ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் ; வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணை முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டிருக்கின்றனர். மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியால் பாரிய புத்தர் சிலை ஒன்று நாட்டப்பட்டு பிள்ளையார் ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்கு சென்ற மக்களோடு முரண்பட்ட நிலையில் குறித்த இடத்திலேயே அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிசாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந் நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இன்னமும் வர்த்தமான…
-
- 1 reply
- 413 views
-
-
சஜித் வருவது எனக்கு விருப்பம் – மஹிந்த எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிடுவாராயின் அதனை தான் மிகவும் விரும்புவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை தற்போது சிறுபான்மையினரின் பெரும்பாலானவர்களின் ஆதரவு தமது கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/188479/
-
- 3 replies
- 753 views
-
-
எஸ்.நிதர்ஷன் தமது மக்கள் எந்தளவு ஆதரவு கொடுக்கின்றனர் என்பதிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஆயுள் இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது மிகவும் கேள்விக் குறியாகவுள்ளதெனவும் இந்த அலுவலகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப் போவதில்லையெனவும் தெரிவித்தார். இந்தப் பணியகத்தினரால் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் கூட, அவர் குறித்து எந்த நடவடிக்கையையும் மேற…
-
- 0 replies
- 441 views
-
-
2019 ஓகஸ்ட் 26 திங்கட்கிழமை, பி.ப. 01:03 -எஸ்.நிதர்ஷன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை பார்த்து தமிழ் மக்கள் பயப்படவில்லையெனத் தெவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அவர் பத்து தலை இராவணன் போல வந்தாலும், தாம் அவரை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் கூறினார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பத் தலைவர் அமரர் நடராசா தங்கத்துரையின் 71ஆவது ஜனன தின நிகழ்வு, வல்வெட்டித்துறை - நெற்கொழு விளையாட்டு மைதானத்தில், நேற்று (25) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்…
-
- 0 replies
- 383 views
-
-
அரசியல் நோக்கங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல், தங்களுடன் இணைந்து ஒரே நாடு என்ற அடிப்படையில் முன்னோக்கி செல்வதற்காக கைகோர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வட,கிழக்கு இளைஞர் யுவதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு கொழும்பு - தாமரைத் தடாக கலையரங்கில் நேற்று இடம்பெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தங்களிடம் நிலையான தீர்வு உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய பகுதிகளுக்கு வழங்கும் அனைத்து அபிவிருத்திப் பணிகளும், வடக்கு, கிழக்கிற்கும் வழங்கப்படும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவி…
-
- 1 reply
- 616 views
-
-
வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில் தேசிய ஜனநாயக முன்னணி விரைவில் உருவாக்கப்படும் என்றும், அதன் வேட்பாளரின் பெயர் மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போகம்பர கலாசார நிலையத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர், “எமது கொள்கைகளுக்கு ஏற்ப, ஒரு வேட்பாளரை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். சரியான நேரத்தில் அவரது பெயரை அறிவிப்போம். கூட்டணியின் யாப்பு தொடர்பாக பங்காளிக் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே, விரைவில் தேசிய ஜனநாயக முன்னணி உருவாக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார். http://www.p…
-
- 1 reply
- 565 views
-
-
கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதையடுத்து, நாமல் ராஜபக்ச மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரியுள்ளனர். பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாடு, தாமரைத் தடாகம் அரங்கில் சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது. இந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் எவரும் அரங்கினுள் அனுமதிக்கப்படவில்லை. இது ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சமூக ஊடகங்கள் மூல…
-
- 1 reply
- 444 views
-
-
இராணுவத்தினர் குறித்து தமிழர்கள் அறிவர் – சவேந்திர சில்வா இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உண்மை நிலையை தமிழர்கள் அறிவார்கள் என இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “சர்வதேசத்தினர் போர்க்குற்றங்கள் தொடர்பாக தற்போது கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். எமது நாட்டுக்கென, சுயாதீனத் தன்மையொன்று இருக்கிறது. எனவே, எங்கள் மீது குற்றங்களை முன்வைக்கும் தரப்பினர், இதனை சிந்தித்து செயற்பட வேண்டும் என்றே நாம் கருதுகிறோம். நாம் நாட்டுக்கான சேவையைத்தா…
-
- 1 reply
- 392 views
-
-
சபாநாயகரின் இராஜினாமா தொடர்பான செய்தி பொய்யானது சபாநாயகர் கரு ஜயசூரிய தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிவரும் செய்திகள் பொய்யானது என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தனது பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் சபாநாயகர் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என சபாநாயகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. அதேவேளை பதவி விலகுவதற்கான எந்தவித தேவையும் இல்லை எனவும் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை அசெளகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் சிலர் இவ்வாறு வதந்திகளை பரப்புவதாகவும் அவ்வாறான வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்து…
-
- 0 replies
- 247 views
-
-
விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019 ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நான்காயிரம் ஏக்கர் காணிகளை விட இன்னும் விடுவிக்கப்ட வேண்டிய பொது மக்களின் காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதி நாள் அன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை பருத்தித்துறை தறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வும், சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டங்களும் அன்…
-
- 0 replies
- 668 views
-
-
எமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019 கோத்தாபயராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மையில் விரும்பவில்லை.எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். ஞாயிற்றுக்கிழமை(25) கல்முனை பகுதியில் மாலை ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு ஒன்றில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நியமனம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதிநிதிகள் எங்களது உறவுகளை தொலைத்தவர்களில் மிக முக்கியமானவர்கள் பட…
-
- 0 replies
- 298 views
-
-
அவசரகால சட்டம் நீக்கப்பட்டதால் புர்கா தொடர்பில் தெளிவற்ற நிலை (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் கடந்த நான்கு மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் தடை செய்யப்பட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்குமா இல்லையா என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவசர கால சட்ட விதிகளின் கீழ், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிய தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டது. இந் நிலையில் அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், முகத்தை மூடி ஆடை அணிய விதிக்கப்பட்ட தடையும் நீங்கியுள்ளதா இல்லையா என்பதில் தொடர்ந்து குழப்…
-
- 0 replies
- 293 views
-
-
"சஜித்தை பெயரிடாவிட்டால் தனித்து பயணிக்க 57 உறுப்பினர்கள் இணக்கம்" (ஆர்.யசி) ஏதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடாவிட்டால் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைகளை கையாள தயராக உள்ளதாகவும் தனித்த பயணத்தை ஆரம்பிக்க கட்சியின் 57 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலமாக தெரிய வந்துள்ளது. இந்த வாரமே சஜித்-கரு- ரணில் மூவரும் விசேட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் அடுத்த வாரத்துக்குள் பிரச்சினைக்கு தீர்வினை காண கட்சியின் உயர்மட்டம் தீர்மானம் எடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்தும் இழுபறி நிலைமை உருவாகியுள்ள…
-
- 0 replies
- 259 views
-
-
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற வாய்ப்புக்கள் இல்லை. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் பாராளுமனறத்தில் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணை உள்நோக்கம் கொண்டே கொண்டு வரப்பட்டுள்ளது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலைகளை நடத்துவதில் தற்போதய அரசில் பிரச்சினை நிலவுகின்றது. ஆனால் அதனை நடாத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகின்றார். ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் போட்டித்தன்மை நிகழ்கின்றது. இந்நிலையில் ஓர் பக்கம் சார்ந்து கூட்ட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமனறத்தில் மா…
-
- 0 replies
- 432 views
-
-
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் பிரிவான ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், மலையக மக்கள் முன்னேற்றக் கழகம், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மலையக பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று யாழ். நகர விடுதியொன்றில் இன்று (22) காலை இடம்பெற்றது. இதன்போது, வடக்கு - கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வை பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இ…
-
- 25 replies
- 2.7k views
-
-
அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு AUG 25, 2019 | 3:47by கி.தவசீலன்in செய்திகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ”இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா வந்திருந்தபோது, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசினோம். எங்களை புதுடெல்லிக்கு வரும்படி அவர் கேட்டிருந்தார். விரைவில் அந்த பயணத்தை மேற்கொள்வோம் என நம்புகிறோம். தேசிய பிரச்சினை தொடர்பாக சிறிலங்க…
-
- 5 replies
- 680 views
-
-
ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளரினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உங்கள் மீது காணி சம்பந்தமான சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றார். அது தொடர்பான விசாரணைகளும் தமிழரசு கட்சி மட்டத்திலே இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியை மட்டத்தில் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டத்திலேயே மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தல…
-
- 0 replies
- 389 views
-
-
சஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித்பிரேமதாசாவை பிரதமராக்குவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளது. சஜித்பிரேமதாசாவை பிரதமராக்கி புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கான முயற்சிகளை கடந்த வாரம் சிறிசேன மேற்கொண்டுள்ளார். சஜித்hபிரேமதாசாவை பிரதமராக்கவேண்டும் என 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினால் தான் அவரை பிரதமராக்க தயார் என சஜித்தின் நெருங்கிய சகாவான அமைச்சரிடம் சிறிசேன தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சஜித் ஆதரவாளர்கள் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எ…
-
- 1 reply
- 394 views
-
-
கோத்தபாய வென்றால் என்ன செய்வோம்- மகிந்த கருத்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஆட்சிக்குவந்தால் புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு வழங்கிய சிறிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவ்வாறான புதிய அரசமைப்பின் உள்ளடக்கங்கள் குறித்து எதிர்காலத்திலேயே தீர்மானிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் மாகாணசபைகளின் செயற்பாடுகள் உட்பட அதிகளவு அதிகார பகிர்வு குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 19 வது திருத்தத்தை நீக்கவேண்டும்,அது பிழையானது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் பாராளுமன்றத்தினை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார். கோத…
-
- 1 reply
- 417 views
-
-
இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: ருவன் குணசேகர செ.தேன்மொழி அவசரகால சட்டத்தை நீக்கினாலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும், தற்போது பயங்கரவாத பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியலுக்கும் மற்றும் அவர்களின் சொத்துகளை தடைசெய்வதற்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஊடகமொன்றில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸ் தலைமையகம், இந்த செய்தி …
-
- 0 replies
- 301 views
-
-
வடக்கு செல்ல தயாராகும் தேசிய மக்கள் சக்தி (ஆர்.ராம்) மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் புத்திஜீவிகள் அமைப்பினர் வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் கொள்கைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்களை வடக்கு மக்களுடன் கலந்துரையாடல்களை செய்வதற்கும், வடக்கு மக்களின் கோரிக்கைகள் தொடர்பான மேலதிக ஆராய்வுகளைச் செய்வதற்காகவுமே மேற்படி புத்தி…
-
- 0 replies
- 425 views
-
-
எழுக தமிழ் பரப்புரை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளது. இந்தநிலையிலேயே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் இன்று காலை பரப்புரைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வில் ஈபீஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://thinakkural.lk/article/33088
-
- 4 replies
- 801 views
-
-
பௌத்த பிக்குகளால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது என கூட்டமைப்பினரிடம் மனந்திறந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது. தொல்பொருள் திணைக்களம், வனஜீவ ராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது, காணிகள் விடுவிக்கப்படாதது, பௌத்த பிக்குகளால் கன்னியா, நீரா வியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்து கூட்டமைப்பு தரப்பு விரிவாக குறிப்பிட்டது. இதை கேட்டுக் கொண்டிருந்த மைத்திரி, “பௌத்த பிக்குகளால் தமிழர்களிற்கு மட்டு மல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது. இங்க…
-
- 3 replies
- 637 views
-
-
இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகள் தொடர்பாக சவேந்திர சில்வாவே பொறுப்புக்கூற வேண்டுமென தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், போர்க்குற்றவாளியாக முன்னிறுத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் …
-
- 8 replies
- 1.6k views
-
-
இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம் கடுமையான இழுபறிகளுக்குப் பின்னர், இலங்கை இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார். இராணுவத் தளபதி ஒருவரின் நியமன விடயத்தில், இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் எதிர்கொண்ட மிகநெருக்கடியான தருணம் இதுவாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு முன்னரும் இராணுவத் தளபதி நியமனங்களின் போது இழுபறிகள், முரண்பாடுகள், குழிபறிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. சேவை மூப்பின் அடிப்படையில் முன்னால் இருந்த திறமைமிக்க பல அதிகாரிகள் வாய்ப்பு அளிக்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர். சேவைமூப்பில், பின்வரிசையில் இருந்தவர்கள், அரசியல் செல்வாக்கின் அடிப்படையில், தளபதி ஆகியிருக்கிறார்கள். …
-
- 0 replies
- 379 views
-