Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஹெல உறுமயவின் ஆதரவு சஜித்துக்கு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரவண தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேசிய சமாதான முன்னணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஹெல உறுமையவின் செயலாளர் சம்பிக்க ரணவக எம்.பி மேற்கண்டவாறு அறிவித்தார். சகல இன மக்களையும் பாதுகாக்கும் தரப்பாக தேசிய சமாதான முன்னணி அமைந்துள்ளதாகலேயே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தீர்மானித்ததாகவும் தெரிவித்தார். http…

  2. உலக நாடுகளுடன் இலங்கை மோதுவது 22 மில்லியன் மக்களுக்கும் ஆபத்தானது- ரிசாட் by : Yuganthini இலங்கை அரசு உலக நாடுகளுடன் முட்டி மோதுவதானது இங்கு வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் ஆபத்தானதென நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரிசாட் பதியுதீன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பொது வேட்பாளராக நிறுத்தியபோது எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, அக்கூட்டமைப்போடு இணைந்து அவரது வெற்றிக்காக இரவு பகலாக உழைத்தோம். குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் பூ…

  3. “அழைப்பு விடுவதற்கு முன் ஐ.தே.க.விற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும்” – சஜித்திற்கு சுதந்திர கட்சி பதிலடி! by : Jeyachandran Vithushan பிற கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை சஜித் பிரேமதாச தீர்க்க வேண்டும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வலியுறுத்தியுள்ளார். கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சுதந்திரக் கட்சிக்குள் எவரும் அரசியல் ரீதியாக சிக்கித் தவிக்கவில்லை என்றும் கட்சி ஒன்றுபட்டுள்ளது மற்றும் எழக்கூடிய எந்தவொரு பிரச்சினையையும் எம்மால் தீர்க்க முடியும் என்றும் …

  4. மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் by : Yuganthini மன்னாரில் மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம், மன்னார் சதோச மனித புதைகுழிக்கு அருகில் சென்று நிறைவடைந்தது. குறித்த போராட்டத்தின்போது, சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் ப…

  5. மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகம் பிரதேச செயலக ரீதியாக திரட்டிய தரவுகளின்படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 868 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களில் 34 ஆயிரத்து 494 பேர் ஆண்கள். 37 ஆயிரத்து 374 பேர் பெண்கள். 71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள். 2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் த…

    • 32 replies
    • 3.4k views
  6. மக்களின் முதன்மைத் தெரிவுகளை புறக்கணித்து தன்னிச்சையான தெரிவுகளை மக்களுக்கு திணிக்க முற்படும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரது செயற்பாட்டை கண்டிப்பதுடன் அவ்வாறு திணிக்கப்பட்ட முன்மொழிவுகளை எதிர்ப்பதாகவும் தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றபோது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் விவாதம் நடைபெற்றுள்ளது. இதன்போது கிராமத்திற்கு இரண்டு மில்லியன் ரூபா என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவால் வழங்கப்படவுள்ள அபிவிருத்தி நிதிக்கான முன்மொழிவுகளை ஏற்கனவே கிராமங்கள் தோறும் மக்கள் தமக்கு அத்தியாவசிய தேவையான விடயங்களை முன்னிறுத்தி கிராம சேவகர…

    • 2 replies
    • 448 views
  7. ‘225 பேரில் தனக்கே அதிக நெருக்கடி’ சமூகத்தின் பல்துறை சார்ந்தவர்களை வேறுவேறாக வகைப்படுத்தி, மூளைச்சலவை செய்யும் தந்திரோபாய வேலைத்திட்டத்தை, பேரினவாத தரகர்கள் மேற்கொண்டு வருவதாகவும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைப்பதே இவர்களின் உள்ளார்ந்த திட்டமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “புத்தளம் மாவட்டத்தின் தம்பபண்ணி, கொய்யாவாடி மற்றும் ஆலங்குடா பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு மக்களுடன், நேற்று (23) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத…

  8. பிரேரணைகளில் இருந்து தன்னிச்சையாக விலக முடியாது பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு வேண்டும் என்கின்றார் வாசு! by : Jeyachandran Vithushan மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அனைத்து பிரேரணைகளில் இருந்தும் தனித்து நீங்க முடியாது என்றும் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடனே விலக முடியும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்த 30/1 பிரேரணையை கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தன்னிச்சையாக கைச்சாத்தினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், …

  9. கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். நான்கு கட்சிகள் இணைந்து புதிதாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கினர் இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவத்வாறு தெரிவித்து…

    • 6 replies
    • 1k views
  10. சசிகலா ரவிராஜை களமிறக்க தமிழரசுக் கட்சி முடிவு? தமிழரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், அனைவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழு நேற்று முன்தினம் கிளிநொச்சியில் கூடியது. தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் பெருமளவு விண்ணப்பங்க…

  11. எதிர்க்கட்சியினர் வெளிநாடுகளுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றனர்- மஹிந்த குற்றச்சாட்டு நாட்டு மக்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால்தான், எதிர்க்கட்சியினர், வெளிநாடுகளுடன் இணைந்து சூழ்ச்சிகளை மேற்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை முதல் ஹம்பந்தோட்டை வரையான பகுதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் வெளிவிவகார அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு தற்போது இருக்கின்றது. இதனை …

    • 6 replies
    • 582 views
  12. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று நாளை 2020.02.25 ஆம் திகதியுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. கடந்த நூறு நாட்களில் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை  நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் சாரம்சம் பின்வருமாறு. கல்வி மற்றும் எதிர்கால தலைமுறைக்காக...ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல். உயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை உறுதி செய்தல் கல்வியினால் பூரணத்துவமடைந்த சமூகத்தை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானமாகும். உயர்கல்வி வாய்ப்பினை பெறாத இளைஞர் யுவதிகளை தொழிற் பயிற்சியும் ஆ…

  13. -விஜயரத்தினம் சரவணன் சர்வதேச விசாரணைகளில் யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலக முற்படுவதாகத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா, அவ்வாறு அவர்கள் நினைத்தவுடன் விலகுவதற்கு இது ஒன்றும் அவர்கள் வீட்டுக் கல்யாணம் இல்லையெனவும் கூறினார். முல்லைத்தீவு - மாந்தைக் கிழக்குப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் காரியாலயத்தை, இன்று (24) திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இன்றும் தாம் அபிவிருத்தி என்பதைத் தாண்டி, தமது தமிழர்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையோடும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே …

    • 0 replies
    • 892 views
  14. -சுப்பிரமணியம் பாஸ்கரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை, இலங்கை மீறினாலும் அதை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற தமிழரசு கட்சியின் தீர்மானமானது, வெறும் கண்துடைப்புக்கானதென, கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி குற்றஞ்சாட்டினார். கிளிநொச்சியில், இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசாங்கம், தமது பிள்ளைகள் தொடர்பான நீதியை பெற்று தராதெனவும் ஓ.எம்.பி அலுவலகத்தை நிறுவி, அதன் ஊடாக சில உதவிகளை வழங்கி, தம்மை ஏமாற்ற நினைப்பதாகவும் சாடினார். ஆனால், தாம் சர்வதேசத்தையே நம்பி நிற்பதாகத் தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கத்…

    • 0 replies
    • 321 views
  15. வவுனியாவில் 1101 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மதியம் 12 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டதையடுத்து ஊர்வலமாக மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்து அங்கிருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் பந்தலுக்கு முன்பாக கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை இன அழிப்பே, தமிழ் தேசியவாதம் மற்றும் நிரந்தர பாதுகாக்கப்பட…

    • 0 replies
    • 363 views
  16. இறுதிப்போரில் முல்லைத்தீவு வட்டுவாகலில் இராணுவத்திடம்சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்க்கொணர்வுமனுமீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதிப்போரில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகமுல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுமீதான இரண்டாம் கட்ட வழக்குவிசாரணைகள் இன்றையதினம் (24) விசாரணைக்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில்எடுத்துக்கொள்ளப்பட்டது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தளபதிகளில் ஒருவரான எழிலன் உள்ளிட்ட12 பேர்தொடர்பான ஆட்க்கொணர்வு மனு மீதான விசாரணைகள் கடந்த சிலவருட…

    • 0 replies
    • 578 views
  17. வவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு! – வாகனங்களுக்கு தீ வைப்பு! வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பேருந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வான் சாரதியும் தீ வித்தில் அகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்…

    • 14 replies
    • 1.6k views
  18. பாரிய கடன் சுமையில் அரசாங்கம் தத்தளிக்கிறது என்.ஜெயரட்ணம் ஜனாதிபதி தேர்தலின்போது, பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வழங்கி, ஆட்சியை சூட்சுமமாகக் கைப்பற்றிய தற்போதைய அரசாங்கம், அவற்றை நிறைவேற்ற முடியாமல் பெரும் கடன் சுமையுடன் தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கோருவது வேடிக்கையானதென, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட மாநாட்டில், நேற்று (23) பங்…

    • 2 replies
    • 776 views
  19. சஜித்தின் கருத்தால் ஏமாற்றமடைந்த கூட்டமைப்பு! by : Jeyachandran Vithushan இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் 85% வாக்குகளைப் பெற்ற பின்னரும், பாரபட்சமின்றி நீதியை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டை பிரேமதாச பாராட்டவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவ தளபதிக்கு விதித்த பயண தடை தொடர்பாக கருத்து பதிவிட்டிரு…

    • 2 replies
    • 714 views
  20. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி..! இந்தியாவுடன் மீண்டும் உடன்படிக்கை.! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகளுக்காக இந்திய அரசாங்கத்துடன் மீண்டும் உடன்படிக்கை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருக்கின்றார். இந்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபாவை வழங்க உடன்பட்டுள்ளது. இதன்மூலம் சிறிய பொதிகளை கையாளும் கட்டமைப்பு, வெளியேறும் நிர்வாக கட்டமைப்பு, நீர் விநியோகம், கழிவு நீர் அகற்றும் கட்டமைப்பு, மற்றும் திண்ம கழிவு வெளியேற்றுவதற்கான கட்டமைப்பு, ஆகியன அதன் கீழ் அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்பொழுது…

    • 1 reply
    • 397 views
  21. தமிழ்மொழியில் சித்தி இல்லை..! 5536 அதிபர் வெற்றிடங்கள் நிரப்பபடாமலிருக்கிறது. இலங்கையில் தமிழ் மொழிக்கு வந்த சோதனை.. இலங்கையில் தமிழ் மொழியில் சித்தியடையாமை யினால் 5,536 அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமலிருக்கும் விடயம் கோப்குழுவால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விடயம் நாடாளுமன்றத்தின் கோப் குழு நடத்திய விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.2019 பெப்ரவரி 20, முதல் 2019 நவம்பர் 7 வரையான காலப்பகுதி தொடர்பான 42 விசாரணைகளின் அவதானிப்பு, மற்றும் பரிந்துரைகளில் இந்த விவகாரமும் தெரிய வந்துள்ளது. அதிபர்களின் சேவையில் மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 5,536 ஆகும். தரம் I இல் 1,750 வெற்றிடங்கள், தரம் II இல் 1,868 வெற்றிடங்கள், மற்றும் தரம் III இல் 1,918 வெற்றிடங்கள் உள…

    • 3 replies
    • 401 views
  22. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது. ஜெனீவாவில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது. அத்துடன், வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 26 ஆம் திகதி உரை நிகழ்த்தவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் பேரவையின் உயர்நிலை அமர்வில் உரையாற்றவுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்தின் …

    • 1 reply
    • 348 views
  23. பகல் கனவு பலிக்காது வாய்மையே வெல்லும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எந்த சந்தர்ப்பத்திலும் அசைக்க முடியாது. எம்மை பலவீனப்படுத்தலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். அவர்கள் கனவு காணட்டும். முன்வைத்த காலை பின்வைக்காது நாம் எமது பயணத்தை தொடர்கின்றோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். நானுஓயா சமர்செட் ஈஸ்டல் தோட்டத்தில் இன்று (24) 50 தனி வீடுகளை அமைக்க அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 2002 இல் நுவரெலியாவிலு…

  24. ஸ்ரீலங்காவிற்குள்ளும் கொரோனா! அபாய எச்சரிக்கை விடுத்தது சுகாதாரப் பிரிவு Kalaimathy உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவக்கூடிய அபாயம் அதிகமாக நிலவுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வைத்தியசாலைகளில் இன்று காலை வரை, சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும் தென்கொரியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தற்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்…

  25. ஹக்கீமின் கருத்தை நிராகரித்த ஜே.வி.பி. by : Jeyachandran Vithushan பொதுத் தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைப்பது குறித்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் வெளியிட்ட கருத்தினை மக்கள் விடுதலை முன்னணி மறுத்துள்ளது. கண்டியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஜே.வி.பி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து கட்சி பரிசீலித்து வருவதாக அறிவித்தார். அத்தோடு இந்த விடயம் தொடர்பாக தற்போது விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஹக்கீம் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.