ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
வெளிவரும் ராஜபக்ச கொடூரங்கள் | ஒப்புக்கொள்ளும் வெள்ளை வான் சாரதி! கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் முதலைகளுக்கு இரையாக வீசப்படும் வெள்ளை வான் சாரதி மற்றும் கடத்தப்பட்டுத் தப்பியவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன – பட்ம்: கெலும் லியனகே / டெய்லி மெயில் ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் கட்சி அலுவலகத்தில் அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடக மாநாட்டில் ராஜபக்ச காலத்தில் கடத்தலுக்குப் பாவித்ததாகக் கருதப்படும் வெள்ளை வான் சாரதி ஒருவரும் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பியோடிய ஒருவரும் பல திடுக்கிடும் தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கினர். ராஜபக்ச காலத்தில் நடைபெற்ற பல ஆட்கடத்தல்கள், கொலைகள் என்பனவற்றைச் செய்தவர் எனக் கருதப்படும் …
-
- 1 reply
- 594 views
-
-
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை கொலை குற்றம் தொடர்பில் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டு, ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா எனும் இளைஞரை விடுவிப்பதற்காக அத்துரலியே ரத்தன தேரர் முன்னின்று செயற்பட்டதாகவும், இது தொடர்பில் வழங்கப்பட்ட விளக்கங்களுக்கு அமைவாகவே அவரை ஜனாதிபதி விடுவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு இவ்வாறு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
-
- 2 replies
- 468 views
-
-
Published on 2019-11-11 10:24:10 (செ.தேன்மொழி) உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் முன்னைய ஆட்சியாளர்கள் பிரபாகரனுக்கு சொந்தமான பல சொத்துக்களை கொள்ளையிட்டதாக, வெள்ளை வேனில் கடத்திக் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியான அத்துல சஞ்சீவ மதநாயக்க என்பவர் தெரிவித்தார். கிருளப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமை ச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்த செய்தியாளர் மாநாட் டில் கலந்துகொண்ட அத்துல சஞ்சீவ மதநாயக்க இந்த தகவல்களை வெளிப்பட…
-
- 1 reply
- 454 views
-
-
(நா.தனுஜா) கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவின் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது. அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் தற்போதுவரை கோத்தாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவில்லை. அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டோரின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலிலும் கோத்தாபயவின் பெயர் உள்ளடங்கியிருக்காத நிலையில், அமெரிக்கப் பிரஜாவுரிமையை தான் கைவிட்டிருப்பதை உறுதிப்படுத்தி அறிவித்தலொன்றை விடுக்குமாறு அமெரிக்கத் தூதரகத்திடம் கோத்தாபய ராஜபக்ஷ கோராதது ஏன் என்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவொன்று கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க ப…
-
- 1 reply
- 565 views
-
-
தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு! தமிழரசு கட்சியின் வாகரை பிரதேச சபை வட்டார உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமான பாலசிங்கம் முரளிதரன் ஜனாதிபதி தேர்ததில் போட்டியிடும் பொதுஜன பெரமுனை கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், “அன்று நாங்கள் ஆயுத ரீதியான போராட்டத்தை செய்து கொண்டிருந்தோம் 2009 யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் எங்களுடைய சமூகம் அநாதைகளாக இருக்கின்றார்கள். இன்று கிழக்கு மாகாண தமிழ் மக்களாகிய நாங்கள் …
-
- 3 replies
- 525 views
-
-
(செ.தேன்மொழி) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்கா பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மூன்று நாட்களுக்குள் நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டு கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தை கோத்தாபயவின் ஆதரவாளர்கள் கலைக்க முற்பட்டதாக குறிப்பிட்டு அவர்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். சுதந்திர சதுக்கத்தின் முன்பாக இன்று இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 100 பேர் வரை இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது இவர்கள் கோத்தாபயவின் …
-
- 0 replies
- 361 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என்பதை புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளும், சிவில் அமைப்புகளின் கருத்துக் கணிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். திகனயில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் இலகுவில் வெற்றிபெற்று விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் பிரசார வியூகமாக இருந்தது. இதற்காகவே விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட மேலும் பலர் அரசியல் மேடைகளில் இனவாதத்தை கக்கினர். மதவாதத்தை தூண்டினர். ஆனால் ப…
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள் தனது மூலோபாய நலன்களை பாதுகாக்கவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ்இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகப்போகும் புதிய அரசாங்கம் தனது மூலோபாய நலன்களைபாதுகாக்கவேண்டும்,இலங்கைக்குள் சீனாவின் எந்த கடல்கலத்தையும் நீர்மூழ்கியையும் அனுமதிக்க கூடாது என இந்தியா எதிர்பார்க்கின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்தியா இலங்கையின் நலன்கள் குறித்து உணர்வுபூர்வமாக உள்ளதுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் எவருடனும் இணைந்து செயற்படும் என இந்த விவகாரங்கள…
-
- 29 replies
- 2.1k views
- 1 follower
-
-
அரசியல் கைதிகள் விடுதலை: அமைச்சரவை பத்திரம் தயார் Kamal / 2019 நவம்பர் 09 , பி.ப. 12:53 - 0 - 67 அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன், சஜித் ஆட்சியில் அந்த பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்குள் இருந்து ஆதரவளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதோடு, அமைச்சு பதவிகளையும் பெற்றுகொள்ள வே…
-
- 6 replies
- 989 views
-
-
உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலை அனுமதி – கோட்டா உறுதி உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வரத்தை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கலென்பிதுனுவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கல்விக்காக தான் பாரிய அளவில் முதலீடு செய்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். உலகில் அதிகளவான நாடுகள் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அது தங்களுக்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/உயர்தரத்தில்-சித்தியடைய/
-
- 1 reply
- 414 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கான முக்கிய வேட்பாளர் ஒருவரின் பிரசார கூட்டம் ஒன்று இன்றையதினம் முல்லைதீவு கரைதுரைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றது . இக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஸ்களில் அழைத்துவரப்பட்டவர்களுக்கு மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது பிரசார கூட்டம் முடிந்த கையோடு முல்லைத்தீவு நகர கடற்கரையில் வைத்து ஒவ்வொரு பஸ்களுக்கும் தலா 5 மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது . மதுபான போத்தல்கள் வழங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக முல்லைத்தீவு நகர கடற்கரைக்கு அண்மையாக சில குழுக்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அத்தோடு பொது இடங்களான கடற்கரை மற்றும் வீதிகளில் வைத்து மதுபானத்தை அருந்திய சம்பவங்களையும் அவதான…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழ். முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை தமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே ஆதரவு கடந்த ஐந்தாம் திகதி யாழ்.முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலில் யாழ்.அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ஏ.சி.முபீன் தலைமையில் நடைபெற்ற சம்மேளனத்தின் நிர்வாகிசபை கூட்டத்தில் இனங்களுக்கிடையிலான சமாதான சமத்துவ புரிந்துணர்வுடன் கூடிய ஐக்கியமான செயற்பாடுகளில் சம்மேளனம் செயற்படவேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட சம்மேளனத்தின் நிர்வாகிகளினால் கருத்து வலியுறுத்தப்பட்டது. மேற்படி கருத்திற்கு இனங்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை தமிழ் மக்ளினால் விரும்பப்படும் வேட்பாளருக்கே தமிழ்பேசும் யாழ்.முஸ்லிமக்களாகிய நாம் ஆதரவு அளித்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என் று ஏக மனதா…
-
- 0 replies
- 286 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சென்ற வாகனத்தின் மீது செருப்பு தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற வேளையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்த நிலையில் இரா.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமது பாதுகா…
-
- 53 replies
- 5.2k views
- 1 follower
-
-
சாவகச்சேரியில் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்பட்டன படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு – சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற ரவிராஜ் நினைவுப் பேருரையின் போது, மூன்று விருதுகள் வழங்கப்பட்டன.நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை மேற்கோண்டதற்காக, சிவசிறி விக்னராஜா ஐயர் பாலகுமார குருக்கள் அவர்களுக்கு “சைவத் தமிழ் மரபுரிமை காவலுக்கான விருது”, வழங்கப்பட்டது. முகநூலில் பலரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதற்காக, “சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைப்பு செயற்பாடு விருது” தசைத் திறன் குறைபாடு நோயினால…
-
- 0 replies
- 256 views
-
-
தமிழர்களுக்காக தியாகம் செய்யத் தயார்!- விமல் வீரவன்ச தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்வதற்குத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். மேலும் நிறைவேற்ற முடியாத ஐந்து காரணிகளில் தமிழ்- சிங்கள மக்கள் மோதிக்கொள்வதை விட முடியுமான நூறு விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/தமிழர்கள…
-
- 3 replies
- 775 views
- 1 follower
-
-
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் 47 மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு தீ பரவியதில் எரிந்து நாசமாகியுள்ளனவென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளிவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/ஜனாதிபதி-பாதுகாப்பு-பிரி/
-
- 0 replies
- 283 views
-
-
மீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் வர வேண்டும்- கருணா கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையானை, மீண்டும் கொண்டுவரவேண்டுமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். பெரியபோரதீவில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்கள் இந்த நாட்டில் நிம்மதியாகவும் பொருளாதாரத்துடனும் பாதுகாப்புடனும் வாழமுடியும். இன்று வட, கிழக்க…
-
- 0 replies
- 314 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் இருந்து சிவாஜிலிங்கமும் விலக வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இன்று (10) யாழில் நடந்த ரவிராஜ் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் பாதிக்கப்பட்டால் எந்த விதத்திலேனும் உணர்ந்து மக்களிற்காக செயற்பட்டவர் ரவிராஜ். அவர் கொலை செய்யப்பட்டது ஏன் என்று எவருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதிரிகள் இல்லை. எல்லோருடனும் அன்பாக பழகினார். நாடாளுமன்றத்திற்குள் எல்லா உறுப்பினர்களுடனும் அன்பாக பழகினார். சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள மொழியில் உரையாற்றி, தமிழ் மக்களின் பிரச்சனைகளை புரிய வைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள தீவிரவாத தலைவர்கள் அவரை கொலை செய்…
-
- 3 replies
- 856 views
- 1 follower
-
-
கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்க வேண்டும்-சுமந்திரன் முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரையாற்றிய என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் “இது கோத்தாபாயவின் யுத்தம்” என்ற நூலும் வெளியிடப்பட்டது.இந்த தேர்தல் வெள்ளத்தை தடுப்பதற்கு அமைக்கப்டுகின்ற பாதுகாப்பு அணைக்கட்டு போன்றது. எனவே அனைத்து தமிழ் மக்களும் சரியான முறையி…
-
- 2 replies
- 625 views
- 1 follower
-
-
நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை தாங்கள் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. ஏற்கனவே எதிர் பார்க்கப்பட்ட ஒன்று தான். 2015ஆம் ஆண்டும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன? கடந்த நான்கரை ஆண்டுக் காலம் அரசாங்கத்தைத் தாங்கிப் பிடித்தீர்கள் அதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிட்டியதா?எனத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடையம் தொடர்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று சனிக்கிழமை(9) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள…
-
- 3 replies
- 679 views
- 1 follower
-
-
(ஆர்.யசி) அரசியலில் நிரந்தர எதிரியாகவோ நிரந்தர நண்பராகவோ எவரும் இல்லை. அந்த வகையில் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் இப்போது நண்பர்கள் என்பதே உண்மை என்கிறார் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச. என்னுடன் யார் கைகோர்த்தாலும் எனது அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியில் இந்த கருத்துக்களை அவர் முன்வைத்தார். இலங்கையின் எதிர்கால வரலாற்றில் இலங்கையில் மக்களுக்காக செயற்பட்ட இரவு பகல் பார்க்காது சேவை செய்த மக்கள் தலைவர் ஒருவராக சஜித் பிரேமதாச இருந்தார் என்று எழுத வேண…
-
- 2 replies
- 528 views
-
-
ஐனாதிபதி வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரங்களை இன்று யாழில் ஆரம்பித்துள்ளார். தியாகி பொன் சிவகுமாரனின் யாழ் உரும்பிராயில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞானத்தில் திருகோணமலை பிரகடனமாக நேற்றையதினம் திருகோணமலையில் வைத்து வெளியிட்டிருந்தார். இதற்கமைய இன்று சிவகுமாரனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது தேர்தல் பிரச்சாரத்தை யாழில் ஆரம்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் நினைவுத் தூபி…
-
- 1 reply
- 438 views
-
-
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் சுட்டுக்கொலை -சிஐடி கொழும்பு பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாமுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டி. சந்தேகம் வெளியிட்டுள்ளது.அத்துடன் சி.ஐ.டி.க்கு கிடைத்த சாட்சியங்கள் மற்றும் வாக்கு மூலங்கள் பிரகாரம் இக்கொலைகள், கன்சைட் வதை முகாமுக்கு பொறுப்பாகவிருந்த கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் இருந்த விஷேட உளவுப் பிரிவொன்றினால் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுவதாக அது குறித்து மிக ஆழமான விசாரணைகள் ஒடம்பெற்றுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்க…
-
- 2 replies
- 876 views
-
-
இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் இல்லை என்று அமெரிக்காவினால் வெளியிடப்படுகின்ற அந் நாட்டின் குடியுரிமையை நீக்கிக் கொண்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் தனது டுவிட்டர் பதிவொன்றில் அமெரிக்க பிராஜாவுரிமையை கோத்தாபய ராஜபக்ஷ கைவிட்டுள்ளதாகக் கூறி, அதற்கான சான்றிதழ்களையும் பதிவேற்றியிருந்தார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி கோத்தாபய ராஜபக்ஷ இன்னும் அமெரிக்கப் பிரஜை என்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், அதனை கைவிட்டு மா…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அபிவிருத்தியில் உச்சமடைந்த மாகாணங்களாக மாற்றுவேன் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் இன மத பேதம் இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் வாழும் அமைப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் புங்காவில் இடம்பெற்றபோதே அவர் இததைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் ப…
-
- 12 replies
- 1.6k views
-