ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்ஆய்வு Oct 02, 20190 பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் நூற்றுக்கு 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அதேபோன்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் 55 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இம்மாதம் 16ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் பலாவி விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவைகளை ஆர…
-
- 0 replies
- 394 views
-
-
முதலாவது பொபி மலர் ஜனாதிபதிக்கு அணிவிப்பு பொபி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொபி மலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் செயலத்தில் வைத்து இவ்வாறு பொபி மலர் அணிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் இவ்வாறு முதலாவது பொபி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் நினைவு தினம், பொபி வேலைத்திட்டம் மற்றும் போர் நினைவுத் தூபி அபிவிருத்தி குழுவின் தலைவர் ரியர் அட்மிரல் கலாநிதி ஷேமால் பெர்ணான்டோ உள்ளிட்ட இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். http://athavann…
-
- 0 replies
- 282 views
-
-
மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதாதைகள் ஒட்டுபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகரசபையின் அனுமதியின்றி ஒட்டப்படும் அல்லது கட்டப்படும் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்படுமென மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். அத்தோடு அதனை ஒட்டும் அமைப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தம் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாநகரத்தின் அழகுபடுத்தல் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில பல அமைப்புக்களால் குறிப்பாக தனியார் நிறுவனங்கள், தனியார்…
-
- 0 replies
- 275 views
-
-
கோட்டாவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தும் மனு மீதான விசாரணை இன்று! கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டது தொடர்பான முறையான ஆவணங்களை வழங்காமல், இலங்கை தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை கோட்டா பெற்றுக் கொண்டது சட்டவிரோதமானது எனவே அவை செல்லுபட…
-
- 0 replies
- 400 views
-
-
‘கோட்டா ஒன்றும் புத்தர் இல்லை அவர் பேச்சை நாம் கேட்க’ – ஞானசாரர் முல்லைத்தீவு, செம்மலையில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தை இனவாதமாக சித்தரிக்க, சிலர் முற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டினார். மேலும் தாம் கோட்டாபய ராஜபக்ஷவின் பேச்சைக்கேட்டு செயற்படுவதற்கு, கோட்டா ஒன்றும் புத்தர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் மக்கள் மத்தியில் பிழையான புரிதலை ஏற்படுத்த சிலர் முற்படுகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே முல்லைத்தீவு விவகாரம் அமைந்திருந்தது. முல்லைத்தீவு …
-
- 3 replies
- 714 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையணியிலிருந்து இலங்கை இராணுவம் நீக்கப்பட்டமை, இயல்பான ஒரு நடவடிக்கையே என இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம் இராணுவத்தினர் என்ற வகையில், தற்போதைய நிலைமைகள் மட்டுமன்றி, எதிர்காலத்திற்கும் தேவையான அனைத்து தயார்படுத்தல்களையும் மேற்கொண்டு வருகிறோம். நாட்டின் இராணுவம் என்பது பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டுமன்றி, அனைத்து விடயங்களிலும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்…
-
- 1 reply
- 580 views
-
-
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை – கேள் அமர்வை நடத்தவுள்ள அமெரிக்கா Sep 30, 2019 | 6:54by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த கேள் அமர்வு ஒன்றை அடுத்த மாதம் நடத்தவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசியாவுக்கான உபகுழுவே இந்த அமர்வை நடத்தவுள்ளது. அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் மத்தியில், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் கடந்த வாரம் பேசியிருந்தார். இதன்போது, ஒக்ரோபர் மாதம் தெற்காசியாவின் மனித உரிமைக…
-
- 2 replies
- 351 views
-
-
நீராவியடி விவகாரம் – நீதிகோரி யாழில் பேரணி முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து சட்டத்தை கையில் எடுத்த ஞானசார தேரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் பேதங்களின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீராவிடியடி கோயிலில் இடம்பெற்ற அநீதி தொடர்பாக நீதிகோரி முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணி எந்தவித கட்சி அரசி…
-
- 1 reply
- 331 views
-
-
நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் ; ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம் (எம்.மனோசித்ரா) முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பில் முறையான சுயாதீன விசாரணைகள் நடத்தப்படாத பட்சத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படாத விதிவிலக்கு கலாசாரம் தொடருவதை ஊக்கப்படுத்துவதாகவே அமையும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், நீதிமன்ற தீர்ப்பினை மீறிய நபர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கடிதத்தில் சம்பந்தன் கூறியிருப்பதாவது : முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் …
-
- 7 replies
- 676 views
-
-
யாழில்.மீண்டும் சோதனை சாவடிகள். – கோத்தாபயவின் பாதுகாப்பு பிரச்சனையா? September 30, 2019 யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சோதனை சாவடிகளும் முளைத்துள்ளன. ஆனையிறவில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனியார் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை கண்டி நெடுஞ்சாலையில், நாவற்குழி பாலத்திலும் இராணுவ சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ள போதிலும் அதில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் வாகன் இலக்கங்களையும் பதிவு செய்கின்றனர். கடந்த ஏப்பிரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை அடுத்து யாழ்.குடாநாட்டின் பல பகுதி…
-
- 2 replies
- 372 views
-
-
9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட வீதியை காணவில்லை..! சித்தாா்த்தன் எம்.பிக்காவது தொியுமா..? தமிழ்தேசிய கூட்டமைப்பினால் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கம்பரெலிய திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுவ தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில் யாழ்.உடுவில் பகுதியில் வீதியே போடாமல் வீதி போடப்பட்டதாக பெயா் பலகை நாட்டப்பட்டமை தொடா்பாக மக்கள் கடும் விசனமடைந்துள்ளனா். குறித்த வீதி புனரமைப்பிற்கு ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த பெயர்ப்பலகை காணப்படும் நிலையில் புனரமைக்கப்பட்ட வீதி எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ள மக்கள் வீதியைக் காணவில்லை என கேலியும் செய்துவருகின்றனர். கம்பரலிய வீதிகள் அமைக்கப்பட்ட பின் ஜனாதிபத…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
October 1, 2019 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ, வைத்திய பரிசோதனைக்காக, சிங்கபூர் செல்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதிக்கோரியுள்ளார். ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே சிங்கபூருக்குச் செல்வதற்கு அனுமதிகோரியுள்ளார். டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணத்தின் போது, நிதி மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் …
-
- 1 reply
- 465 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வு சம்மந்தமான தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.' தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், நீதிமன்றத்தின் கட்டளைக்கு சம்மந்தப்பட்ட பௌத்த மதகுருக்கள் கட்டுப்படவில்லை. நீதிமன்றத்தின் கட்டளையினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தின் கட்டளை வருவதற்கு முன்பாக வடபிராந்திய பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பாக கதைத்தேன். ஞானசார தேரர் அவர்கள் தன்னிச்சையாக ஒரு இடத்தில் தகனம் செய்வதற்கான நடவடி…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மிகவும் அமைதியாக இருக்கிறது – தென் கொரிய குழுவினர் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மிகவும் அமைதியாக இருப்பதாகவும் மிக விரைவில் இலங்கை கல்வித்துறையிலும் விசேடமாக தொழில்நுட்ப கல்வியிலும் பாரிய வளர்ச்சியை காண முடியும் எனவும் அதற்கான ஒத்துழைப்பை தென்கொரிய அரசாங்கம் இலங்கைக்கு எப்பொழுதும் வழங்க தயாராக இருப்பதாகவும் தென் கொரிய நாட்டின் குழுவினர் தெரிவித்துள்ளனர். தென்கொரிய நாட்டின் குவான்ஜோ மெட்ரோ பொலிடன் கல்வி திணைக்களத்தின் குழுவினர் நுவரெலியாவிற்கு விஜயம் செய்திருந்தனர். இந்த குழுவினரை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான…
-
- 2 replies
- 342 views
-
-
(நா.தனுஜா) ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. அதேவேளை தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டிய, குறிப்பாக மலையகத்தை மையப்படுத்திய கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மத்தியகுழுக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கொழும்பிலுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் அதன் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இராத…
-
- 0 replies
- 332 views
-
-
சுதந்திர கட்சிவுடனான கூட்டணிக்காக அனைத்து தியாகங்களும் செய்ய தயார் : பஷில் ராஜபக்ஷ (இராஜதுரை ஹஷான்) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து தியாகங்களையும் செய்ய தயார் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் காரியாலய திறப்பு விழாவில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அபிவிருத்தி , தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பதனால் தேர்தலை மையப்படுத்திய அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ள வேண்டும். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் உட்பட அனைத்து தே…
-
- 0 replies
- 248 views
-
-
முடிவின்றி முடிந்தது சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் Oct 01, 2019 | 3:35by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டு தொடர்பான எந்த முடிவையும் எடுக்காமல், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. இதில், மொட்டு சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. எனினும் இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் தேசிய செயற்குழுவின் கூட்டம் சிறிலங்…
-
- 0 replies
- 213 views
-
-
கோத்தாவின் வேட்புமனு நீதிமன்றத்தின் கையில் – வெள்ளியன்று முக்கிய உத்தரவு Oct 01, 2019 | 3:45by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நாளையும், நாளை மறுநாளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அமெ…
-
- 0 replies
- 332 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதற்கான ஆலோசனைகள் தமிழரசுக் கட்சி மட்டத்தில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கலாம் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் போட்டியிடவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விரும்பினார். அண்மையில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழில் கலந்துகொண்ட கூட்டமொன்றில் சுமந்திரன் தனது விருப்பத்தைப் பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தார். ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் ஆதரவுச் சக்திகளின் கை மேலொங்கியுள்ளதால் சுமந்திரனின் ஆ…
-
- 3 replies
- 638 views
-
-
சிறுவர்தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் சர்வதேச சிறுவர் தினமான இன்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது. வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10மணிக்கு குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுத்திரு,கையளிக்கபட்ட மாணவர்கள் எங்கே, குடும்பமாக ஒப்படைக்கபட்ட சிறுவர்கள் எங்கே, பத்துவருடங்கள் காத்திருந்தோம் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டும், போன்ற பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன். இலங்கையில் காணாமல் போன தமிழ் சிறுவர், மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களையும் கையில் ஏந்தி…
-
- 0 replies
- 310 views
-
-
(ஆர்.யசி) ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதை ஐக்கிய தேசிய கட்சி ஒளிவு மறைவில்லாது நாட்டு மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும் என பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை பொறுத்தே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எடுப்போம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும் தமிழ…
-
- 1 reply
- 420 views
-
-
கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற சீனர்களின் கலாசார நிகழ்வு சீனாவின் கலாசாரத்தை பறைசாற்றும், ஹுபேய் கலாசார நிகழ்வுகள் கிளிநொச்சியில் வெகு விமர்சையாக இடம்பெற்றன. கலாசார சுற்றுலா வாரத்தின் நிகழ்வுகளாக ஹுபேய் நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றன. குறித்த நிகழ்வு கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள லெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. சீனாவின் கலை, கலாசார விழுமியங்களை பறைசாற்றும் வகையிலும், சீன-இலங்கை நட்புறவினை மேம்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன. அதற்கிணங்க, கிளிநொச்சியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சீன கலாசாரத்தை எடுத்து இயம்பும் …
-
- 8 replies
- 1.5k views
-
-
ஜனநாயகமா?சர்வாதிகாரமா?: நவீன பயங்கரவாதத்தை அழிக்க யோசனை கூறும் சஜித் தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதன் ஊடாக நவீன பயங்கரவாத சக்திகளை அழிக்க முடியுமென ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயகமா, சர்வாதிகாரமா வேண்டுமென்பதை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி முன்னேற்ற பாதையை நோக்கி செல்வது குறித்தே ஆராய்ந்து வருகின்றோம். மேலும் நல்லிணக்கத்தின் ஊடாகவே நவீன பயங்கரவாதத்…
-
- 0 replies
- 396 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழுக்குரிய அடையாளமான கல்லடிப் பாலம், இப்போது மரண ஓலம் அடிக்கடி கேட்கும் இடமாக மாறியிருக்கிறது. கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரிட்டன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், 1924ஆம் ஆண்டு இந்தப் பாலத்தின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, 1928ஆம் ஆண்டு நிறைவடைந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் அந்தப் பாலத்துக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகவுள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
(இரா.செல்வராஜா) நுரைச்சோலை அனல் மின்நிலையத்துக்கு புதிதாக மேலும் ஒரு மின் உற்பத்தி நிலையமொன்றை அமைத்து கொடுப்பதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையங்கள் அடிக்கடி செயலிழந்து வருவதால் மின்சாரம் வழங்குவதில் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலைமையை கருத்திற் கொண்டு நான்காவது மின் உற்பத்தி நிலையமொன்றை இலவசமாக அமைத்து கொடுப்பதற்கு சீன அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. குறித்த மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான பொறுப்பை சீன இயந்திர பொறியில் துறை கூட…
-
- 1 reply
- 424 views
-