Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Jaffna Polling Divisions Results Nallur Logo Candidate Vote Pre % Sajith Premadasa 27,605 86.02% Gotabaya Rajapaksa 1,836 5.72% M. L. A. M. Hizbullah 659 …

  2. -செந்தூரன் பிரதீபன் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாதென்று, பாதுகாப்புச் செயலாளர் கூறிய கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில், இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தாங்கள் அனைத்து இராணுவத்தினரையும் வெளியேறுமாறு கூறவில்லையெனவும் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுவே தற்போதுள்ள பிரச்சினையெனவும் தெரிவித்தார். பாதுகாப்புகளைக் காரணங்காட்டி, தொடர்ந்து பொதுமக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், அவர் தெரிவித்தார். அத்துடன், தமிழ்த் தே…

    • 0 replies
    • 444 views
  3. அமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு Published by R. Kalaichelvan on 2019-11-22 18:09:06 (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் , அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இருதரப்பினரும் இதன்போது சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதனிடையே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா , இலங்கைக…

    • 1 reply
    • 605 views
  4. வரிச்சலுகை பொது தேர்தலை மையப்படுத்தியதா ? - ஆசுமாரசிங்க கேள்வி Published by J Anojan on 2019-12-02 16:08:52 (நா.தனுஜா) அரசாங்கத்தின் வரிச்சலுகையானது எதிர்வரும் பொதுத் தேர்தல் வரை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறதா என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார். புதிய அரசாங்கத்தினால் பெறுமதிசேர் வரி குறைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள சலுகை உண்மையில் வரவேற்பிற்குரியதாகும். அதனூடாக மக்கள் பயனடைவார்கள் என்று கருதுகின்றோம். ஆனால் இவ்வரிச்சலுகையினால் ஏற்படத்தக்க ஏனைய சவால்களை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்வதற்குத் திட்டமிட்டிருக்கின்றது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். வெளிநாடுகளி…

  5. கனடா உயர் ஸ்தானிகர் மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 3:38 pm December 2, 2019 0 24 Views இலங்கைக்கான கனடா நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் (Daved Mckinnon) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி அவர்கள் உயர் ஸ்தானிகருடன் சுமூகமாக கலந்துரையாடியதுடன், உயர் ஸ்தானிகர் கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்தார். அதேவேளை , சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் விசேட பிரதிநிதியும் சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகமுமான இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர் வூ ஜ…

    • 1 reply
    • 302 views
  6. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) இன்று (25) முற்பகல் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன், ஜனாதிபதியுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பிரதி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் டொம் பர்னும் (Tom Burn) இச்சந்திப்பில் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/69702

    • 2 replies
    • 741 views
  7. வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவன்? முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவன் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.இவர்களில் முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவனே தமது முதல் தெரிவாக இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில்ஏனைய 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-மாகாண…

    • 11 replies
    • 1.7k views
  8. ஜனாதிபதி அவதானித்துள்ளார், முன்னேற்றம் விரைவில் – அமைச்சர் பிரசன்ன இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயத்தின் ஊடாக இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை வரவேற்பதற்காக சென்ற அமைச்சர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதாரண பயணிகள் செல்லும் வழியின் ஊடாகவே தமது பயணத்தை மேற்கொண்டதுடன், மீண்டும் அதே வழியிலேயே திரும்பிவந்தார். இதன்போது விமான நிலையத்தின் செயற்பாடுகளை அவதானித்ததுடன், புதிதாக ப…

    • 0 replies
    • 2.1k views
  9. 19 ஆவது திருத்தத்தை நீக்க ஒருபோதும் இடமளியோம் - ஐ.தே.க Published by J Anojan on 2019-12-02 15:04:27 (நா.தனுஜா) நிறைவேற்றதிகாரத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் சமநிலையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதுகுறித்து எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுட்டிக்காட்டும்பட்சத்தில் நாம் அவதானம் செலுத்தத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதனை முழுமையாக நீக்குவதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக…

    • 0 replies
    • 308 views
  10. தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது. கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக புதுடில்லியில் இன்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் நீதியுடனும் சமாதானம் மற்றும் கன்னியத்துடனும் வாழக் கூடியதாக அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங…

  11. நவ. 27 மாவீரவர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...” மாவீரர்நாள் பாடல். மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார். 1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன் இப்பாடலைப் பாடினர். அச்சமயம் அங்கு நின்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து “வெளிச்சம் இதழில்” இக்கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது.) 1992 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் பிறக்கப…

    • 30 replies
    • 3.2k views
  12. ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை எங்களை ஏமாற்றி விட்டார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை ( 29) நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வீரச்சோலை அ.த.க. பாடசாலைக்கு ஒலி பெருக்கி சாதனங்களை பண்முக படுதப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், வடகிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமை…

    • 8 replies
    • 1.5k views
  13. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டை சீனாவுக்கு கொடுத்தமை தவறென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய ஊடகவியலாளர் நிதின் கோகலேவுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று இந்தியாவுக்கான விஜயத்திற்கு முன்னர் முதன்முதலில் இந்த பேட்டியை வழங்கியிருக்கும் ஜனாதிபதி , இந்தியாவுக்கு எதிரான எந்த வேலையையும் தமது நாடு செய்யாது என்பதனை குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அந்த செவ்வியின் சாராம்சம்… ”நான் ஒரு நடுநிலைவாதியாக இருக்க விரும்புகிறேன் என்று நான் பதவி ஏற்றுக்கொண்ட உரையில் கூட குறிப்பிட்டுள்ளேன். அது சாத்தியம். உலகில் இதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்றைய புவிசார் அரசியலில் இந்தியப் பெ…

    • 14 replies
    • 2.4k views
  14. முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கமானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால திட்டம் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(1) மாலை 5 மணி முதல் 7 மணிவரை மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றி…

  15. முல்லைதீவு வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பாதிப்பு முல்லைத்தீவு_ புதுக்குடியிருப்பு பகுதியை இணைக்கும் வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நீர் பாலத்துக்கு மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பணிகளுக்காக செல்பவர்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மழைகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலையும் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்று அதிகாலை முதல் வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நீர் பாலத்துக்கு மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பல விபத்துகள் குறித்த பகுதி…

  16. இரண்டரை கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் ஆணைகளை புறந்தள்ளி செயற்பட்டு அரசாங்கத்தை பாதுகாக்கும் கட்சியாகவே உள்ளது. காலத்தின் தேவையுணர்ந்து முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டு விரைவில் உருவாகும் என தெரிவித்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். டவவுனியாவில் உள்ள தனியார் விடுதியொன்றில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு இன்று (1) கூடியது. அதன் நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவா இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலவரங்கள் கள நிலவரங்கள் பற்றி வடக்கு கிழக்கு மாக…

  17. குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரியான நிஷாந்த சில்வாவை இலங்கைக்கு நாடு கடத்த முடியாதென சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுவிஸ் சட்டத்திட்டத்திற்கு அமைய அவரையும் அவரது குடும்பத்தினரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிஷாந்த சில்வாவுக்கு எதிராக இன்டர்போல் பிடியாணை இல்லாமையினால் அவருக்கு எதிராக செயற்படுவதற்கு சுவிஸ் பொலிஸாருக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று நிஷாந்த சில்வாவை சந்தித்து லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜுடீன், கீத் நோயார், எக்னெலிகொட, உபாலி தென்னகோன் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர். நிஷாந…

  18. க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த பரீட்சைகள் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இம்முறை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ளனர். பரீட்சை நாளாந்தம் காலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளதுடன் பரீட்சார்த்திகள் அரை மணி நேரத்திற்கு முன்னராக பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தரா தர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள ம…

  19. ட்ரோன் கமராவை பறக்கவிட்ட நபர் கைது நுவரெலியா-மீபிலிமான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலிய பொலிஸ் நிலைய விசேட அதிரடிப்படைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சேனாநந்த வித்தியாலய பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சு அல்லது சிவில் விமான சேவை ஆணைக்குழுவின் அனுமதியின்றியே குறித்த நபர் ட்ரோன் கமராவை பறக்கவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அவரிடமிருந்த ட்ரோன் கமரா மற்றும் அதன் உதிரிப்பாகங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் த…

  20. யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை நடத்துவதில் தொடர்ந்தும் இழுபறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை இம்மாத இறுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக அது தள்ளிப்போகும் நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கடந்த ஒக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஒன்பது பேர் அதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அதற்கான தேர்தலை நடத்துவதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நேற்று முன்தினம் சனிக்கிழமை கூடிய யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவை விண்ணப்பதாரிகளின் தகுதி, தராதரங்களை மதிப்பீடு …

  21. 30வருட பயங்கரவாத யுத்தத்திற்குள் அகப்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய வட,கிழக்கு மக்கள் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்துவரும் சூழ்நிலையில், தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். இவரது செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் தூண்டப்பட்டு இன மோதல்கள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. இந்தவிடயம் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, …

  22. அங்கயன், வியாழேந்திரனுக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைமையே கிட்டியது! மஸ்தானுக்கும் அதே நிலை! By: Submitted: 2019-11-27 20:16:41 அங்கஜன் இராமநாதன்,எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகளே வழங்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இண…

    • 9 replies
    • 1.3k views
  23. நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை தேர்தல் தொகுதியில் நாகந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் வீடொன்றின் மீது மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வலப்பனை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட வலப்பனை பதியபெலல்ல பிரதான வீதிக்கு அருகில் நாரந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் பிரதான வீதியுடனான பாரிய மண்மேடு சரிவு (30) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. நாரந்தலாவை பகுதியில் பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்திருந்த இரண்டு வீடுகள் மீது மண் மற்றும் பாரிய கற்கள் இதன்போது சரிந்து மூடியுள்ளன. இதன்போது, ஒரே வீட்டில் வசித்து வந்த 50, 48,17,ம…

  24. பதவியேற்று 10 நாட்களின் ஜனாதிபதி மேற்கொண்ட முக்கிய தீர்மானங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மக்களின் பாராட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை அனுப்பி ஜனாதிபதியின் குறித்த தீர்மானங்கள் தொடர்பாக அறிவித்துள்ளது. அந்த தீர்மானங்கள் வருமாறு, 1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல். 2. 15% சதவீதமாகக் காணப்பட்ட யஅப வரியினை 8% சதவீதமாகக் குறைத்தல். 3. தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 சதவீதத்தினால் குறைத்தல். 4. அரச நிறுவனத் தலைவர்களின் நியமிப்பின்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்று…

  25. (எம்.மனோசித்ரா) இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாடொன்றுக்கான முதலாவது விஜயமாக இந்தியாவிற்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, விஜயத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அதன் பின்னர் ஹ…

    • 0 replies
    • 423 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.