Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியானவுடன் கட்சித் தலைமையில் மாற்றம்- ஸ்ரீ ல.சு.க. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரேஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது முதல், அதன் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீங்கிக் கொண்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியானவுடன் மீண்டும் கட்சித் தலைமையை அவர் ஏற்கவுள்ளதாகவும் அக்கட்சியின் பதில் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா சு…

  2. ஒரே பார்வையில் ஒன்பது செய்திகள் Nov 14, 2019 | 4:16by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும், கடற்படை மற்றும் இராணுவ தளபதிகளுக்கும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். பிரசார செலவு 3108 மில்லியன் ரூபா சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஐந்து வேட்பாளர்கள் ஒக்ரோபர் 14இற்கும், நொவம்பர் 10இற்கும் இடைப்பட்ட காலத்தில், 3108 மில்லியன் ரூபாவை தேர்தல் பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளனர் என்று தேர்தல் வன…

  3. 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­பவம் தொடர்பில் முன்னாள் கடற்­படை தள­பதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்­னா­கொட சட்­டத்தின் முன் சிறப்பு சலுகை பெற்­ற­வ­ராக இருந்­துள்ளார். இந்த தவறை திருத்தும் முக­மா­க­வேனும் அவரை நீதி­மன்­றுக்கு அழைக்கும் அழைப்­பாணை ஒன்­றினை அச்­ச­மற்ற நீதிவான் என்ற வகையில் பிறப்­பிக்க வேண்டும்' என சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று கோட்டை நீதி­மன்றில் கோரினார். எவ்­வா­றா­யினும் க…

    • 2 replies
    • 455 views
  4. ஜனாதிபதி தேர்தல் – முதல் முடிவு நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படும் என தகவல்! ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் விதிமுறைகளை மீறிய ஊடகங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல…

  5. க.விஜயரெத்தினம் “சரத் பொன்சேகாவை எப்பொழுது ஆதரித்ததோ அப்பொழுதே போர்க்குற்றம் தொடர்பாக பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகுதியை இழந்துவிட்டது” என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தின் தெரிவித்தார். திகிலிவெட்டையில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “2010ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து, தமிழ் மக்களிடம் எப்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாக்கு கேட்கத் தொடங்கிதே அன்றிலிருந்து போர்க்குற்றங்கள் தொடர்பாக பேசுவதற்கு தகுதியை அது இழந்து வந்துவிட்டது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் நிதி நிர்வாக…

    • 2 replies
    • 954 views
  6. அமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம் Share கிரிபண்டா டி சில்வா சுமணசேகர தமிழில் ரஜீபன் இது அவசரமான கடிதம்- நான் வழமையான மரியாதைகளை தவிர்க்க விரும்புகின்றேன் அவ்வப்போது இராஜதந்திரிகளிற்கு எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விடயம் என்பது உங்களிற்கு தெரியும்- ஆனால் அதற்கு அப்பால் நான் உங்கள் கவனத்திற்கு சில விடயங்களை கொண்டுவரவேண்டியுள்ளது. நாங்கள் இந்த நாட்டில் தேர்தல்களை நேசிப்பது உங்களிற்கு தெரியும். கிரிக்கெட்டிற்கு பின்னர் எங்களின் முக்கிய பொழுதுபோக்கு தேர்தல். ஆனால் கடந்த சில காலங்களாக எங்கள் கிரிக்கெட் வீரர்கள் எங்களை ம…

  7. வோசிங்டன் போஸ்ட் தமிழில் ரஜீபன் இலங்கையின் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் செயற்பட்ட கொலைகும்பல்களிடமிருந்து தப்புவற்காக நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு நாடு கடந்த நிலையில்வாழும் இலங்கைபத்திரிகையாளர்கள், தங்;கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வழிநடத்தியவர் இவ்வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதால் ,தாங்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பமுடியாது எனவும் தங்களிற்கு நீதி கிடைக்காது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர். …

  8. அலன் கீனன்- சர்வதேச நெருக்கடி குழு தமிழில் - ரஜீபன் இலங்கை 16 ம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் நிற்பவராக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். 2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில் இவரே முக்கிய நபராக காண…

    • 1 reply
    • 239 views
  9. சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான கோத்­தாபய சிறு­பான்மை மக்­களின் அர­சியல் அதி­கார பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்­சியின் பட்­டி­ருப்புத் தொகுதி தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பாக்­கி­யச்­செல்வம் அரி­ய­நேத்­திரன், வீரகேச­ரிக்கு அளித்த பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார் அவ­ரு­ட­னான முழு நேர்­கா­ணலும் வரு­மாறு, கேள்வி :- தமிழ்க் ­கட்­சி­களின் வெளிப்­ப­டை­யான ஆத­ரவைப் பெறும் வேட்­பாளர் தோற்­க­டிக்­கப்­ப­டுவார…

  10. ஜனாதிபதித் தேர்தல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திக­தி­யன்று நடை­பெற்று ஓரிரு நாட்­களில் புதிய ஜனாதிப­தியும் தெரிவு செய்­யப்­பட்­டு­வி­டுவார். யார் புதிய ஜனாதிப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என்ற ஏக்­கத்­திலும் ஊகத்­திலும் மக்கள் உள்­ளனர். அதற்கு காரணம் 35 அபேட்­ச­கர்கள் போட்­டி­யி­டு­வ­தல்ல வேறு கார­ணங்­க­ளாகும். எனினும் பெரும்­பா­லான மக்கள் ஜனாதிபதித் தேர்­தலில் டம்மி அபேட்­ச­கர்­களும் அர­சி­ய­லையே பொழு­து­போக்­காக கொண்ட ஜோக்­கர்­களும் போட்­டி­யி­டு­வதால் அவர்­களில் யார் வெற்றி பெறுவர் என்­பதை தீர்­மா­னிப்­பதில் சங்­க­டப்­ப­டாமல் நிச்­ச­ய­மாக சஜித், கோத்­தபாய, அநுர குமார திசா­நா­யக்க ஆகிய இவர்­களில் ஒரு­வரே ஜனாதிப­தி­யாக வருவார் என்­பதை உணர்ந்தும் உள்­ளனர் என்­ப­தையும் ந…

  11. ரஜீபன் இலங்கை தனது எதிர்காலத்திற்கு தீர்க்ககரமானதாக அமையக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் சனிக்கிழமை வாக்களிக்கவுள்ளது. நாடு 2019 ஏப்பிரல் 21உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பாதிப்பிலிருந்தும்- 18 மாத ஸ்திரதன்மை இன்மை மற்றும் அரசியல்உள்மோதல் இன்னமும் விடுபடாத நிலையில் காணப்படுகின்றது. ராஜபக்சாக்கள் பிரிவினைவாத தமிழ் கிளர்ச்சிக்காரர்களை ஈவிரக்கமற்ற விதத்தில் தோற்கடித்தமைக்காகவும்,மேற்குலகும் இந்தியாவும் அவர்களைபுறக்கணித்த வேளை இலங்கையை சீனாவை நோக்கி கொண்டு சென்றமைக்காகவும் நன்கு அறியப்படுகின்றவர்கள்,அவர்கள் மீண்டும் நாட்டின் மிகவும் ஆழமாக பிளவுபட்ட அரசியலில் முக்கியமானவர்களாக மாற…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடலை ஒலிபரப்பிய குற்றச்சசாட்டில், கல்முனை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறுதி பிரசாரக் கூட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் இன்று (13) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின் படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடல் திடீரென ஒலிபரப்பப்பட்டது. இந்த விடயம், கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த பொலிஸார், ஒலி, ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை சந்தேகத்தில் கைது …

    • 0 replies
    • 303 views
  13. இலங்கை ஜனாதிபதி தேர்தலின் இறுதித் தருணத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுவொ…

  14. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - முடிவில்லாத துயரக் கதை முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA / GETTY IMAGES Image caption1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்…

  15. Published by R. Kalaichelvan on 2019-11-13 19:24:49 (எம்.ஆர்.எம்.வஸீம்) பிரதான இரண்டு வேட்பாளர்களுக்கு பின்னால் மோசடிக்காரர்களும் தரகர்களுமே இருக்கின்றனர். யார் வெற்றிபெற்றாலும் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அதனால் நாட்டை முன்னேற்றி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால் மஹேஷ் சேனாநாயக்கவுடன் கைகோர்த்துக்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தேசிய மக்கள் கட்சியின் செயலாளருமான சிறினாத் பெரேரா தெரிவித்தார். தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் நடவடிக்கை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், …

    • 0 replies
    • 295 views
  16. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை(13) பிற்பகல்-04.30 மணியளவில் யாழ்.நல்லூரிலுள்ள கிட்டுப் பூங்காவில் மாபெரும் பரப்புரைக் கூட்டம் ஆரம்பமாகித் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்ப…

    • 0 replies
    • 240 views
  17. "புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்து வந்ததிலும் சரி அழிக்கப்பட்டவர்கள் தமிழர்களேயாவர்" Published by J Anojan on 2019-11-13 14:47:18 (ஆர்.யசி) விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ் மக்களேயாகும். தெற்கில் யுத்த அச்சம் மட்டுமே இருந்தது ஆனால் வடக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிடமுடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு நாட்டில் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மனதளவில…

  18. எமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார் திருகோணமலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது பலர் எதை தெரிவித்தாலும் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க அர்ப்பணிப்புடன் பல தசாப்தங்களாக அயராது செயற்பட்டு வருகிறோம் எதிர் காலத்திலும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவுசெய்யவேண்டும் தற்போது போட்டியிடுபவர்களில் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டிற்குள் உச்சபச்ச அதிகாரப் பகிர்வுடனான அரசியல் அமைப்பு மாற்றத்த…

    • 11 replies
    • 761 views
  19. கோத்­தாவின் குடி­யு­ரிமை குறித்து, அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் உண்மை நிலை­வ­ரத்தை வெளி­யிட வேண்டும்: மனோ Published by Loga Dharshini on 2019-11-13 15:52:34 அமெ­ரிக்கா இலங்­கையின் நட்பு நாடு. இன்­றைய சூழலில் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் குடி­யு­ரிமை தொடர்பில் அமெ­ரிக்கா தமக்கு ஒன்றும் தெரி­யாது என்று நடிப்­பதை நிறுத்தி விட்டு, அந்­நாட்டு இரா­ஜாங்கத் திணைக்­களம், இது தொடர்பில் உண்மை நிலைவ­ரத்தை விளக்கி அறிக்கை வெளி­யிட வேண்டும். இலங்கை அரசு, எதிர்க்­கட்சி என்ற விட­யங்­களைத் தாண்டி இலங்கை மக்­க­ளுக்கு அமெ­ரிக்க அரசு செய்ய வேண்­டிய பெரும் கட­மை­ இதுவாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்­துள்ளார். அவ­ரது செவ…

  20. கடந்த காலங்களில் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/68895

    • 0 replies
    • 213 views
  21. (ஆர்.விதுஷா) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு கட்சிகளினதும் தேர்தல் பிரசார செலவுகள் சுமார் 100 கோடி ரூபாவை எட்டியுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்தார். நாளொன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை குறித்த பிரதான இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான செலவுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளர். இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது , முக்கிய இரு கட்சிகள் உள்ளடங்களாக, ஐந்து கட்சிகளை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார ந…

    • 3 replies
    • 491 views
  22. இந்நாட்டு முஸ்லிம்களின் வாக்கு இனவாதத்துக்கா? – விஜித ஹேரத் கடந்த காலத்தில் சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சை, கருத்தடை மருந்து என இனவாதம் பேசியவர்கள் இன்று முஸ்லிம்களின் வாக்கைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருவது நகைப்பிற்குரிய விடயமாகும் என ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தம்புள்ள நெம்ரே விலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நீலமும் பச்சையும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். அவர்களின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக பெரும்பான்மை மக்கள் புதிய அரசியல் தலைமையொன்றை எதிர்பார்க்கின்றனர். பிரதான வே…

  23. மக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜபக்சவும் சஜித்தும் வேறு தெற்குக்கு செல்கின்ற மகிந்தராஜபக்ச சஜித்தும் வேறு, அவ்வாறே கிழக்கிற்கு செல்கின்ற மகிந்தவும் சஜித்தும் வேறு இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை பேசிவருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று 12-11-2019 கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவரும் சமத்துவமாக வாழ…

    • 4 replies
    • 508 views
  24. மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா? முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி அம்­பாறை மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் நேற்று விநா­ய­க­பு­ரத்தில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கையில் மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா? அல்­லது அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து அன்­ன­முண்டு அழ­காக வாழப்­போ­கி­றீர்­களா? நீங்­களே முடி­வெ­டுங்கள் என கேள்வி எழுப்­பினார்.சஜித் மனி­தா­பி­மா­னத்­துடன் அபி­வி­ருத்­தி­களை செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.