Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஆர்.ராம்) வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ள நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் அவ்விடயம் தொடர்பில் மௌனம் காத்து வருகின்றார். எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, தமிழ்த்தரப்புக்களின் நிலைப்பாட்டினை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டில் பல்கலைக்கழக சமுகத்தினரும், சிவில், மத தலைவர்களைக் கொண்ட குழுவினரும் உள்ளனர். இந்நிலையில் ஐந்து கட்சிகளின் தல…

  2. 1983 ஜூலைக் கலவரத்தின்போது அன்னை இந்திராகாந்தி அனுப்பி வைத்த சிதம்பரம் கப்பல், 1987இல் இந்திய விமானங்கள் இலங்கைக்குள் நுழைந்து, தமிழர் தாயகத்தில் உணவுப் பொட்டலங்களைத் தந்துவிட்டுப்போன வரலாற்றுப் சரித்திரங்கள் என்பன வெளிநாடுகள் எங்களைக் கைவிடாது என்ற மனத்தைரியத்தைத் தந்தன. இதற்கு மேலாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் அவ்வப்போது ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகத் தெரிவிக்கின்ற கருத்துக்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அறிக்கைகள், சர்வதேச மன்னிப்புச் சபையின் முன் மொழிவுகள் என எல்லாமும் சேர்ந்து வெளிநாடுகள் எங்களைக் கைவிடாது என்ற நம் பிக்கையைத் தந்தது. அதிலும் அண்டை நாடான இந்தியா எங்களைக் காப்பாற் றும் என்ற நம்பிக்கைககள் இன்றுவரை எங்கள் மக்களிடம் இருக்கிறது.…

    • 0 replies
    • 869 views
  3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனை வழிப்படுத்தியிருந்தால் இன்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டிருக்கும்.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதை இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்மியும் விரும்பவில்லை. மாறாக, தமிழரசுக் கட்சியை முதன்மைப் படுத்தவும் பலப்படுத்தவும் அந்தக் கட்சியின் தலைவர்கள் முற்பட்டதால் கூட்டமைப்பு உடைந்து போனது. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பெயரளவில் மட்டுமே இயங்குகிறது. மற்றும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியே கூட்டமைப்பு. கூட்டமைப்பே இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதாக ஆகிவிட்டது. இதை நாம் கூறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராசா அவர்கள் கூட்டமைப்பை …

  4. நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல் மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) ஏ.எம். ஜெமீலின் இல்லத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மரைக்காயர் சபை உறுப்பினர்களை ஒன்றுகூட்டி தீர்மானம் மேற்கொள்ளாமல், பள்ளிவாசல் செயலாளர் அறிவித்த இந்த தீர்மானமானமானது பள்ளிவாசலின் ஒட்டுமொத்த தீர்மானமாக அமையாது என்பதை க…

    • 0 replies
    • 321 views
  5. குடிநீர் உட்பட கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என முன்னால் அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். கிளிநொச்சி பூநகரி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், 5ஆண்டு காலமாக ஐக்கிய தேசிய கட்சிதான் ஆட்சியில் இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் அன்றாடம் உணவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு முகங்கொடுத்த வருகின்றனர். நல்லாட்சி அரசு என தெரிவித்துக்கொண்டு 5ஆண்டுகளில் பல்வேறு விதமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இந்த ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் பல்வேறு மோசடிகள் இடம்ப…

    • 0 replies
    • 297 views
  6. தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம் (தி.சோபிதன்) தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்ப்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களி…

    • 3 replies
    • 499 views
  7. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றையதினம் (26) இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மக்கள் சக்தி கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான கொள்கை மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய, 'நம்பிக்கையின் உதயம்' எனும் எண்ணக்கருவில் இத்தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்டுள்ளது. இதன்போது இந்நிகழ்வில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாத…

    • 0 replies
    • 445 views
  8. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதியோ பிரதமரோ எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கூறினார். தெரிவுக்குழுவினால் நீதிமன்றமாக செயற்பட முடியாது என்று கூறிய அவர், இந்த அறிக்கை நீதிமன்றத்திற்குச் செல்லும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர், எமது அரசாங்கம் தான் இதற்காக குழு அமைத்தது. அரசுக்கு எதிராக விரல் நீட்ட இடமளிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சியில் அரசுக்கு எதிராக விரல் நீட்டியவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால், அரசாங்கம் ஜனநாயக ரீதியான முடிவு எடுத்து தெரிவுக்க…

    • 0 replies
    • 458 views
  9. யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழா குழு கூட்டத்தின் போது எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இம்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் 34வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, பீடாதிபதிகள், நிர்வாக அதிகாரிகள், உப விடுதிக் காப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 அமர்வுகளாக நடாத்தப்படவுள்ள பொதுப்பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து …

  10. இலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை Published by rajeeban on 2019-10-24 14:25:48 இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. 2009 இல் யுத்தம் முடிவடைந்த ப…

  11. மொட்டு அணியிடம் தேசியப்பட்டியலை பெறுவதற்காக ஹிஸ்புல்லாஹ், பிள்ளையான், கருணா அம்மான் போன்றோர் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் சிறுபான்மை வாக்குகளை சிதறடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மஹிந்தவும் கோட்டாபயவும் சமயம் பார்த்து இவர்களுக்கு கழுத்தறுப்புச் செய்வார்கள் என மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கான தேர்தல் பிரசார கல்குடா தொகுதி அலுவலகத்தை நேற்று (25) திறந்துவைத்த பின்னர், நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த ஜனாதிபதி தேர்தல் அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கும், மாகாண சபை தேர்தலுக்குமான ஒரு ஒத்திகையாகும். இத்தேர்த…

    • 0 replies
    • 271 views
  12. சொத்துகளின் விபரங்களை வெளியிடாத 6 வேட்பாளர்கள் Oct 25, 2019 | 4:38by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், 35 வேட்பாளர்களில் ஆறு வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவி்ன் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ”தேர்தல்கள் சட்டத்தின்படி, அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது சொத்துக்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். எனினும், இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் 6 பேர் சொத்து விபரங்களை வெளியிடவில்லை. சொத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களில் ஐவர், சுயேட்சைகள், ஒருவர் அரசியல் கட்சியின் வேட்பாளர். …

    • 2 replies
    • 767 views
  13. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பார்­வைக்கு தேர்தல் களை­கட்­ட­வில்லை, சூடு­பி­டிக்­க­வில்லை என்­பது போல தென்­பட்­டாலும் கூட, மக்­க­ளு­டைய உள்­ளங்­க­ளிலே அன்னச் சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்க வேண்டும், சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­ப­தி­யாக்க வேண்டும் என்று இந்த மாவட்­டத்தில் இருக்­கின்ற அனைத்து சமூ­கங்­களும் உறு­தி­யாக இருக்­கின்­றன என்று கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, விவ­சாய நீர்ப்­பா­சன இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரி­வித்தார். மட்டு. கோண­மலை வீதியில், புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் மட்டு மாவட்ட தேர்தல் அலு­வ­லகம் நேற்­று­முன்­தினம் திறந்து வைக்­கப்­பட்­டது. அதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். முன்னாள் பிரதி அமைச்­சரும் ஐக்­கிய தேசி­யக்­…

  14. இன்று மாலை கூடும் ஐந்து தமிழ்க் கட்சிகள் Oct 24, 2019 | 6:13by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, தீர்க்கமான முடிவை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று மாலை கொழும்பில் கூடி ஆராயவுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில்- கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே, இன்று மாலை கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் ஐந்து கட்சிகளும் சந்தித்துப் பேசுவதென தீர்மானிக்கப்பட்டது. நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், சமகால அரசியல் நிலைமைகள…

  15. கோட்டாபயவின் வெற்றியில் முஸ்லிங்களும் பங்காளராக வேண்டும் – முஸம்மில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியில் முஸ்லிங்களும் பங்காளராக வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம் .முஸம்மில் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்ப்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து தேரத்தல் பிரச்சாரமும் ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனையில் நேற்று (24) இடம்பெற்றது . ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தகர் அஹமட் புர்கான் தலைமையில் தேர்தல் காரியாலயத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது இதன் போது மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல…

  16. (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தினை உருவாக்கிக் கொள்ள மக்கள் ஆணையினை கோருகின்றோம். தமிழ்-முஸ்லிம் சமூகத்திற்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை ஏமாற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனம் வெளியிடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள தாமரை தடாக கலையரங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வெளியிடப்படும் கொள்கை பத்திரங்களை கொண்டு நாட்டு மக்கள் அர…

  17. கிளிநொச்சி – செருக்கன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் உப்பள தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (24) இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி தேர்தல்கள் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி ஏ-9 வீதி ஊடாக பரந்தன் – முல்லைத்தீவு வழியாக செருக்கன் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் உப்பள தொழிற்சாலை வரை செல்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. குறித்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு செருக்கன் சந்தியை சென்றடையும் போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இயற்கையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.…

  18. யாழ்ப்பாணம் – நெல்லியடி நகர்புறப் பகுதியில் இன்று (25) காலை 9 மணியளவில் கார் ஒன்றில் இருந்து இரண்டு கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நெல்லியடி புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸாருடன் இணைந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம் நோக்கி செல்லும் போது நெல்லியடி நகர் பகுதியில் வைத்து கார் ஒன்றை மடக்கிப் பிடித்து சோதனையிட்ட போதே கஞ்சா மீட்கப்பட்டது. திருகோணமலையைச் சேர்ந்த நால்வர் (WP, KX – 4838) இலக்கமுடைய காரில் பயணித்துள்ளனர். 25, 22, 19, 19 வயது மதிக்கத்தக்க நால்வரும் பொலிஸாரால் சந்தேகத்தின் ப…

  19. “உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு” கோத்தாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு…. October 25, 2019 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் உள்ள மகிந்த ராஜபக்ஸ மாநாட்டு மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. “உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு” என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்…

    • 2 replies
    • 663 views
  20. இனவாதிகள் மதவாதிகளுக்கு தேர்தலில் இடமளிக்கக் கூடாது – ரிஷாட் பதியுதீன் இனவாதிகள், மதவாதிகளுக்கு தேர்தலில் இடமளிக்கக் கூடாது எனவும் தேர்தலில் வெற்றி கொள்வதற்காக சஹ்ரானுடைய கதைகளை போடுகின்றார்கள் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் கிண்ணியா நகரசபை பொது மைதானத்தில் நேற்று மாலை (24) இடம்பெற்ற இளைஞர் மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ,பிரதியமைச்சர்…

    • 0 replies
    • 345 views
  21. கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் 53 பேருக்கு பிணை கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்ட 53 பல்கலைக்கழக மாணவர்களையும் தலா ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிபதி ரங்க திஸாநாயக்க இன்று (25) உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, லோட்டஸ் சுற்று வட்டத்தில் பாரிய வாகனநெரிசல் ஏற்பட்டிருந்ததுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸார் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தபோதும் அதனை பொருட்படுத்தாமல் மாணவர்கள் தொடர்ந்தும் ஆர்பாட்டத்தில் ஈ…

    • 0 replies
    • 689 views
  22. மட்டக்களப்புக்கு கோட்டா நாளை விஜயம் க. விஜயரெத்தினம் ஸ்ரீ லங்கா பொதுஜனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்க்ஷ ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நாளை (26) விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், பிரசாரப் பணிகளிலும் ஈடுபடவுள்ளனர் என்று, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் தலைமையில், வாழைச்சேனை இளந்தளிர் விளையாட்டு மைதானத்தில், பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தில், சுமார் 10,000 மே…

  23. ஊடகப் படுகொலைகளிற்கான நீதி கோரிய ஊடக அறிக்கை… October 25, 2019 மாறி மாறி ஆட்சிக்கதிரையிலிருந்த ஆட்சியாளர்கள் தமது தமிழ் மக்களிற்கு எதிரான இன விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகளை தொடர்ந்தும் கட்டவிழ்த்தே வந்திருந்தனர். அதிலும் 2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது கொலை கலாச்சாரம் இன்று வரை தொடர்கின்றது. தான் நேசித்த மக்களிற்காகவும்,ஊடக சுதந்திரத்திற்குமாக தனது இன்னுயிரை ஈந்த சக நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளை நோக்கி நீதி கிட்டாத நிலையில் காலம் கடந்து செல்கின்றது. தமிழ் ஊடகவிய…

  24. நீராவியடி ஆலயத்தில் புதிய சர்ச்சை!- இராணுவ முகாமில் ஆலய தொல்பொருள் சிதைவுகள் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தொல்பொருள் சிதைவுகள் இருப்பதாக, குறித்த பகுதிக்கு வருகை தந்த பௌத்த மதகுருமார்களிடம் விகாரை தரப்பு காண்பித்ததினால் புதிய சர்ச்சை ஒன்று நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தோன்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த மதகுரு ஒருவர் அங்கு விகாரை அமைத்து குடியிருந்த நிலையில் அந்த பகுதியில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் தோன்றியிருந்தது. அதனை தொடர்ந்து குறித்த விகாரையில் குடிகொண்டிருந்த விகாராதிபதி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடலை நீதிமன்ற அனுமதியையும் மீறி ஆலய கே…

  25. முரண்பாடான சாட்சியம் – தெரிவுக்குழுவை தவறாக வழிநடத்த முயன்ற சிறிலங்கா அதிபர் Oct 24, 2019 | 6:16by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக, இரண்டு விடயங்களில் முரண்பாடான கூற்றுக்களை முன்வைத்து- சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவை “வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியுள்ளார்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்த போது, சிங்கப்பூரில் தங்கியிருந்த சிறிலங்கா அதிபர், அனைத்து விமானங்களின் ஆசனங்களும் நிரம்பியிருந்ததால், தன்னால் அன்றே உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை என்று, ஒரு மூடிய சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். தாக்குதல் நடந…

    • 2 replies
    • 370 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.