Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்கட்சித் தலைவர் விவகாரம் – கட்சிக்குள்ளேயே பிரச்சினையை தீர்க்குமாறு சபாநாயகர் அழைப்பு! நாடாளுமன்ற மரபுகளை மீறி எதிர்கட்சித் தலைவர் நியமனம் இடம்பெறக்கூடாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்தோடு கட்சிக்குள்ளேயே பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அந்த பதிவில் “எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கும் எனது தீர்மானம் நிறுவப்பட்ட நாடாளுமன்ற மரபுகளுக்கு உட்பட்டது. அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும்போது நாடா…

  2. ஐ.நா. தீர்மானத்தை பரிசீலனை செய்யும் அரசின் முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் – சுமந்திரன் எச்சரிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றிய, இலங்கையின், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்தை பரிசீலனை செய்யும் அரசாங்கத்தின் முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சுமந்திரன் , சர்வதேச அளவில் நாட்டைப் பற்றி எதிர்மறையான பிம்பம் இருந்த நேரத்தில், 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் ஐ.நா. தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதை அடுத்து இலங்கைக்கு ஆதரவாக நிலைமை மாறியது என்றும் அவர் சுட்…

  3. தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசிற்கு ஆதரவளிக்க தயார் – சுமந்திரன் In இலங்கை November 26, 2019 3:35 pm GMT 0 Comments 1011 by : Vithushan இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்கும் நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, அபிவிருத்திப் பணிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்கும் போது நாம் அவற்றுக்கு எதிப்புத் தெரிவிக்கமாட்டோம் என்றும் கூறினார். ஏற்கனைவே இடைநடுவில் …

  4. மக்களின் நலன் கருதி அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை ஆதரிக்க தயார் – இரா.சம்பந்தன் In இலங்கை November 26, 2019 2:24 pm GMT 0 Comments 1113 by : Vithushan இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னின்று செயற்பட வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தாம் வாக்களித்த வேட்பாளர் தோல்வி பெற்றுள்ள நிலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களு…

  5. இலங்கை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தமிழர்கள் கடத்தல் விவகாரம்: வெளிநாடு தப்பிச் சென்ற விசாரணை அதிகாரி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionநிஷாந்த சில்வா இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நடந்த தமிழர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆட்சியில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ப…

  6. மாவீரர் நாள் நிகழ்வுகளில் பங்கெடுக்குமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள் வடக்கு கிழக்கின் பகுதிகளில் நாளை நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் அமைதியான வழியில் உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது தொடர்பில் விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வென்றெடுப்பதற்குமாக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த விடுதலை வீரர்களை நினனவுகூர்ந்து நினைவு நாள் அனுஷ்டிப்பது வரலாற்று காலம் தொட்டு உலகம் பூராகவும் மனித நாகரிகத்தின் முக்கிய பண…

    • 1 reply
    • 918 views
  7. மாவீரர் தின ஏற்பாடுகளை மேற்கொண்ட த. தே. ம. முன்னணியின் முல்லைத்தீவு அமைப்பாளர் கைதாகி விடுதலை மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகளை முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, முள்ளியவாய்க்கால் பகுதியில் மாவீரர் தினத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் ஏற்பாட்டுக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு சென்ற பொலிசாரும், புலனாய்வு துறையினரும் சிவப்பு, மஞ்சள் கொடிகளை கட்ட வேண்டாம் எனவும் மாவீரர் தின ஏற்பாடுகளை கைவிடுமாறும் வலியுறுத்தினர். அத்துடன் அங்கு அலங்கார வேலை…

  8. கண்ணீர் காணிக்கைக்கு தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்கள் கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் என்பன 2019 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. நடந்துமுடிந்த போராட்டத்தில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2019 மாவீரர் நாள் ஏற்பாடுகள் ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் மேற்கொள்ளப்…

  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்! AdminNovember 26, 2019 நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம் அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 25.11.2019 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 அன்பார்ந்த தமிழீழ மக்களே! நாம் எமது தாயகமாம் தமிழீழத்தின் விடுதலைக்காகவும், எமது எதிர்காலச் சந்ததியின் சுதந்திர வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எம் மானமாவீரர்களை நினைவு கூரும் எழுச்சி ந…

  10. தமிழீழ தேசிய தலைவராக போற்றப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் இன்று. சிறு வயதிலேயே போர்க்குணத்துடன் இருந்த அவர் போர்க்களத்திற்கு சென்ற பாதையை தெரிந்துக்கொள்ளலாம். வேலுபிள்ளை பிரபாகரன். இந்தப் பெயரை உச்சரிக்காத தமிழர்களே இல்லை என சொல்லலாம். இலங்கையில் தமிழீழம் மலர ஆயுதமேந்தி போராட்டம் நடத்தியவர். தமது 13-ஆவது வயதில் தந்தை வேலுபிள்ளையுடன் பிரபாகரன் நடந்து செல்லும்போது, முதியவர் ஒருவரை இலங்கை ராணுவத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த நிகழ்வை பார்த்த பிறகே, தமிழீழத்துக்காக போராட வேண்டும் என்ற மன உறுதி பிரபாகரனுக்கு ஏற்பட்டது. அப்போதே, தமிழ் இனத்தை காரணம் காட்டி தாக்குபவர்களை, தாம் திருப்பி தாக்கப் போவதாக கூறியிருக்கிறார் பிரபாகரன். ஆன…

    • 0 replies
    • 652 views
  11. வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்கபோவதில்லை -முத்தையா முரளிதரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை முதளிதரன் நேற்று திங்கட்கிழமை இரவு சந்தித்ததாகவும் அதன்போது வடமாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை முரளிதரன் ஏற்றதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றனஇந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த முரளிதரன், ஜனாதிபதியை நேற்று இரவு சந்தித்தது உண்மைதான். ஆனால் வடமாகாண ஆளுநர் பதவியை ஏற்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிட்டதாக தன்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரள…

  12. இந்திய- இலங்கை உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்தும் தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கிறது: தமிழ் தேசிய கூட்டமைப்பு 1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் இருக்கும் சர்வதேச ரீதியான இந்திய- இலங்கை உடன்படிக்கையை அமுல்படுத்தும் தார்மீக கடமை இந்தியாவுக்கு இருக்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், இந்திய -இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு இந்தியா தனக்கு இருக்கும் பங்களிப்பை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பல்லாயிரக்கணக்கான இலங்கை த…

    • 2 replies
    • 394 views
  13. இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வரும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழகத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற நிலையில், அவரது சகோதரர்களும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டது தமிழர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்ட வர்த்தமானி என்ன? …

  14. பிரபாகரன் பிறந்தநாள்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSTR யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று (26 .11 .2019) மற்றும் நாளை (27.11.2019) ஆகிய இரு தினங்களும் எந்த ஒரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் என யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகார…

  15. வெளிவிவகார அமைச்சரை போட்டி போட்டு சந்தித்த இந்திய, சீன தூதுவர்கள் Nov 26, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்த்தன பொறுப்பேற்றதை அடுத்து, வெளிநாட்டுத் தூதுவர்கள்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஸ் குணவர்த்தன நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதையடுத்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும், சீன தூதுவர் செங் ஷியுவானும், சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், இந்திய, சீன …

  16. வடக்கு- கிழக்குப் பகுதிகள் முழுவதும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக நினைவு தூபி மற்றும் நினைவு கற்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நாளை புதன் கிழமை (27) தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் தினத்திற்கு என மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு பொது சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மன்னார் மடு பண்டிவிருச்சான் மாவீரர் துயி…

  17. வவுனியா நகரசபையின் உள்ளக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, பிரஜைகள் குழுவின் வவுனியா மாவட்டத் தலைவர் கோ.ராஜ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில், இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல் நிகழ்வு, வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில், செவ்வாய்க்கிழமை (27) நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். இதன்போது, மாவீரத் தெய்வங்களுக்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் கோவில் மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்படுமெனத…

    • 0 replies
    • 343 views
  18. எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டோம் – விமல் வீரவன்ச Nov 26, 2019 | 2:07by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடாது என்று, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இடைக்கால அரசின் புதிய அமைச்சராக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். “அமெரிக்காவுடன் எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு எமது அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை, இந்த பிரச்சினையில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/11/26/news/41368

  19. ஜெனிவா தீர்மானத்துக்கான ஆதரவு மீள்பரிசீலனை – சிறிலங்கா அறிவிப்பு Nov 26, 2019by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய, சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் இடைக்கால அரசின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஸ் குணவர்த்தன நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா இந்த தீர்மானத்தை தேசிய நோக்கில் அதை சீரான மற்ற…

  20. தமி­ழின விடு­தலைப் போராட்டக் காலத்­திலும் போரின் எல்­லை­யிலும் உயிர்­களை அர்ப்­ப­ணித்­த­வர்­க­ளினை நினை­வு­கூரும் நிகழ்­வுகள் நடை­பெற அர­சி­னதோ, பாது­காப்புத் தரப்­பி­னதோ தலை­யீடோ, தடை­களோ இடம்­பெ­றா­ம­லி­ருக்­க­வேண்டும். இந் நிகழ்­வு­களில் அர­சியல் நலன்­க­ளுக்கு இட­மில்லை என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராசா தெரித்­துள்ளார். தமி­ழின விடு­த­லைக்­காக ஆயுதப் போர் வழி­களில் தம்மை அர்ப்­ப­ணித்­த­வர்­க­ளினை நினை­வுகூரும் நிகழ்­வான மாவீரர் வாரம் தொடர்பில் வெளி­யிட்ட அறிக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கையில் தமிழ் மக்கள் கடந்த 70ஆண்­டு­களில் தமி­ழின விடு­…

    • 0 replies
    • 455 views
  21. ஊடகப்பிரிவு- சிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மன்னாரில் பலகிராமங்களுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். ஆட்சியை தொடங்கிய குறுகிய காலத்தில் அராஜகம் தொடங்கியுள்ளது.புத்தளம் கனமூலைக்கு மக்களை சந்திக்க சென்றபோது எமது வாகனத்தொடரணிமீது நடத்திய தாக்குதல் இதனைப் புலப்படுத்துகின்றது. டயர்போட்டு…

    • 0 replies
    • 358 views
  22. கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படவிருந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண ,வடமத்திய மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்படவுள்ளதாக சற்றுமுன்னர் அறியமுடிந்தது. முன்னதாக அவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவிருந்தார். இருந்தபோதும் இறுதிநேரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக பிரபல தொழிலதிபரும், அரசியல் ஆர்வலருமான அனுராதா யஹம்பத் நியமிக்கப்படவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ”நாட்டுப்பற்று வல்லுநர்களின் கருத்துக்களம்” என்ற அமைப்பின் ஊடாக கடந்த காலங்களில் அனுராதா ,அரசியல் மற்றும் சமூக…

    • 0 replies
    • 401 views
  23. ஐ.நா. தீர்மானம் மீள் பரிசீலனை செய்யப்படும் – அரசாங்கம் அறிவிப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்து நிறைவேற்றிய, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இடைக்கால அரசின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஸ் குணவர்த்தன நேற்று (திங்கட்கிழமை) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இந்த தீர்மானத்தை தேசிய நோக்கில் சீரான மற்றும் பாகுபாடற்றதாக மாற்றுவதில் இலங்கை கவனம் செலுத்தும். …

  24. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சுமார் 900 அதிகாரிகள் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி முதல் 900 ஜனாதிபதி பாதுகாப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அவர்கள் பணிபுரிய விரும்பும் இரண்டு பிரிவுகளுக்கு அவர்களை பெயரிட அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ள பட்டியலில் இரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும், நான்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களும், ஏழு பிரதம பொலிஸ் பரிசோதகர்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/69723

    • 0 replies
    • 349 views
  25. (ஆர்.யசி) கோத்­தபா­ய ராஜபக்ஷ தலை­மை­யி­லான எமது அர­சாங்­கத்தில் நாம் கொடுத்த வாக்­கு­று­தி­களை ஒரு­போதும் மீற­மாட்டோம். மக்கள் எம்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கை­யையும் எதிர்­பார்ப்­பையும் காப்­பாற்­றுவோம் என்று பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். நாட்டில் பொரு­ளா­தார சவால் கள் நிறைந்­துள்ள நிலையில் நிதி அமைச்­சினை என்­னிடம் கொடுத்­துள்­ளனர். துரி­த­க­தியில் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். நிதி அமைச்சின் கட­மை­களை பொறுப்­பேற்ற பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரை­யாற்­று­கை­யி­லேயே இதனைக் கூறினார். அவர் மேலும் கூறு­கையில், இந்த நாட்டில் நிதி அமைச்­ச­ர…

    • 0 replies
    • 735 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.