Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை நகரில் மருத்துவமனைக் கட்டடமொன்றுக்கான அத்திவாரம் தோண்டும்போது ஓராண்டுக்கு முன்னர் கிடைத்த மனித எலும்புகளை மேலதிக பரிசோதனைக்காக சீனாவுக்கு அனுப்பும் அரசின் திட்டத்துக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய, காணாமல்போனோரின் உறவினர்கள் தமது எதிர்ப்பை எழுத்துமூலமாக நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்தார். சீனா, இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைப் பேணுவதனால் அதன் பரிசோதனை முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என்று அவர் கூறினார். மாத்தளை புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிக…

  2. காணாமல் போனோர் விவகாரத்துக்கு ‘நீதியை தா’ காணாமல் போனவர்கள் தொடர்பில், பல்வேறான போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில், தமது உயர்ந்தபட்ச கவனத்தைச் செலுத்துமாறும், குற்றம் செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பலவந்தமாகக் க…

  3. ரஷ்யாவைப் பின்பற்றுமா கூட்டமைப்பு?! மஹிந்தவைச் சந்தித்தனர் சி.வி.வியும் சுமந்திரனும்? (படங்கள்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் மாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவரது செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கிய அதிகாரிகளும், முதலமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பேச்சுக்களில் கலந்துகொண்டனர். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு நிபந்தனையற்ற …

    • 9 replies
    • 1.6k views
  4. அரச தலைவருக்கு நாமல் பிறந்தநாள் வாழ்த்து!! அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அரசதலைவரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழா அந்தக்கட்சியின் தலைவரின் பிறந்த நாளான இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/25422.html

  5. யாழ்ப்பாண மாவட்ட... வெளியீட்டு பணியகம் அங்குராப்பணம் செய்யப்பட்டது! அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு பணியகத்தின் அங்குராப்பண நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சிநேகித பூர்வ சந்திப்பும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன் , உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1267675

  6. இராணுவத்தினரை விசாரணைக்கு அழைத்தால் முன்னாள் போராளிகளை கைது செய்யவேண்டுமாம்? இராணுவத்தினரின் போர்க் குற்றங்களை விசாரிக்க பொன்சேகா கோருவாராயின் விடுவிக்கப்பட்ட 12ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்ய வேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் மட்டுமா போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்? விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன், அடேல் பாலசிங்கம், விநாயகம் ஆகியோரும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12,000 முன்னாள் போராளிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை…

  7. இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:- ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய பொலிசார் மீட்டுள்ளனர். நேற்றைய தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close பகுதிக்கு சென்ற பொலிசாரே இந்த சடலங்களை மீட்டுள்ளனர். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம்…

  8. மகிந்­தவை இந்­தி­யா­வுக்கு அழைக்­கின்­றது மோடி அரசு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளார். அடுத்த மாதம் 14ஆம் திகதி அவ­ரது பய­ணம் இடம்­பெ­றும் என்று கூறப்­ப­டு­கின்­றது. இந்­தி­யா­வின் மகா­ராஷ்டிரா மாநி­லத்­தில் நடை­பெ­றும் பௌத்த நிகழ்­வில் கலந்து கொள்­வ­தற்கு அழைக்­கப்­பட்­டுள்ள முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, இந்த நிகழ்­வின் பின்­னர் இந்­திய நடு­வண் அர­சின் முக்­கிய தலை­வர்­க­ளு­டன் பேச்சு நடத்­த­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இலங்கை அரசு சீனா­வின் பக்­கம் சாய்ந்­து­விட்­ட­தாக புது­டில்லி உணர்­வ­தா­லேயே இந்த அதி­ரடி இரா­ஜ­தந்­திர காய்­ந­கர்த்­த­லுக்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கக் க…

  9. இலங்கையில் திறந்து வைக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் ஒரு கப்பல் கூட வந்து போகாத துறைமுக பராமரிப்புக்கு மாதம் 56 லட்சம் செலவு யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 32 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் இயங்கிய போது எடுத்த புகைப்படம் இலங்கையில் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட துறைமுகமொன்றுக்கு இது வரை கப்பல் ஒன்று கூட - வந்து போகாத நிலையில், அந்த துறைமுகத்தின் பராமரிப்புச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 56 லட்சம் ரூபா செலவிடப்பட்டு வருகின்றது. இந்த விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமொன்…

  10. Dr M K Muruganandan Like This Page · 7 hours ago நான் ஒரு அரசியல் ஞானசூனியம் என்று நினைத்திருந்தேன். நம் நாட்டு தமிழ் சிங்கள தமிழ் பத்தரிகைகளை இனங்களிடையே சிண்டு மூட்டும் கைங்கரியம் செய்பவை என்றும் எண்ணியிருந்தேன். தப்புத்தான். இது இன்றைய தினக்குரல் பத்திரிகையின் கார்ட்டுன் படம் ஞானசூனியனுக்கும் புரிந்த உண்மையைத்தான் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் புரிகிறது. உங்களுக்குப் புரிகிறது. பத்திரிகை ஆசிரியர்களுக்கும் புரிகிறது. ஊர் உலகத்திற்கும் புரிந்த உண்மை அவர்களுக்கு மட்டும்தான் புரியமாட்டேன் என்கிறது. ஆம் நம் நாட்டு தமிழ் அரசியல்வாதிகளைத்தான் சொல்கிறேன். https://www.facebook.com/photo.php?fbid=720323771311742&set=a.…

  11. கூட்டு அரசை நீடிப்பதா ? – மைத்திரி – ரணில் சந்திப்பு விரைவில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யி­லான கூட்டு அரசு ஒப்­பந்­தம் எதிர்­வ­ரும் டிசெம்­ப­ரில் முடி­வ­டை­வ­தால் அதை நீடிப்­பது தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ ர­ம­சிங்­க­வும் விரை­வில் சந்­தித்­துப் பேசு­வர் என்று பிரதி அமைச்­சர் மனுஷ நாண­யக்­கார தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நாட்­டின் முக்­கிய பிரச்­சி­னை­ கள் பல­வற்­றுக்குத் தீர்­வைக் காணும் பொருட்டு இரண்டு பிர­தான கட்­சி­க­ளும் இணைந்து வர­லாற்­றில் முதல் தட­வை­யாகக் கூட்டு அரசு ஒன்றை அமைத்­தது. இதன் கார­ண­மாகப் பல பிரச்­சி­னை­கள் தீர்க்­கப…

  12. R.Maheshwary / 2022 மார்ச் 15 , பி.ப. 05:14 - 0 - 23 ரஷ்யா மற்றும் உக்ரேன் கிய இருநாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக, குறித்த இரண்டு நாடுகளுக்குமான தேயிலை ஏற்றுமதியை முற்றாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த இரண்டு நாடுகளுக்கும் தேயிலை ஏற்றுமதி செய்யும் போது, பெற்றுக்கொள்ளும் பணம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள், தேயிலை ஏற்றுமதியை நிராகரிப்பதாகவும் இதனால் முற்றாக தேயிலை ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ஜயந்த கருணாரத்ன த…

  13. மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பெரும் சிங்களக் குடியேற்றம் ஒன்றிற்கான ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரின் முள்ளிக்குளத்திலுள்ள 1000 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு இங்கு சுமார் 1000 கடற்படைக் குடும்பங்கள் குடியேற்றப்பட உள்ளதாகவும் இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே மீனவர்கள், வர்த்தகர்கள் என்ற போர்வையில் ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மன்னாரில் அரச ஆதரவுடன் ஏற்கனவே குடியேறி உள்ளன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=21059

    • 2 replies
    • 1.2k views
  14. ஏன் இந்த பாராமுகம்? : யாழ் மாநகர சபையின் சுகாதாரப்பிரிவிடம் மக்கள் கேள்வி யாழ்.பஸ் நிலையத்திற்கு பின்னால் இயங்கும் பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக்கொண்டிருப்பதாகவும், மக்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே கழிவுகள் அகற்றப்படுவதாகவும் குறித்த சுகாதார சீர்கேடுகள் தொடர்பாக யாழ்.மாநகர சபையின் சுகாதார பிரிவு பாராமுகமாக இருப்பதாக மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர். இது குறித்து மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “யாழ் நகருக்குள் பெருமளவு மக்கள் தினசரி கூடும் நிலையில், பஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது, குறித்த சில உணவகங்களில் கழிவுநீர்த் தொட்டிகள் அமைக்க…

  15. மாந்தை சந்தியில் கோர விபத்து – 19 வயது இளைஞன் உயிரிழப்பு!! Share மன்னார்-யாழ் பிரதான வீதி மாந்தை சந்தியில் நேற்று சனிக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். திருக்கேதீஸ்வரத்தில் இருந்து வந்த 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது,மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொரியுடன் மோதி விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞன் சம்பவ…

  16. அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நீஷா பீஸ்வால், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சரியான ஆய்வினை மேற்கொள்ளாமல் கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அரசாங்கம் இலங்கையின் ஒருங்கிணைப்புக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.ஆனால் இந்த விடயங்களை சரியாக ஆய்வு செய்து விளக்கம் பெறாமல், நீஷா பீஸ்வால் கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டுக் …

  17. தொடர்ந்து 3 நாட்களுக்கு கூடவுள்ள அரசியலமைப்பு சபை புதிய அரசியலமைப்பை வௌியிடுவது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக, அரசியலமைப்புச் சபை ஒக்டோபர் 30ம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கூடவுள்ளதாக இன்று அலரி மாளிகையில் கொழும்பு மாநாகர சபையின் அனுசரணையுடன் நடைபெற்ற 39 இந்துக் கோவில்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தனது நிலைப்பாட்டை வௌியிட்டுள்ளதோடு ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். http://www.vi…

  18. பதவியை.. இராஜினாமா செய்தார், மத்திய வங்கியின் ஆளுநர். மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ள சூழலில், இன்று தான் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளார். https://athavannews.com/2022/1274789

  19. ‘கொலையாளிகளின் பணம் வேண்டாம்’ “எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஒரு சதமும் வேண்டாம்” என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று, இவ்வாண்டு மே மாதம் 29ஆம் திகதி முதல் ட்ரயல் அட் பார் முறையில், யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், திரு…

  20. சதொசவில்... இன்று முதல், நிவாரண பொதி ! தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதியை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நிவாரணப் பொதிகளை இன்று ( சனிக்கிழமை ) தொடக்கம் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது . இதன்படி அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்ட பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் எ…

  21. பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிப்பெரும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலெழுந்து வருவதற்கான தன்மை காணப்படுகிறது.அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைப் பரந்தளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்தும் தன்மை காணப்படுவதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. தமிழ்க் கூட்டமைப்புப் போன்று தமிழ்த் தேசியவாதத்தை வரிதுகொண்டிருக்கும் ஏனைய கட்சிகள் இருக்கின்றபோதிலும் அதிகளவுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டதாகத் தமிழ்க் கூட்டமைப்பு காணப்படுகிறது. உள்ளூர் ஊடகங்களும் அக்கட்சிக்குநியாயபூர்வமானதன்மையை வழங்குகின்றன. ஏனைய தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுக்கு இது இல்லை. அண்மைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் செல்வாக்கானாது…

    • 3 replies
    • 857 views
  22. இலங்கை போராட்டத்தில் இணைந்த போலீஸ் அதிகாரி: "என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்" 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய (ஏப்ரல் 15) இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து, கொழும்பு - காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் இணைந்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் இணைந்த அவர், அங்கு பேசியபோது, "இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்து விட்டது. இந்த சீருடை அணிவதை வி…

  23. விட்டுக்கொடாத ஒற்றையாட்சியும் விடுபட்டு போன சம்ஸ்டியும் http://epaper.virakesari.lk/

  24. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக... அரச உத்தியோகத்தர்கள், பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக கவலை! எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அரச உத்தியோகத்தர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாத அரச உத்தியோகத்தர்கள் இந்த நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமைக்கு விரைவான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1277706

  25. தமது நாட்டில் தங்கியிருந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் ஹிசாமுதீன் ஹசெய்ன் தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் எதுவுமின்றிக் கைது செய்யப்பட்ட இவர்கள் தமது நாட்டை பயங்கரவாதத்திற்கான தளமாகப் பாவிப்பதைத் தடுப்பதற்காகவே கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் கைது செய்யப்பட்ட இவர்கள் குறித்த பூர்வாங்க விசாரணைகளை மலேசியப் பொலிசார் நடத்தியதாகவும் இதன் பின்னரே இவர்கள்; இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்தோ இவர்களது பெய…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.