Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசு செவிசாய்க்க தவறினால் ஆதரவை வாபஸ் வாங்குமாறு கூட்டமைப்புக்கு வலியுறுத்தல் தமிழர் மரபுரிமை பேரவையால் ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று தமிழரசு கட்சி உறுப்பினர்களிடம் நேற்று(29) கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு வழங்கும் ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் அலுவலகத்தில் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகளுக்கும் தமிழர் மரபுரிமை பேரவை மற்றும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்ற…

    • 0 replies
    • 373 views
  2. மக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் – சஜித்துக்கு ஆதரவாக சரவணபவன் மக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தான் சஜித்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சில மக்கள் சந்திப்புக்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “தற்போது உள்ள அரசியல் சூழலில் மக்கள் சிலரை வரக் கூடாது என விரும்புகின்றனர். அதனால் மக்கள் விரும்பாத ஒருவர் வரக்கூடாத…

    • 2 replies
    • 495 views
  3. கோட்டாவிற்கு எதிராக களமிறங்குகிறார் மகேஸ் சேனநாயக்க – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது! தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்றது. இதன்போதே இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும், தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக அ…

    • 8 replies
    • 841 views
  4. பலம்மிக்க நாடுகளின் மோதல்களால் சிறிலங்காவின் இறைமை பாதிப்பு – கோத்தா Sep 30, 2019 | 6:36by கி.தவசீலன் in செய்திகள் இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையிலான மோதல்களில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஈடுபாட்டினால், சிறிலங்காவின் இறைமை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த லங்கா சமசமாசக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “எதிர்கால அரசாங்கம் நாட்டின் இறைமையை மீளமைக்க வேண்டும். சிறிலங்காவைப் போன்ற சிறிய நாடு, சக்திவாய்ந்த நாடுகளின் மோதல்களுக்குள் தலையிடக் கூடாது. …

  5. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் மக்கள் ஏகமனதாக எடுப்பது அவசியம். எனினும் அந்த முடிவை எடுப்பதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும். இது விடயத்தில் அனைத்துக் கட்சிகளை யும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழ் மக்கள் பேரவை ஈடுபடும் என்பதான செய்திகள் ஏலவே வெளிவந்திருந்தன. இவை ஒருபுறமிருக்க, எதிர்வரும் ஜனாதி பதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழரசுக் கட்சி தனித்து எடுக்கக்கூடாது என் பது மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதேச்சையான முடிவுகள் பெரும் பாதிப்பையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளன. இந்நிலையில் தொடர்ந்தும் அதே தவறை விடக்கூடாது என்பதுதான் இங்கு கவனிக் கப்பட …

  6. கோத்தாவின் குடியுரிமை செல்லுபடியானதா? – மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு சிறப்புச் செய்தியாளர்Sep 29, 2019 | 7:47 by in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையின் செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்தும், ரிட் மனுவொன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான முழுமையான விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும், நொவம்பர் 16 அதிபர் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறிலங்கா குடியுரிமை எப்போதாவது சட்டபூர்வமாக வழங்கப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளை எழுப்பும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், கோத்தாபய ராஜபக்ச ஒரு ச…

  7. எமக்காக சின்னத்தையாவது மாற்ற முடியாதவர்களுடன் என்ன கூட்டணி- ஜனாதிபதி எமக்கு கோட்டாபயவுக்கு வாக்களிக்க முடியும் எனவும், குறித்த சின்னத்தை மாற்றாத வரையில் அந்த கட்சிக்கு வாக்களிக்க முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குருணாகலையில் நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராமிய மட்ட கட்சி உறுப்பினர்கள் ஆகியோரின் வேண்டுகோள் கூட்டணி அமைப்பதாயின் கட்சியின் சின்னத்தை மாற்ற வேண்டும் என்பதாகும். இதனை நான் நேற்று எதி…

  8. மட்டக்களப்பு - கிரானில் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்துக்கட்டப்பட்டிருந்த பதாதை இன்று நீக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜனாதிபதி தேர்லுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான் சுற்று வட்டத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்து நேற்றையதினம் பதாதை ஒன்று கட்டப்பட்டிருந்தது.பல்வேறு தரப்பிலிருந்தும் குறித்த பதாதைக்கு எதிராக எழுந்த கண்டனங்களை தொடர்ந்து இன்று பதாதை அவ்விடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.குறித்த பதாதையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களாக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் சித…

  9. ஹபரணையில் 7 யானைகள் உயிரிழப்பு – காரணம் என்ன? ஹபரண, திகம்பதஹ, ஹிரிவடுன்ன வனப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். ஹிரிவடுன்ன, தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில் யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை வரை 7 யானைகளின் சடலங்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடலில் விஷம் கலந்தமை காரணமாக யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் …

  10. ஐ.நா அமைதிப்படையிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேற்றப்பட்ட விவகாரம் – மற்றுமொரு முக்கிய தகவல் வெளியானது! லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவம், அடுத்த மாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் புதிய இராணுவத்தளபதியாக, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரமானது சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில், இலங்கைப் படையணியின் 58 ஆவது பிரிவுக்குத் தலைமைத் தாங்கிய, இவர் மீது பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் வழங்கிய வாக்குறுதியை மீறி, இவரை இலங்கை அரசாங்கம் இராணுவத்தளப…

  11. -எஸ்.நிதர்ஷன் இலங்கை ஆட்சியாளர்களதும் ஆட்சிக்கு வர நினைக்கின்றவர்களதும் முகவர்களாகச் செயற்படுகின்ற ஞானசார தேரர் போன்ற பிக்குகள், தமிழர்களை கிள்ளுக்கீரையாக எண்ணுகிறார்களெனத் தெரிவித்த டெலோ அமைப்பின் இளைஞரணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமா சபா குகதாஸ், சிங்கள - பௌத்த மேலாதிக்கச் சிந்தனைகளை தமிழர் தாயகப் பகுதிகளில் அனுமதிக்காது, தமிழர் தேசத்தைப் பாதுகாப்போமெனவும் கூறினார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சில பௌத்த பீடங்களின் தேரர்களும் தமிழர்களை மிரட்டும் வகையில் கருத்துகளைக் கூறியுள்ளதாகவும் இதன் பின்னணியில், ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களும் உள்ளதாகவும் கூறினார். ஐனநாயகம் பேசும் ஆட்சியாளர், வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களில் …

    • 0 replies
    • 301 views
  12. (ஆர்.யசி) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவிர்ந்து பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என வினவிய வேளையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பற்றி சிந்தித்து தீர்வுகளை வழங்கும் வாக்குறுதிகளை முன்வைக்க வேண்டும். அடுத்த …

    • 10 replies
    • 1.4k views
  13. கூட்டமைப்பிற்கும் சஜித்திற்கும் இடையில் முக்கிய சந்திப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமையினை கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமையவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் கோரப்படலாம் என்று அதன் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந…

  14. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடு படுதோல்வி கண்டு விட்டது. எனினும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் சரி யானவை என்ற மனநிலையிலேயே இருக்கப் போகின்றனர். எதையும் அலசி ஆராய்ந்து எது சரி, எது பிழை என்ற முடிவுக்கு வராமல் எங்கள் நம்பிக் கைக்குரியவர்கள் செய்வதெல்லாம் நியாய மானவை, முழுக்க முழுக்கச் சரியானவை என்று நம்பி விடுகின்ற ஒரு பண்பாடு நம் இனத்தில் உண்டு. இந்தப் பண்பாடு பற்றி நம் அரசியல் தலை வர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.இதன் காரணமாக மக்களை எப்படியும் வாலாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர் களுக்கு நன்கு தெரியும். இதன்காரணமாக மக்கள் எங்களை ஒதுக்கி விடுவார்கள் அல்லது எங்களிடம் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சம் தமிழ் அரசியல் …

    • 0 replies
    • 546 views
  15. (ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தன் -விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் கட்சிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் கூறுகின்றனர். இம்முறை தேர்தலில் தமிழ் -முஸ்லிம் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தி எனவும் தெரிவித்தனர். கடந்த ஜனாதிபதி தேர்தல்களை போல் அல்லாது பல புதிய கட்சிகள் பிரதான கட்சிகள் என பலரது பெயர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள ந…

  16. கோட்டாவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் இல்லை – அரசாங்க திணைக்களங்கள் கைவிரிப்பு கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை என அரசாங்க திணைக்களங்கள் தெரிவித்ததாக குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும் குறித்த ஆவணங்கள் தம்மிடம் இல்லையென கைவிரித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, சந்ரகுப்த தெனுவெர ஆகியோர் செய்த முறைப்பாடு குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான ‘பி’ அறிக்கையிலேயே குற்ற விசாரணைத் திணைக்களம் இவ்வாறு கூறியுள்ளது. கோட்…

  17. -எஸ்.நிதர்ஷன் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க தமது கட்சி தீமானித்துக்கதாகத் தெரிவித்துள்ள மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாள நாயகம் கணேஷ் வேலாயுதம், தமது ஆதரவின் ஊடாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். யாழ். ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள், தங்களுடைய நலன்களையே பெற்றுக் கொண்டார்கனெனவும் மக்களுடைய நலன்கள் தொடர்பாக அவரகள் சிந்தித்ததே கிடையாதெனவும் குற்றஞ்சாட்டினார். இவ்வாறான ஒரு நிலையினை கருத்தில் கொண்டும் தற…

    • 0 replies
    • 354 views
  18. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அனைத்து வேட்பாளர்களுடனும் பேசிய பின்பே அதுதொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில், இன்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுமந்திரனிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்ளவிக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் பங்கொடுக்கின்ற நிழ்வுகளில், அமைச்சர்க…

    • 0 replies
    • 226 views
  19. (தி.சோபிதன்) நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அந்த பொறுப்பினை நாம் நிதானமாக கையாளுவோம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்றும் கூறினார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்தக் கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் முக்கிய திருப்பு முனை வருகின்ற போது அதில் பாதிப்புக்கள் கூட வரலாம். அல்லது பல புதிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். ஆகையினாலே மிக அவதானமாக முதிர்ச்சியோடு இந்த சூழ்நிலைகளை கையாள வேண்டு…

  20. ஞானசாரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பினை ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் – ஜே.வி.பி! பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தொடர்பாக, ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மையில் முல்லைத்தீவில் ஞானசார தேரரின் அடாவடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த அடவடித்தனத்தின் ஊடாக எங்களுக்கு சொல்லப்படுகின்ற ஒரு செய்தி என்னவென்றால் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான…

  21. தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்மந்தன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பொதுப் பிரச்சினைகள் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை குறிப்பாக நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் திறமைவாய்ந்த சட்டத்தரணியாக இருக்கும் சு…

  22. மைத்திரி – மகிந்த தரப்பு சந்திப்பு இணக்கமின்றி நிறைவு September 29, 2019 எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்குமிடையில் நேற்றையதிம் இடம்பெற்ற சந்திப்பு இணக்கமின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் சுதந்திரக்கட்சியும் இணைவு குறித்து பேசப்பட்டது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சுதந்திரக் கட்சயா­னது பாரம்பரியம் வாய்ந்ததாகும். ஆகவே அக்கட்சியின் தனித்துவங்களை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் ஜனாதிபதித் தேர்தலில் கை அல்லது வெற்றிலைச…

  23. மட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது September 29, 2019 மட்டக்களப்பு கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிக்காந்தன் தனுஜன் என்ற 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் நேற்று (28) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் 3 பேரைக் கைது செய்துள்ளாதாகவும் கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேட்டைக்கு சென்ற போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில்; படுகாயமடைந்த சிறுவன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக …

  24. Share0 ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டதை அடுத்து கிளிநொச்சியில் கட்சியின் ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி இனிப்பு பண்டங்கள் வழங்கி கொண்டாடியுள்ளனர். கிளிநொச்சி டிப்போச் சந்தியில் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று (26) ஒன்று கூடி பொங்கல் பொங்கியதோடு, பொது மக்களுக்கு இனிப்பு பண்டங்களும் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். https://newuthayan.com/?p=6821

  25. இலங்கை படையினரை ஐநாவின் அமைதிகாக்கும் படையணியின் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தியதன் மூலம் ஐநா யுத்தகுற்றங்களை மூடி மறைப்பதற்கான முயற்சிகளை அலட்சியம் செய்யப்போவதில்லை என்ற செய்தியை தெரிவித்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஐநாவிற்கான இயக்குநர் லூயில் சர்பொனேயு இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கை படையினரை ஐநாவின் அமைதிகாக்கும் படையணியின் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தியதன் மூலம் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதற்கு எதிராக ஐநா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இலங்கையின் இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவ…

    • 2 replies
    • 888 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.