ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
September 17, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை (16) காலை முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் 2 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழ…
-
- 0 replies
- 381 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. எதிர்வரும் 21.09.2019 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகும் நடைபயணமானது, தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணத்துடன் யாழ்பாணத்தை நோக்கி சென்றடையும். அனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றது நிகழ்வு ஏற்பாட்டுகுழுவினர். …
-
- 0 replies
- 460 views
-
-
2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:40 -கே.தயா யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் திறக்கப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (17) 2ஆவது நாளாகவும் தொடர்ந்தது. எமது உறவினர்கள் காணாமல் போகவில்லை; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், வலிந்து காணமல் ஆக்கிகப்படோரே விசாரணை செய்து கண்டுபிடிப்பது என்பது வெறும் அப்பட்டமான பொய்ப் பிரசாரம், எமது பிள்ளைகள் தொடர்பான விசாரணைகளை சர்வதேசமே மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து, திங்கட்கிழமை (16) கோரிக்கையினை முன்வைத்தே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பி…
-
- 0 replies
- 473 views
-
-
2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:34 -என்.குகன் எதிர்வரும் காலங்களில், யாழ்ப்பாண மாநகர சபையால், மாநகர சபையின் வருடாந்த நிகழ்ச்சி நிரலின் கீழ், தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். அத்துடன், மிக விரைவில் திலீபனின் நினைவு தூபியும் நவீன முறையில் அமைக்கப்படுமெனவும், மேயர் கூறினார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/திலீபனின்-நினைவேந்தல்-நிகழ்வை-இனி-மாநகர-சபை-முன்னெடுக்கும்/71-238700
-
- 0 replies
- 425 views
-
-
மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு 146 பேர் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் நேற்று திங்கட்கிழமை மனு கையளித்துள்ளனர். இலங்கையில் 1983 இல் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் சென்று கொண்டிருந்தனர். நாட்டில் இடம் பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 2009 ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்த போதும் ராமேஸ்வரத்துக்கு அகதிகளின் வருகை தொடர்ந்து கொண்டே இருந்தது. தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதில்…
-
- 0 replies
- 287 views
-
-
அரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து துணிவுடன் மக்களுக்கான விடுதலைக்காக தொடர்ந்தும் தளராது செயற்படுவோம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமகன் கு.வன்னிய சிங்கத்தின் 60 ஆம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தலைமையில் இன்று நீர்வேலி வாழைக்குலைச் சங்கத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழ்த்தேசிய இனம் வாழவேண்டும் என்ற இலட்சியத்துடன் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகானின் நினைவு நாள் இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்ப காலகர்த்தாக்களில் இவரும்…
-
- 0 replies
- 336 views
-
-
மஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு 2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் தொடர்பாக தற்போது எந்த தகவல்களும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு நிதி மோசடி மற்றும் ஊழல் என்ற தலைப்பில் பேசிய ஜனாதிபதி, சீனாவில் அத்தகைய நிறுவனம் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தாமரைக் கோபுரமானது, நிர்மாணிப்பு யுகத்தில் எமக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே நாம் கருதுகிறோம். இது இலங்கையின் மிக முக்கியமான ஒரு சின்னமாக மாற்றமடைந…
-
- 2 replies
- 496 views
-
-
மக்களின் ஆதரவுடன் ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் "எழுக தமிழ்" பேரணிக்கு மக்கள் பூரண ஆரவை வழங்கியுள்ளனர். இதனால், யாழ் குடாநாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து இடம்பெறவில்லை. குடா நாட்டின் அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமற்று வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பொது சந்தைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அத்…
-
- 6 replies
- 1.3k views
-
-
யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம் தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்ப நாள் நிகழ்வுகள் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும். 16.09.2019 – 25.09.2019 ஆம் திகதி வரையான நிகழ்வுகள் தினமும் காலை 9.00 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம் தேசத்திற்காக மெழுகாய் தன்னை உருக்கி தன்னுயிரை இம் மண்ணுக்காய் ஈகம் செய்த மாவீரனை நினைவு கூரும் நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் என நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.இறுதி நாள் நிகழ்வுகள் 26…
-
- 7 replies
- 2.5k views
-
-
(நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட 36 நாடுகளில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விஷேட நிபுணர்களினால் ஆராயப்படவிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், வலிந்து காணாமலாக்கப்படுதல் தொடர்பில் ஆராயும் ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் நடைபெறவிருக்கிறது. இதன்போது இலங்கை உள்ளிட்ட 36 நாடுகளில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படுதலுடன் தொடர்புடைய சுமார் 530 இற்கும் அதிகமான சம்பவங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. மேற்படி ஐ.நா …
-
- 0 replies
- 478 views
-
-
தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் , தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும் யாழில். எழுக தமிழ் பேரணி இன்று நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையில் ஏற்பாட்டில் இன்று காலை நல்லூர் மற்றும் யாழ். பல்கலை கழக முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி யாழ்.கோட்டைக்கு அருகில் உள்ள முற்றவெளியை சென்றடைந்தது. அங்கு எழுக தமிழ் கூட்டம் நடைபெற்று , பிரகடனம் வாசிக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றத்தை நிறுத்து , போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து , எல்லா அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பக்க சார்பற்ற சர்வதேச வி…
-
- 0 replies
- 1.1k views
-
-
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்! எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன் காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் பாடசாலைகள் வழமை போன்று இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெர…
-
- 1 reply
- 673 views
-
-
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பம் இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கையொன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளது. இந்த நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்விற்கு சமாந்திரமாக இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 20ம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தின்போது, இலங்கை உள்ளிட்ட 36 நாடுகளில் பதிவாகியுள்ள 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின், பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான…
-
- 0 replies
- 351 views
-
-
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் தென்னிலங்கையரின் உப்பளம் கிளிநொச்சியின் உருத்திரபுரம் பகுதியின் செருக்கன் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனத்தால் சட்டவிரோதமான முறையில் உப்பளம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சட்டவிரோதமான முறையில் உப்பளம் ஒன்று அமைக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பொது மக்களால் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்றார். குறித்த பகுதியில் அமைக்கப்படும் உப்பளமானது பிரதேச செயலாளர் பிரதேச சபை மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரின் அனுமதி இன்றி அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த உப்பளம் குறித்த பகுதியில் அமைக்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
3000 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்த ஹிஸ்புல்லாஹ்! கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இலங்கை முழுவதும் 3000 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சவுதி அரேபிய நிறுவனத்தின் நிதி உதவியுடன் இந்த காணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாஹ்வுக்கு சவுதி அரேபிய நிறுவனம், இஸ்லாமிய அமைப்புக்கள் நிதியுதவி வழங்கி வருகிறன. அதற்கமைய ஹிஸ்புல்லாஹ் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.battinaatham.net/descripti…
-
- 1 reply
- 851 views
-
-
கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் சஜித்தின் முயற்சி தோல்வி ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முதற்கட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாரையும் ஆதரிப்பதாக இப்போது நேரடியாக அறிவிக்க முடியாது என்று, சஜித் பிரேமதாசவின் சார்பில், சந்தித்த அமைச்சர்கள் குழுவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக களமிறக்க முற்படும் சஜித் பிரேமதாசவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை நேற்று அமைச்சர் மங்கள சமரவீரவின்…
-
- 0 replies
- 507 views
-
-
எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்… September 14, 2019 எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை 14.09.2019 தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும், 16 201செப்டம்பர் 2019 அன்று நடைபெறவிருக்கும் ‘எழுக தமிழ்’ பேரணிக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது ஆதரவை வழங்குகின்றது. எழுக தமிழ் பேரணி இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் தொடர்பில் எமது எதிர்ப்பை காட்டுவதற்கும் நீதிக்கான அவாவை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாலும் அரசியலில் வ…
-
- 4 replies
- 752 views
-
-
திருகோணமலையில் இன மோதலை ஏற்படுத்தினால் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள அமைதிக்கு சீர்குலையும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் சான்றுள்ள இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அது அமைந்துள்ள இடத்துக்கு கோகிலா ரமணி என்ற பெண் உரிமை கோரியுள்ளார். அத்துடன் இராவண சேனை என்ற அமைப்பும் இன்னொரு அமைப்பும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து மக்களை அழைத்துவந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுத…
-
- 3 replies
- 727 views
-
-
வேகமாக இடம்பெறும் பலாலி விமான நிலைய பணிகள் – அர்ஜூன திடீர் விஜயம் பலாலி விமான நிலையப் கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். நிர்மாணப் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை பரிசீலிப்பதற்காகவே அமைச்சர் இந்த திடீர் விஜயத்தினை மேற்கொண்டதாக போக்குவரத்து அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. அத்தோடு இந்த திடீர் விஜயம் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளோ அல்லது விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்தின் அதிகாரிகளோ இன்றி அமை…
-
- 0 replies
- 690 views
-
-
எழுக தமிழில் பங்கேற்க சம்பந்தனுக்கு அழைப்பு – வருவார் என விக்கி நம்பிக்கை சிறப்புச் செய்தியாளர்Sep 15, 2019 | 3:55 by in செய்திகள் யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காத போதும், அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும், அரசியல் சார்பின்றி இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுக தமிழ் நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடவோ, அல்லத…
-
- 2 replies
- 561 views
-
-
மன்னாரில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினை வேந்தல்… September 15, 2019 மன்னார் நிருபர் (15-09-2019) தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (15.09.19) காலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டின், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வின் போது தீபச்சுடரினை மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தியாக தீபம் திலீபனின் படத்துக்கு மலர் மாலை அணிவித்தார். மேலும் அங்கு வந்திருந்தவர்கள…
-
- 1 reply
- 462 views
-
-
-சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில், படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் சந்தை வளாகத்தில், இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. வன்னி குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/வன்னி/நினைவு-தினம்/72-238509
-
- 0 replies
- 493 views
-
-
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், கே.தயா, செல்வநாயகம் ரவிசாந் காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://www.tamilmi…
-
- 0 replies
- 400 views
-
-
வடக்கிலுள்ள அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொடை ஆனந்த சமரகோன் வெளிப்புற நாடக சங்கத்தின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.hirunews.lk/tamil/224273/ஜனாதிபதி-வேட்பாளர்-தொடர்பில்-ஞானசார-தேரர்-கருத்து சர்வதேச சக்திகள் இலங்கையின் கழுத்தை நெரிக்கின்றன- குணவங்ச தேரர் சர்வதேச சக்திகள் இலங்கையின் கழுத்தை நெரிப்பதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். அநாகரிக்க தர்மபாலவின் 155 வது ஜனன தின நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெர…
-
- 1 reply
- 1.3k views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்தாலும் இந்தியாவின் பங்களிப்பு இதில் மாறுபட்ட ஒன்றாகும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன், தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவே ஆரோக்கியமான சிந்திக்கின்றது என்றும் கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள், அதில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/647…
-
- 5 replies
- 1k views
-