Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Image caption எழுத்தாளர் சிமாரா அலி இலங்கையில் தற்போது அமலில் உள்ள முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள போதிலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 20ஆம் தேதி கிடைக்கப் பெற்றமை தொடர்பில், மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் ஷாரூரிடம் பி.பி.சி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முஸ்லிம் பெண்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் 100 வீதம் நிறைவேற்…

    • 5 replies
    • 813 views
  2. மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(26) மாலை மயானத்தின் முன் வீதியை மறித்து வீதியில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறிக் கிடந்த தலை மற்றும் உடற்பாகங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது இந்த உடற்பாகங்கள் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட 34 வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது ஆசாத் என்பவரின் என டி.என்.டி பரிசோதனையில் உற…

    • 1 reply
    • 307 views
  3. (எம்.எப்.எம்.பஸீர்) சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு 21/4 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர்கள் எமக்கு தகவல் அளித்து உதவி கோரினால் எம்மால் முடியுமான அனைத்தையும் அவ்வச்சுறுத்தலை முறியடிக்க முயற்சிகளை முன்னெடுப்போம் என இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் தெரிவித்தார். 21/4 தொடர் தற்கொலை தாக்குதலைத் தொடர்ந்து இன்டர்போலின் ' உடன் நடவடிக்கை குழு' இலங்கையில் தங்கியிரு…

    • 1 reply
    • 385 views
  4. (ஆர்.யசி) வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்து நடவடிக்கைகள் மற்றும் காணி விடுவிப்புகள் குறித்தும் அரச அதிகார சபைகளினால் அண்மைகால காணி அபகரிப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் விசேட அழுத்தங்களை கொடுப்பதாக கூட்டமைப்பு கூறுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வடக்கு அபிவிருத்தி விடயங்கள் குறித்து கலந்துரையாட…

  5. முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரிக்கு எதிராக கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் கோத்தாப ராஜபக்ஷவுடன் இணைந்து நான் ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டதாக குறித்த சங்கத்தின் தலைவி ஓர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்து தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் என்ன நோக்கத்துக்காக அதனை தெரிவித்…

  6. ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக அறிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வர்த்தமானி அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளார். https://www.virakesari.lk/article/63517

  7. படை முகாம்கள் எவையும் அகற்றப்பட மாட்டாது… August 27, 2019 வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் படையினரின் முகாம்களை அகற்றும் அல்லது குறைக்கும் எண்ணம் ஒருபோதும் தனக்கில்லை என, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளை விடவும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்தெந்த இடங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முப்படையினருக்கே அதிகளவில் தெரியுமென்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே படையினர் செயற்படுகின்றனர் என்றும் கூறிய அவர், தற்போதுள்ள முகாம்களை விட்டு இராணுவத்தினரையோ முப்படையினரையோ வெளியேற்றவோ இடமாற்றம் செய்யவோ முடியாது என்றும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துப் …

    • 2 replies
    • 586 views
  8. -மு.தமிழ்ச்செல்வன் 2019 ஓகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:49 அமேசன் காடுகள் எரிவது தொடர்பில், பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வரும் முகமாகவும் காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியும், கிளிநொச்சி - பரந்தன் விவசாயக் கல்லூரி மாணவர்களால், கிளிநொச்சியில், இன்று (27) விழிப்புணர்வுப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி - ஏ9 வீதி, கரடிபோக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, டிப்போச் சந்தி வரை சென்றது. இதன்போது, விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிப்பட்டன. http://www.tamilmirror.lk/vanni/72

    • 0 replies
    • 262 views
  9. 2019 ஓகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:50 -எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவுக்கமைய, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ். புத்தகத் திருவிழா – 2019, இன்று (27) ஆரம்பமானது, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்தப் புத்தகக் கண்காட்சியானது, செப்டெம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள குறித்த புத்தக கண்காட்சியானது, பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்துப…

    • 0 replies
    • 297 views
  10. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார். ஆனால் நாம் அதனை நிராகரித்தோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனது மகனுக்கு பெற்றுக் கொடுக்க சாந்தி சிறிஸ்கந்தராஜா 2016 ஆம் ஆண்டு கோரினார். அரசாங்க அதிபர் பணிமனையில் அனுமதிக்கப்பட…

    • 3 replies
    • 782 views
  11. அவசரகாலச் சட்டம் நீக்கம் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விளக்கம் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்ல என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவன் விஜேவர்தன தெரிவித்தார். பியகமவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் அவசரகாலச் சட்டம் கண்டி தலதாமாளிகை பெரஹரவை முன்னிட்டு நீடிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். பொலிஸாரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்திருந்தனர். இதனால்தான் அவசரகாலச் சட்டத்தை நாம் ஒரு மாத காலத்திற்கு நீடித்தோம். ஆனால் தற்பொழுது நாட்டின் பாதுகாப்பு நிலமையை கவனத்தில் க…

  12. ரணிலுக்கு ஆதரவு வழங்க மாட்டேன்- ரத்ன தேரர் அறிவிப்பு ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஜனாதிபதித் தேர்தலில் தான் கூட்டுச் சேரப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார். தனது கருத்துக்கு அதிக இணக்கப்பாடு காட்டும் ஒருவருடன் கூட்டுச் சேரவுள்ளதாகவும், பொது வேட்பாளர் ஒருவர் உருவாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்த ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும், கடந்த 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைக…

    • 0 replies
    • 283 views
  13. தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை – பீரிஸ் இராணுவத் தளபதி நியமனம் உள்ளிட்ட, சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை அமெரிக்காவுக்குக் கிடையாது என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா குடியுரிமை கொண்டவராக, கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகைமையைக் கொண்டுள்ளார். அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள, குடியுரிமை துறந்தவர்களின் பட்டியலில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இல்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.…

    • 0 replies
    • 709 views
  14. போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி கவலையில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, இராணுவத்தின் புலனாய்வுத் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் நேற்று முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோதே அவர் இவ்வாறு கூறினார். “ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் புலனாய்வு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. புலனாய்வுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் தான், நாங்கள் எங்கள் படையினரை நிலைநிறுத்துகிறோம். நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். நாடு எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுற…

    • 0 replies
    • 293 views
  15. எஸ்பி.திசநாயக்க பதவி நீக்கம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து எஸ்பி.திசநாயக்க நீக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த கட்சியின் சிறப்பு மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், எஸ்.பி.திசநாயக்கவுக்குப் பதிலாக, லசந்த அழகியவன்ன, கட்சியின் புதிய பொருளாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன் சுதந்திரக் கட்சியின் பேச்சாளராக இருந்த மகிந்த சமரசிங்கவுக்குப் பதிலாக, வீரகுமார திசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மூத்த உதவ…

    • 0 replies
    • 525 views
  16. வவுனியா ஊடகவியலாளர் மீது சிறிடெலோ கட்சியை சேர்ந்தவர் தாக்குதல்… August 27, 2019 வவுனியா ஊடகவியலாளர் கே.கோகுலன் மீது நேற்று திங்கட்கிழமை (26.08.19) மாலை சிறிடெலோ அரசியல் கட்சியின் இளைஞரணி தலைவர் தாக்குதல் நடத்தியமையால் ஊடகவியலாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியாவில் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வருடாந்த ஊடக சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (26) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கு சென்ற சிறிடெலோ கட்சியின் இளைஞரணி தலைவரான பரமேஸ்வரன் கார்த்தீபன் ஊடக நிறுவன மொன்றின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஒலிவாங்கியை ஊடக சந்திப்பில் வைத்தது யார்? என அங்கிருந்த ஊடகவியலாளர்களுடன் முரண்பட…

  17. ஊடகவியலாளருக்கு எதிராக,வவுனியாவில் போராட்டம்… August 26, 2019 வவுனியா வடக்கில் கடந்த சில வருடங்களாக அரச ஊழியர்களையும், பொது அமைப்புக்களின் நிர்வாகத்தினரையும் ஊடகம் என்னும் போர்வையில் அச்சுறுத்தி வருவதாக அரச ஊடகம் ஒன்றில் பிரதேச ஊடகவியலாளராக உள்ள ஒருவருக்கு எதிராக நெடுங்கேணி பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் 11 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றுள்ளது. பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளரை உடன் நிறுத்து, எமது பிரதேசத்துக்கு தகுதியான ஊடகவியலாளரை நியமி,அரச ஊடகத்திலிருந்து நிறுத்து, எமது பிரதேசத்தில் ஊடக தர்மத்தை பேணும் ஊடகவியலாளர் வேண்டும் என்ற கோசங்களை எழுப்பி போராட்டகாரர்கள் கலந்து கொண்டனர். போராட்ட…

  18. தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட, பாலித தெவரப்பெரும நீதிமன்றில் முன்னிலை! மத்துகம பிரதேசத்தில் உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை புதைக்க தடைவிதித்த தோட்ட நிர்வாகத்தை எதிர்த்து, சடலத்தை அடக்கம் செய்த விவகாரத்தில் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். குறிப்பிட்ட மயானத்தில் சடலங்கள் புதைக்கக்கூடாதென தோட்ட முகாமையாளர் தெரிவித்த முறைப்பாட்டின் அடிப்படையில், தெபுவன பொலிஸாரால் மத்துகம நீதிமன்றத்தின் ஊடாக சடலங்களை புதைக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை மீறி, சடலத்தை புதைத்தமையினாலேயே அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி அழைக்கப்பட்டுள்ளார். அண்மையில் மத்துகம பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில், பல வருடங்களாக உழை…

  19. வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியன் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எதிர்த்துப் போராடி மடிந்தவராவார்.இவரின் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து உலகில் வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளமை இவரின் வீரத்திற்கு சான்றாகும்.இந்நிலையில் வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது.வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந…

  20. பௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அதே நேரத்தில் ஏனைய மதங்களையும் அரவனைத்து செயற்பட வேண்டும் இதனை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் அதற்காக நான் என்னை எந்த நேரத்திலும் அர்ப்பணித்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்ததாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மத நல்லினக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் காரியாலத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டிரு…

    • 2 replies
    • 534 views
  21. நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் ; வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணை முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டிருக்கின்றனர். மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியால் பாரிய புத்தர் சிலை ஒன்று நாட்டப்பட்டு பிள்ளையார் ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்கு சென்ற மக்களோடு முரண்பட்ட நிலையில் குறித்த இடத்திலேயே அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிசாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந் நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இன்னமும் வர்த்தமான…

  22. சஜித் வருவது எனக்கு விருப்பம் – மஹிந்த எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிடுவாராயின் அதனை தான் மிகவும் விரும்புவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை தற்போது சிறுபான்மையினரின் பெரும்பாலானவர்களின் ஆதரவு தமது கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/188479/

    • 3 replies
    • 755 views
  23. எஸ்.நிதர்ஷன் தமது மக்கள் எந்தளவு ஆதரவு கொடுக்கின்றனர் என்பதிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஆயுள் இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது மிகவும் கேள்விக் குறியாகவுள்ளதெனவும் இந்த அலுவலகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப் போவதில்லையெனவும் தெரிவித்தார். இந்தப் பணியகத்தினரால் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் கூட, அவர் குறித்து எந்த நடவடிக்கையையும் மேற…

    • 0 replies
    • 446 views
  24. 2019 ஓகஸ்ட் 26 திங்கட்கிழமை, பி.ப. 01:03 -எஸ்.நிதர்ஷன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை பார்த்து தமிழ் மக்கள் பயப்படவில்லையெனத் தெவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அவர் பத்து தலை இராவணன் போல வந்தாலும், தாம் அவரை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் கூறினார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பத் தலைவர் அமரர் நடராசா தங்கத்துரையின் 71ஆவது ஜனன தின நிகழ்வு, வல்வெட்டித்துறை - நெற்கொழு விளையாட்டு மைதானத்தில், நேற்று (25) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்…

    • 0 replies
    • 384 views
  25. அரசியல் நோக்கங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல், தங்களுடன் இணைந்து ஒரே நாடு என்ற அடிப்படையில் முன்னோக்கி செல்வதற்காக கைகோர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வட,கிழக்கு இளைஞர் யுவதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு கொழும்பு - தாமரைத் தடாக கலையரங்கில் நேற்று இடம்பெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தங்களிடம் நிலையான தீர்வு உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய பகுதிகளுக்கு வழங்கும் அனைத்து அபிவிருத்திப் பணிகளும், வடக்கு, கிழக்கிற்கும் வழங்கப்படும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவி…

    • 1 reply
    • 619 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.