Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கதவுகளைத் திறந்து வைத்திருப்பது மாத்திரமே எனது பொறுப்பு.!! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியில் இருந்து எவரையும் வௌியில் அனுப்பவில்லை எனவும் பிரிந்து சென்றவர்கள் ஒற்றுமையாக மீண்டும் இணைந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்காலம் முடியும் வரை கூட்டமைப்பில் இருந்துவிட்டு, அடுத்தநாள் புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். கஜேந்திரகுமாரும் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகக் குறிப்பிட்ட சுமந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந…

    • 9 replies
    • 1.4k views
  2. கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலமொன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்கும் தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 1952 ஆம் ஆண்டு 44 இலக்க கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இலங்கையின் சாதாரண திருமண சட்டம் மற்றும் முஸ்லிம் திருமண சட்டம் ஆகியன தொடர்பில் திருத்தங்களுடனான நான்கு சட்டமூலங்களை அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் டொக்டர் துசிதா விஜேமான்ன ஆகியோர் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கண்டிய-திருமணச்-சட்டம்-ர/

  3. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க காவல்துறை வேண்டாம் இராணுவமே வேண்டும் என கல்லாறு கிராம பெண்கள் விடுத்த கோரிக்கையினை இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.பொது மக்களின் இக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட இராணுவம் உடனடியாக தாங்கள் குறித்த இடத்தில் இராணுவ சோதனை சாவடி ஒன்றை அமைக்க இணக்கம் தெரிவித்தனர். இதன் பின்னரே பொது மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படும் உழவு இயந்திரங்கள், டிப்பர்கள் அதிக வேகத்துடனான போக்குவரத்தால் குழந்தைகள் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இவ்வீதியால் அனுப்புவது என்பதே மிகப்பெரும் ஆபத்தான விடயமா…

  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகிய இருவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் தாம் இருவரும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக இருவரும் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமூடாக நாடாளுமன்ற உறுப்பினராக வர இருப்பது கூட்டமைப்புக்குள்ளும் பங்காளி கட்சிகளுக்குள்ளும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் ஒரு அறை கூவலை விடுத்திருந்தார். அந்த அறைகூவலில் இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னுரிமை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். சம்பந்தன் கடந்த 43 வருடங்களாக நாடாளுமன்ற அரசியலில் இருந்து 87 வயதைக் கடந்துள்ள நி…

  5. இஸ்ரேலிய பாணியில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு: தடுத்து நிறுத்த தமிழக அரசியல்வாதிகளை ஒன்றிணைய விக்னேஸ்வரன் வேண்டுகோள் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடும் இந்த உலகத் தமிழர் திருநாள் விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகம் பூராகவும் பரந்து கிடக்கும் தமிழ் உறவுகள் இவ்வாறு வருடா வருடம் கூடுவது வரவேற்கத்தக்கது. ஒவ்வோர் நாடுகளில் இருந்தும் வந்து தமது தனித்துவமான தற்போதைய பிரச்சினைகளை எமது உறவுகள் இங்கு வெளியிடவும், எமது தமிழ் இனத்தின் பாரம்பரிய ஒன்றித்த கலை, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை இங்கு அரங்கேற்றவும், உலகெலாம் பரவிக் கிடக்கும் எமது உறவுகளின் வருங்கால வாழ்வு மேம்பாட்டுக்காக இங்கு வந்து கருத்துப் பரிமாறி உரிய நடவடி…

  6. றிப்கான் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை! January 11, 2020 வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினரும், முன்னால் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரருமான முஹமட் றிப்கான் பதியுதீனை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சி.ஐ.டியினர் தெரிவித்துள்ளனர். மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி காணி உறுதிப்பத்திரங்களை தயார் செய்து கையக்கப்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இடம் பெறும் விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய றிப்கான் பதியுதீனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அவரை தேடி வருவதாக சி.ஐ.டி.யினர் …

  7. அரசாங்க பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற ஒரு இலட்சம் மாணவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. "அபிவிருத்தி உதவியாளர்கள் சேவை" என்ற புதிய பதவியை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்த கல்வித் தகுதிகளுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/235894?ref=home-feed

    • 1 reply
    • 319 views
  8. நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் அராஜகம் தலை தூக்கியுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாடாளுமன்றத்தை அரசியல் சேறு பூசும் செயற்பாடுகளில் இருந்து விடுவித்து அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் இடமாக மீண்டும் மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. மேலும் தற்போது வெளிவரும் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளின் மூலம் கடந்த அரசாங்கம் நீதிமன்ற செயற்பாடுகளில் எந்தளவிற்கு தலையீடு செய்துள்ளது என்பது புலப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளின் …

    • 1 reply
    • 316 views
  9. நுவரெலியாவில் இரு பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மலையகத்தின் கல்வி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா – சந்ததேன்ன என்ற இடத்தில் அமைந்துள்ள இலங்கை வனவியல் நிறுவனம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வியை வழங்க முழுமையான பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அதேபோன்று நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பகுதியில் மேலுமொரு தனி பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/மலையகத்தில்-இரு-பல்கலைக்/

    • 0 replies
    • 432 views
  10. அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்! (மட்டக்களப்பு, தமிழீழம்) தென் தமிழீழம் மட்டக்களப்பு நகரில் உள்ள ‘சிறீ மக்களராம ராஜமகா வித்தியாராஜா’ என்ற பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தை ஒருவருக்கு கன்னத்தில் அறையும் காணொளி பெரும் அதிர்ச்சியை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. . மேற்படி சம்பவம் பற்றி அறியப்படுவதாவது பெந்திகோஸ் மத அமைப்பின் அருட் தந்தை இறந்தவர்கள் கடைசியல் எங்கே போகிறார்கள் என கேட்க ‘நீ எனக்கு மதம் படிப்பிக்க முயல்கிறாயா?’ என அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தைக்கு கன்னத்தில் அறைந்துள்ளார். மேற்படிக் காணொளியும் தமிழில் விளக்கமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. …

    • 232 replies
    • 22.9k views
  11. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் சிங்கள மாணவர்கள் தqங்கியிரு்கும் வீடொன்றிலிருந்து வாள் ஒன்று மீட்கப்ட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள விடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் பலர் குறித்த வீட்டில் தங்கியுள்ளனர்.அந்த வீட்டின் மேல் தளத்தில் வா் ஒன்று இருப்பதாக வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அந்த வாளை மீட்டனர்.ஆனால் இந்த வாள் இருந்தமை தொடர்பாக தமக்குத் தெரியாது என அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் தெரிவித்தனர்.…

    • 4 replies
    • 948 views
  12. சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – டலஸ்! சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிப்பது எமது நோக்கமல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ் – முஸ்லிம் மக்களை புறக்கணித்து தனி பௌத்த இராஜ்ஜியத்தை தோற்றுவிக்கும் விதத்தில் தேர்தல் சட்டத்தினை திருத்தியமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். எந்த இன மக்களையும் ஓரங்கட்டி செயற்பட வேண்டும் என்பது ஜனாதிபதியின் நோக்கமல்ல’ எனக் …

    • 3 replies
    • 719 views
  13. சிங்கள மக்கள் விரும்பும் தீர்வே தமிழ் மக்களுக்கு கிடைக்கும்.! நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் ஆரம்பமாகும். அந்தத் தீர்வு சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வாகத் தான் இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பதில் கொடுத்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். அப்போது தான் சர்வதேச முதலீடுகள், அபிவிருத்திகள் என அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜ…

    • 3 replies
    • 719 views
  14. கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிவிட்டேன்- பிரதமர் மஹிந்த தான் ரஞ்ஜன் ராமநாயக்கவுடன் பேசியதில்லையெனவும், கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிவிட்டேன் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனது அதிர்ஷ்டம் நான் பேசவில்லை. பிறந்த தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே என்னால் நடந்தது. தவறுதலாக நானும் பேசியிருந்தால் நிச்சயமாக அதனையும் வெளியே விட்டிருப்பார்கள். நேற்று (09) அலரி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம், பிரதமரே நீங்களும் ரஞ்சனுடன் பேசினீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற…

    • 2 replies
    • 910 views
  15. முக்கிய பெண் பிரமுகர்கள் சிக்கும் அபாயம் – ரஞ்சனின் குரல்பதிவுகளை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தம்! நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாதிவெல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வைத்து ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது அவரிடமிருந்து இறுவெட்டுக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இவ்வாறு கைப்பற்றப்பட்டிருந…

    • 3 replies
    • 495 views
  16. முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்! முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. ‘வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்’ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது. குறித்த மாநாடு யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை பிரிவின் ஏற்பாட்டில், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இன்றைய நிகழ்வின் போது ஆய்வரங்க கட்டுரை வெளியீட்டு தொகுதியை தமிழ்த்துறை தலைவர் இரகுநாதன் வெளியிட்டு வைக்க, தகுதி வாய்ந்த அதிகாரி கந்தசாமி பெற்றுக்கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழ…

    • 2 replies
    • 817 views
  17. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசிக் கலந்துரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகளை, பொலிஸாரே சமூக வலைத்தளங்களுக்கு வெ ளியிட்டனர் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் குரல் பதிவுகள் தொடர்பான பொறுப்பு, இதுவரை காலமும் அவற்றைக் கூடவே வைத்திருந்தவர்களையே சாருமென்றும் இது விடயத்தில் பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைப்பது, விசாரணைகளுக்குத் தடையாக இருக்குமென்றும் இது பற்றிய தவறான கண்ணோட்டமொன்று, பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் என்றும், பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்து குற…

    • 1 reply
    • 1.1k views
  18. மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவை, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைக் கடுமையாகத் திட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலரும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலருமே, நேற்று முன்தினம் (08) ஜனாதிபதியைச் சந்தித்து, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அப்போது அவர்கள், ரஞ்சன் ராமநாயக்க எம்.பியின் அலைபேசிக் கலந்துரையாடல்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால், சாதகமான சூழ்நிலையொன்று தோன்றியிருப்பதாகவும் இதைப் பயன்படுத்தி, து…

    • 1 reply
    • 406 views
  19. யாழில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் தாயும் தனக்கு தானே தீ மூட்டினார் யாழில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் தாயும் தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தற்கொலை செய்த மாணவி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர், நீண்ட நேரமாக அழுது கொண்டு இருந்துள்ளார்.தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற பேரப் பிள்ளையை காணாத அம்மம்மா, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியலறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த திடீர் மரண விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் பொலிசார் விசாரணை மேற்கொ…

  20. இதுவரை 300 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை 300 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்த நபர்களிடம் இருந்தும் அதேபோல் முறைப்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடம் இருந்தும் இவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இதற்கமைய இதுவரை 345 பேரிடம் ஆணைக்குழு வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளது. ஆணைக்குழுவின் பதவி காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதுடன், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவ…

    • 0 replies
    • 860 views
  21. புகையிரத தண்டவாள பாதைகள் இன்னும் இருமாத காலத்திற்குள் நவீனமயப்படுத்தப்படுவதுடன், புகையிரத சாரதிகளாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக முன்னெடுக்கப்படும் என புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாநயக்க தெரிவித்தார். பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட புகையிரத தண்டவாள பாதைகளே இன்றும் காணப்படுகின்றன. பல வருட காலமாக இப்பாதைகள் சீர்திருத்தம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக புகையிரத சேவையில் பல நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளன. புகையிரத தண்டவாள பாதைகளை நவீனமயப்படுத்தி புகையிரத சேவையினை வினைத்திறனாக மாற்றியமைக்கும் யோசனை போக்குவரத்து அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆரம்பகட்டமாக புக…

  22. (நா.தனுஜா) போர்க்கால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும், புதிதாக நியமனம் பெற்றுள்ள ஏனைய அதிகாரிகளும் அண்மைக்காலமாக மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் பெற்ற நன்மைகளை விரைந்து சீர்குலைக்கின்றனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சாடியிருக்கிறார். அத்தோடு மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்த உத்தரவாதத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக வாய்ப்புக்களை இலங்கைக்கு வழங்கும் நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பயங்கரவாதத் தடைச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அது பின்னர் எண்ண…

  23. பதற்ற நிலை குறித்து சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்ட அறிவித்தலுக்கு விளக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை குறித்து சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் அந்நாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு விடுத்த விசேட அறிவித்தலுக்கு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட அறிவித்தலில், அதிக சனநடமாட்டம் உள்ள இடங்களிலிருந்து ஒதுங்கியிருக்குமாறும், அவசியமற்ற வெளிப்பயணங்களை தவிர்ந்து கொள்ளுமாறும் தூதரகம் கேட்டுள்ளது. தனது கடவுச் சீட்டை எந்த நேரத்திலும் தயாராக வைத்திருக்குமாறும் சவுதி தூதரகம் அந்நாட்டிலுள்ள இலங்கையர்களைக் கேட்டுள்ளது. பின்னர், அந்த அறிவித்தல் குறித்து விளக்கமளிக்கும் மற்றுமொரு அறிவ…

    • 0 replies
    • 387 views
  24. யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரைச் சந்தியில் அமைந்துள்ள லவ்லி கூல்பாரில் நேற்று இனந்தெரியாதகாடையர்களால் களவு நோக்கத்துடன் நடத்தப்பட்ட வெறித்தனத்தில் லவ்லி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த ஊழியரைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் அவர்கள் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறைகுடிபோதை வெறித்தனத்துடன் நடந்துகொண்ட காட்டுமிராண்டி காடையர்களை இனங்காண்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-யாழ்மாநகரசபைக்குச் சொந்தமான பண்ணை கடந்கரைப் பூங்காவில் பகல் வேளைகளிலும் மாலை வேளைகளிலும் இரவு வேளைகளிலும் இளைஞர்கள் மது அருந்துவதும், பல ஜோடிகள் தகாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையும் கண்…

    • 2 replies
    • 572 views
  25. நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்­லிம்­களில் கடந்­த­கா­லத்தில் சுமார் 200 க்குட்­பட்ட முஸ்­லிம்­களே தீவி­ர­வா­தி­க­ளென்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டார்கள். இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் தீவி­ர­வா­திகள் போன்று கரு­து­வதும், முஸ்­லிம்கள் புல­னாய்வுப் பிரிவின் உயர்­ப­த­வியில் இருக்­கக்­கூ­டாது என்­பதும் கண்­டிக்­கத்­தக்­க­தாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும், அக்­கட்­சியின் பிரதித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார். புல­னாய்வுப் பிரிவின் முக்­கிய பத­வியில் முஸ்லிம் ஒரு­வரை நிய­மித்­துள்­ள­மைக்கு பாரா­ளு­மன்­றத்தில் தனது உர…

    • 3 replies
    • 967 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.