ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
மணிவண்ணனை பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு March 3, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு எதிர் மனுதாரரின் சமர்ப்பணத்துக்காக வரும் மார்ச் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இந்த மனு இன்று மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார். எதிர் மனுதாரரான யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர…
-
- 1 reply
- 260 views
-
-
மட்டக்களப்பு மணலை சில அரசியல்வாதிகளின் பெயரைக் கூறி தென் பகுதியினர் சூறையாடிச் செல்கின்றனர். இதற்கு எதிராக இன்று (04) தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார். மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினரால் இது தொடர்பாக விளக்குவதற்கான ஊடகவியலாளர்களின் சந்திப்பு ஒன்று நேற்று அவ்வமைப்பின் பணிமனையில் இடம் பெற்றது. இந்த மாவட்டத்திலிருந்து மணலை ஏற்றிச் செல்ல வேண்டாம். எமது மண்ணை கொள்ளையடிக்க வேண்டாம். ஆற்று படுகைகள் தோண்டப்படும் போதும் அந்த மண் ஏற்றிச் செல்லப்படும் போதும் ஆற்றின் நீர் வயல் நிலங்களுக்குள்ளும் கிராம…
-
- 1 reply
- 469 views
-
-
தொலைபேசி சின்னத்தில் களமிறங்குகின்றது சஜித் அணி! நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி தீர்மானித்துள்ளது. கூட்டணியின் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அண்மைக்காலமாகவே ஐக்கிய தேசிய கட்சிக்குள் ரணில் அணி மற்றும் சஜித் அணி என இரண்டு அணிகள் செயற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தொலைபேசி-சின்னத்தில்-களம/
-
- 2 replies
- 887 views
-
-
கூட்டமைப்பு மீண்டும் மக்கள் ஆணையை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஷ்! by : Jeyachandran Vithushan கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோருவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமை…
-
- 0 replies
- 249 views
-
-
சஜித் பிரேமதாசவின் கருத்து கடந்த ஆட்சியின் தவறை மறைக்கும் முயற்சி – அமைச்சர் டக்ளஸ்! by : Jeyachandran Vithushan சஜித் பிரேமதாச தமது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயத்தின் உண்மையை மறைத்து தற்போதைய அரசாங்கத்தின் மீது பழியை சுமத்த முயற்சிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடிப் கலங்களின் செயற்பாடு காரணமாக தொழில்துறை பாதிக்கப்படுவதாக தெரிவித்து டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தின் முன்பாக அகில இலங்கை பல நாள் கலங்களின் உரிமையாளர்களினால் நேற்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் குறித்த இடத்திற்கு சென்று, வழங்கிய வாக்குறுதிக்கு அமைய சம்மந்தப்பட்ட தரப்புக்…
-
- 0 replies
- 229 views
-
-
பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம் இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது. தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக காலி, பதுளை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே மாற்றம் எற்பட்டுள்ளது. கடந்த பொது தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இம…
-
- 0 replies
- 288 views
-
-
சீ.வீ.கே.சிவஞானத்தை சந்தித்தனர் ஐ.நா. பிரதிநிதிகள்! by : Litharsan ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அடங்கிய குழுவினருக்கும் வடக்கு மாகாணசபை அவைத் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு, யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை பேரவை செயலகக் கட்டடத் தொகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது போரின் பின்னர் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆட்சி மாற்றத்தின் பின் வடக்கு நிலைமை போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறித்த சந்திப்பின்போது இலங்கைக்கான ஐ.நா.வின் அகதிகளுக்…
-
- 2 replies
- 688 views
-
-
தேர்தலில் பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது – அஸ்கிரிய மகாநாயக்கர்! பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைக் கோருவதை தடுக்க தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வண. வரககொட ஞானரதன தேரர் வலியுறுத்தியுள்ளார். அஸ்கிரிய மகா விகாரைக்கு நேற்று(செவ்வாய்கிழமை) சென்றிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ‘இலங்கையின் தேர்தல் சட்டம் பழமையானது என்பதால், அவசரமாக அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பௌத்த பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது. பௌத்த மதகுருமார் அரசியல் பதவிக்கு போட்டியிட அனுமதிக்கப்பட…
-
- 2 replies
- 294 views
-
-
நூற்றாண்டு பழைமையான பள்ளியில் புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம் மஹர சிறைச்சாலையில் 100 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்தும் இந்த இழிச்செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார் ஜனநாயக நா…
-
- 8 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெற வில்லை என்று குறிப்பிட்டுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மேடைகளில் கூறி வருகின்றார்.அவர் கூறுகின்ற கருத்து ஆனது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்று உள்ளன.அது தொடர்பான அறி…
-
- 0 replies
- 235 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்ட வேட்பாளா்கள் இவா்களே..! அறிவித்தது கட்சி.. நாடாளுமன்ற தோ்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா்களின் பெயா் பட்டியலை அக் கட்சி வெளியிட்டிருக்கின்றது. வழக்கம்போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கீழ் அதன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இம்முறையும் களமிறங்குகின்றனர். அவர்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகா்க…
-
- 1 reply
- 650 views
-
-
சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் புறந்தள்ளிவிடாதீர்கள்- மயூரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்துவிட வேண்டாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சுமந்திரன் கதைப்பது சரியா பிழையா என்பதை யாழ். மக்கள் வாக்குகளால் உணர்த்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா விளக்குவைத்த குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு கூறுகையில், “தமிழ் மக்களின் உரிமைக்காகவும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காகவும் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலும் இருக்கும்…
-
- 2 replies
- 509 views
-
-
யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கையை அடுத்து விடுதலை! by : Jeyachandran Vithushan யாழ். மத்திய கல்லூரி முன்பாக வீதியில் நின்று பொதுமக்களுக்கு அசௌகரியம் உண்டாக்கிய குற்றச்சாட்டில் விசாரணைக்காக யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 50ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்ள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 50 ற்கும் மேற்பட்ட யாழ்.மத்திய கல்லூரி மாணவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற பொலிஸார்! யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையில் “…
-
- 2 replies
- 404 views
-
-
இனவாதத்தைத் தூண்டும் வகையில் வடக்கு கிழக்கில் தற்போதும் போர்க்காலச் சூழல்- அடைக்கலநாதன் by : Litharsan இனவாதத்தைத் தூண்டும் வகையில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை வைத்து தமிழ் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக ரெலோ கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் பிரதேசங்களில் யுத்த காலத்தில் எப்படி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தார்களோ அப்படியான ஒரு சூழ்நிலை தற்போது படிப்படியாக ஏற்பட்டு வரும் சூழ்நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னாரில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூற…
-
- 0 replies
- 316 views
-
-
இத்தாலி, தென் கொரியாவில் இருந்து 2000 பேர் வருகை இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து 2000 இற்கும் அதிகமானோர் நாட்டை வந்தடைந்த நிலையில், அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் வசிக்கும் பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்களின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை, அங்கொடை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறு நாட்டை வந்தடைந்தவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்போது, தடிம…
-
- 0 replies
- 263 views
-
-
குவைட் செல்லவுள்ள பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்! இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து குவைட் நாட்டிற்கு செல்லும் பயணிகளிடம் இருந்து புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட வைத்திய சான்றிதழ் ஒன்று சமர்ப்பிக்கப்படுதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு மேலதிகமாக இந்தியா, பங்களாதேஷ், பிலிபைன்ஸ், எகிப்து, சிரியா, லெபனான், துருக்கி, அஜர்பைஜான் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக குவைட் சிவில் விமான சேவை அதிகார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குவைட் நாட்டிற்கு செல…
-
- 0 replies
- 246 views
-
-
இலங்கை, அமெரிக்க கடற்படை கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி ஆரம்பம் இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1 (Joint Combined Exchange Training 2020/1) 2020 மார்ச் 02 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது. இப் பயிற்சியின் தொடக்க விழாவின் பிரதம அதிதியாக 4வது துரித தாக்குதல் ரோந்து படகு படையின் கட்டளை அதிகாரி கேப்டன் தம்மிக விஜேவர்தன கலந்துகொண்டுள்ளதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும் 4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் மற்றும் சிறப்பு படகுப் படை…
-
- 0 replies
- 187 views
-
-
இமானுவேல் அடிகளார் தமிழ் மக்களுக்கு அறிவுரை. நாடாளுமன்றத் தேர்தலில்இ தமிழ் மக்கள் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கு தமது வாக்கு பலத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்- ' நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயமாக தமது வாக்குப் பலத்தை நிரூபிக்க வேண்டும். அனைவரும் வாக்களிப்பை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் சரியானவர்களைத் தெரிவு செய்வதன் மூலமே, தமிழர்களின் இருப்பினை நிரூபிக்க முடியும். தற்பொழுது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் பல கட்சிகள் முளை…
-
- 0 replies
- 303 views
-
-
பூநகரியைச் சேர்ந்த நால்வர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது… March 3, 2020 உள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பூநகரியைச் சேர்ந்த நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வைத்து அவர்கள் நால்வரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். “இரகசியத் தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்த தேடுதலில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிர…
-
- 0 replies
- 222 views
-
-
(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஜெனி வாவில் ஆரம்பமாகிய நிலையில், முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்பாக எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் விவகா ரம் மற்றும் காலநிலைமாற்ற சவால் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அன்டோனியோ குட்றஸ்ஸும் மிச்செல் பச்லெட்டும் தமது உரைகளில் கூடிய கவனம் செலுத்தியிருந்தனரே தவிர தனிப்பட்ட நாடுகள் தொடர்பில் அதிகளவு விடயங்களை முன்வைக்கவில்லை. நேற்றைய ஆரம்ப அமர்வில் இரண்டாவதாக உரையாற்றிய ஐ.நா. செயலர் அன்டோனியோ குட்றஸ், மனித கடத்தல்கள் அனைத்…
-
- 12 replies
- 1.5k views
-
-
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.hirunews.lk/tamil/235728/ஐ-தே-கட்சியின்-தலைவர்-கைது-செய்யப்பட-வேண்டும்-வாசுதேவ-நாணயக்கார
-
- 1 reply
- 238 views
-
-
கோட்டா ஜனாதிபதியாக இல்லாத சமயத்தில் வழக்கு தொடரலாம் – அமெரிக்க நீதிமன்றம்! ஜனாதிபதியாக பதவி வகிக்காத சமயத்தில் ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தொடர முடியுமென லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவிற்கு அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்க நீதிமன்றம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத்தொடர முடியாது என தெரிவித்த தீர்ப்புக்கெதிராக அமெரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க சார்பில் இவ் வழக்கு தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையம் வாதிட்டது. இத் தீர்ப்பு தொடர்பாக கரு…
-
- 2 replies
- 484 views
-
-
re0 சஜித் பிரேமதாச தரப்பினர் எவ்வாறான பலத்துடன் பொதுத் தேர்தலில் களமிறங்கினாலும், பொதுஜன பெரனமுனவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பெரமுன உறுப்பினருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்தார். காலியில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பலமான தலைமையொன்று உள்ளது. இதனால், பொதுத் தேர்தலில் எமக்கான வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எமக்கு எதிரான தரப்பினர் இன்னும் சின்னத்தைக்கூட முடிவு செய்யவில்லை. இவ்வாறானவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்பப் போகிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி கோத…
-
- 1 reply
- 558 views
-
-
சஜித் தலைமையிலான கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்: சென்னையில் ரவூப் ஹக்கீம். ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்கின்றோம். இக்கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (02) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது, சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஆசாத், ம…
-
- 0 replies
- 469 views
-
-
கொரோனா தொற்று அச்சுறுத்தல் – பயணிகள் கப்பல்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கப்பலின் மூலம் நாட்டிற்குள் வரவுள்ள பயணிகளை இடைநிறுத்தம் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கொழும்பு துறைமுகத்திற்கு இதுபோன்ற பல பயணிகள் கப்பல் நாட்டிற்குள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் தற்பொழுது தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரா…
-
- 0 replies
- 658 views
-