ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டெனத் தெரிவித்த நவ சமசமாஜக் கட்சி, தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நவ சமசமாஜக் கட்சியின் 42ஆவது ஆண்டு விழா, இம்முறை "வலிமையான ஜனநாயகத்துக்கான மாற்றம்" என்ற தொனிப்பொருளில், கொழும்பு புதிய நகர மண்டபத்தில், நாளை(01) நடைபெறவுள்ளது. இது குறித்து கட்சி வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை வரலாற்றில், தேசிய இனங்களின் உரிமைகளுக்காகவும், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளுக்காகவும் நவ சமசமாஜக் கட்சி அயராது உழைத்து வருகிறது. ‘2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத…
-
- 2 replies
- 678 views
-
-
தமிழ்த் தலைமைகளால், கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதை இனியும் அனுமதிக்கமுடியாதென, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கூட்டு சனநாயகப் பணிக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு, அதன் தலைவர் தலைமையில், மட்டக்களப்பில் இன்று (06) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன. அத்துடன், எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற, மாகாண சபை …
-
- 0 replies
- 411 views
-
-
குட்டையைக் குழப்பிய தேசியகீதம் Published by Loga Dharshini on 2020-01-06 16:06:05 தமிழில் தேசிய கீதம் இசைக்கும் விவகாரம் இப்போது, பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கின்ற நிலையில், அரசாங்கத் தலைமை தமக்குரிய பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது. வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தில் சிங்களத்தில் மட்டும் தான், தேசிய கீதம் பாடப்படும், தமிழில் பாடப்படாது, இந்தியாவில் கூட ஹிந்தியில் மட்டும் தான் தேசிய கீதம் பாடப்படுகிறது என்று கூறி, இந்த சர்ச்சைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன். சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழுவி…
-
- 1 reply
- 488 views
-
-
(ஆர்.யசி) போர் குற்றங்களில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை ஏற்றுவிட்டு இப்போது அதிலிருந்து விலகி நிற்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் என்ன சொல்லப்போகின்றனர் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். கடந்த ஆட்சிக் காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை ஆதரித்ததன மூலம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காணி விடுவிப்பு, அரசியல் கட்சிகளின் விடுதலை என பல நல்ல விடயங்கள் இடம்பெற்றது. எனினும் அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் ஆரோக்கியமான …
-
- 1 reply
- 549 views
-
-
அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (31) காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். வெள்ளை வேன் சம்பந்தமாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான விசாரணையில் ரூமி மொஹமட் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2019/12/31/உள்நாடு/46164/வெள்ளை-வேன்-ஊடகவியலாளர்-சந்திப்பு-ரூமி-மொஹமட்-கைது Former State Pharmaceutical Corporation (SPC) Chairman Dr.Rumy Mohamed, who was absconding over white Van press conference case, has been ar…
-
- 4 replies
- 1.1k views
-
-
(இராஜதுரை ஹஷான்) நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் மத சுதந்திரத்தையும் சிங்கள பௌத்தர்களே பாதுகாத்துள்ளார்கள். 'சிங்களயா மோடயா கெவும் கன்ன யோதயா’ (சிங்களவர்கள் முட்டாள்கள் பலகாரம் உண்பதற்கே சூரர்கள்) என்று குறிப்பிட்ட பழமொழி கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதியுடன் மாற்றியமைக்கப்பட்டது. நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் வெற்றிப் பெற்றிருந்தால் சிங்கள இனத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாலி திரிபிடக துறையில் தேர்ச்சிப் பெற்ற 5000ஆம் பௌத்த மத பிக்குகளுக்கு டெப் ரக கணனி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சுஹததாஸ உள்ளக அரங்கில் இடம் பெற்றது. இ…
-
- 0 replies
- 226 views
-
-
தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறிய நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ளபோது, தமிழ் மக்களை தலைமை தாங்கப்போவது சுமந்திரனா என்பதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்கவேண்டும். முன்னாள் முல்வர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, இன்னும் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பலர் இணைந்து "தமிழர் ஐக்கிய முன்னணி" என்ற அமைப்பினை உருவாக்கியிருக்கியிருக்கின்றோம். இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இந்த மாற்று அணியுடன் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேணடுமென ஈ.பி.ஆர்.எல் எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். முல்லைத்தீவு - தண்ண…
-
- 0 replies
- 386 views
-
-
கோத்தாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி - மாவை அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்வாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில், 04.01நேற்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது அரசதலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர், இந்த நீண்ட நெடிய வரலாற்…
-
- 3 replies
- 915 views
-
-
பெரும்பான்மைவாதம் தொடர்வது பேராபத்து; தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் கூட்டாக எச்சரிக்கை! ஆர்.ராம் ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் பிரதிபலிப்புக்களை அடியொற்றி தொடர்ந்தும் பெரும்பான்மை வாதத்தினை முன்னிலைப்படுத்தி செயற்பட்டுக் கொண்டிருப்பதானது இனங்கள் மென்மேலும் துருவப்படுத்தப்படும் பேராபத்தையே தோற்றுவிக்கும் என்று தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நாட்டின் சுபீட்சத்தையும், எதிர்காலத்தினையும் கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் மனநிலையிலும் அவரது போக்கிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டியது அவசியம் என்றும் அத்தரப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஜனாதிபதி கோத்தாப…
-
- 2 replies
- 531 views
-
-
மன்னார் பேசாலை ஓலைத் தொடுவாயை சேர்ந்த சூசைப் பிள்ளை இராசேந்திரம் (வயது 72 ) என்பவரே மேற்படி உயிரிழந்த வராவார். கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி இவருடைய மகன் இ.அன்ரனி ரஞ்சன் காணா மல் ஆக்கப்பட்டார். தனது மகனை கடந்த 11 வருடங் களாக இவர் தேடி வருகிறார் - 3 வருடங்களாக தொடர் போராட்டங் களின் மூலம் தனது மகன் தொடர் பில் நீதி கேட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தி னம் இரவு மன்னார் வைத்திய சாலையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவு களை தேடி வந்தவர்களில் இது வரை 56 பேர் உயிரிழந்துள் ளமை குறிப்பிடத்தக்கது. http://valampurii.lk/valampurii/content.php?id=20278&ctype=news
-
- 1 reply
- 476 views
-
-
’21 - 22ஆவது திருத்தம் ஜனநாயகத்தை ஒழிக்கும் நடவடிக்கை’ நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ள 21 மற்றும் 22ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையின் ஊடாக, அண்மைக்கால அரசியலில் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் இல்லாமலாக்கப்படுவதே நடைபெறும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரதான அரசியல் கட்சிகளின்றி ஏனைய கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தர்ப்பத்தை இல்லாது செய்யும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு திருத்த யோசனையை தோல்வியடைய செய்ய நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/21-22ஆவத-தரததம-ஜனநயகதத-ஒழககம-நடவடகக/175-243478
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
-செ.கீதாஞ்சன் வன்னி மாவட்டம் முழுவதும் ஒரு பாரிய எழுச்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், பல கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றவர்களும் தங்கள் எழுச்சியைக் கண்டு மிரண்டுபோயுள்ளனரெனவும் கூறினார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் புகுதியில், நேற்று (04) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் மாற்று இனத்தவர்களுக்கு வாக்களிக்கக்கூடாதெனவும் ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் இணைந்து, வன்னியில், சிங்கள இனத்தவர் ஒருவரைக் கொண்டுவருவதற…
-
- 1 reply
- 448 views
-
-
முடக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை முன்னெடுக்குமாறு கோரும் கூட்டமைப்பு: கோத்தாவுக்கு ஒத்துழைக்கவும் தயார் - சுமந்திரன் (ஆர்.ராம்) முடக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த அரசியலமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு தமது பூரண ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்…
-
- 0 replies
- 288 views
-
-
யாழ் - சென்னை விமான சேவை : விமான நிலைய வரியாக பெருந்தொகை அறவிடப்படுவதாக குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கான விமான பயணத்திற்கு பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரியாக பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: நல்லாட்சி என்று சொல்லப்பட்ட கடந்த ஆட்சி காலத்தில் யாழ்ப்ப…
-
- 0 replies
- 415 views
-
-
பருத்தித்துறையில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் வாகனத்தை பிரதேச மக்கள் கைப்பற்றினர் பருத்தித்துறை, பொற்பதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை பிரதேச மக்கள் தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர்.மூன்று டிப்பர் வாகனங்களில் மண் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு வாகனங்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஒரு வாகனத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரதேச மக்களுக்கும் மணல் கொள்ளையர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு செய்வதற்கு மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்…
-
- 0 replies
- 435 views
-
-
மட்டு. சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறிப் போராட்டம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05)கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதைத் தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. -வா.கிருஸ்ணா http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மடட-சறககதகள-கர-மல-ஏறப-பரடடம/73-243483
-
- 0 replies
- 218 views
-
-
தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து பெற்றுத் தர எம்மால் முடியும் எனத் தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதையும் தர மாட்டேன் என்கிறார். இந்நிலையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை எப்படிப் பெற்றுக் கொடுப்பீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், சாப்பிடமாட்டேன் என்று குழந்தை அடம்பிடித்தால் சரி போ என்று விட்டுவிடுவீர்களா? எத்தி, அதட்டி குழந்தையை சாப்பிடப் பண்ண வேண்டும். ஒரு தாயால் அது முடியும். எம்முள் அன்பும் உண்மையும் கொண்டிருந்தால் நாமும் தாயைப் போன்றவர்க…
-
- 0 replies
- 717 views
-
-
இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான அனைத்து சாட்சியங்களையும் தனது புத்தகத்தில் இணைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ரணல-பரதன-சததரதர/175-243468
-
- 1 reply
- 828 views
-
-
பதுளையில் விமானப்படை விமானம் விபத்து – நான்கு பேர் பலி January 3, 2020 (க.கிஷாந்தன்) பதுளை மாவட்டம் ஹப்புத்தனை பிரதேசத்தில் இன்று (03.01.2020) காலை 9.20 மணியளவில் விமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீரவில பகுதியில் இருந்து ரத்மலான நோக்கி 4 பேருடன் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஹப்புத்…
-
- 4 replies
- 747 views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் இன்றைய தினம் இடம்பெற்றது.இந்த நிகழ்வை முன்னிட்டு முல்லைத்தீவு நகரைச் சுத்தப்படுத்தும் பணியில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள் தமிழரசு கட்சியின் தொண்டர்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர். இந்த சிரமதான பணியில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் முன்னாள் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் அங்கத்தவர்களை உறுப்பினர்கள் கட்சியின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/72510
-
- 0 replies
- 292 views
-
-
சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது? இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திரதின நிகழ்வு குறித்து முன்னேற்பாட்டு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) அனர்த்த முகாமைத்துவம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்…
-
- 36 replies
- 4k views
- 2 followers
-
-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை -இரா. சம்பந்தன் Jan 04, 20200 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில் 2ஆம் திகதி இரவு நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த போது குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/எதிர்வரும்-நாடாளுமன்றத்/
-
- 4 replies
- 641 views
-
-
குறவன்பட்டவான் மலை அடிவாரத்தில் கிரவல் அகழ்வால் பதற்றமடைந்த மக்கள் (மூதூர் நிருபர்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கட்டைப் பறிச்சான் கணேசபுரம் பகுதியில் இயற்கையழகுடன் திகழ்ந்த குறவன்பட்டவான் மலையடிவாரத்தில் வெளியார் சிலர் கிரவல் அகழ்வில் ஈடுபட்டதனால் பொதுமக்கள் பதற்றமடைந்தனர். கிரவல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் திருகோணமலை நகரின் நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் மூதூர் பிரதேச செயலாளரிடம் அனுமதியைப் பெற்றிருந்ததாகவும் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வன இலாக உள்ளிட்ட கிராம அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் தகவல் வழங்கியதுடன் குறித…
-
- 0 replies
- 433 views
-
-
காணாமல் போனோர் விவகாரம் : தீர்வுக்கு விசேட குழு காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 02.01.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தமது சார்பாக அரசாங்கத்துடன் கலந்து…
-
- 0 replies
- 294 views
-
-
26 வருடங்களின் பின்னர் பதவியில்லா சாதாரண எம்.பியான ரணில் கடந்த 26 வருடங்களாக பாராளுமன்றத்தில் பதவிகளை வகித்து வந்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் இன்று முதல் முதற்தடவையாக சாதாரண எம்.பியாக பதவி வகிக்கின்றார். எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவின் பெயர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் சாதாரண எம்.பியாகியுள்ளார். 1993ஆம் ஆண்டு அப்போதிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மரணத்தின் பின்னர் அப்போதிருந்த பிரதமர் டீ.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அப்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றார். அதன் பின்னர் 1994ஆம் ஆண்டில் ஐ.தே.கவின் தலைவரான காமினி திஸாநாயக்கவின் இறப்புக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின…
-
- 4 replies
- 897 views
-