Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதியின் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக் காலத்தில் பங்கேற்கும் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கவுள்ளார். அதேபோன்று ஆட்சியில் உள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத ஜனாதிபதி தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஜனாதிபதியின்-இறுதி-நாடாள/

  2. சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த Nov 06, 2019 | 1:14by கி.தவசீலன் in செய்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள மக்களை ஏமாற்றி தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கலகெதரவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். “ புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை ஒருதலைபட்சமானது. …

  3. புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்ட மேடையில் சிங்கள மொழிக்கு முதன்மை கொடுக்கப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். சஜித் பிரேமாதாசவின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிலும் அதிகமானவர்கள் தமிழ் பேசுபவர்களே. இந்த நிலையில் சஜித் பிரேமதாச பிரச்சார கூட்ட மேடையானது இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் பொறிக்கப்பட்ட வேட்பாளர் குறித்த வசனங்கள் முழுமையாக சிங்கள ம…

    • 6 replies
    • 1.2k views
  4. காணாமல் போனார் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துகு்கு முன்பாக தனது போராட்டத்தை இன்று (06) முற்பகல் 10 மணியளவில் ஆரம்பித்துள்ளார். தொடர்ச்சியாக அவர், அலரி மாளிகைக்கு முன்பாக இன்று பிற்பகல் தனது போராட்டத்தைத் தொடர்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனதபத-சயலகததகக-மனபக-சவஜலஙகம-பரடடம/175-240746

    • 2 replies
    • 569 views
  5. வாக்களிக்கும்போது புர்காவை அகற்றுமாறு உத்தரவு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அல்லது நிகாப்பை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. வாக்களிக்க வரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் என தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும்போது அவற்றை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். புர்கா மற்றும் நிகாப் அணிவதை தங்களால் தடை செய்ய முடியாது என்றும் ஏனெனில் அது அவர்களின் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார். வாக்காளர்களிடமிருந்து தாங்கள் எதிர்பார்ப்பது, அவர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் அடையாளத…

    • 6 replies
    • 945 views
  6. மன்னிப்பு கோரியது பெப்பர்மின்ட் கபே! | Tamil Page By admin - தமிழில் பேச முடியாதென ஊழியர்களிற்கு அராஜக கட்டுப்பாடு விதித்த கொழும்பு பெப்பர்மின்ட் கபே (Peppermint Café) தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மும்மொழியிலும் மன்னிப்புக்கடிதம் அனுப்பி வைத்துள்ளது. நிறுவனத்தின் அறிவிப்பு பலகை ஒன்றில் காணப்பட்ட, தமிழ் மொழி பேசும் மக்களை அவமானப்படுத்திய, தமிழ் மொழி தொடர்பான முறையற்ற வாசகங்கள், உலகம் முழுக்க தமிழ் மொழி பேசும்/எழுதும் இணையர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இவ்விவகாரம், இலங்கை அரசகரும மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு …

    • 8 replies
    • 1.4k views
  7. எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களால் 480 மில்லியன் டொலர் மானியத்தை இழக்கும் இலங்கை? 2020 ஆம் ஆண்டுக்கான மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை. குறித்த பட்டியல் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில், இலங்கையின் பொருளாதாரம் மேல் நடுத்தர வருமான நிலைக்கு மாறிய பின்னர் குறித்த பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதாக வட்டார தகவல்கள் கிடைத்துள்ளன. இலங்கை ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் முதல் நிலுவையில் உள்ளது. அத்தோடு இந்த மானியம் தொடர்பாக தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் முன்வைப்பதால், 480 மில்லியன் டொலர் மானியத்தை நாடு இழக்கும் தருவாயில் காணப்படுகின்றது. அந்தவகையில் அமெரிக்காவின் மிலேன…

    • 5 replies
    • 548 views
  8. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவை 16 ஆவது சந்தேக நபராக சி.ஐ.டி. இன்று பெயரிட்டது. வசந்த கரன்னாகொட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த நிலையிலேயே இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் சி.ஐ.டி. இவ்வாறு அவரை 16 ஆவது சந்தேக நபராக பெயரிட்டது. இன்றைய தினம் இது குறித்த வழக்கு விசாரணைகளை இடையீட்டு மனுவூடாக சி.ஐ.டி.யால் விசாரணைக்கு எடுக்க கோரப்பட்டது. அதன்படி அவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ச…

  9. Wednesday, November 6, 2019 - 11:17am ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த சகல காலக்கட்டங்களிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால் திகன, அளுத்கம, குளியாப்பிட்டிய போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்கள் போன்று நடக்கலாம் என்ற யூகத்தை வைத்தே 'அம்பானட லெபே' என்ற கதை திரிவு படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார். கண்டி, மடவளை பஸார் சிரிமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதவு தெரிவித்து (02) இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட முஸ்லிம் பிரிவு இதனை ஒழுங்கு செய்…

  10. எம்சிசிக்கு எதிரான உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் பௌத்த பிக்கு Nov 06, 2019by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் அமெரிக்காவுடன் எம்சிசி கொடை உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, நேற்றிரவு தமது போராட்டத்தைக் கைவிட்டார். எம்சிசி கொடை உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடக் கூடாது எனக் கோரி, வண. உடுதும்பர காஷ்யப்ப தேரர் என்ற பௌத்த பிக்கு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுக்காலை தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். எம்சிசி உடன்பாடு நாட்டின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று, உடுதும்பர காஷ்யப்ப…

    • 2 replies
    • 440 views
  11. தமிழரசுக் கட்சி கோத்தாவையே ஆதரித்திருக்க வேண்டும் – யாழில் நாமல் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கான எமது செயற்பாடுகள் மிகவும் சுமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள், யாழ் மக்களுக்காகவோ வடக்கு- கிழக்கு வாழ் மக்களுக்காகவோ, இதுவரை எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை. அவர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவே இதுவரை செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை வடக்கு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பங்காளிக் கட்சியாகும். கடந்த காலங்களில் இருந்த கட்சியல்ல அது.அந்தக் கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரி…

    • 11 replies
    • 938 views
  12. சென்னை - யாழ்ப்பாணத்துக்கிடையிலான விமான சேவை 10 ஆம் திகதி முதல்! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கிடையிலான வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவையானது தினசரி விமான சேவையாக இடம்பெறவுள்ளதுடன் பயண நேரமானது 32 முதல் 50 நிமிடங்களுக்குள் இருக்கும். டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தின் கீழ் உள்ள தூதரக பொது அலுவலகத்தில் இருந்து இதற்கான விசா அனுமதியினை பெற்றுக் கொள்ளவும் முடியும். இதவேளை யாழ்…

  13. ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் பெருமாள் இயற்கை எய்தினார் யாழ்ப்பாணச் செய்தியாளர்Nov 06, 2019 by in செய்திகள் ஈழத்து ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான, சி.பெருமாள், யாழ்ப்பாணத்தில் நேற்று தனது 86ஆவது வயதில் இயற்கை எய்தினார். இரத்தினபுரியைப் பிறப்பிடமாகக் கொண்ட சின்னக்கண்ணு பெருமாள், ஊடகத்துறை மீது இருந்து ஆர்வத்தினால் இளவயதிலேயே, வீரகேசரி நாளிதழின் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டார். பின்னர், 1961ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு நாளிதழில், உதவி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், பின்னர் அதன் செய்தி ஆசிரியராகவும், வாரமலர் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழின் ஆசிரிய பீடத்தில் உதவி…

  14. யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்த “ஆவா” நீதி மன்றில் சரண் யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்த “ஆவா” என காவற்துறையினரால் விழிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சரணடைந்தார். சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.வாள்வெட்டு வன்முறை, ஆள்களுக்கு காயம் விளைவித்தமை, கொள்ளை, கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தமை, வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று காவற்துறையினர் தெரிவித்த…

  15. தமிழுக்கு முதலிடம் வழங்குவதை பொறுக்காதவர்கள் எப்படி தமிழர்களுக்கு தீர்வை தருவார்கள் – ஹக்கீம் யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் கொடுத்ததை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தருவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (04) முல்லைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; தமிழ் மக்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாணத்தில் தமிழுக்கு முதலிடம்…

    • 7 replies
    • 820 views
  16. முள்­ளி­­வாய்க்­காலில் ஒன்­றரை இலட் சம் மக்கள் கொல்­லப்­பட கார­ண­மான வேட்­பா­ளரை மாற்றுக் கட்சி கள­மி­றக்­கி­யுள்­ளது. எனவே வடக்கு–கிழக்கில் மக் கள் புரிந்து வாக்­க­ளிக்க வேண்டும் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார். வவு­னியா நக­ரப்­ப­கு­தியில் உள்ள விருந்­தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்­பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். குறித்த மாநாட்டில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம ­தா­சவின் பாரியார் ஜலனி, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேன­நா­யக்க, வட­மா­காண சபை முன்னாள் உறுப்­பி­னரும் அமைச்சர் றிசாத் பதி­யு­தீனின் இணைப்­பா­ள­ரு­மான றிப்கான் பதி­யுதீன், மகளிர…

    • 0 replies
    • 246 views
  17. புத்தளம் பகுதியில் இடம் பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வருவதற்கு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளே ஒழுங்கு செய்யப்படும் என மன்னார் உதவி தேர்தல் ஆணையாளர் ஜெ. ஜெனிற்றன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு புத்தளம் பகுதியில் வசித்து வருபவர்கள் கடந்த காலங்களைப் போன்று இம்முறை தனியார் பேருந்துகளில் வாக்களிக்க வருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஏனெனில் கடந்த காலங்களில் வாக்களிப்பு வேளைகளில் புத்தளத்திலிருந்து தனியார் பேருந்துகளை அரசியல் தலைவர்கள் வாடகைக்கு அமர்த்தி வாக்காளர்களை மன்னாரில் வாக்களிப்பதற்கு அழைத்து வருவதாகும். இவ்வாறு அழைத்து வரும்பொழுது வாக்க…

    • 0 replies
    • 288 views
  18. Headlines News : மொட்டு கட்சியின் தமிழ் விஞ்ஞாபனமாம்? மொட்டு கட்சியின் தமிழ் விஞ்ஞாபனமாம்? கோட்டாவின் மொட்டு கட்சியைச் சேர்ந்த ரிஷி செந்தில் ராஜ் whatsapp மூலம் கோட்டாவின் தமிழ் மொழியிலான விஞ்ஞாபனத்தைப் பகிர்கிறாராம். ஏன் பொது இணைப்பொன்றை ஏற்படுத்தி பொதுவில் பகிர முடியாதா? சிங்களத்தில் வெளியிடும் போது அப்படித் தானே செய்தீர்கள்? அனைவரதும் தொலைபேசி இலக்கங்களை சேகரிப்பதன் உள்நோக்கம் என்ன? ஏன். மின்னஞ்சல்…

  19. வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் நேற்­றைய தினம் மகளிர் ஒன்­று­கூடல் நிகழ்­வு­களில் அவர் கலந்­து­கொண்டார். இந்த நிகழ்­வு­களில் இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன், கொழும்பு மாந­கர மேயர் ரோஸி சேன­நா­யக்க உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர். ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் ஆலோ­ச­னையின் பேரில் வட­மா­கா­ணத்தில் நேற்றும் இன்றும் மகளிர் அணி மாநா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. வவு­னி­யாவில் மகளீர் ஒன்று கூடல் நிகழ்வு நேற்­றைய தினம் தனியார் விடு­தி­யொன்றில் நடை­பெற்­றது. இதே­போன்றே மன்னார், முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளிலும் மாநா­டுகள் இடம்­பெற்­றன. இந்தக் கூட்­டங்­களில் பெண்கள் அமைப்பின் தலை­விகள், கிராம மடட்ட அமைப்­புக்­களின…

    • 0 replies
    • 398 views
  20. கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது. “நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என…

    • 14 replies
    • 1.9k views
  21. யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவன் தூக்கிட்டு இரண்டு நாட்கள் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://athavannews.com/யாழ்-பல்கலை-மாணவன்-தூக்க/

    • 5 replies
    • 1.3k views
  22. திருக்கேதீச்சர வளைவு விவகாரம் – மன்னார் மறைமாவட்டம் எச்சரிக்கை! மன்னார் திருக்கேதீச்சர வளைவு தொடர்பான வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு தரப்பினர் சார்பாக ஆஜராகியுள்ளமையானது பக்கச்சார்பானது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமயோசிதமற்ற முடிவுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதால் பிற வழிகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் என மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்பணி ச.எமிலியான்ஸ் பிள்ளை அடிகளார் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில், “மன்னார் மறை மாவட்…

    • 3 replies
    • 806 views
  23. (ஆர்.யசி) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் ஆரோக்கியமானதும் திருப்திகரமான, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்திலான தேர்தல் விஞ்ஞாபனத்தை புதிய ஜனநாயக முன்னணி முன்வைத்துளதென கருதுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. தாம் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த கோரிக்கைகள் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிலைபாட்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாவும் கூறுகின்றது. புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பிரதான இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கொண்டு தம…

    • 6 replies
    • 884 views
  24. சந்திரிகாவின் மாநாடு இன்று – பதற்றத்தில் சுதந்திரக் கட்சி தலைமை Nov 05, 2019 | 2:09by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் ‘ அபி சிறிலங்கா’ என்ற பெயரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு, இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, கட்சி அமைப்பாளர்களுக்கு குமார வெல்கம அழைப்பு விடுத்திருந்தார். இதில் பெருமளவிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகள், ஆதரவாளர்க…

    • 1 reply
    • 354 views
  25. இலங்கை தமிழரசுக் கட்சியின் முடிவானது மக்களை முன்வைத்துப் பார்க்காது கட்சியை முன்வைத்துப் பார்க்கும் செயலாகவே உள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் இருந்தார்கள் தமிழரசுக் கட்சி புளட் ரெலோ இதில் புளட் அண்மைக்காலங்களில் தமிழரசுக் கட்சி என்ன தீர்மானம் எடுக்கின்றதே அதை நாங்களும் ஏற்கின்றோம் என்ற நிலையில் தான் இருந்து வருகின்றார்கள்.சித்தார்த்தனைப் பெறுத்தவரையில் அவரின் தகப்பனார் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்…

    • 2 replies
    • 460 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.