ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் -சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்,சண்முகம் தவசீலன் சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்கும் வகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், கிளிநொச்சியில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்று காலை 10 மணிக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில், வடக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர். குறித்த போராட்டம் இரு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டன. ஒரு தரப்பினர் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு ஏ9 வீதியில் தமது எதிர்ப்பை வெளியிட்டவாறு சென்றனர்.…
-
- 3 replies
- 444 views
-
-
அரசாங்கம் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது -மனோ கணேசன் தேசிய சுதந்திர தின நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை, சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில், நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி, தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது. ஒரு இலங்கையனாக வெட்கமும், கவலையும் அடைகிறேன் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தன் டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். தமது சமூக தள செய்தி பற்றி மேலதிக விளக்கம் கேட்ட போது, இந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என மனோ கணேசன் எம்பி கூறினார். இன்றைய சுதந்தி…
-
- 1 reply
- 475 views
-
-
யாழ். உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று மாணவர்கள் ஒன்றுதிரண்டு, இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். சுமார் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு, தமக்கு டிப்ளோமா கற்கைகளாக மாற்றினால், தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும். ஆகையினால், டிப்ளோமாவை பட்டப்படிப்பாக மாற்றினாலும், பட்டப்படிப்பை டிப்ளோமா கற்கையாக மாற்ற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மட்டுமன்றி, கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் எதிர்வரும் 5ம் திகதி கொழும்பு மாணவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும்…
-
- 1 reply
- 630 views
-
-
வடக்கு மாணவர்கள் இந்திய புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில் அக்கறை இல்லை -இந்தியத் துணை தூதுவர் யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹோட்டலில், இன்று கல்விக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இந்தியத் துணை தூதுவர் கே. பாலச்சந்திரன் வடக்கு மாணவர்கள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில், அக்கறைக் காட்டுவதில்லையென தெரிவித்தார்.இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களை தென்னிலங்கையில் இருக்கின்ற மாணவர்களே அதிகமாகப் பெறுவதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் புலமைப் பரிசில்களைப் பெறுவது மிகக் குறைவாக இருக்கிறது எனவும் மேலும் தெரிவித்தார் http://www.…
-
- 11 replies
- 1.4k views
-
-
ஒவ்வொருவரும் நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் எனவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நாம் நாட்டுப்பற்றாளர்களாக மாறவேண்டும் என்றும் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதியும் கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். தஃவா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழா சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. தஃவா இஸ்லாமிய்ய கலாபீடத்தின் தலைவர் யூ.எல்.எம்.காஸிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வின் போது காலா பீடத்தில் கற்கை நெறியை பூர்த்தி செய்ய மாணவர்களுக்கு பட்டமளிப்பு செய்யப்பட்டதோ…
-
- 3 replies
- 503 views
-
-
தமிழினம் தூரநோக்கு அற்று வாழ்ந்து வருகின்றது. இது எமது அழிவுக்கு வழிவகுக்கின்றது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யா{வடலியடைப்பு சைவப் பிரகாச வித்தியாசாலை விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய விக்னேஸ்வரன், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் நிலைபற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? பெரும்பான்மையின மக்கள் இலங்கை காவற்படைகளில் சேர்ந்து முழு ஒத்துழைப்புடன் காரணகாரியங்களை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றார்கள். ஏதோவழியில் அவர்களுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வரு கின்றது. எம்மவர்களோ எதிர்கால தூர நோக்கு …
-
- 0 replies
- 527 views
-
-
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அணிந்திருந்த ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களை அணிந்திருந்த முதல் சம்பவம் இதுவாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் நேற்று சுதந்திர சந்துக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி வருகை தந்த வேளையில் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த பதக்கங்கள் ஜனாதிபதி இராணுவத்தில் சேவையாற்றிய காலத்தில் அவர் பெற்ற பதக்கங்கள் என கூறப்படுகின்றது. குறிப்பாக அவரது இராணுவ சேவைக் காலத்தில் ரண விக்கிரம மற்றும் ரண சூர பதக்கங்கள் அவர் பெற்றுக்கொ…
-
- 1 reply
- 945 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் இந்த நாளில் மட்டும் சுதந்திரத்தைப் பற்றி கதைக்காமல் எப்போதும் மற்றவர்களுடைய சுதந்திரத்தை மதிக்கின்றவர்களாக இருப்போமாக இருந்தால், இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படுமென, மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று (04) நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சுதந்திரம் என்பது, நலிவடைந்தவர்களுக்கு வழிமையானவர்கள் வழங்குகின்ற ஒரு சந்தர்ப்பமெனத் தெரிவித்தார். மற்றவர்களுடைய உரிமைகளை மதிக்கின்ற தன்மையை நாளாந்தம் பின் பற்ற வேண்டுமெனத் தெரிவித்த அவர், மற்றவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று தாங்கள் அனைவரு…
-
- 0 replies
- 325 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் தமிழர்களுக்கு எஜமான் மாறினாரே தவிர சுதந்திரம் கிடைக்கவில்லையென, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, அவர்கள் இன்று (04) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பிரிட்டிஸ்காரர்களின் கீழ் அடிமையாக இருந்ததை விட சிங்களவர்களின் கீழேயே அடிமைப்படுத்தல்கள் கூடுதலாக உள்ளனவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைமுகமாகவும் மெதுவாகவும் நடத்தப்பட்ட அடக்குமுறைகள், புதிய அரசாங்கம் பதவியேற்றதும் வெளிப்படையாகவும் தீவிரமாகவும் நடக்கின்றனவெனத் தெரிவித்துள்ள அவர்கள், இந்த நிலையிலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய தாங்…
-
- 0 replies
- 335 views
-
-
“நாம் பிளவுபட்டு நிற்பதால், சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னமும் அபிவிருத்தி அடையாமல் இருக்கின்றோம்” என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸபாஹிர் மௌலானா ஆதங்கம் வெளியிட்டார். ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வு, பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் தலைமையில், ஏறாவூர் வாவிக்கரை அஹமட் பரீட் மைதானத்தில் இன்று (04) நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அலிஸாஹிர் மௌலானா, “நாம் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அபிவிருத்தி அடைவதற்குத் தேவையான அத்தனை வளங்களும் நமது நாட்டில் இருக்கின்றன. “எனினும், அந்தப் பெருமையை அடைந்து …
-
- 0 replies
- 813 views
-
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் பொது மன்னிப்பில் விடுதலை! இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்களில் 512 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்படுகின்றனர். இதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். சிறைச்சாலையிலிருந்து பெண்ணொருவர் உட்பட 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாது சிறையில் உள்ளவர்கள் எனவும், அதில் நான்கு பேர் வழக்குகளுக்காக தடுத்து வைக்…
-
- 3 replies
- 708 views
-
-
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் உரிமைகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கோரி அக்கரப்பத்தனையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது. நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் பல பாகங்களில் பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இந்திய வம்சாவளி என கூறப்படும் இவர்கள் 72 வருடங்கள் நாடு சுதந்திரம் பெற்றிருந்தாலும் இம்மக்கள் இன்னும் அடிமையுடன் இருப்பதோடு, தோட்ட தேயிலை மலையில் தொழில் செய்யும் இவர்கள் நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெழும்பாக இருப்பதுடன், உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை அரசாங்கம் வழங்காமல் சுதந்திரம்…
-
- 0 replies
- 419 views
-
-
இன்னும் பத்தாண்டில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே: சிவாஜி.! 2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம். இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது. அதாவது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், த…
-
- 26 replies
- 3k views
-
-
திருமலை ஊடகவியலாளர்களின் வடக்கு நோக்கிய பயணம் ஹஸ்பர் ஏ ஹலீம், வடமலை ராஜ்குமார் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி தலைமையில், வடக்கு நோக்கிய இரு நாள் களப் பயணம், அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. நல்லூர் கோயில், கீரிமலை, இரணைமடுக் குளம், யாழ். கோட்டை, சிவபூமி அரும்பொருள் காட்சியகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு மேற்படி ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மூவினத்தையும் உள்ளடக்கிய நல்லிணக்கப் பயணமாக அமைந்த இந்த வடக்கு நோக்கிய களப் பயணத்தினூடாக பல்வேறு அனுபவப் பகிர்வுகளைக்…
-
- 0 replies
- 259 views
-
-
அரசியல் இலஞ்சம் செய்வதில் TNA க்கு முதலிடம் - கருணா குற்றச்சாட்டு அரசியல் இலஞ்சம் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில் உள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். வாழைச்சேனை, பேத்தாழை பிரதேசத்தில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் நேற்று (29) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலஞ்சம் வாங்கியுள்ளனர். அரசியல் இலஞ்சம் செய்வதில் தமி…
-
- 11 replies
- 912 views
-
-
பிரிட்டிஸ்காரர்களைக் காட்டிலும் சிங்களவர்களிடமே அதிகம் அடிமைப்படுகிறோம் – உறவுகள் அறிக்கை இலங்கை 1948 மாசி 4ஆம் திகதி சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டாலும் தமிழர்களுக்கு எஜமான் மாறியதைத் தவிர சுதந்திரம் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், பிரிட்டிஸ்காரர்களின் கீழ் அடிமையாக இருந்ததை விட சிங்களவர்களின் கீழேயே அடிமைப்படுத்தல்கள் கூடுதலாக உள்ளதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மறைமுகமாகவும் மெதுவாகவும் நடத்தப்பட்ட அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் புதிய அரசாங்கம் பதவியே…
-
- 0 replies
- 343 views
-
-
தனக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாவுக்கும் ஏற்பட்டுள்ளது – மைத்திரி 2015ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக வந்தபோது தனக்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எனக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அது ரகசியம் அல்ல. நான் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனேயே செயற்பட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என செயற்பட்டேன். இதன்போது எங்களுக்குள் சில முரண்பாடுகள் ஏற்பட்டன. ந…
-
- 8 replies
- 1.3k views
-
-
நாடு முழுவதும் மாறி மாறி இரண்டு மணி நேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் விநியோகிக்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் அனல் மின் உற்பத்தி நிலையங்களே தேவைப்படும் மின்சாரத்தை விநியோகித்து வருகிறது. இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் வரை கீழ் காணப்படும் நேரங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட உள்ளது. A : 08.30 - 10.30 B : 10.45 -12.45 C : 12.45 - 14.45 D : 14.45 - 16.45 ஆகிய நேரங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட உள்ளது. மின் விநியோக க…
-
- 1 reply
- 294 views
-
-
-எஸ்.நிதர்ஷன் மாகாணத்துக்குத் தன்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி தான் சிந்திக்கவில்லையெனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ,கே.சிவஞானம், அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க மாவை சேனாதிராஜாவே பொருத்தமானவரெனவும் கூறினார். ஆனாலும் ஏதேனும் காரணங்களால், அவர் களமிறங்காதவிடத்து அடுத்த தெரிவு நானாகவே இருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், இதனை கட்சி செய்யாதவிடத்து, அதற்கு எதிராக தன்னுடைய செயற்பாடுகளை தான் முன்னெடுப்பேனெனவும் கூறினார். நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்க…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
பெப்ரவரி 04 ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட கரிநாள்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சிறிலங்காவின் 72வது சுதந்திர தினத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சிறீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச அதிபராக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரத்தில் பதவியேற்ற நிலையில் சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினம் இன்னும் சில தினங்களில் சிங்களப் பேரினவாதம் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைத்துக் கொண்டாடத் தயாராகின்றது. ஈழத்தமிழ் மக்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை, ஏனெனில் இந்நாள் வட…
-
- 8 replies
- 2.6k views
-
-
பாரம்பரிய நெற்செய்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயி வெற்றி அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மகேஸ்வரநாதன் கிரிஷன் இயற்கை விவசாயத்தில் பாராம்பரிய நெற் செய்கையினை மேற்கொண்டு வெற்றியீட்டியுள்ளார். யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் இயற்கை விவசாய முறையில், நெற்செய்கை செய்த விவசாயியின் விளைச்சலை இந்தியத் துணைத்தூதுவர் கே.பாலச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது இயற்கை விவசாயிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார். இயற்கை விவசாயியான கிரிஷன், பாராம்பரிய விதை நெல் இனங்களான மொட்டைக் கறுப்பன், சுகந்தன் போன்றவற்றை இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்தார். அத்தோடு, பாராம்பரி…
-
- 7 replies
- 577 views
-
-
இலங்கையில் உணவகங்களில் சீன பிரஜைகளிற்கு அனுமதிமறுக்கப்படுவது மற்றும் வாகனங்களில் அவர்களை ஏற்றுவதற்கு தயக்கம் காணப்படுவது குறித்து சீனா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் செங் சூயுவான் அறிக்கையொன்றில் இது குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. டாக்சிகள், மற்றும் சில ஹோட்டல்களில் சீன மக்களிற்கு இடமளிக்க மறுப்பது கவலையளிக்கின்றது. உண்மையான நட்பு என்பது நெருக்கடியான தருணங்களிலேயே வெளிப்படுத்தப்படவேண்டும் வெளிப்படும். இலங்கை மக்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கின்றோம் அதேவேளை சீனா பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு வேகமாக நடவடிக்கைகளை எடுப்பதைஇலங்கை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்துள்…
-
- 3 replies
- 596 views
-
-
அ.அச்சுதன், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.கீத் திருகோணமலை மாவட்டத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் சங்கத்தினர், திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்குக்கு முன்னால், இன்று (03) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். மேற்படி சங்கத்தின் தலைவி திருமதி ஆஷா தலைமையில், "எம் பிள்ளைகள் எமக்கு வேண்டும்” என்ற தொனிப்பொருளில், அமைதியான முறையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும்”, “நாமும் இலங்கை மக்கள்தான், எமக்கும் சுதத்திரம் வேண்டும்”, “எமக்கு சரியான நீதி வேண்டும்”, “எமது பிள்ளைகளை விடுதலை செய்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேவேளை,…
-
- 0 replies
- 643 views
-
-
<p>காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தல், அதுகுறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் இழப்பீடுகளை வழங்குதல் ஆகியவை இடம்பெற வேண்டும் என்றே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்த அவர், காணாமல்போனோரின் உறவுகளுக்கான பதிலைப் பெற்றுக்கொடுப்பதற்கான முக்கிய பணியைச் செய்துவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினரைச் சந்தித்தேன். இலங்கையில் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதுகுறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இழப…
-
- 3 replies
- 461 views
-
-
இலங்கையின் சுதந்திரத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி நீதிக்காக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் இதற்கு பூரண ஆதரவினை வழங்குவதோடு போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு தமிழ் உறவுகள் அனைவரிடமும் அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம். எமது மக்களின் ஜனநாயக முறையிலான போராட்டங்களில் எமது மாணவர் ஒன்றியம் தொடர்ந்தும் பயணிக்கும். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம் மக்களும் காலா காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்ற போதும் எமது மக்களின் போராட்டங்களை யாருமே கண்டு கொள்ளாத நிலையிலே விரக்தியின் விளிம்பில…
-
- 0 replies
- 254 views
-