ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பை சீர்குலைக்க சதி தேசிய பல்கலைக்கழக கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்கு சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதை தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை மாணவர்களை உள்வாங்குவதற்காக பல்வேறு மூலோபாயங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இதற்காக செயற்படும் சிலர் எவ்வாறாயினும் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களில் ஆற்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர். அதனூடாக பல்கலைக்கழகங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக தெரிவித்து மாணவர்களை தவறான வளியில் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழகங்களுக்கு வரும் ம…
-
- 1 reply
- 399 views
-
-
இந்த மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும்? பாராளுமன்றத்தை இந்த மாதத்திற்குள்ளே கலைப்பதற்கு ஆராயப்பட்டு வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிலையில் அதற்கு முன்னர் இந்த மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் யோசனையொன்றை கொண்டு வந்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றி பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதற்கு ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மார்ச் மாதத்தில் கலைத்தால் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஏப்ரல் இறுதியிலேயே தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் ஆனால் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னரே தேர்த…
-
- 1 reply
- 280 views
-
-
ஆட்கடத்தலை தடுக்க இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி by : Dhackshala இலங்கையில் ஆட்கடத்தலை தடுக்க அமெரிக்க அரசாங்கமானது 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ஆட்கடத்தலுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரதானி அந்தோனி ரென்சுலீ இதனை தெரிவித்தார். ஆட்கடத்தலுக்கு எதிராக தாங்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார். மனித விற்பனை என்பது நாட்டினுள்ளும் நாடுகளின் எல்லைகளூடாகவும் நிகழும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குற்றச்செயலாகும் என்றும் …
-
- 0 replies
- 296 views
-
-
கல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் – அங்கஜன் by : Dhackshala கல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பூநகரி முழங்காவில் ஆகிய பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகங்கள் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார ரீதியில் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு இந்த புதிய அரசு தீர்மானித்துள்ளது. அந்த அடிப்படையில் பட்டதாரிகளுக்கும் வற…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை விவகாரம் : மேலாண்மை ஆணையம் அமைக்க டக்லஸ் கோரிக்கை பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையகத்தை அமைக்கவேண்டும் எனவும் இந்த ஆணையத்தில் 2 நாடுகளை சேர்ந்த மீன்வளத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், இலங்கை வடக்கு மாகாணம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட 2 நாடுகளில் இருந்தும் தலா 7 உறுப்பினர்கள் இடம்பெறவேண்டும் எனவும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த சனிக்கிழமை (08) பாராத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங…
-
- 0 replies
- 215 views
-
-
பிரதமர் மஹிந்த திருப்பதிக்கு விஜயம் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புத்தகாய மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (திங்கட்கிழமை) இந்த விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதுடன், நாளை நாடு திரும்பவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 7ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார். …
-
- 1 reply
- 477 views
-
-
விமல் வீரவன்ச அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்- ரவிகரன் விமல் வீரவன்ச அங்கோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் குறித்த அரசாங்கம் தக்க பதிலை வழங்கவே வேண்டும் என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். “காணாமல் ஆக்கப்பட்டோர்களை மண்ணுக்குள்ளிருந்துதான் தோண்டி எடுக்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் விடுதலைப் புலிகளே” என்பதான கருத்தை அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். அவரின் இக்கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்து கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு கூறியுள்ளார். அ…
-
- 0 replies
- 256 views
-
-
வவுனியாவில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயம் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா சாந்தசோலை உபவீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே விசமிகளால் இன்று (திங்கட்கிழமை) உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில், இச்செயற்பாடானது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடளித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். htt…
-
- 0 replies
- 288 views
-
-
இந்தியாவின் இராணுவ உதவியில்லாமல் யுத்தம் முடிந்திருக்காது – மஹிந்த இந்தியாவின் உதவியில்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் ரைம்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் “இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் பாகிஸ்தான் அளித்தது. இந்தியாவும் கூட இலங்கைக்கு உதவி செய்தது. ஆனால் அதை நாங்கள் பகிரங்கப்படுத்தவில்லை. இந்தியாவின் உதவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகளுடனான யுத…
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 7ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். மஹிந்த பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், செல்லும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரதமர-மஹநத-அடதத-வரம-இநதய-பயணம/175-244863
-
- 13 replies
- 1.2k views
-
-
அளவுக்கதிகமான பகிடி வதை – பாலியல் துன்புறுத்தல்கள் – 3 முக்கிய தீர்மானங்கள்…. February 8, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படு…
-
- 4 replies
- 907 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு காலை கூடுகிறது – மாலை கூட்டணி கட்சிகள் சந்திப்பு விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை ஞாயிறுக்கிழமை கைச்சாத்தாக இருக்கும் நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூட்டம் இன்று சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. நாளை செய்துகொள்ளப்படவிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் கூட்டணி தொடர்பான விளக்கங்களை மத்திய குழு உறுப்பினர்களுடன் விக்னேஸ்வரன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். இதேவேளை, இன்று சனிக்கிழமை மாலை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் கட்சிகளின் தலைவர்களும் முக்கிய உறுப்பினர்களும் நாளைய நிகழ்வுக்கான இறுதி ஏற்பாடுகளை செய்வதற்…
-
- 1 reply
- 462 views
-
-
மகா பிழையை மறைக்க அரசாங்கம் பூச்சாண்டி காட்டும் செயல்- பிரதமர் செயலக அறிக்கை குறித்து தமிழரசுக் கட்சி by : Litharsan தமிழில் தேசிய கீதத்திற்குப் பதிலாக ஜனாதிபதியின் உரை தமிழ் மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுக் காட்டுவது பூச்சாண்டி காட்டும் செயலாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கீதத்திற்கு ஜனாதிபதியின் பேச்சின் தமிழ் உரைப் பெயர்ப்பு எவ்விதத்திலும் ஈடாகாது. அவ்வாறு காட்ட முயல்வது, செய்யப்பட்ட ஒரு மகா பிழையை மறைப்பதற்குக் காட்டப்படுகின்ற பூச்சாண்டியே ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழில் தேசிய கீதம் பாடுவதை விட ஜனாதிபதியின் உரை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்…
-
- 3 replies
- 666 views
-
-
செய்த தவறுக்கு வருந்துகிறேன்: தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிட விரும்பம் – சாணக்கியன் by : Litharsan தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஏற்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் பட்டிருப்புத் தொகுதியில் அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளார் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் பூ.கணேசலிங்கத்தின் திருவுருவச் சிலை திரைநீக்க விழா மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “அமரர்.கணேசலிங்கம் ஐயா நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 3 replies
- 744 views
-
-
மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி ந.சரவணபவ அன்பே சிவம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகாசபையின் “அன்பே சிவம்” விருது வழங்கலும் சஞ்சிகை வெளியீடும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.அகில இலங்கை சைவ மகாசபையின் அன்பே சிவம் விருது மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி நமசிவாயம் சரவணபவ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அன்பே சிவம் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கலந்து சிறப்பித்தார்.அத்துடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான தொழில்நுட்ப பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.சிறிசற்குணராசா , கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஓய்வுநிலை விரிவுரையாளர் சி.…
-
- 0 replies
- 375 views
-
-
தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்த்திற்கும் “ஆப்பு” தயாராகிறது? February 8, 2020 தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது அவசியமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த வழியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலபிட்டிய பகுதயில் நடைப்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், தொல்லியல் பாதுகாப்பு செயற்பாடுகளை உயர் ஒழுக்க விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்க வேண்டியது அவசியமெனவும், அதனால் அவற்றின் மீது முழுமையாக அதிகாரத்தை செலுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். இந்நிலையில் வடக்கு கிழ…
-
- 0 replies
- 355 views
-
-
வவுனியாவில் தொடரும் சோதனை நடவடிக்கை: மக்கள் அசௌகரியம் வவுனியாவில் இரண்டு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மைய நாட்களில் யாழ். மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே, இச்சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதூர் மற்றும் ஓமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனையின்போது பேருந்துகளில் இருந்து வரும் பயணிகள் பகல், இரவு நேரங்களிலும் கீழே இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதன் பின்னர் புதூர் பிரதேசத்தில் சில மீற்றர் தூரம் நடந்து சென்றே மீண்டு…
-
- 0 replies
- 240 views
-
-
சஜித் பிரேமதாச பதவிக்கு வந்திருந்தால் இதை விட மோசமாக இருந்திருப்பர் - வரதராஜப்பெருமாள்
-
- 0 replies
- 378 views
-
-
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கைக்கு முழு அளவில் அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கும். அதே போன்று உள்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கைக்கான அனைத்து அமெரிக்க திட்டங்களிலும் தொடர்ந்தும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடமை பேணப்படும் என அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை உதவி செயலர் ஜோனோதன் ஹெனிக் தெரிவித்தார். இலங்கை - அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட கால இலக்குகளை அடைய பொது திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை உதவி செயலர் ஜோனோதன் ஹெ…
-
- 3 replies
- 514 views
-
-
இறால் பண்ணைகள் அமைப்பதற்கு எதிராக கடற்றொழில் விவசாய அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு! (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இறால் பண்ணைகள் அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதால் அதற்கு எதிராக கடற்றொழில் மற்றும் விவசாய அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். யாழ்ப்பாண குடாக்கடற்பரப்பில் யாழ்ப்பாணம் மற்றும் வெளியிடங்களைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு இறால் பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றது. குறித்த விடையங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் அதையும் தாண்டி பண்னைகள் அமைப்பதற்கு நடவட…
-
- 1 reply
- 808 views
-
-
வைத்தியர் ஷாபியின் வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டிவி கமெரா காட்சிகளை அழித்தவர் யார்? by : Yuganthini சட்டவிரோத கருத்தடை மற்றும் முறையற்ற விதத்தில் சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர் மொஹமட் ஷாபி சிஹாப்தீனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கமெராவில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாக குற்றவியல் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே அழிக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கையொன்றைப் பெறுமாறு, குருநாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளார். மொஹமட் ஷாபி சிஹாப்தீனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி…
-
- 1 reply
- 412 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடிவதை இடம்பெறு கின்றமை மற்றும் தொலைப்பேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு இன்று கூடி மிக முக்கியமான 3 தீர்மானங்களை எடுத்துள்ளது. மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகஸ்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வட்ஸ்அப் தகவல்கள், அலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளை பொலிஸாரின் இணையவழிக் குற்றங்கள் பிரிவு (S…
-
- 1 reply
- 359 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணியில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (7) காலை 11 மணியளவில் நடைபெற்றது. முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோறன்ஸ் லியோ தலைமையில் நடைபெற்ற குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிரதம வருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை கலந்துகொண்டார். மேலும் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார், கறிற்றாஸ் செடே தேசிய நிலையத்தின் இயக்குநர் அருட்தந்தை மகேந்திர குணதிலக்க, மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதைய இயக்குநர் அருட்தந்தை எஸ…
-
- 0 replies
- 383 views
-
-
பிரதமரின் கூற்று பொய்: மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் தமிழர்களின் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு- ரவிகரன் by : Litharsan மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களுடைய பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தரவுகளைக் கொண்டு சுட்டிக்காட்டியுள்ளார். மகாவலி ‘எல்’ வலயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக முல்லைத்தீவு கள்ளப்பாட்டுப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் மகாவலி ‘எல்’ காணிகள் சம்பந்தமான கேள்விக்கு, பி…
-
- 0 replies
- 401 views
-
-
இலங்கையில் தான் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்தம் குறித்து பேசும் போது சிங்களவர்கள் பௌத்த சமயம் அவர்களுடையது என நினைப்பதே பிரதான பிரச்சினையாகும். புத்தர் சிங்களவர் அல்ல எனக் கூறினால் மாரடைப்பு ஏற்படக் கூடியவர்கள் இருக்கின்றனர். விஜயன் சிங்களவர் அல்ல எனக் கூறினால், எங்களுடன் சண்டைக்கு வருபவர்களும் இருக்கின்றனர். பௌத்தத்தை சிங்களவர்களின் சொத்தாக மாற்றிக்கொள்ளாமல், பௌத்தம் என்பது வடக்கு, தெற்கு கிழக்கு, மேற்கு என அனைவருக்கும் சொந்தமான உலக தர்மம், வா…
-
- 0 replies
- 363 views
-