ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
யாழ் பல்கலைக்கழக பேரவை தீர்மானத்துக்கு எதிராக கலாநிதி குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் சடத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா இந்த மனுவை கடந்த 17ஆம் திகதி உயர் நீதிமன்றில் சமர்ப்பித்தார். ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் வரும் 15ஆம் திகதி தைப்பொங்கலுக்கு…
-
- 1 reply
- 575 views
-
-
கூட்டமைப்புத் தலைமையின் தவறான செயற்பாடுகளே மாற்றுத் தலைமைக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது - சுரேஷ் (தி.சோபிதன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பல தவறுகளை இழைத்திருக்கின்றது. அதனால் மக்கள் மத்தியில் விரக்தியும் கோபமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தலைமையின் இத்தகைய செயற்பாடுகளே மாற்றுத் தலைமையின் தேவையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையினால் இந்த மாற்றுத் தலைமையை மக்கள் முழுமையாக ஆதரிப்பார்கள் என்றே நம்புகின்றோம் என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு நேற்று கருத்துக்களை தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அ…
-
- 1 reply
- 300 views
-
-
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிழக்கில் த.தே.கூ உடன் இணைந்து செயற்படும்! எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாடாளுமன்ற தேர்தலிலும், மாகாணசபை தேர்தலிலும் சேர்ந்து இயங்குவதற்கு தயாரான நிலையில் இருக்கின்றது என கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் அமைந்திருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்தில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் ஈழமக்கள் புரட்சிகர விடு…
-
- 2 replies
- 866 views
-
-
-எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி உருவாக்கும் முயற்சிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, மிக விரைவில், கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ முடிவுகளும் அறிவிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்தக் கூட்டணி உருவாக்கத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடுகள் தொடர்பிலும் சில முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மறற-அண-உரவககம-மயறச-இறதக-கடடதத-எடடயளளத/71-243257
-
- 1 reply
- 628 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: 3 இலங்கையர்களுக்கு டுபாயில் சிறைத்தண்டனை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த 3 இலங்கையர்களிற்கு டுபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் உறவினரை இழந்த மட்டக்களப்பு இளைஞன் மற்றும் இரண்டு சிங்கள இளைஞர்களுக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும், தங்களது கையடக்கத் தொலைபேசியின் வழியாக சமூக ஊடகங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய படங்களை பகிர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பை சேர்ந்த குணதாஸ் டிரான் மற்றும் ரமேஷ் பெர்னாண்டோ, விஸ்வா டி சில்வா ஆகியோரே தண்டனைக்குள்ளாகியுள்ளனர். ஹோட்டலொன்றின் பாதுகாப்பு அதிகாரியா…
-
- 3 replies
- 630 views
-
-
இனியபாரதி என்ற குமாரசாமி புஸ்பகுமாரின் விளக்கமறியல் நீடிப்பு… January 1, 2020 கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதி என அழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமாரின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான இனியபாரதி அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி. சிவகுமார் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அம்பாறை – திருக்கோவில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 7 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே இனியபாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியல…
-
- 0 replies
- 710 views
-
-
BMW காருக்கு ஆசைப்பட்டு பல இலட்சங்களை பறிகொடுத்த குடும்பத்தினர் – யாழில் சம்பவம்! பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று இழந்துள்ளது. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி நின்று பணியாற்றி வரும் நிலையில் தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு, லண்டனில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்திற்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் விழுந்துள்ளதாகவும் அது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்று…
-
- 10 replies
- 1.5k views
-
-
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கீழ், பொலிஸ் ஊடகப் பிரிவு மீண்டும் ஆரம்பம் புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒருவரின் கீழ் பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று (01) முதல் செயற்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் பதில் பொலிஸ் மா அதிபரினால் புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புதிய ஊடகப் பேச்சாளர் நேற்று முதல் தனது பணியை பொறுப்பேற்றுள்ளதாகவும் தலைமையகம் மேலும் கூறியுள்ளது. இதற்கு முன்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர செயற்பட்டார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், கடந்…
-
- 1 reply
- 697 views
-
-
வடக்கு, கிழக்கில் பெளத்தத்தை திணிக்க நடவடிக்கை: விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு Share 1956இல் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரே மொழியைத் திணித்தனர். இப்போது வட, கிழக்கிலும் பௌத்தத்தைத் திணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இவ்விடயம் ஊர் அறிய வேண்டும். உலகம் அறியவேண்டும். முக்கியமாக எமது மக்களுக்கான தலைவர்கள் அறியவேண்டும். நான் நாளை மறைந்துவிட்டாலும் நான் தொடக்கியுள்ள கருத்துப் பரிமாற்றம் கட்டாயமாக சிங்கள மக்களைச் சிந்திக்கச்செய்யும். இப்பொழுதே பல சிங்கள இளம் சமுதாயத் தம்பிமார…
-
- 0 replies
- 765 views
-
-
வடக்கு- கிழக்கு பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் ஆய்வு செய்யப்படும்- புத்ததாசன அமைச்சு வடக்கு- கிழக்கு பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் தொடர்பாக சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த செயற்பாட்டை தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். அதாவது வடக்கு, கிழக்கிலுள்ள ஆலயங்களின் அமைவிடம், அதன் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்பன இந்த ஆய்வின் ஊடாக ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் குறித்த இடங்களில் அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அகற்றுவதற்கு அல்லது வேற…
-
- 3 replies
- 861 views
-
-
பாதுகாப்பு அமைச்சை வசப்படுத்த விஜேதாச மூலம் வியூகம் வகுக்கும் கோத்தா பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு ஏதாவது அமைச்சுக்களையும் சிறிலங்கா அதிபர் தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச விரைவில் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் என இந்த சட்டமூலம் அரசிதழில் வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் கீழ்- சாம்பல் நிறப் பகுதியாக மாறியுள…
-
- 0 replies
- 224 views
-
-
ஐ.தே.க.யின் உட்கட்சி மோதல் தீவிரம், கருவிக்கு கட்சியின் உயர் பதவி? ஐக்கிய தேசிய கட்சிக்குள் பதவிகளுக்கான உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவித்து வரும் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இவ்வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவைக் கூட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு முன்னதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த திங்…
-
- 0 replies
- 292 views
-
-
திலீபனின் நினைவேந்தல் தினத்தில் மாநகர சபையின் நீர் தாங்கி பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ். மாநகர சபையின் நீர் தாங்கி பயன்படுத்தப்பட்டமை குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நல்லூருக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவிடத்தில் நடைபெற்று வந்தன. இறுதி நாள் நிகழ்வுகள் செப்டம்பர் 26ஆம் திகதி நடைபெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அந்நிகழ்வின்போது வீதியின் வெப்பத்தை தணிக்கும் முகமாக யாழ்.மாகர சபைக்கு சொந்தமான நீர் தாங்கியினால் நீர் பிரயோகிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து யாழ்.…
-
- 0 replies
- 232 views
-
-
யாழ். மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மத்திய அதிவேக வீதி அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக வீதி அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (புதக்கிழமை) புனிதப் பொருளை தரிசித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கண்டி – கொழும்பு மத்திய அதிவேக வீதி 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் வீதியின் நிர்மாணப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையா…
-
- 0 replies
- 283 views
-
-
தமிழ் சமூகத்தின் தொன்மையான கலாச்சார பாரம்பரியங்களை பேணும் வகையில் ஒருபிடி அரிசியில் உரிமைப் பொங்கல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர்களின் உறவை மென் மேலும் பலப்படுத்தவும் தமிழ் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்ற பல குழுக்களை ஒன்றிணைக்கவும் தன்னெழுச்சியாக முன்வந்த இளைஞர்கள் காலத்துக்கு காலம் நமது பண்பாட்டு கலாசார விழுமியங்கள் அழிந்த வண்ணமே உள்ளன. இவற்றைப் பேணி பாதுகாக்கும் முகமாகவும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்”என்ற பெயரில் நடாத்தும் தைப்பொங்கல் விழாவிற்கு தேவையான அனைத்தையும் “ஒருபிடி அரிசியில் உரிமைப் பொங்கல்”என்னும் தொனிப்பொருளில் மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளனர். தமிழ் சமூகத்தின் தொன்மையான கலாச்சார பாரம்பரியங்களை பேணும்…
-
- 4 replies
- 616 views
-
-
வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் காணாமல் போன உறவுகளின் சங்க இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியா காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெறவுள்ள நிலையில். குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் “தமிழ…
-
- 9 replies
- 1.6k views
-
-
அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமையட்டும் : ஜனாதிபதி மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமாக வாழ்த்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய்; நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், ‘சுபீட்சத்தின் ஆண்டாக’ ஆக…
-
- 4 replies
- 1k views
-
-
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாகியுள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெற்றது. நாடு தழுவிய ரீதியில் 2,678 பரீட்சை மத்திய நிலையங்களில் 337,704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உயரதரப-பரடச-பறபற-வளயனத/175-243084 பல்கலைக்கழக படிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் : 181,126 கடந்த வருடம் பல்கலைக்கழக படிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் : 167,907 http://www.dai…
-
- 28 replies
- 4.6k views
-
-
கல்வி பொது தராதரப் பத்திர உயர்தர பரீட்சையின் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை பெறும் சகல மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான வசதி செய்யப்படும் என, தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் கீழ் வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி நிலையங்கள் பல்கலைக்கழக கல்லூரிகளாக தரமுயர்த்தப்பட்டு இதன் மூலம் இப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இதற்கான வசதி செய்தி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். “இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை மேம்படுத்தும் சுபீட்சம் மிக்க தொலைநோக்கு என்ற எண்ணக்கருவுக்கு அமைய இந்த கல்வி மேம்பாட்டு திட்டம்…
-
- 0 replies
- 398 views
-
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதியால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை கூறியுள்ளார். எட்டாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் (03) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சிம்மாசன உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொள்கை அறிவிப்பை வெளிடவுள்ளார். இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 260 views
-
-
இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். http://valampurii.lk/valampurii/content.php?id=20105&ctype=news
-
- 6 replies
- 1.1k views
-
-
அடுப்பில் இருந்த சோற்றுப்பானை வீழ்ந்து, குழந்தை உயிரிழப்பு – யாழில் துயர சம்பவம்! அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானியம் தோடடத்தை சேர்ந்த யசிந்தன் கஜலக்சி (வயது 2) என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மணியம் தோடடத்தில் வசித்து வரும் குறித்த குழந்தையின் வீட்டில் அவரது தாயார் கடந்த 23 ஆம் திகதி நிலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பில் சோறு சமைத்துள்ளார். அப்போது அடுப்புக்கு அண்மையில் இந்த குழந்தையும் இருந்துள்ளது. குழந்தை எதிர்பாராத விதமாக அடிப்பினை காலால் உதைந்துள்ளது. இதனால் அடுப்பில் கொதி நிலையில் இருந்த சோற்றுப் பானை குழந்தை மீது வீழந்…
-
- 2 replies
- 899 views
-
-
72 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/72174
-
- 4 replies
- 962 views
-
-
இன்று முதல் நடைமுறைக்கு வரும் அதிரடி நடவடிக்கைகள் – மக்களே அவதானம்! அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள புதிய வரித்திருத்தம் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. தேசிய வருமான வரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று முதல் புதிய வரித்திருத்தமானது நடைமுறைப்படுத்தப்படும் என நிதி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி பிரமானம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே புதிய வரித்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, இன்று முதல் மேலும் …
-
- 3 replies
- 901 views
-
-
மலர்ந்துள்ள (2020) புத்தாண்டு தேர்தல் ஆண்டு பிறந்துள்ள 2020ஆம் ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள ஆண்டாக அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன், அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக சர்வசன வாக்குறுதி நடைபெறலாம் என, அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ள எட்டாவது நாடாளுமன்றம் மார்ச் மாதத்துக்குள் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்வதால், நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும். அதன்படி, இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற…
-
- 0 replies
- 360 views
-