ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
மட்டு. கத்தோலிக்க தேவாலயத்துக்குள் சென்ற இரு இஸ்லாமிய பெண்கள் உட்பட நால்வர் கைது மட்டக்களப்பு புனித செபஸ்டியன் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக ஆலயத்திற்கு வந்த இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் குறித்த தேவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆராதனை இடம்பெற்றது. இதன்போது அங்கு இரு பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட முஸ்லிம்கள் ஆலயத்தினுள் உட்புகுந்ததையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆராதனையில் ஈடுபட்ட மக்கள், அருட்தந்தையூடாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு ச…
-
- 4 replies
- 1.3k views
-
-
தேர்தல்களின் போது செலவிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கனடா உட்பட வெளிநாடுகளில் இருந்து கோடிக் கணக்கான ரூபா பணம் கொட்டுகின்றது. அக்கட்சியின் பொறுப்புள்ள பிரமுகர்களே இந்த தகவலை பகிரங்கமாக வெளியிட்டுள்ள நிலையில் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்த நிதி வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு வந்து சேருகின்றதா? அது உரிய முறையில் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பது பற்றிய விசாரணைகளை அதிகார வர்க்கம் ஆரம்பிக்கும் சூழல் இருப்பதாக அறிய வருகின்றது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தற்போதைய தலைவர் கதிரவேலு குகதாசன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை கனடாவில் உயர்பதவியில் இருந்தவர். கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் உட்படப் பல பொறுப…
-
- 5 replies
- 1k views
-
-
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள், வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 5 பேர், நேற்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளனரென்று, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கிளடம் இருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர், வடக்கு மாகாணம் முழுவதிலும் பதுங்கியுள்ளனரென்றும், பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவரெனவும், ஏனையோர் சிறுப்பிட…
-
- 3 replies
- 657 views
-
-
இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு 8 மனித உரிமை அமைப்புகள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாரை கேட்டுக்கொண்டுள்ளன. மனித உரிமை கண்காணிப்பகம், மன்னிப்புச்சபை உட்பட எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரிற்கு கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. இலங்கையில் மனித உரிமை விடயத்தில் குறிப்பிடத்தக்க பின்னோக்கி நகர்வுகள் இடம்பெறுகின்றனஎன்பதற்கான அறிகுறிகள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம் என எட்டு மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்துள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் ஆற்றியுள்ள உரை இதனை உறுதி செய்வது போல காணப்படுகின்றது என அந்த அமைப்புகள…
-
- 3 replies
- 491 views
-
-
மூன்று வருடங்களை கடந்த கேப்பாபுலவு நில மீட்பு போரட்டம்: மக்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ! முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் ஆரம்பிக்கபட்டு இன்றுடன் மூன்றுவருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கேப்பாபுலவு மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது . முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் நிலங்களில் அமைக்கபட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் "எமது நிலம் எமக்கு வேண்டும் ,இராணுவமே எமது நிலத்தை விட்டு வெளியேறு " சொந்த நிலமிழந்து வாழும் அகதிகள் நாமா ? எமக்கு மாற்று காணிகள் வேண்டாம் , ச…
-
- 1 reply
- 795 views
-
-
மிலேனியம் ஒப்பந்தத்தில் இனி கையொப்பமிடப் போவதில்லை February 28, 2020 அமெரிக்காவின் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் ((Millennium Challenge Corporation – MCC) நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவிருந்த ஒப்பந்தத்தில், இனி கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் (27) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைபயின் பிரகாரமே இந்தத் தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் அரசாங்கத் …
-
- 6 replies
- 694 views
-
-
வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது - மாவை வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டியில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் என்றுமில்லாத வகையில் கடந்த காலத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தது. இந்தக்…
-
- 4 replies
- 471 views
-
-
இந்தியாவின் பிண்ணணியுடன் கூட்டணியா? யார் சொன்னது? - February 29, 2020 யாழ்.ஊடக அமைய பத்திரிகையாளர் சந்திப்பிற்கான கேள்விகள் கேள்வி:- முன்னைய அரசுகளை சர்வதேச விசாரணைகளிலிருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு இப்போது சர்வதேச நீதிமன்ற விசாரணை பற்றிய போன்றவை பேசுகிறதே? பதில்:- தேர்தல் வருகின்றது அல்லவா? அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்! கூட்டமைப்பு என்னதான் நாடகம் ஆடினாலும் எமது மக்கள் ஏமாறமாட்டார்கள். சர்வதேச விசாரணைகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் காலத்தை இழுத்தடிப்பதற்கு கூட்டமைப்பு எவ்வாறெல்லாம் செயற்பட்டது என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள். எவ்வாறு கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் வகையில் கூட்டமைப்பு செயற்பட்…
-
- 4 replies
- 518 views
-
-
மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்துக்களை ஆரம்பிப்பதற்கும், இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிராந்திய விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன, விளக்கமளிக்கையில், இந்த விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக சில வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதன் பிரகாரம் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் …
-
- 2 replies
- 436 views
-
-
பொதுத் தேர்தலில் களமிறங்கும் ஏற்பாடுகள் மாவட்ட ரீதியாக முன்னெடுப்பு - மாவை (எம்.மனோசித்ரா) பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கான செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட ரீதியில் முன்னெடுத்து வருகின்றது. இந் நிலையில் வெகு விரைவில் தேர்தல் நியமனக் குழு கூடி ஆராய்ந்ததன் பின்னர் எதிர்வரும் ஓரிரு வாரத்திற்குள் இறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் அவதானம் செலுத்…
-
- 0 replies
- 358 views
-
-
தேர்தல் பிரசாரத்தில் சுவரொட்டிகள்- பதாதைகளுக்கு தடை- மஹிந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் காலங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்தினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துவற்கு அறிவிக்கப்படுமாயின் அதனை நடத்துவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்” என குறிப்ப…
-
- 0 replies
- 364 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதை போன்றல்லாது, வேறுப்பட்ட சூழ்நிலையின் கீழேயே பொதுத் தேர்தலில் களமிறங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே சஜித் பிரேமதாஸ இதனை தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு எமது எதிர்தரப்பினர்களுக்கு இருந்த கால நேரம் எமக்கு இருக்கவில்லை. காரணம், எம்மை அனைத்து இடத்திற்கும் அனுப்பினர், எமக்கும் செல்ல வேண்டிய நிலையிருந்தது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எங்கும் செல்வதில்லை. அப்படி செல்லவும் நான் தயாராகவும் இல்லை. இந்நாட்டிற்கு புதிய ஆற்றல் மிகுந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் என தெரிவித்துள்ளார். https://www…
-
- 0 replies
- 227 views
-
-
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணி அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பித்து காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவம் இன்று (29.02.2020) கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் இராஜாங்ங அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்கள். பல வருட காலமாக காணி அனுமதிப் பத்திரம் அற்ற நிலையிலேயே பொது மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.இதன் போது 100 பேர்களுக்கான உரித்து படிவங்கள் வழங்கப்பட்டன. இவ் நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ,மாகாண காணி உதவி ஆணையாளர் ரவிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். https://www.virakesa…
-
- 0 replies
- 307 views
-
-
சர்வதேச நீதி விசாரணைகள் மூலமே பொறுப்புக்கூறலை நிலைநாட்ட முடியும்- யோகேஸ்வரன் by : Litharsan சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலமே பொறுப்புக்கூறலையோ, உண்மையைக் கண்டறிதலையோ இந்த மண்ணில் ஏற்படுத்தமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “தற்போதைய ஆட்சிக்காலத்தில் அடக்குமுறைகள் அதிகரித்துவருகின்றன. கடந்த 2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரையில் நாங்கள் சோதனைகளுக்கு உட்படுவது மிகவும் குறைவாகேவே இருந்தது. இன்று வடகிழக்கில் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள…
-
- 2 replies
- 500 views
-
-
உள்ளக விசாரணை எனபது இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால ஏமாற்றுத்திட்டமாகும். முள்ளிவாய்க்காலின் பின்னர் உள்ளக விசாரணைகள், உள்ளக விசாரணைகள் என்று 11 வருடங்கள் சென்று விட்டன. அதன் பின்னர் இராணுவ வீரர்கள் மன்னிக்கப்பட்டுள்ளார்கள். மரண தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.இவைதான் இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டம். எனவே உள்ளக விசார ணைகளில் சர்வதேசத்துக்கும் நம்பிக்கையில்லை. இனிவரும் காலங்களில் அது இறுக்கமான தீர்மானத்துக்கு வழி வகுக்கும் என தமிழர் மனித உரிமைகள் மையத்தின் தலைவர் ச.வெ.கிருபாகரன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடருக்கு வருகை தந்திர…
-
- 0 replies
- 372 views
-
-
எம்.சி.சி ஒப்பந்தத்தை இன்று கைசாத்திட்டாலும் தான் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவிக்கும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அந்த ஒப்பந்தத்தால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் கடன் சலுகை கோரியதால் வேறு எந்த நாடும் இலங்கைக்கு சிறிய வட்டிக்கு கடன் தர முன்வராத நிலைமை காணப்படுவதாகவும், இதுவரை இலங்கையிலுள்ள எந்தவொரு நிதி அமைச்சரும் வெ ளிநாடுகளிடம் அவ்வாறதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார். அதேபோல் மறுதிசையில், அரச ஊழியர்கள் சம்பளத்தை 10…
-
- 1 reply
- 324 views
-
-
புத்திசாலித்தனமாகச் செயற்படுவதன் மூலமும் வைத்தியர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலமும், நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறலாமென்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை தொடர்பில், சுகாதார அமைச்சின் நல்வாழ்வுத்துறைத் திணைக்களம், விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுற்றுச்சூழல் வெப்பநிலையானது, சாதாரண நிலைமையை விட, இந்நாள்களில் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த அதிக வெப்பநிலை காரணமாகவும் அதனால் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், பொதுமக்கள் அவதானமான இருக்கவேண்டும். அதிக ஆபத்துள்ள பிரிவுகள்: சாதாரணமாக, உட…
-
- 1 reply
- 550 views
-
-
(ஆர்.விதுஷா) நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சேவை தொடர்பில்; பாதுகாப்பு தரப்பினருக்கிடையில் முரண்பாட்டினைத் தோற்றுவிக்க அரசாங்கம் முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அத்துடன் போக்குவரத்து சேவையில் பொலிசாருடன் இராணுவ பொலிசாரும் இணைத்துக் கொண்டுள்ளமைக்கான நோக்கமென்ன? பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிசார் வீதிப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள் ஏற்படும். …
-
- 4 replies
- 967 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக க.விமலநாதன் நியமனம் Feb 29, 20200 மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான க.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலதிக அரசாங்க அதிபராகவும் பல்வேறு அரச உயர் பதவிகள் வகித்து வந்த நிலையிலேயே முல்லைத்தீவுக்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.சமூக நலனோம்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய க.விமலநாதன் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவு-மாவட்டத்த-19/
-
- 0 replies
- 361 views
-
-
உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை இலங்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது- ஸ்ரீதரன் by : Litharsan ஐக்கிய நாடுகள் பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக்கொள்வதாகத் தீர்மானித்திருப்பது, உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்கள் சார்பாக ஜெனிவாவுக்குச் சென்றுள்ள அவர் அங்கிருந்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்ர கூறகையில், “ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலே, ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ள 30/1 40/1 தீர்மானங்களில் இருந்து விலகிக்கொள்வதாகவும் அதன் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்வதாகவு…
-
- 2 replies
- 404 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1, 34/1 மற்றும் 30/1 பிரேரணைகளுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதானது வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் உலகம் பூராகவும் உள்ள மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளதென முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். எனினும் இவ்வாறான முடிவு வியப்படையத்தக்கதொன்றல்ல. தொடர் பத்தாண்டு கால கட்டத்தின் முடிவே ஜெனிவாவில் அமைச்சர் குணவர்தன வெளியிட்ட அறிவிப்பு எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்…
-
- 4 replies
- 467 views
-
-
சர்வதேச பொறிக்குள் சிக்கிய கோட்டாபய நடக்கப்போவது என்ன?
-
- 0 replies
- 613 views
-
-
இந்தியாவிலிருந்து பூக்கள், பழங்கள், சிற்றுண்டிகள் கொண்டு வர யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் தடையாம்.! தமிழகத்திலிருந்து கொண்டுவரப்படும் அல்வா, மல்லிகை பூ மற்றும் சுவிற் வகைகள் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான பொருட்களின் வகைப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் கடும் விசனம் தொிவித்திருக்கின்றனா். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனைக் கருவி இன்மை காரணமாக பலவகையான பொருட்கள் எடுத்துச் செல்லும் அனுமதிகள் மறுக்கப்படுகின்றது. பரிசோதனையின் போது யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி தனது உடமைகளை கை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவலம் காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கை வரும் பயணிக…
-
- 3 replies
- 1.1k views
-
-
தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் அந் நாட்டு வெளிநாட்டு அமைச்சின் சார்பில் உள்நாட்டு அமைச்சர் ஆர்ய மௌலப் டெரி (Aryeh Machluf Deri) கைச்சாத்திட்டார். இலங்கையின் சார்பில் செயல்திறன் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சார்பில் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சின் …
-
- 15 replies
- 1.3k views
-
-
(எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களின் பின்னர் எவ்வித இணக்கப்பாடுகளும இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் பொதுத் தேர்தல் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள், சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் என்பன தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. புதிய கூட்டணிக்கான…
-
- 0 replies
- 994 views
-