Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மகமூத் குர்ஸ்சி (Mahmood Qureshi) 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக நேற்று (01) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருடன் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார். அத்துடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கு கொண்டு வந்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கடதததடன-இலஙககக-வநதளள-பகஸதன-வளவவகர-அமச…

    • 33 replies
    • 3.4k views
  2. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது.. 1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. எனினும் 2018 யூன் மாதம் சமஸ்டி நீதிமன்றம் விடுதலைப்புலிகளிற…

    • 21 replies
    • 1.4k views
  3. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவ பண்புகளை இழந்து நிற்கின்றது -ஜனநாயக போராளிகள் கட்சி புதுக்குடியிருப்பில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றசெய்தியாளர் சந்திப்பில் மக்கள் மாற்று தலைமையை கோரவில்லை த.தே.கூட்டமைப்பின் தலைமையில் சிறு மாற்றம் செய்தால் சரி. என ஜனநாயக போராளிகள் கட்சி செயலாளர் கதிர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவ பண்புகளை இழந்து நிற்கின்றது எனவும் தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். மாற்றுத் தலைமை என்று கூறுபவர்கள் கடந்த இருபத்தைந்து வருடமாக தமிழ் மக்களின் கொள்கைகளுக்கு எதிராக செயற்ப்பட்டவர்களே. முள்ளிவாய்க்காலிலும் நலன்புரி நிலையங்களிலும் மீள்குடியேறி துன்பப் படும் போதும்…

    • 4 replies
    • 627 views
  4. -என்.ராஜ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருவதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தான சத்தியமூர்த்தி தெரிவித்தார். ஜப்பான் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிகிச்சை நிலையமானது, மத்திய சுகாதார அமைச்சால் திறந்து வைக்கப்பட்டு, தற்போது குறித்த சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருவதோடு வடக்கின் பல பகுதிகளிலும் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன், வ…

    • 2 replies
    • 443 views
  5. எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத் “முஸ்லிம்களுக்கு இருக்கின்ற இரண்டு கட்சிகளை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்” என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். கந்தளாயில் நேற்று (01) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் குற்றஞ்சாட்டினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களும் பாரபட்சமின்றி நடத்துவோமென அறிவித்துள்ளார் என்றதுடன், ஜனாதிபதி கூறியது போன்று நடத்தினால் சரியாகுமென்றார். நாட்டில் முஸ்லிம் மக்களை இல்லாதொழிக்கவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனக் கூறியதுடன் “கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே நமது வேட்பாளர் தோல்லியுற்றாலும் நாம் தோ…

    • 3 replies
    • 673 views
  6. கோத்தபாய ராஜபக்ச இரண்டு வாரங்களிற்கு முன்னர் பதவியேற்ற பின்னர் தேடுதல்கள், விசாரணைகள்,அச்சுறுத்தல்களை தாங்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்ற இலங்கை பத்திரிகையாளர்களின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாக எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகாரிகள் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. டேர்மினேட்டர் என அழைக்கப்படும் ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வார காலத்திற்குள் இலங்கையின் பத்திரிகை சுதந்திரத்தின் மீது அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது என எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆரம்ப இலக்குகளாக நியுஸ்ஹப் எனப்படும் செய்தி இணையத்தளம் காணப்பட்டது, அதன் அலுவலக…

    • 1 reply
    • 251 views
  7. பௌசியின் தீர்மானம் இதுதான்- ஊடகத்துக்கு கருத்து தனது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். தான் கடந்த 44 வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும், நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்துள்ளேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கட்டணத்தையும் இதுவரை தான் எந்தவித குறையும் இன்றி தொடராக செலுத்தியுள்ளேன் எனவும் நேற்று (3) சகோதர ஊடகமொன்றிடம் அவர் கூறியுள்ளார். எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபா…

    • 1 reply
    • 370 views
  8. புதிய ஆளுநர் இருவர் பதவிப்பிரமாணம் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (04) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரணவும், கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆறு புதிய ஆளுநர்கள் ஆறு பேர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் கடந்த மாதம் (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்தனர். ஆளுநர்களின் முழுமையான விவரங்கள் திஸ்ஸ விதாரண– வட மத்திய மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் –கிழக்கு மாகாணம் ராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர் சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.மு…

  9. இலங்கை பெருமழை: பல இடங்களில் மண்சரிவு - மக்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை 26 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்ற நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்ப…

  10. (எம்.மனோசித்ரா) பயிற்சி சுற்றுப்பயணத்திற்காக கடந்த நவம்பர் 25 ஆம் திகதி இலங்கை வந்து சேர்ந்த இந்திய கடற்படைக் கப்பல் ' நிரீக்ஷக் நேற்றைய தினம் திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன் கடற்படை மரபுகளின்படி புறப்படும் கப்பலுக்கு இலங்கை கடற்படை மரியதை செலுத்தியது. இக் கப்பலின் மாலுமிகள் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர், மேலும் இக் கப்பலின் சுழியோடி வீரர்கள் இலங்கை கடற்படை சுழியோடி பிரிவின் வீரர்களுடன் இணைந்து பல பயிற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சி சுற்றுப்பயணம் முலம் இலங்கை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் அறிவு மற்றும் அனுபவங்கள் பரிமாற்றத்தை மேம…

  11. இலங்கையில் தினமும் நான்கு முதல் ஆறு சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம் பதுளை “ கெப்டல் சிட்டி” விடுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளும் என்ற தொனிப்பொருளில் “ பீஸ்” அமைப்பு மேற்கொண்ட செயலமர்வில் எமது நாட்டில் 48 ஆயிரம் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்குற்பட்டுள்ளனர். தொடர்ந்தும் எமது நாட்டில் தினமொன்றிற்கு நான்கு முதல் ஆறு சிறார்கள் பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்திற்குட்பட்டு வருகின்றனர்.ஆனால் உலகம் முழுவதிலும் ஒன்று தசம் எட்டு மில்லியன் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென்றுரூபவ் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் ஹசெய்ன் தெரிவித்தார். இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் ஹசெய்ன் தொடர்ந்து தெரிவிக்கையில் யுத்த காலத்தில், சிறுவர்களை போராளிகளாக்குவதும்…

    • 3 replies
    • 563 views
  12. முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு என வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை - கல்வி அமைச்சர் Published by R. Kalaichelvan on 2019-12-04 16:26:35 (எம்.ஆர்.எம்.வஸீம்) பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.அரசியல் லாபத்துக்காக சிலர் இவ்வாறான வதந்திகளை பரப்பிவருகின்றனர் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கெக்கிராவ கல்வி வலயத்தில் கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் சிலருக்கு அவர்களின் முகத்திரை காரணமாக பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்கப்படவில்லை என சமூகவலைத்தளங்களில் பரவிவரும் செய்தி தொடர்பாக அவர் விடுத்த…

    • 2 replies
    • 673 views
  13. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுவரை இருந்துவிட்டு இன்று மாற்று அணியைத் தேடுகின்றவர்கள் ஒன்று சேரும் இடம் இன்னும் ஒரு அணியாகத்தான் இருக்குமே தவிர அது மாற்று அணியாக இருக்காது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்…

    • 2 replies
    • 529 views
  14. சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய தமிழ் பெண் கடத்தப்பட்ட சம்பவம் – சி.ஐ.டி. முக்கிய தகவல்! கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய தமிழ் பெண்ணின் கணவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு தமிழ் பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்டு சில மணிநேரம் தடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக மனிதப் படுகொலை விசாரணைப்பிரிவு நேற்று (செவ்வாய்க…

    • 1 reply
    • 524 views
  15. சத்தம் சந்தடி இன்றி 7 தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுர சிறையில் இருந்து விடுதலை அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 7 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆற்வறாம் எதுவும் இன்றி விடுதலை செய்துள்ளது. இந்த 7 சிறை கைதிகளும் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான யாழ்பாப்னம் குருநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (36) என்பவரை சமகளம் செய்தியாளர் சந்தித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை அதிகாரிகள் தம்மை திடீரென கூப்பிட்டு விடுதலை செய்வதாக கூறியதாகவும் மேலதிக அறிவித்தல் வரும்வரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கையெழுத்து இடுமாறு கேட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேல…

    • 9 replies
    • 1.3k views
  16. பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து அதன் பின்னர் ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுப்பார் என அறிய முடிகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி உத்தரவொன்றினை பிறப்பிப்பார் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தத்தின்படி நாடா…

  17. ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளத…

  18. 13 ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம் என்று இந்தியா நினைக்கக்கூடாது: விக்னேஸ்வரன் பல்வேறு குறைபாடுகள் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தமிழ் தலைமைகளினால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருவதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யலாம் என்றோ அல்லது அவர்களின் தனித்துவத்தை நிலை நிறுத்தலாம் என்றோ அல்லது அவர்களின் நீண்டகால நியாயபூர்வமான அபிலாஷைகளை பூர்த்திசெய்யலாம் என்றோ இந்தியா எதிர்பார்க்க கூடாது என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அழுத்தம் த…

  19. மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள கோரகல்லி மடுவில் தனது கணவனை திருகுவளையாலே அடித்துக் கொன்றுள்ளார் மனைவி. முருகன் கோயில் வீதி, கோரகல்லி மடு, கிரானைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியம் (45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றி கொலை இடம்பெற்றுள்ளது. சமையலறையிலிருந்த திருகுவளையால் கணவனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.pagetamil.com/90612/

    • 8 replies
    • 1.4k views
  20. ஆலையடிவேம்பில் 24,529 பேர் பாதிப்பு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 7,417 குடும்பங்களைச் சேர்ந்த 24,529 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 46 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் இடம்பெயர்ந்து, உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். ஆலையடிவேம்பு பிரதே செயலகத்துக்குட்பட்ட 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுமிருந்து கிராம உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, இத்தகவல் பெறப்பட்டுள்ளதாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார். இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படுவதற்கான நடவடிக்கை, பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை மாவட்ட செயலகத்தில் இருந்து பெ…

  21. இலங்கையில் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தனது தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுவிட்சர்லாந்து மீண்டும் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் State secretary பாஸ்கல் பெரிஸ்வில் இதனை தெரிவித்துள்ளார். ஜேர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்குமான இலங்கையின் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சுவிட்சர்லாந்திற்கு அழைத்து தனது நாட்டின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம் உரிய சட்டங்களை பயன்படுத்தி இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிற்கும் ஆதரவளிக்கும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். உடல்நிலை கா…

    • 5 replies
    • 644 views
  22. எதிர்காலத்தில் மதுபானத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தையில் மதுபானத்தின் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/70342

    • 0 replies
    • 322 views
  23. இலங்கையில் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான தற்காலிக அரசாங்கம், தாம் பொறுப்பேற்ற ஒருசில நாள்களிலேயே, இலங்கை மக்களுக்குப் பெரும் வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறது. இதன் மூலமாக, பெரும் நன்மை அடைபவர்கள் பொது மக்களா? அல்லது நமது கண்களுக்குப் புலப்படாத வேறு விளைவுகள் இதற்குள் அடங்கியிருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளுவது அவசியமாகிறது. தற்போதையை நிலையில், இலங்கையின் தற்காலிக அரசாங்கம் அறிவித்திருக்கும் இந்த வரிச் சலுகையானது, அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடு என்பதைக் கட்டியம் கூறினாலும், நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது, இந்த வரிச்சலுகைகள் மூலமாக, பொதுமக்களுக்கு நன்மைகள் கிடைக்குமென்பதை மறுக்க முடியாது. முக்கியமா…

    • 0 replies
    • 450 views
  24. வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் தீவிரம் அடைந்துள்ளன. பலமான மாற்று அணி ஒன்றினை அமைப்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த புத்திஜீவிகளும் சிவில் சமூக பிரமுகர்களும் கட்சி தலைவர்களும் கடந்த சனிக்கிழமை முதல் விக்னேஸ்வரனுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். நல்லூரில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று செய்வாய்க்கிழமையும் மன்னார் , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றை சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரமுகர்கள் விரிவான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். ஒரே கொள்கையின் கீழ் பயணிக்கக்கூடிய தமிழ் கட்சிகளையும் அதேவேள…

    • 0 replies
    • 290 views
  25. இலங்கையின் வங்கிகளில் இருந்து பாரிய அளவில் கடன்களைப் பெற்று முதலீடுகளை மேற்கொண்டு, சில நாள்களில் நாட்டை விட்டு ஓடிவிடும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இனிமேல் இடமளிக்கப் போவதில்லை என, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பேராதனையிலுள்ள ரெஸ்ட்ஹவுஸில், நேற்று (01) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி வந்தால், வெளிநாடுகளில் இருந்து பாரிய அளவில் இந்நாட்டுக்கு முதலீடு வரும் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது என்றும் ஆனால். கடந்த காலங்களை எடுத்துப் பார்க்கும் போதே, அது அப்பட்டமான பொய் என்பது மத்திய வங்கியின் அறிக்கையூட…

    • 3 replies
    • 862 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.