ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு காலவகாசம் நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பை வழங்கிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதாயின், அடுத்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அதனை தெரிவிக்குமாறு குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர்கள் எல்.டி.பீ.தெஹிதெனிய, பிரீதிஉத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் இந்த உத்தரவை நேற்று (திங்கட்கிழமை) பிறப்பித்தனர். ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கிமைக்கு எதிர்ப்பு தெ…
-
- 2 replies
- 774 views
-
-
600 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல் சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 600 கோடி ரூபாயை விட அதிகமாகும் என கடற்படை தெரிவித்துள்ளது. தென் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருட்களுடன் 2 படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர், லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கடற்படையினர் தெரிவிக்கையில், “பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறப்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படை தன…
-
- 2 replies
- 723 views
-
-
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் இரு யுவதிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரனீத் திஸாநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் இன்று மாலை வவுனியாவில் அடைவு வைக்கும் இடத்தில் அடைவு வைப்பதற்காக நகைகளுடன் சென்ற 23, 26 வயதுடைய இரு யுவதிகளை காப்பு, கைச்சங்கிலி, மோதிரம் என்பவற்றோடு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் வவுனியா பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு…
-
- 0 replies
- 408 views
-
-
Share0 முல்லைத்தீவு உடையார்கட்டு நஞ்சுண்டான்குள காட்டுப் பகுதியில் பாரிய மரக் கடத்தல் ஒன்று வனவளத் திணைக்களத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மரங்களை கடத்தி உழவு இயந்திரத்தில் கொண்டு செல்ல முற்பட்ட போது வனவள திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர். எனினும் இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் தப்பியோடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியிலான முதிரை மரதுண்டங்கள், பலகைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவியந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மிக நீண்ட நாட்களாக வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சட்டவிரோத மர…
-
- 0 replies
- 535 views
-
-
எப்.எம்,பஸீர் முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 12 சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, சந்தேக நபர்களாக அவர்களை பெயரிட்டு, பிடியாணையினைப் பெற்றுக்கொண்டு கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இன்று ஆலோசனை வழனக்கியுள்ளார் 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் க…
-
- 1 reply
- 263 views
-
-
பிரதேச மக்கள், பிரதேச சபை எதிர்ப்பு தென்மராட்சி-சரசாலை குருவிக்காட்டு பகுதியில் 896 ஹெக்டேயர் காட்டு பகுதி மற்றும் விவசாய நிலங்களை வனவளத் திணைக்களத்தினர் அபகரிக்க முயற்சி எடுத்திருப்பதாக சாவகச்சேரி பிரதேச சபையினர் மற்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சரசாலைப் பகுதியில் உள்ள அரச காணிகள், தனியாரின் விவசாய நிலங்கள், மயானம், மேச்சல் தரவைகள், மீன்பிடி குளங்கள் மற்றும் மக்களுக்கான பொழுதுபோக்கு சவாரித் திடல் ஆகியவற்றை உள்ளடக்கி வனவளத் திணைக்களம் எல்லைப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. எல்லைப்படுத்தல் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபைக்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ தெரியாமல் இரகசியமான முறையில் ஓரிரு தினங்களுக்கு முன்னராக மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 249 views
-
-
எச்.எம்.எம்.பர்ஸான் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ் மொழி தினப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதாக, பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார். குறித்த போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், மாணவிகளை தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என்று அதிபர் மேலும் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமிழ்-மொழி-தினப்-போட்டியில்-முதலிடம்/73-246336
-
- 0 replies
- 473 views
-
-
-செ.கீதாஞ்சன் ‘நாடாளுமன்ற தேர்தலில், வடக்கு - கிழக்கு இணைந்த தாயக பகுதியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றிக்காக ஜனநாயக போராளிகள் கட்சி உழைக்கும்” என்று, கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில், ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானங்கள் ஒரு வலுவான தீர்மானங்களாக அமைந்திருந்தால், இன்று இந்த முடிவை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்காதென்றார். இப்போது எடுத்த இறுக்கமான முடிவு, கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்க வேண்ட…
-
- 0 replies
- 301 views
-
-
தற்போதைய இலங்கையின் ஜனாபதியாக பதவி வகிக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்காத சமயத்தில் பின்னர் அவருக்கெதிராக வழக்கு தொடர முடியுமென லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவிற்கு அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நீதிமன்றம் கோத்தாபயவிற்கு எதிராக வழக்குத்தொடர முடியாது என தெரிவித்த தீர்ப்புக்கெதிராக அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்கிரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பில் அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்கிரமதுங்க சார்பில் இவ் வழக்கு தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையம்…
-
- 0 replies
- 179 views
-
-
சுமந்திரனும் ஓர் உறுப்பினர் அவருக்கு முடிவெடுக்க கூடிய அளவு அதிகாரம் இல்லை -ஈ.சரவணபவன் சுமந்திரன் தொடர்பில் வெளித்தோற்றம் ஒன்று உள்ளது. சுமந்திரனிடம் போனால் தான் தமிழரசு கட்சியில் காரியம் ஆகும் என்ற தோற்றப்பாடு உள்ளது.ஆனால் அது அப்படியல்ல. சுமந்திரனும் ஓர் உறுப்பினர். அவரால் முடிவெடுக்க கூடிய அளவு இல்லை. அவரது கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றமை உண்மை. அவரால் பல விடயங்களை செய்யலாம். ஆனால் கட்சி என்பது கட்டுக்கோப்புடன் பல பேர் சேர்ந்து நிகழ்ச்சி திட்டங்களை செய்கின்ற நிலையே உண்டு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். சிறு வலியேனும் அனுபவிக்காத சுரேன் ராகவன், விக்னேஸ்வரன் போன்றோர்கள் தான் களத்தில் சந்தர்ப்பத்தை பாவிக்கின்றனர்.எமக்கு சுரேன்…
-
- 4 replies
- 675 views
- 1 follower
-
-
நுண்நிதிக் கடன் அழுத்தத்தில் இருந்து வட மாகாண மக்களை மீட்க பிரதமர் நடவடிக்கை நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். விசேடமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கன கடன் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் இந்த குறைந்த வட்டியிலான …
-
- 1 reply
- 338 views
-
-
விக்னேஸ்வரனிற்கு எதிராக பேச பயந்தார்கள், அவரை எதிர்க்க துணிந்தார்கள் என கேசவன் சயந்தன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், விக்னேஸ்வரனின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளிக்க துணிச்சலில்லாமல் எனது கையில் திணித்தார்கள். மாகாணசபையிலிருந்தவர்களே அவரை எதிர்க்க பயந்தார்கள். இது மாதிரி அவர்கள் பேசினால், இன்னும் பல விடயங்களை பேச வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். நேற்று முன்தினம் (1) வடமராட்சி மாலுசந்தியில் நடந்த தமிழ் அரசு கட்சியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முதலிலே நேற்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்து அடிப்படையில், சில கருத்துக்களை கூறலாம் என நான் நினைக்…
-
- 1 reply
- 338 views
-
-
தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (03) முற்பகல் சுகாதார அமைச்சில் கூடியது. பின்னர் இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட ஊடக சந்திப்பொன்று சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். " சீன அரசாங்கம் இந்த வைரஸை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் தற்போது சுமார் 262 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதால் ஐக்கிய நாடுகள் சபை போன்று சர்வதேச சுகாதார அமைப்பு ஆகியன இதனை…
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கை பெண்ணிற்கு கொரோனா உறுதியானது! உலகினை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணொருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த பெண், இத்தாலியில் வசிப்பவர் என்றும் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வைரஸினால் பாதிக்கப்பட்டவர் லோம்பார்டியில் உள்ள ப்ரெசியாவில் வசிக்கும் 46 வயதுடைய பெண் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இலங்கையில் 18பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினு…
-
- 1 reply
- 459 views
-
-
மன்னாரில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மீட்பு மன்னாரில் இரண்டு இடங்களில் இருந்து இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோகிராம் வெடி மருந்து மற்றும் அதற்கு பயன்படுத்தும் 27 குச்சுகளும் நேற்று (2) மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நவடிக்கைகளின் போது குறித்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 346 views
-
-
பொதுத் தேர்தலிலும் 50 வீதத்திற்கு குறைவான வாக்குகளே ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் – லக்ஷமன் யாப்பா! by : Jeyachandran Vithushan இரண்டாக பிளவடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர், பொதுத் தேர்தலிலும் 50 வீதத்திற்கு குறைவான வாக்குகளே கிடைக்கும் என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறான தீர்வுகளை முன்வைக்க முயற்சித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியினர் இரண்டாக பிளவடைவதை நிறுத்த யாராலும் முடியாது. ஜனாதிபதித் தேர்தலின்போது அனைத்துத் தரப…
-
- 0 replies
- 186 views
-
-
ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமையப்பெற்றாலே நாட்டை கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை), இபலோகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியினை பெற்றுக்கொண்டோம். இன்று ஜனாதிபதி நம்மவராக இருக்கின்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் கிடையாது. புதுவருட பிறப்பினை முன்னிட்டு மக்களுக்கு அபிவிருத்தி …
-
- 0 replies
- 378 views
-
-
கொரோனா தொற்று அறிகுறி – வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் 18 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களுள் நான்கு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் மூன்று வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். றாகமை போதனா வைத்தியசாலையில் ஒருவரும் குருணாகல் வைத்தியசாலையில் வெளிநாட்டவர் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் அனுமதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 360 views
-
-
முல்லைத்தீவு யுவதி 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்! சசிகுமார் சரணியா முல்லைத்தீவு யுவதி சசிகுமார் சரணியா 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (01-03-2020) இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 1500 மீற்றர் ஓட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சசிகுமார் ச…
-
- 6 replies
- 912 views
-
-
எண்ணெய்ப்பனை பயிரிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட தொடரின் முதலாவது கூட்டம் காலி மாவட்டத்தில் உடுகம ஹோமாதொல, ராஜகிரி லென் விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்றது. புள்ளி விபரங்களின் படி காலி மாவட்டத்தில் மிகவும் வறிய கிராமமான உடுகம ஹோமாதொள கொத்தலாவலபுர கிராமம் ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டது. இவ்வாறு இடம்பெறும் மாவட்ட குழுக் கூட்டத்திற்காக செலவாகும் தொகையை மட்டுப்படுத்தி அதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை கிர…
-
- 6 replies
- 758 views
-
-
உலகத் தொலைத்தொடர்பு சந்தையில் சாதனைகளை தனதாக்கிக் கொள்ளும் லைக்கா! உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 7600 கோடி (76 பில்லியன்) பெறுமதியில் கொள்வனவு செய்ததன் மூலம் ஸ்பெயினில் லைக்காவின் நீண்ட கால இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது என்பதும் வரலாறாகிறது. 2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தன்னை நிலை நிறுத்திய லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lyc…
-
- 14 replies
- 1.7k views
-
-
புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு! by : Dhackshala யாழ்ப்பாணம், புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புத்தூர் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மயானப் பகுதியில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். புத்தூரில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! …
-
- 66 replies
- 6k views
-
-
விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர் எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடங்களில் கடந்து வந்த பாதை’ என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு வடமராட்சி மாலுசந்திப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர். எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலின்போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தமிழ்த் தே…
-
- 6 replies
- 640 views
-
-
பிரதான கட்சிகளின் ஒன்றிணைவுடன் ஐக்கிய மக்கள் சக்தி உதயமானது -மகேஸ்வரி விஜயனந்தன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், பிரதான கட்சிகள் 4, சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் ஐக்கிய மக்கள் சக்தி (சமஹி ஜனபலவேகய) கூட்டமைப்பானது, இன்று (2) காலை கொழும்பு- தாமரைத் தடாக அரங்கில் உதயமானது. இதில் ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, சிவில் அமைப்புகள் சார்பில் ஜாதிக மஹஜன கட்சி, பிரஜைகள் கூட்டணி சார்பில் அபி புரவெசியோ அமைப்பு, ஊடகவியலாளர்கள் ச…
-
- 2 replies
- 626 views
-
-
இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தை வடமாகாணசபை ஏகோபித்து ஏற்றுக் கொண்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் என் மீது வைர்யம் கொண்டார்கள். பின்னர் வடமாகாணசபையில் என்னை வெளியேற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நான் இன்று உங்கள் முன் இருந்திருக்கமாட்டேன். உங்களைப் போன்ற இளைஞர்கள் பலர் தெருவேறி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதாலேயே எனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டது. அப்போது இளைஞர்களுக்கு இந்த முதியவர் ஒரு உறுதிமொழி அளித்தார். “உங்களுடன் இருப்பேன்” என்று அன்று கூறியிருந்தேன்.ஆகவே தான் உங்களுடன் இருக்க இந்தக் கட்சியைத் தொடங்கினேன். இவ்வாறு புதிய கட்சிக்கான விளக்கத்தை மக்கள் முன் வைத்துள்ளார் வடக்கு முன்னாள் முத…
-
- 0 replies
- 555 views
-