ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் முரண்பட்டுக்கொண்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறைச்சாலையில் கொரனா காய்ச்சல் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதிகள் சிறை உடைப்பு முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அநுராதபுர சிறைச்சாலையில், சற்றுப் பதற்றமான நிலை நிலவுவதாகவும். அரசியல் கைதிகளின் சிறையையும் ஆயுள் கைதிகள் உடைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தினால் துப்பாக்கி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. ht…
-
- 12 replies
- 1k views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்று இரவு மாற்றப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டது. அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்ற வதந்தி காரணமாக சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 2 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு பாதுகாபுக்காக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையி…
-
- 0 replies
- 430 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இன்றிலிருந்து 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குசட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இன்று சில பகுதிகளில் அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/139390?ref=imp-news
-
- 89 replies
- 7.5k views
-
-
கொரோனா தொற்றிய முதலாவது இலங்கையர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய முதலாவது இலங்கையரான சுற்றுலா பயணிகள் வழிகாட்டி அந்த நோய் முற்றாக குணமடைந்து அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளார். இன்றைய தினம் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றதாக சுகாதார அதிகாரிகள் தெரிபித்துள்ளனர். இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குழுவொன்றுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்த மாத ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 20 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதுடன் தற்போது அவர் தற்போது முற்றாக குணமடைந்துள்ளார். இதற்கு முன்ன…
-
- 4 replies
- 451 views
-
-
கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு by : Jeyachandran Vithushan நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 227 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கண்காணிப்பில் மேலும் 05 பேர் உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 3,506 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவர் முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலையில் …
-
- 0 replies
- 501 views
-
-
அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் நாட்டுக்கு வருவது தடை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எக் காரணம் கொண்டும் இத் தீர்மானத்தில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/78402
-
- 2 replies
- 590 views
-
-
வங்கிகளை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு! ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வங்கிகளை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இதற்காக கிளை முகாமையாளர்கள் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை பணியில் அமர்த்த வேண்டும். இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர இலங்கை வங்கி ஊழியர்கள் …
-
- 1 reply
- 310 views
-
-
மன்னார் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 59 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் March 23, 2020 வெளிநாடுகளில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்த 42 பேர்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதோடு, மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 17 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேசச் செயலாளர்களுக்கு இடையில் இன்று திங்கட்கிழமை(23) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது. இதன் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, பிரதேசச் செயலாளர்களின் அறிக்க…
-
- 0 replies
- 255 views
-
-
வறுமைக்கோட்டிற்குற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்க மன்னார் நகர சபை தீர்மானம் March 23, 2020 மன்னார் நகர சபை பிரிவில் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைக்க உள்ளதாக மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். -இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் இன்று(23) கருத்து தெரிவிக்கையில்,,, -நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை தொடர்பாகவும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (23) காலை 11 மணியளவில் மன்னார் நகர சபையில் இடம் பெற்றது. -…
-
- 0 replies
- 275 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்முனை, சாய்ந்தமருது ,மத்திய முகாம், கல்முனை ,மருதமுனை ,சம்மாந்துறை, அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பொருட்களை கொள்வனவு செய் அதிகளவு பொதுமக்கள் முண்டியடிப்பதை காணமுடிந்தது. கல்முனை பொதுச் சந்தை , சதோச போன்ற இடங்களில் பெருமளவு வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றனர். பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதோடு மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றா என்பதையும் அவதானித்து வருகின்றனர். பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் வீதி வீதியாக மக்களை தெளிவுபடுத்தும…
-
- 4 replies
- 661 views
-
-
தற்காலிகமாக மூடப்பட்டது ஏ 9 வீதி! யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனம்காணப்பட்ட நிலையில் வடமாகாணத்திற்கான ஊரடங்கு காலம் நாளை(செவ்வாய் கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியாவில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அத்துடன், நேற்று மாலை 6 மணிக்கு பின்னர் ஓமந்தை, மற்றும் கனகராயன்குளம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஏ 9 வீதி மூடப்பட்டுள்ளது. பொலிஸாரின் தற்காலிக அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மாத்திரம் குறித்த வீதியால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதுடன் சோதனை நடவடிக்கைகளும் மு…
-
- 1 reply
- 492 views
-
-
ஆர்.ராம்) கொரோனா தாக்கத்தலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசு என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக அச்சநிலைக்குள் வாழ்கின்றபோது இலங்கை அரசு தன்னை ஒரு ஜனநாயக அரசாக காட்ட முயல்கின்ற நிலையில் இன அழிப்புக்கு ஆளாகி இன்றும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள்ளாகியுள்ள ஈழத்தமிழர்கள் சார்பிலும், முன்னாள் வடமாகாணமகளிர், புனர்ழ்வு, சமூகசேவைகள் அமைச்சர் என்றவகையிலும் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் வெள…
-
- 2 replies
- 387 views
-
-
கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான ம…
-
- 18 replies
- 1.6k views
-
-
மலேரியாவிற்கான மருந்தினை அனுமதியின்றி வழங்க வேண்டாம் என எச்சரிக்கை! மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தும் க்ளோராக்வின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோக்வின் ஆகிய மருந்துகளை வைத்திய நிபுணர்களின் அனுமதி இன்றி வழங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் இந்த விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து சில்லறை விற்பனை மருந்தகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இதனை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/மலேரியாவிற்கான-மருந்தின/
-
- 2 replies
- 629 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களின் ஈ-கற்கைக்காக இன்று முதல் இலவச இணைய வசதி! அரச பல்கலைக்கழகங்களில் ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ் பதிவுசெய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை இலவசமாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சித்திட்டத்தினை இன்று(திங்கட்கிழமை) முதல் ஆரம்ப…
-
- 1 reply
- 329 views
-
-
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். இரண்டாம் இணைப்பு யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரை IDH தொற்று நோயியல் மருத்துவ மனைக்கு அனுப்பத் தீா்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளா் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்படும் என பணிப்பாளர் கூறியுள்ளார். இதேவேளை, குறித்த தொற்றுக்க…
-
- 3 replies
- 565 views
-
-
குளோரோகுயின் மருந்தால் கொரோனாவை தடுக்க முடியாது – தேவையற்ற வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம்! கொரோனா வைரஸ் பரவலை குளோரோகுயின் “Chloroquine” என்ற மருந்தால் மாத்திரம் தடுக்க முடியாது என்பதால் குறித்த மருந்தை தேவையற்ற வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம் என வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு செயலணி பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. எனவே உரிய மருத்துவ பற்றுச்சீட்டு இன்றி குளோரோகுயின் “Chloroquine”மற்றும் கைரொக்சிகுளொரோகுயின் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். இருப்பினும் வைத்திய சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய 5 இலட்சம் குளோரோகு…
-
- 0 replies
- 382 views
-
-
ஆர்.ராம் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான அவசர மருத்துவ சேவைகளுக்காக தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 70 மில்லியன் ரூபாவை வழங்குவதாக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார். அதனடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஆறு செயற்கை சுவாசக்கருவிகள், அவசரசிகிச்சைப் பிரிவுக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான 169 படுக்கைள் உட்பட 485 மருத்துவ படுக்கைகள் ஆகியன வழங்கப்படவுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள செயற்றிட்டங்களுக்கு தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேற்படி உதவித்தொகையானது முதற்கட்டமானது என்றும் அடுத்துவரும் காலப்பகுதியில் தேவைகளுக்கு ஏற்வகையில் மே…
-
- 2 replies
- 466 views
-
-
சுயமாக முன்வர 48 மணித்தியால கால அவகாசம்: கைது செய்யப்பட்டால் 3 வருட சிறை (எம்.மனோசித்ரா) வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்கள் தாமாக கண்காணிப்பிற்கு முன்வருவதற்கு 48 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்வராதவர்கள் பாதுகாப்பு துறையினரால் இணங்காணப்பட்டால் 3 வருட சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் நாளை மறுதினம் 24 ஆம் திகதி செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த…
-
- 3 replies
- 686 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது! யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் மொத்தமாக 17 பேர் கொரோனா அச்சம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் ஏனையோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் அரியாலையில் தேவாலயத்தில் இடம்பெற்ற ஆரா…
-
- 1 reply
- 656 views
-
-
யாழ்.கொடிகாமத்தில் 233 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை! இந்தியா சென்ற 233 யாத்திரிகள் யாழ் கொடிகாமம் 522வது படைப்பிரிவு முகாமில் தங்கவைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) 8 பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட இவர்கள் குறித்த பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 14 நாட்கள் குறித்த நபர்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உரிய கொ…
-
- 1 reply
- 365 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் தற்காலிக பிணை வழங்குங்கள் - ஜனாதிபதியிடம் ஈ.பி.ஆர்.எல்.எப். வேண்டுகோள் (ஆர்.ராம்) நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸின் தீவிரத்தன்மை உணர்ந்து மனிதாபிமான அடிப்படையில் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் தற்காலிக பிணை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ உடன் முன்னெடுக்க வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது. அநுராதபுரத்தில் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எப் சுட்டிக்காட்டியுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்…
-
- 0 replies
- 247 views
-
-
திருகோணமை வன்னி மாவட்ட தேர்தல்கள் - நாம் இனமா சிறுபாண்மையா ? - வ.ஐ.ச.ஜெயபாலன் சென்ற தேர்தலில் போரின் தொடற்ச்சியாக வடகிழக்கு தமிழர்கள் இனத்துவத்தை அழித்து சர்வதேசத்தின் கண்களில் ஈழத் தமிழரை சிறுபாண்மையினராக சிதைக்கும் முயற்ச்சியில் மகிந்த அரசு ஈடுபட்டது. எல்லா விமர்சனங்களோடும் சம்பந்தரே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற தமிழ் தலைவராக இருந்தார். இதனால் மகிந்த அரசு திருகோணமலையில் சம்பந்தரை தோற்கடிப்பது என்கிற முதன்மை நோக்கத்துடன் திருகோணமலையில் தமிழரின் 2 பிரதி நிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் தேர்தல் சதுரங்கத்தை முன்னெடுத்தது. தேர்தலில் சம்பந்தர் மயிரிளையில் தப்பினார். ஆனாலும் திருகோணமலையில் இரண்டில் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்ததும் வரலாறு. இம்முறை வன்னியிலும் திரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக பெறுகின்றது இலங்கை அரசாங்கம். உலகளாவிய அளவில் பரவிவரும் கொரோனா தொற்றுநோய் இலங்கையையும் பாதித்துள்ள நிலையில் சீன அரசாங்கதின் ஆதரவுடன் சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு உதவும் வகையில் இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளது. நாட்டின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு இந்த சலுகைக் கடன்களை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ள பின்னணியில் அதற்கான பத்திரங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. அத்துடன் அரைவாசிக்கும் குறைவான சர்வதேச பங்கு சந்தை வட்டி வீதத்தில் நீண்டகால கடன் திட்டமாக இந்த தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் தேர்தல் அறிவிக்கப்ப…
-
- 10 replies
- 791 views
-
-
யாழ்ப்பாணம் அாியாலை, நாவலடி பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கள்ளு தவறணையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வாள்வெட்டுக்கு உள்ளான நபர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவரை தேடி வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஊரடஙக-நரததல-யழல-வளவடட/175-247310
-
- 5 replies
- 689 views
-