ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
வவுனியாவில் இராணுவப்பயிற்சி என்ற போர்வையில் சோதனை!- மக்கள் விசனம் வவுனியா- மெனிக்காம் பகுதியில் இராணுவ பயிற்சி என்ற பெயரில் தங்கள் மீது கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் தங்களது இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) காலை வவுனியா- செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போர்காலத்தை நினைவூட்டுவதுபோல, பெருமளவான துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 366 views
-
-
பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அறைந்ததுடன், அவர் மீது உமிழ் நீர் துப்பி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கல்வியங்காடு பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு, வழிபாட்டுக்குச் சென்ற பெண் ஒருவரின் சுமார் 98 ஆயிரம் பெறுமதியுடைய தங்க ந…
-
- 0 replies
- 288 views
-
-
ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கட்சிகளின் வேட்பாளர்களில் எவருக்காவது ஆதரவு வழங்குவது என்றால் முதலில் அவர்களிடம் இருந்து சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தமிழர் தரப்பு உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதனைவிடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்களை கோருவார்களானால் அதுவே மீண்டும் தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிபோட்டுக்கொள்ளும் முடிவாக அமைந்துவிடும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் எச்சரித்திருக்கின்றார். …
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கையின் மனித உரிமை பணியாளர்கள் ஆர்வலர்கள் துன்புறுத்தலிற்கு உள்ளாவது குறித்து ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தலிற்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகலம் தெரிவித்துள்ளதாக ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் கலந்து விட்டு இலங்கை திரும்பியவர்கள் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர் அச்…
-
- 2 replies
- 297 views
-
-
-க. அகரன் வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் நாட்டப்பட்ட பயன் தரும் பல தேக்கம் மரங்கள் வன இலகா திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று பன்றிக்கெய்தகுளம், ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் பாரிய தேக்கம் காட்டுக்குள் சென்ற வன இலகா திணைக்கள உத்தியோகத்தர்கள் பாரிய தேக்கம் மரங்களைத் தறித்து வருகின்றனர். பன்றிக்கெய்தகுளம் பகுதியில் 20 முதல் 30 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டப்பட்டு பொருண்மிய …
-
- 0 replies
- 656 views
-
-
(நா.தனுஜா) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நகர்விற்கு நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் இது அவர்களது உச்சளவிலான சுயநலத்தையும், சந்தர்ப்பவாத தன்மையையுமே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/65167 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் யோசனையை எதிர்க்கும் நல்லாட்சி மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்ப…
-
- 0 replies
- 414 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு விசாரணையொன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருக்கின்றது. குறித்த அழைப்பு கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் தங்களின் வாக்குமூலம் ஒன்று அவசியம் தேவைப்படுவதால் செப்ரெம்பர் 25 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு 2 ஆம் மாடி புதிய செயலக கட்டடம் கொழும்பு 01 என்ற முகவரிக்கு சமூகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு , பனிக்கன்குளம், மாங்குளம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு நேரடியாக சென்ற பொலிஸார் விசாரணைக்க…
-
- 0 replies
- 369 views
-
-
( ஆர்,யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை. வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கொள்கைக்கு நானும் உடன் படுகின்றேன். அதனடிப்படையிலே இந்த பெயர் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது என நீர்வழங்கல் நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு புதிதாக ஆட்சேர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/65143
-
- 1 reply
- 522 views
-
-
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி விவாதிப்பது இழிவான செயல் என்று ஐக்கிய தேசிய கட்சியில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமரால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனை இன்று விசேட அமைச்சரவையில் சஜித் பிரதேமதாச உள்ளிட்ட குழுவினரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது. இது தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இது பொதுமக்களின் ஜனநாயக உரிமைக்கு அடியாக அமையக்கூடிய செயல் என்றும் அவர் காட்டமான முறையில் தெரிவித்தார். …
-
- 0 replies
- 380 views
-
-
September 19, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியம், தேங்காய் சிரட்டை மூலம் கைவினை, அழகுசாதனப் பொருட்களை உருவாக்கும் கற்கை நெறியின் புதிய பிரிவுக்கான வகுப்புகளை செப்ரெம்பர் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. …
-
- 0 replies
- 538 views
-
-
யாழில் எந்த பாடசாலை அதிபரும் கைது செய்யப்படவில்லை என வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை சேர்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றசாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன. அது குறித்து வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவரை கேட்ட போது , யாழில். உள்ள பிரபல பாடசாலை , அச்சுவேலி பகுதியில்…
-
- 0 replies
- 329 views
-
-
தாமரைக் கோபுர மோசடி: ஜனாதிபதி சீனாவை இழிவுபடுத்தியுள்ளார்- மஹிந்த குற்றச்சாட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை அமைக்க 2 பில்லியன் ரூபா முற்பண நிதி, சீனா நெசனல் இலக்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டதாகவும், சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான பாரிய நிறுவனமொன்று 2 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளதென குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சீன அரசாங்கத்தை இழிவுப்படுத்துவதாகும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த பாரிய வேலைத்திட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு சீன நிறுவனங்களும் சீனாவின் பாரிய நிறுவனங்களாகும். ALIT நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த நிறுவனமொன்றுக்கோ எவ்வித நிதியும் வழங்கப்படவில்லையெனவும் அவ…
-
- 0 replies
- 318 views
-
-
ஜே.வி.பி. யுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி? ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மேற்கொள்வதற்கு பல்வேறு மாற்று வழிகள் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாக வேட்பாளரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கையளித்துள்ளது. பல்வேறு கூட்டணிகள் காணப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டணி அமைக்கவும் எம்மால் முடியும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். சுதந்திர…
-
- 0 replies
- 411 views
-
-
வேட்புமனு தாக்கலுக்கு 2 மணி நேரமே காலஅவகாசம் Sep 19, 2019 | 10:24by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் இன்று தொடக்கம் கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடத்தப்படவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஒக்ரோபர் 6ஆம் நாள் மதியம் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும். அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக தேர்தல்கள் செயலகத்தில் செலுத்த வேண்டும். …
-
- 0 replies
- 251 views
-
-
பி.ப 3 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு Sep 19, 2019 | 10:11by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 3 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா அதிபரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தியதை அடுத்தே, இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களையும் தவறாமல் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை …
-
- 0 replies
- 346 views
-
-
அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் முன்னாள் இராணுவத் தளபதி? Sep 19, 2019 | 10:50by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை வேட்பாளராக களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக, தேசிய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஒரு வேட்பாளர் குறித்தும், அரசியல்வாதி அல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் நன்மை தீமைகள் குறித்தும் தேசிய மக்கள் இயக்கம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிடம் கேட்டபோது, அவ்வாறான முடிவை தான் எடுக்கவில்லை என்று தெரிவித்…
-
- 0 replies
- 235 views
-
-
செயற்கை கை உருவாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு இளைஞன்! முல்லைத்தீவு- மல்லாவியைச் சோ்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். மல்லாவியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதனின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். 2009 ஜனவரி 20ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோவில் அருகாமையில் இடம்பெற்ற படையினரின் எறிகணைத்தாக்குதலில் துசாபனின் தந்தையார் பத்மநாதன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். போரின்போது கண்முன்னே கண்ட அவல காட்சிகள் துசாபனின் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. இதனையடுத்து, போர்க் காலப்பகுதியில் கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை …
-
- 6 replies
- 639 views
-
-
2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, பி.ப. 01:41 -செல்வநாயகம் ரவிசாந் தியாகதீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வை முன்னிட்டு, ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. தியாகதீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு, நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியடியில் நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்தவகையில், தியாக தீபம் திலீபனின் தியாகங்களை வெளிக்கொணரும் வகையிலான கவிதைகள், பாடல்கள், பேச்சு, நாடகங்கள், வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்வுகளில் ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ள முடியும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்களது ஆக்கங்களை, வௌ்ளிக்கிழமைக்கு (20) முன்னர் thilepanmemorial@gmail.com எனும் மின்னஞ்…
-
- 1 reply
- 512 views
-
-
வேட்பாளர் விடயத்தில் ரணில் தவறிழைத்து விட்டார் – மனோ! ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தவறிழைத்து விட்டார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த வருட 52 நாள் ஒக்டோபர் நெருக்கடியின் போது, நாம் அனைவரும் எமக்கு பல கோடிகள் விலை பேசி வந்த எதிரணியை நிராகரித்து, அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும், நாடாளுமன்ற ரீதியாகவும் போராடி வென்று எம் ஆட்சியை நிலை நாட்டினோம். இவை அனைத்திற்கும் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் விடாப்பிடியாக தங்கி இருந்தபடி தலைமை வழங்கினார். அன்று ஐதேக நாடாளுமன்ற குழுவை அழைத்த…
-
- 1 reply
- 412 views
-
-
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது என்பதை, பஷீரின் பதிவுக்கு எழுதப்பட்ட கருத்துக்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டம் ஏறா வூரைச் சேர்ந்த பஷீர் சேகுதாவூத், ஈரோஸ் ஆயுதப் போராட்ட இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளி என்பதோடு, அந்த…
-
- 0 replies
- 887 views
-
-
(ரெ.கிறிஷ்ணகாந்) இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாம் மதத்தை தழுவி உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலை ஒத்ததான தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் கூறப்படும் விடயத்தை முற்றாக மறுப்பதாகவும், இது தொடர்பில் இராணுவ மட்டத்தில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் கடந்த 16 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றை நடத்திய, மக்கள் சேவை அமைப்பு என்ற அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் ரிஷாம் மரூஷ் என்ற நபர், கொமாண்டோ படையணியைச் சேர்ந்த அசங்க பிரியந்த என்பவரின் அறிவுறுத்தலுக்கமைய, பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாம…
-
- 0 replies
- 350 views
-
-
48 மணித்தியாலங்களுக்குள் எழுத்து மூலமாக, தமக்கான நிரந்தர தீர்வை அறிவிக்காத பட்சத்தில் தீக்குளிப்போமென, அரசாங்கத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், அரச வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (19) நிரந்தர நியமனம் கோரி, உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, பட்டதாரிகள் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தனர். https://www.madawalaenews.com/2019/09/blog-post_959.html
-
- 0 replies
- 317 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கடந்த 12 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/65088
-
- 4 replies
- 1.1k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருந்த இரண்டு இலட்சம் ரூபாய் மேலதிகக் கொடுப்பனவு இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருநாகலில் ஆயிரத்து 492 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 207 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டுத்துறை எனும் தனியான பிரிவை ஆரம்பிக்கும் முயற்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக இது தொடர்பான ஆவணங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் இயக்கத்தின் அகிலத் தலைவர் வி. சு. துரைராஜா கையளித்தார். மிகவும் தொன்மையான தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலைகள் மற்றும் கலாசார விழுமியங்கள் தொடர்பான பாடநெறி ஒன்றை ஆரம்பித்து வளர்ந்து வரும் மாணவர்களுக்கு அது தெளிவாக கற்பிக்கப்பட வேண்டும் எனும் உயரிய நோக்கில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக தலைவர் துரைராஜா அமைச்சரிடம் தெரிவித்தார். இ…
-
- 0 replies
- 347 views
-