Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (இராஜதுரை ஹஷான்) அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு சுயாதீன நீதிமன்றம் சரியான நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. சர்வாதிகார ரீதியில் அதிகாரத்தை பிரயோகித்து ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது என பாரர்ளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களின் மதவழிபாடு நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் பாரள…

    • 0 replies
    • 400 views
  2. பௌத்த மதகுருக்களை, அரசியலில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் – மல்வத்து பீடம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பௌத்த மதகுருக்கள் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கக் கூடாது என மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்துவதன் மூலமும் தங்கள் பொறுப்புகளை முறையாகச் செய்வதன் மூலமும் பௌத்த மதகுருக்கள் நாட்டுக்கும் தேசத்திற்கும் மதத்திற்கும் ஒரு சிறந்த சேவையை வழங்க முடியும். எமது மதகுருக்கள் அரசியல் காரணமாக மனக்கிளர்ச்சியுடன் செயற்படுகிறார்கள். உலகெங்கிலும் உள்ள பௌத்த மதகுருக்களின் மரியாதையும் புகழும் பாதிப்படையத் தொடங்கியுள்ளது. எனவே, மத…

    • 6 replies
    • 647 views
  3. கடந்த காலத்தைப் போல் 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியே – வெளிப்படுத்தும் சித்தார்த்தன் கடந்த காலங்களைப் போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியாக இருந்தாலும் அதிகளாவன ஆசனங்களைப் பெறுவதில் நம்பிக்கை உள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்கள், மாற்று அணியின் பிரவேசம் காரணமாகவே பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புளொட் அமைப்பின் மத்திய குழு கூடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னரான பெறுபேறுகள் மற்றும் த…

  4. ஈழத் தமிழரின் நலன் காக்கும் வரலாற்று பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கிறது: பொறிஸ் ஜோன்சனுக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்து ஈழத் தமிழரின் நலன் காக்கும் வரலாற்று பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கிறது என்று பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்குத் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுகமான நீதியசரர் சி.வீ.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தி, தமி ழர்களின் பாதுகாப்பையும் நலனையும் பேணுவதற்கு இன்னும் காலம் பிந்திவிடவில்லை என்றும் விக்னேஸ்வரன் தனது வாழ்த்து செ…

  5. (எம்.மனோசித்ரா) சம்பிக ரணவகவின் கைது இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு ஏற்படாத இழுக்கு என சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ் ஆணைக்குழுவின் அவதானத்திற்கு கொண்டுச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் சபாநாயகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சபாநாயகர் கருஜய சூரிய தலைமையில் பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது. 8 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின…

  6. (லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 22 முற்பகல் 08.10) ராஜபக்ஷவின் குடும்பத்தை கடுமையாக விமர்சித்த கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் இருவரை வேட்டையாட கோட்டாபய ராஜபக்சவின் இனவாத அரசாங்கம் தயாராகி வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு செய்து வந்துள்ளது. இவ்வாறு வேட்டையாட முயற்சிக்கப்படும் முன்னாள் அமைச்சர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ராஜபக்சக்கள் கைவிட்டு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் என தெரியவந்துள்ளது. இந்த இரு முன்னாள் அமைச்சர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்திற்கு ஆதரவாக மேடைகளில் பேசியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஆவர். தேர்தலுக்கு முன்னரும் தேர்தலின் பின்னரும் ராஜபக்சக்களை இவர்கள் மிகவும் கடுமையாக வி…

    • 0 replies
    • 374 views
  7. (இராஜதுரை ஹஷான்) அரசியல் குற்றச்சாட்டிற்கும், சிவில் குற்றச்சாட்டிற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இன்று சட்டம் முறையாக செயற்படுகின்றது. சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் பாட்டலி, ராஜித , ரணில் ஏன் நான் கூட விதிவிலக்கல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வாத்துவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரம் தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் ஆரம்பித்து விட்டதாக எதிர்தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். எந்நிலையிலும் தனிப்பட்ட மற…

    • 1 reply
    • 429 views
  8. (ஆர்.யசி) போர்க் குற்­றங்கள் என்ற பொய்­யான குற்­றச்­சாட்டை முன்­வைத்து இலங்கை அர­சாங்­கத்தை நெருக்­க­டிக்குள் தள்ள சர்­வ­தேச சக்­திகள் முயற்­சித்து வரு­கின்றன. முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களை போல சர்­வ­தேச சக்­தி­களின் அழுத்­தங்­க­ளுக்கு தாம் அடி­ப­ணி­யப்­போ­வ­தில்லை. அதே­போன்று ஜெனிவா பிரே­ர­ணையை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம் எனவும் அமைச்சர் நிமல் சிறி­பா­லடி தெரி­வித்தார். புதிய அர­சாங்­கத்தின் நகர்­வுகள் மற்றும் சர்­வ­தேச விவ­கா­ரங்­களில் இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டுகள் குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த ஐந்து ஆண்­டு­களில் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் சர்­வ­த…

    • 0 replies
    • 507 views
  9. பாறுக் ஷிஹான்- க‌ல்முனை உப‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தை த‌ர‌ முயர்த்தாவிடின் ஜ‌னாதிப‌தி கோட்டாவுக்கும் பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுக்கும் எதிராக‌ ஆர்ப்பாட்டம் செய்வோம் என பா. உ உறுப்பின‌ர் கோடீஸ்வ‌ர‌ன் தெரிவித்த க‌ருத்தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்திருப்ப‌துட‌ன் அவ்வாறு ந‌டைபெற்றால் கோடீஸ்வ‌ர‌னுக்கெதிராக‌ நாம் க‌ல்முனை மக்க‌ளை ஒன்று சேர்த்து நாம் ச‌த்தியாகிர‌க‌ம் செய்வோம் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்தார். ஜ‌னாதிப‌தி கோட்டாவுக்கும் பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுக்கும் எதிராக‌ ஆர்ப்பாட்டம் செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் போது உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி மேற்கண்டவாறு கூறினார். மேலும…

  10. மன்னார் தோட்டவெளி கிராமத்தில் பொலிஸாரின் துணையுடன் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் பொலிஸ் அதிகாரிக்கும் மத குரு உட்பட பொதுமக்களுக்கும் இடையே இன்று ஏற்பட்ட முறுகல் நிலையால் அவ் பகுதி சில மணி நேரம் அமைதியற்ற நிலையில் காணப்பட்டது. மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ் சம்பவம்பற்றி தெரிய வருவதாவது, மன்னார் வேதசாட்சிகளின் ஆலயம் அமைந்துள்ள தோட்டவெளி பகுதியில் தென் பகுதியிலிருந்து மீன் வளர்ப்புக்கு என கொண்டு வரப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு இங்கு மீன் வளப்புக்கென எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படாத…

    • 7 replies
    • 1.3k views
  11. முஸ்லிம் உணவகத்தில் வேலை செய்த தமிழ் பெண் மீது மிருகத்தனமான தாக்குதல்..! பெருமளவு இளைஞா்கள் கூடியதால் பதற்றம்.. வவுனியா- நகாில் உள்ள இஸ்லாமிய விடுதி ஒன்றில் பணியாற்றும் தமிழ் பெண் மீது மூா்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய கடை உாிமையாளாின் மகனுக்கு எதிராக பெருமளவு இளைஞா்கள் ஓன்று கூடிய நிலையில் நகாில் பதற்றமான சூழல் உருவானது குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து, வர்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர் .இதனால் குறித்த பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டமையால் குறித்த…

    • 12 replies
    • 2.3k views
  12. நகர் அலங்கார நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அரச விருது சுயமாக முன்வந்து நகரங்களை அலகுபடுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு அரச விருது வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலத்திற்கு ஏற்ற வகைகளில் மக்கள் விரும்பும் சித்திரங்களை இந்த இளைஞர் யுவதிகள் வரைந்துள்ளதை தாம் காணக்கூடியதாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இவர்களை ஊக்குவிப்பது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்று தெரிவித்த பிரதமர் இவர்களுக்கு விருதுகளை வழங்குவதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை விரைவாக மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகவ…

  13. ரிஷாட் மற்றும் ஹக்கீமின் கட்சிகள் இனவாத முஸ்லிம் கட்சிகள்!!!!!அதிகாரம் நிகழ்சியில் குற்றம் சாட்டுகிறார் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா.

  14. ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க என குற்றம் சுமத்தி காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பு இந்த முறைப்பாட்டை இன்று பதிவு செய்துள்ளது. கடந்த காலத்தில் இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய் திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகள் அதிருப்தியளிப்பதாக தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார். ஆகவே இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என பதில் காவற்துறை மா அதி;பரிடம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/…

    • 0 replies
    • 386 views
  15. 5 ஆண்டுகளுக்குப் பின் அலரி மாளிகையை தேடிச் சென்ற மைத்திரி DEC 22, 2019 | 1:25by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஆகியோருடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகைக்குச் சென்ற மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தினார். 2015 அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதாக அறிவிப்பதற்கு முதல் நாள், 2014 நொவம்பர் 20ஆம் நாள் இரவு கடைசியாக அலரி மாளிகைக்குச் சென்றிருந்தார் மைத்தி…

    • 2 replies
    • 736 views
  16. தேசிய நல்லிணக்கத்தினை மேலும் வளர்த்துக் கொள்வதோடு இந்தியாவின் புரிந்துணர்வோடும் மாத்திரமே தமிழ் மக்களுடைய நிலையான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சர்வதேசம் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தரவும் இல்லை பெற்றுத் தரப்போவதும் இல்லை எனவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் , சர்வதேசத்தின் ஊடாக மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்று நீண்ட காலமாக சில தமிழ் கட்சிகள் கூறிவருகின…

    • 0 replies
    • 245 views
  17. (இராஜதுரை ஹஷான்) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக துறைக்காக பெற்றுக்கொண்ட வணிக கடனை மீள அறவிடுவவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடனை மீள இலகுவான முறையில் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. நுண்கடன் தொடர்பிலான அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அதற்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும் என அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் வசதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். வணிக தேவைக்களுக்காக 300மில்லியன் ரூபாவிற்கு மேற்படாத அதிகமான கடனை பெற்றுக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தற்போது கடன்சுமையினால் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். கடனை மீள் செலுத்துவதற்காக தங்களின் சொத்துக்களை ஏலத்தில் விடவும் தீர்…

    • 2 replies
    • 348 views
  18. -செல்வநாயகம் ரவிசாந் 2018ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் மிகச் சிறப்பாக செயலாற்றியமைக்காக சுன்னாகம் பொதுநூலகத்துக்கு இம்முறை விசேட தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தின் பிரதான விழா, வியாழக்கிழமை(19) காலை, கொழும்பிலுள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. மேற்படி விழாவில் சுன்னாகம் பிரதம நூலகர் திருமதி ஜெயலட்சுமி சுதர்சன், கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடமிருந்து இந்த விருதை பெற்றுக்கொண்டார். தேசிய வாசிப்பு மாதத்தில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக, சுன்னாகம் பொதுநூலகம் ஏற்கெனவே ஏழு தடவைகள் தேசிய விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/யாழ்ப்ப…

    • 0 replies
    • 871 views
  19. புலிகளை தோற்கடித்தது சில நாடுகளுக்கு மகிழ்ச்சியில்லை – சிறிலங்கா அதிபர் DEC 21, 2019 | 15:05by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து சிறிலங்கா போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையிட்டு சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்து வெளியேறும் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாதக் குழுவை சிறிலங்கா இராணுவத்தால் தோற்கடிக்க முடிந்தது. உலகில் உள்ள படைகளுக்கு சிறிலங்கா இராணுவத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. எனினும், ச…

  20. முன்னாள் ஜனாதிபதிக்காக இருந்த 500 பேர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்திட்டங்களுக்காக ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய 500 பேர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தற்பொழுது பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவர்களில், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சாரதிகள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவர்களை ஏனைய அரச நிறுவனங்களுக்கு நியமனம் செய்யப்பட்டு வருவதாகவும் பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார். http:/…

  21. பாறுக் ஷிஹான் நான் போராளிகள் அனைவரும் மதிக்கின்றவன் . ஜெயந்தன் படையணி என்றால் உங்களுக்கு தெரியும் எதிரிகளுக்கு நடுக்கம் பிடிக்கும் என என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(20) மாலை மக்களுடன் மாபெரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் நான் போராளிகள் அனைவரும் மதிக்கின்றவன் . ஏனெனில் எனக்கு தோள் கொடுத்தவர்கள் அவர்கள்தான் .ஜெயந்தன் படையணி என்றால் உங்களுக்கு தெரியும் எதிரிகளுக்கு நடுக்கம் பிடிக்கும். உங்களால் எங்களத…

  22. இலங்கையில் சீனாவின் தலையீடு: அமெரிக்க – இந்திய உயர்மட்டப் பேச்சுக்களில் கவனம் அமெரிக்க- இந்திய உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளில், இலங்கை விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இலங்கை உள்ளிட்ட தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் வொசிங்கடனில் இரண்டாவது அமெரிக்க- இந்திய அமைச்சர்கள் மட்ட பேச்சுக்களை நடத்தினர். இந்தப் பேச்சுக்களின்…

  23. நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் – அதி விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி! நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வௌியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பொது ஒழுங்கை தொடர்ந்தும் பரா…

  24. கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கானிய பனிஸ்டரதும் அவரது கணவரதும் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்துக்கு கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/71428 சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரத்தில் தேசிய, சர்வதேச சட்டங்கள் உறுதியாகப் பின்பற்றப்படுகின்றன : தினேஷ் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை ஊழியரொருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தைக் கையாள்வதில் இலங்கை அரசாங்கமும், நீதித்துறையும் தேசிய சட்டங்களையும் சர்வதேச சட்டத்தையும் உறுதியான முறையில் கடைப்பிடிப்பதாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவ…

    • 5 replies
    • 986 views
  25. சுவிஸ் தூதரக அதிகாரியிடம் மீண்டும் விசாரணை கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இன்று காலை மீண்டும் முன்னிலையாகியுள்ளார். ஏற்கனவே அவரிடம் ஐந்து தடவைகள் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள போது, சாட்சியம் பெறும் நடவடிக்கைகள் இன்னமும் முடியவில்லை என்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் மீண்டும் குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். சாட்சியம் பெறப்பட்ட பின்னர் அவர் சட்ட மருத்துவ அதிகாரி முன்னில…

    • 13 replies
    • 960 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.