளது. சஹ்ரானின் பிரதான சகாவாக கருதப்படும், மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு மற்றும் வனாத்துவில்லு ஆயுத களஞ்சிய விவகாரத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும், மாவனெல்லையைச் சேர்ந்தமொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் எனும்நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, குறித்த சந்தேக நபரை மூதூர் பகுதிக்கு அழைத்து சென்றுஅந்த இடத்தைகண்டுபிடித்துள்ளதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கையின் கொவிட் 19 வைரஸ் நோய் தொடர்பாக தகவல்களை வெளிப்படுத்தும் www.covid19.gov.lk இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ICTA மூலம் இந்த இணையத்தளம் செயற்படுத்தப்படுகின்றது. கொவிட் 19 தொடர்பாக இலங்கையின் தகவல்களை ஒரே மேடையில் முன்னெடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் மூலம் ஜனாதிபதி செயலகம், சுகாதார மேம்பாட்டு அலுவலகம், கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், அரசாங்க தகவல் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு ஆகிய நிறுவனங்களின் மூலம் பெறப்படும் தகவல்கள் இதில் உள்ளடக்கப…
-
- 0 replies
- 454 views
-
-
-
- 12 replies
- 1.7k views
-
-
ஆயிரம் சடலப் பைகள் விவகாரம்; முற்றாக மறுக்கிறது அரசு! ஐசிஆர்சியிடம் ஆயிரம் சடலப் பைகள் (Body Bags) கோரப்பட்டது, கொரோனாவினால் அதிகளவு மரணம் ஏற்படும் என்பதாலல்ல என்று சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் அதிக மரணங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை. சுகாதார அமைச்சு எப்போதும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சடலப் பைகள் உட்பட குறிப்பிட்ட அளவிலான மருத்துவ பொருட்களை தேக்கி வைத்திருக்கும. இது ஒரு கட்டாய தேவை. அதே போல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் சுகாதார அமைச்சுக்க…
-
- 3 replies
- 970 views
-
-
(எம்.மனோசித்ரா) தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்காக பாடசாலைகள் கேட்டு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை. அனைத்து வீரர்களும் முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ள இந்நிலையில் சுகாதாரத்துறையினரால் வலியுறுத்தப்படுகின்ற சமூக இடைவெளியைப் பேணுவதில் சிக்கல் ஏற்படும் என்பதன் காரணமாக பாதுகாப்புபடையினர் தங்கக் கூடிய முகாம்களை அமைப்பதற்கே சில சிறிய பாடசாலைகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் கோரப்பட்டுள்ளமையானது தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதாக போலிப்பிரசாரங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றமை தொடர்பில் விளக்கமளிக்…
-
- 2 replies
- 608 views
-
-
தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியில் செல்ல முடியும் – க.மகேசன் யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளிச்செல்ல முடியும் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) தேசிய அடையாள அட்டையின் 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் மட்டுமே வெளிவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்.மாவட்டத்தில் இன்று ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு வருகிறது. அத்தியாவசியமற்ற சேவையில் ஈடுபடுபவர்…
-
- 1 reply
- 810 views
-
-
பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள்- இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்! by : Litharsan அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தென்னிலங்கையில் பாடசாலைகள் சிலவற்றை இராணுவத்தினர் சில தேவைகளுக்கு இதற்கு முன்னர் பயன்படுத்தியிருந்தாலும்கூட தற்போது கொரோனா நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினர் தங்கவைக்கப்படுவதை எதிர்த்து கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை போன்ற கல்வி நிறுவனங்களைச் …
-
- 2 replies
- 441 views
-
-
கொரோனா வைரஸ்: இலங்கையில் காணப்படும் செந்நிற வானம் - காரணம் என்ன? இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் பின்னணியில், இயற்கை தூய்மையாகி வருகின்றமையை எண்ணி பலரும் மகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர். தமது வீடுகளில் ஒரு மாதத்திற்கு மேல் முடங்கியிருந்த பலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது வெளியில் சென்ற நிலையில், இயற்கையை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.வீதியோரங்களில் இதுவரை பூக்காத மரங்கள் பூத்து குலுங்குவதை அவதானிக்க முடிகின்றது. புற்கள் அழகாக வளர்ந்து தூய்மையாக இருப்பதை காண முடிகின்றது. வீதிகள் தூசியின்றி தூய்மையாக இருப்பதை பார்க்க முடிகின்றது.தமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத பல இயற்கை சுவாரஸ்யங்களை தற்போது காண முடிகின்…
-
- 2 replies
- 472 views
-
-
எம்.பஹ்த் ஜுனைட்) காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்ற வேண்டிய எந்த அடிப்படை தேவையோ,அவசியமோ அரசாங்கத்திற்கு கிடையாது. நான் அதிகாரத்தில் இருந்திருந்தால் எந்தவொரு சூழலிலும் அதிகாரிகள் காத்தான்குடி தள வைத்தியசாலை விடயத்தில் சிபாரிசு கூட செய்திருக்கமாட்டார்கள். என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கும் போது. காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டமைக்கு எமக்கு உடன்பாடு இல்லை எம்மால் அனுமதிக்கவும் முடியாது. கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் இருக்கும் போது காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமா…
-
- 1 reply
- 361 views
-
-
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடவில்லை; செயலாளர் ஸ்டாலின் விளக்கம் Bharati April 28, 2020 கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடவில்லை; செயலாளர் ஸ்டாலின் விளக்கம்2020-04-28T14:33:46+00:00உள்ளூர் கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் தரப்புகளை ஒரு கூட்டாக ஒன்றினைத்து பொதுச் சின்னமொன்றில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அந்த முயற்சி வெற்றியளிக்காத காரணத்தினால் கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக எவரும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் போட்டியிடவில்லை என்று அதன் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு போட்டியிடாத நிலையில…
-
- 0 replies
- 362 views
-
-
யாழ். மாநகர சபை அமர்வு: தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி வெளிநடப்பு by : Litharsan யாழ். மாநகர சபையின் அமர்வு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. மாநகர சபையில் உள்ள சபை மண்டபத்தில் சமூக இடைவெளியைப் பேணி கூட்டத்தினை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமர்வு இடம்பெற்றுள்ளது. கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, அதிகாரம் இல்லாத குறித்த கூட்டத்தில் தாங்கள் இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி , ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ள…
-
- 0 replies
- 327 views
-
-
சமூக ஊடகத் தவல்களுக்காக இடம்பெறும் கைதுகள்: மனித உரிமை ஆணைக்குழு கவலை Bharati April 28, 2020 சமூக ஊடகத் தவல்களுக்காக இடம்பெறும் கைதுகள்: மனித உரிமை ஆணைக்குழு கவலை2020-04-28T08:51:29+00:00Breaking news, உள்ளூர் இலங்கையில் கொவிட் 19 பரவல் காணப்படும் சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் பலர் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ணவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. குறிப்பிட்ட கடிதத்தில் ஆணைக்குழு தனது கரிசனைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச…
-
- 0 replies
- 297 views
-
-
இராணுவ முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஜனாதிபதி செயலணி முப்படை முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முற்பகல் நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் வழிகாட்டலுடன் இராணுவ முகாம்களில் முழுமையான சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்து, அதனை நடைமுறைப்படுத்தும், கண்காணிக்கும் பொறுப்பு புதிய ஜனாதிபதி செயலணியொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 371 views
-
-
கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதி முடக்கப்பட்டு 62 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் இலங்கை விமானப்படையிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். விமானப்படையின் இசை வாத்தியப் பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக, விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வௌியிட்டுள்ள அவர், “அவருடன் தொடர்புகளில் இருந்த 62 விமானப்படை வீர வீராங்கனைகள், கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப…
-
- 0 replies
- 224 views
-
-
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படையினரிடம் ஒப்படைப்பு யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்ட நிலையில் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் வீடு திரும்பினர். இந்த நிலையில் அங்கு முப்படையினரைத் தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. விடுவிப்பில் வீடு திரும்பிய நிலையில் உள்ள படையினரை மீளவும் கடமைக்குத் திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தன…
-
- 3 replies
- 753 views
-
-
பேராபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்- சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு by : Litharsan சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “நாடளாவிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸின் பரவலால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். …
-
- 2 replies
- 461 views
-