Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Jayanthy on 2019-10-20 16:14:05 பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (Financial action task force- FATF) சாம்பல் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் இலங்கையை சாம்பல் பட்டியலில் இருந்து நீக்க FATF முடிவு செய்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்காமல் இலங்கை அரசு அமைதியாக இருப்பதாக குற்றம்சாட்டி அதனை சாம்பல் பட்டியலில் சேர்த்து கண்காணிப்புக்கு உட்படுத்த நிதி நடவடிக்கை பணிக் குழு முடி…

    • 0 replies
    • 323 views
  2. வரி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி வாக்குறுதியளித்ததன்படி வரிகளை நீக்கினால் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லமுடியுமென ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றும் தடுமாற்றம் அடைந்தார். தேர்தல் வாக்குறுதிக்கமைய ‘வற்’ வரியை குறைத்தும் ஏனைய வரிகளை நீக்குவதுமாக இருந்தால் அதன் மூலம் வருடாந்தம் இழக்கப்படும் 350பில்லியன் ரூபாவை எவ்வாறு ஈடுசெய்யப் போகின்றாரென பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் விளக்கமளிக்க வேண்டுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சவால் விடுத்திருந்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வைச் சேர்ந்த விஜயதாச ராஜபக்ஷ எம…

  3. சஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்… October 20, 2019 சஹ்ரானுடனான காணொளி தொடர்பில் ஹக்கீம் விளக்கம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை பார்வையிடச் சென்ற இடமொன்றில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அந்த பழைய காணொளியை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முற்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (19.10.19) கண்டி, கலகெதர தேர்தல் தொகுதியில் ஹத்தரலியத்தவில் நடைபெற்ற…

  4. ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் இன்று (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டு - மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமல்ராஜன் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு தினமாகவும், ஏனைய தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வேண்டியும் இந் நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/67213

    • 2 replies
    • 598 views
  5. கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த வாரத்தில் கூடவுள்ளது. இதன்படி எதிர்வரும் 23 , 24ஆம் திகதிகளில் தமது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்புக்கு வருமாறு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதன்போது வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கக் கூடிய வேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்பின்-அனைத்து-பா/

  6. அரசமைப்பின் 16ம் திருத்தம் மூலம் தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி ஆகி விட்ட விஷயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி விமல் வீரவன்ச. அவருடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் டக்லஸ், தொண்டமான், அதாவுல்லா போன்றோர் இவருக்கு எழுத படிக்க கற்றுக்கொடுத்து, அரசியலமைப்பையாவது வாசிக்க பழக்க வேண்டும். தமிழ் மொழி முழு இலங்கையின் இன்னொரு ஆட்சி மொழி என்பதையும், தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி என்பதையும் இந்த தமிழில் பேசும் மூன்று கோட்டா ஆதரவு கூட்டு குடித்தன அரசியல்வாதிகளும் அறிவார்கள் என நம்புகிறேன். எங்களுக்கும் இது தெரியாதே என என் நம்பிக்கையில் மண்ணை போட்டு விடாதீர்களப்பா என இவர்களை வேண்டுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரு…

    • 0 replies
    • 521 views
  7. இறுதிப் போரை மாவிலாற்றில் ஆரம்பித்து, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன். பயங்கரவாதிகளை கொல்லவே நாங்கள் இடங்களை பிடித்தோம். நிலங்களை பிடிக்க யுத்தம் செய்யவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் இன்று (18) சற்றுமுன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். மேலும், இறுதிப்போரை மாவிலாறில் ஆரம்பித்து சம்பூர், வாகரை, தொப்பிகல முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன். சில காரணங்களுக்கா…

    • 6 replies
    • 1.1k views
  8. கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு!

  9. (அப்துல்சலாம் யாசீம்) ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை புறக்கணிக்க வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், "ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள 35 வேட்பாளர்களில் தமிழ் பேசும் மக்களின் பொதுவேட்பாளராக நான் களம் இறங்கியுள்ளேன். பிரதானமான முக்கிய அரசியல் கட்சிகளில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரும் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளியுள்ளனர்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.l…

    • 3 replies
    • 676 views
  10. ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மறுநாளே இராணுவக்கைதிகளை விடுதலை செய்வேன் என்கிறார் கோத்தபாய ராஜபக்ச ­. பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை உடனடியாக விடுதலை செய்வேன் என்று கூறுகின்ற கோத்தபாய ராஜபக்ச ­ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி எதுவும் கூறவில்லை. அப்படியானால் நான் ஜனாதிபதியாக வந்தால், இராணுவத்தை விடுதலை செய்வேன். ஆனால் தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என்பதாக கோத்தபாய ராஜபக்ச ­வின் நிலைப்பாடு உள்ளது என அனுமானிக்கலாம். இது அவர்கள் பக்கம் என்றால், சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் பொதுப்படையானதாக இருக்கின்றதே தவிர, எதையும் குறித்துரைப்பதாக இல்லை. அதாவது நாட்டைக…

    • 0 replies
    • 336 views
  11. கடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள் கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெ…

  12. தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் தயாராகவே இருப்பதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்று வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், தமிழ் முற்போக்குக் கூட்டணிப் பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவித்துள்ள 15 தீபாவளி முற்பணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சகலருக்கும் வீ…

  13. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷத் தெரிவித்திருப்பது அரசியல் நாடகமென அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுப் பெற்றுத்தரப்போவதாக தெரிவித்திருப்பது தேர்தல் வாக்குறுதியெனவும் அவர் விமர்சித்துள்ளார். "39 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளமை தொடர்பில் இனவாத கருத்துக்கள் வெளியிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழும் அரசகரும மொழி என்பதை இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இனவாதம் பேசி தமிழர்களின் வாக்குகளும் முஸ்லிம…

  14. யாழ் மாணவர்கள் தேசிய மட்ட கணிதப் போட்டியில் 2ம் இடம் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கணிதப் போட்டியில் யாழ் மாவட்ட மாணவர்கள் அணி 2ம் இடத்தை பெற்றனர்.குறித்த போடியில் மேல் மாகாணம் முதலாம் இடத்தையும் தென் மாகாண அணி மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தது.இதில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதி ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் துரைராஜ் அபிஷாந், சுபேந்திரன் பிரணவன், கோபாலகிருஷ்ணன் கிருஷாந், இராசலிங்கம் துஷாரகன், சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஆல்ரிக்பிரசாந் நிலக்ஸன், மகாஜனக் கல்லூரி மாணவன் சத்தியலோகேஸ்வரன் தாமிரவரன், வரணி மத்திய கல்லூரி மாணவன் சிவபாதம் சிந்துஜன்மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன், ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றனர்.(15) …

  15. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம் வவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றையதினம் காலை இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்திலிருந்து வருகை தந்த உத்தியோகஸ்தர்கள் பிரச்சார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர். குறித்த பிரச்சார கூட்டத்திற்குத் தேர்தல் திணைக்களத்திடம் இருந்து உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தே கூட்டம் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த கூட்டம் இட…

  16. தமிழ் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 விடயங்கள் தொடர்பில் பேசத்தாயாரில்லை -கோத்தபாய வடக்கில் தமிழ் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 விடயங்கள் தொடர்பில் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. நான் யதார்த்தத்தை பேசுவேன் இந்த 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட நான் தயாரில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு நான் பதிலளிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ. ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என யாருமில்லை. சிறைக்கைதிகளே உள்ளனர். இன்னும் 200 பேர் அளவிலேயே உள்ளனர். நாங்கள் ஆயிரக்கணக…

  17. யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியாகும் வரை இடைநிறுத்தம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் திடீரெனப் பதவி விலக்கப்பட்டதையடுத்து புதிய துணைவேந்தர் பதவிக்காகக் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த அதே நேரத்தில் செப்டெம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பைத் தேர்தல் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக 2141/52 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானியின் மூலம் தேர்தல் காலத்தில் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களையும் வெளியிட்டிருந்தார். 2141/52 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஜனாதிபதித் தேர்தல் கால…

  18. சுழிபுரம் மாணவி கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்க நடவடிக்கை… October 19, 2019 சுழிபுரம் மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்கும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் மாலை சடலமாக மீட்கப்பட்டார். பாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது. …

  19. சுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கை விளக்கத்துக்கு எடுப்பதற்கான ஆரம்ப விசாரணையை நடத்த சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கட்டளையிட்டார். “இரண்டாவது எதிரிக்கான அழைப்புக் கட்டளையை காவல்துறையினரால் சேர்ப்பிக்க முடியவில்லை. அவரது தாயார் மற்றும் கிராம அலுவலகரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்களுக்கு இரண்டாவது எதிரி இருக்கும் இடம் தெரியவில்லை. காவல்துறை தி…

  20. சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மனநலம் பாதித்த பெண்னொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இருவருக்கு பத்துவருடங்கள் சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். கடந்த 2010ம் ஆண்டு காலப் பகுதியில் திருகோணமலை நிலாவெளி பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த மனநலம் பாதித்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக 58வயதான கனகரட்னம் மரியதாஸ் மற்றும் அங்கு பணியாற்றிய 61வயதான சிவலிங்கம் ஜோஜ் ஆகிய இருவருக்கு எதிராக சட்ட மாஅதிபர் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ் வழக்கு தொடர்பாக விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு அவ் வழக்கின் தீர்ப்புக்காக நேற்றைய தினம் திக…

    • 1 reply
    • 726 views
  21. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (18) முற்பகல் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவும் இரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மடடடன-பரநதணரவ-ஒபபநதததல-கச…

    • 10 replies
    • 971 views
  22. கோத்தாபயவை நானே பாதுகாத்தேன் - விஜயதாச பகிரங்க அறிவிப்பு! (இராஜதுரை ஹஷான்) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் அனுப்பியிருந்ததை தான் நீதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் தடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலை எதிர்த்து குரல் கொடுத்தமையின் காரணமாகவே நீதியமைச்சு பதவியில் இருந்து விலக்கப்பட்டு பல விமர்னங்களுக்கு உள்ளா…

    • 2 replies
    • 569 views
  23. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய ஆரம்பம் வடக்கின் வரலாற்றை மாற்றியமைப்பதுடன் வீழ்ச்சியுற்ற ஒரு தேசத்தின் எழுச்சிக்கான அடித்தளமாகவும் அமையும் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இனி இருளுடன் இருக்காது. சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் ஒரு இடமாக மாறும். இலங்கை சர்வதேசத்தின் முன்னிலையில், மீள எழுச்சி பெறுவதற்கு, இது வழியமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் இங்கு அவர் உரையாற்றுகையில், இது தேர்தல் காலம். ஆகவே நான் இந் நிகழ்வில் கலந்துகொள்வது முறையானதா? என நான் தேர்தல் ஆணையாளரிடம் கேட்ட பின்னரே …

  24. யாழ். பலாலி விமான நிலையம் 17 ஆம் திகதி சர்வதேச தரம்: TNA விசனம் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச விமான நிலையமாக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது விமானம் சென்னையிலிருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பலாலி விமானம் திறக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதன் ப…

    • 16 replies
    • 2.2k views
  25. (இராஜதுரை ஹஷhன்) ஒருமித்த நாட்டுக்குள் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய நிலை வழங்கப்பட்டு அவை பாதுகாக்கும் ஏற்பாடுகளும் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனாதிக ஹெல உருமய அமைப்பின் தேசிய மாநாடு இன்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஒருமித்த நாடு அனைவருக்கும் உரித்துடையதாக்கப்படும், புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவது உறுதிப்படுத்தப்பட்ட விடயம் இருப்பினும் ஏனைய இனத்தவர்களுக்கும், அவரவர் பின்பற்றும் மதங்களுக்கும் உரிய நிலையினை வழங்குவதுடன் அவை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.