Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லூரில் மௌன பேரணி தமிழர் பிரதேசங்களில் விகாரைகள் அமைத்தல் உட்பட பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை ஆட்சேபித்தும் இந்து ஆலயங்கள் பாதிப்புக்குள்ளாவதானால் அச்சமடையும் இந்துக்களின் மண உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் அமைதி வழியிலான மௌன பேரணி 3 ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் 10மணி வரை நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறவுள்ளது என இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் உபதலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்த பேரணி எந்தவொரு அரசியல் கட்சியும் சார்ந்தது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இது இந்து அமைப்புகளின் ஒன்றியம…

    • 22 replies
    • 2.5k views
  2. கிளிநொச்சி மாவட்டத்தில் 7900 குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் 7947 குடும்பங்களை சேர்ந்த 27564பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. அதனடிப்படையில் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் வறட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. கரைச்சியில் - 3001 குடும்பங்களை சேர்ந்த 10454 பேர். கண்டாவளையில் - 757 குடும்பங்களை சேர்ந்த3009 பேர். பூநகரியில் 3693 குடும்பங்களை சேர்ந்த 12629 பேர். பச்சிலைப்பள்ளியில் 496 குடும்பங்களை சேர்ந்த 1472 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்தவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. …

    • 2 replies
    • 659 views
  3. ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது ஊடக பயங்கரவாதத்தையே எதிர்கொண்டு வருவதாக அசை்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் கலாபூஷனம் மறைந்த க.ப. சிவத்தின் நினைவஞ்சலிக்கூட்டம் இன்று கண்டியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சம உரிமை சமத்துவத்தை இல்லாமலாக்குவதிலே இன்று அதிகார வர்க்கத்தின் காலம் சென்றுகொண்டிருக்கின்றது. இதனால்தான் தேவையில்லாத பிரச்சினைகள் சர்ச்சைகள் கலவரங்களில் நாங்கள் மாட்டிக்கொள்கின்றோம். அத்துடன் அனைத்து ஆயுதப்போராட்டங்களுக்கும் அடிப்படைக்காரணமாக இருந்திருப்பதும் அந்த இடங்களில் அதிகாரவர்க்கம் மற்றவர்களின் சமத்துவம் சம உரிமையை இல்லாமலாக்க முற்படுவதில…

    • 0 replies
    • 345 views
  4. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பம்! நாடளாவிய ரீதியில் 2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்று வருகிறது இதற்கமைய அனைத்து மொழி பாடசாலைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு இந்த பரீட்சைகள் ஆரம்பமாகின. பரீட்சைகளுக்கு முன்னர் மாணவர்கள் சோதனையிடப்பட்டதுடன், பாடசாலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீச்சைக்கு சமூகமளித்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். இம்முறை நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இதன்படி கு…

    • 1 reply
    • 493 views
  5. அல்லாஹ்வின் பெயரால் ஊட்டப்படும் இந்த சிந்தனை உணர்வு போதையை விடவும் பயங்கரமானது என தேசியப் பட்டியல் உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். போதையை ஏற்றிக் கொண்டவருக்கு தனது தாய் தந்தையை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாது. நல்லது கெட்டது விளங்க மாட்டாது. நன்மை தீமை தெரியாது. ஒரு கோடிப் பேரை கொலை செய்தாலும் அதனை ஒரு புனிதமான செயலாகவே கருதுவார். இவ்வாறு கொலை செய்ததற்காக தான் சுவர்க்கத்துக்கு செல்வதாக கருதிக் கொள்கின்றார். இதுபோன்ற பயங்கரவாத சிந்தனையை இல்லாதொழிக்காது இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது எனவும் தேரர் குறிப்பிட்டார். ராஜகிரியவில் உள்ள “சந்தகம் செவன” பௌத்த மத்திய நிலையத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்த…

    • 5 replies
    • 862 views
  6. திரைமறைவில் கைக்கோர்த்துள்ள மைத்­தி­ரி - சஜித்: அதி­ருப்தி தரப்­புக்கள் ஒன்று கூடும் வாய்ப்பு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோரின் கூட்டில் பல­மான மூன்­றா­வது அணி­யொன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் திரை­ம­றைவில் இடம்­பெற்று வரு­வ­தாக இரு­த­ரப்­பி­லு­முள்ள நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறிய முடி­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாஸ கள­மி­றக்­கப்­ப­டாத பட்­சத்­திலும், பொது­ஜன முன்­ன­ணிக்கும், சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை தோல்­வி­ய­டையு…

    • 1 reply
    • 404 views
  7. இலங்கையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறை அதிகாரி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காலி - அம்பலங்கொடை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறைச்சாலை பிரதான அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை ஆறு மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக…

  8. மன்னாரில் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு! In இலங்கை August 1, 2019 10:25 am GMT 0 Comments 1125 by : Dhackshala மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு மாவட்டச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்றது. இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட 104 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நியமனக் கடிதங்களை மாவட்ட அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்த…

    • 3 replies
    • 471 views
  9. குடிவரவு குடியகல்வு அதிகாரியாக மட்டக்களப்பைச் சேர்ந்தவர் நியமனம்! மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார். களுவாஞ்சிகுடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தினை சேர்ந்த திருச்செல்வம் விநாயகமூர்த்தி என்பவரே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி பயின்றவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதிலும் தமிழர் ஒருவர் இவ்வாறான பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். http://athavannews.com/குடிவரவு-குடியகல்வு-அதிக/

    • 1 reply
    • 796 views
  10. யாழ்.பேருந்து நிலையத்தில் மோதல்: நடத்துனர் படுகாயம் – மூவர் கைது In இலங்கை August 3, 2019 10:00 am GMT 0 Comments 1144 by : vithushan யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தையடுத்து தாக்குதலை நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து நிலையத்துக்குள் அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்பவர் சிலர் தமது வாகனத்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்ல முற்பட்டனர். அதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுமதிக்கவில்லை. …

    • 2 replies
    • 657 views
  11. இந்துக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் – மைத்திரி, ரணில், மோடிக்கு அவசரக் கடிதம்! In இலங்கை August 3, 2019 8:37 am GMT 0 Comments 1355 by : Dhackshala வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்து அமைப்புக்களின் ஒன்றியம் அவசரக்கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அந்த அமைப்பினால் அவசரக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் வடக்கு மற்றும்…

    • 14 replies
    • 1.5k views
  12. மாவை சேனாதிராஜா, சிறிதரன் மற்றும் சரவணபவன் ஆகியோரின் முகத்திரைகளை கிழித்த நாமல் ராஜபக்ஷ!! By nadunadapu - August 3, 2019 0 43 எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மைப்பற்றி விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, எம்மீது சேறுபூச விளைந்தால் ஒவ்வொரு தனி நபர்கள் பற்றிய பூரண விபரங்களையும் வெளியிட்டு தமிழ் மக்களின் முன் உங்களின் மு…

    • 7 replies
    • 1.6k views
  13. தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கு மக்களை ஏமாற்றுகின்றனர் – வியாழேந்திரன் In இலங்கை August 3, 2019 10:32 am GMT 0 Comments 1035 by : Dhackshala தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கிழக்கு மக்களை ஏமாற்றுவதே நிதர்சனமான உண்மையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார். ஆதவனின் நிலைவரம் நிகழ்ச்சியில், தொலைப்பேசியூடாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கில் இணக்க அரசியல் என்ற போர்வையில் தஞ்சமடைந்த அரசியலையே மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் இணக்க அரசியல் என கூறுகின்றோம். அவர்…

    • 5 replies
    • 719 views
  14. கல்முனை தமிழ் மக்களை சொந்த மக்கள் போன்று செயற்பட்டுவந்த மர்ஹூம் மன்சூருக்கு கெளரவம் செய்ய விரும்பினால் தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சேனராஜா சமரநாயக்க, ஏ.ஆர்.மன்சூர் மற்றும் வீ.கே. இந்திக்க ஆகியோர் மீதான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மர்ஹூம் மன்சூர் கல்முனையில் தமிழ் பிரதேசங்களும் தங்கள் பிரதேசம் என நினைத்து அவிருத்திசெய்து வந்தார். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கல்முனையில் தமிழ், பிரதேசம் என்றும் முஸ்லிம…

  15. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் கிழக்கு மாகாண ஆயுததாரியும் பல்கலை மாணவனும் கைது தடைசெய்யப்பட்ட ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு அந்த அமைப்பு குறித்து ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பிரசாரம் செய்த மாணவர் ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளாளர் தெரிவித்துள்ளார். முகமது நவ்ஷாத் மற்றும் முகமது இஸ்மாயில் என்ற 25 வயதுடைய இருவரும் அனுராதபுரம் மற்றும் வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசார…

  16. யாழில் வழிப்­ப­றிக்­கொள்­ளை­யர்­க­ளின் அட்­ட­கா­சம் ;அச்சத்தில் மக்கள் யாழ்ப்­பா­ணம் – வழுக்­கை­யாற்­றுப் பகு­தி­யில் வழிப்­ப­றிக்­கொள்­ளை­யர்­க­ளின் அட்­ட­கா­சம் அதி­க­ரித்­துள்­ளது என குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. அந்த வீதி­யில் நிலை­கொண்­டி­ருக்­கும் கொள்­ளை­யர்­கள் வீதியில் செல்­ப­வர்­களை வழி­ம­றித்து, பணம், நகை­க­ளைப் பறிக்க முற்­ப­டு­கின்­ற­னர். நேற்­று­முன்­தி­னம் காலை தனி­மை­யில் சென்ற பெண்­ணொ­ரு­வ­ரின் தங்­கச் சங்­கிலி, தாலிக்­கொடி என்­பன அறுத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பா­ணம், ஆனைக்­கோட்­டைச் சந்­தி­யிலிருந்து வட்­டுக்­கோட்­டைச் சந்­தி­வரை செல்­லும் வீதி­யில் உள்ள வழுக்­கை­யாற்­றுப் பகு­தி­யில் இவ்வாறு தொடர்ச்­சி­யாக வழிப்­ப­றிக்­கொள்­ளை…

  17. "பெளத்தம் முதன்­மை­யா­னது என்­பதை ஒருபோதும் ஏற்­க­மாட்டோம்": மாவை சேனா­தி­ராசா எம்.நியூட்டன் பெளத்­த­மதம் முதன்­மை­யா­னது என்­பதை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம் எனத் தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா இந்­தியா, இலங்­கையில் உள்ள இந்து மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்­க­ளுக்­கி­டை­யி­லான சமத்­து­வத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்டும் எனத் தெரி­வித்தார் இந்து அமைப்­பு­களின் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் நல்லை ஆதின முன்­றலில் இடம்­பெற்ற போராட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரி­விக்­கையில், பெத்­த­மத ஆதிக்…

  18. தனியார் – அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 6பேர் பலி -52 பேர் படுகாயம் August 4, 2019 காலி வீதி, களுத்துறை வடக்கு , வஸ்கடுவ பகுதியில் இன்று அதிகாலை தனியார் – அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 3ஆண்கள், 3பெண்களாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 43ஆண்கள், 8பெண்கள், ஒரு குழந்தை என 52 பேர் படுகாயமடைந்துள்ளனர். இ.போ.ச பேருந்து, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #பேருந்துகள் #விபத்து #களுத்துறை -மயூரப்பிரியன் http://globaltamilnews.net/2019/128025/

  19. முருங்கன் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை கட்டிடம் திறந்து வைப்பு : August 4, 2019 வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 11 உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துவதற்காக நானாட்டான் பிரதேச சபையும் உள்வாங்கப்பட்டுள்ளது. அதற்கு இணங்க உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துகின்ற நிறுவனமான ஆசிய பவுண்டேஸன் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் , நானாட்டான் பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடனும் முருங்கன் நகர் பகுதியின் நீண்ட நாள் மக்களின் தேவையாக காணப்பட்ட பொதுச்சந்தை கட்டி முடிக்கப்பட்ட நிலையில நேற்று சனிக்கிழமை மாலை (3) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, பிரதேச சபையின் செயலாளர், உறுப்ப…

  20. இன்னொரு தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை – இராணுவப் பேச்சாளர் சிறிலங்காவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏதும் கிடையாது என்றும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதரகம் தமது நாட்டுக் குடிமக்களுக்கு விடுத்துள்ள இரண்டாம் நிலை எச்சரிக்கை குறித்து, கருத்து வெளியிட்டுள்ள அவர், “மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை எமக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. அவ்வாறான தகவல்கள் கிடைத்தால், அது குறித்து மக்களுக்கு அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, …

    • 1 reply
    • 251 views
  21. சிறிலங்கா அதிபர் தேர்தலில் மோதப் போகும் ரணில்- கோத்தா? இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்சவுமே போட்டியிடவுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐதேக தமது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரிலும், பொதுஜன பெரமுன தமது பங்காளிகளுடன் இணைந்து மற்றொரு கூட்டணியை அமைத்தும், வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளன. ஐதேக கூட்டணியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோரின் பெயர்கள் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற…

    • 0 replies
    • 279 views
  22. பட்டிகலோ கம்பஸ் நிறுவனத்தை எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடியாது. அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கூட எமது நிறுவனத்தை கைப்பற்ற முடியாது. எனினும் அரசாங்கத்துடன் இணைந்து 50;50 என்ற அடிப்படையில் நிர்வாகத்தை பங்கிட நாம் தயார் என பட்டிகலோ கம்பஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கிழக்கு ஆளுநருமான எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலை அடுத்து பட்டிகலோ கம்பஸ் நிறுவனம் மீதும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலைய…

    • 1 reply
    • 354 views
  23. ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் ஈரோஸ் கட்சி இணைந்து கொண்டுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், துஸ்யந்தன் தலைமையிலான ஈரோஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்காக ஈரோஸ் அமைப்பினரும் வன்னியில் கடும் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மாவட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு நேரடி வெற்றியாளர் உட்பட 11 ஆசனங்களை பெற்றிருந்தது. அதில் ஈ.பி.ஆர்.எல்.எப் தனக்கு கிடைத்த ஆசனங்களில் வவுனியா வடக்கில் தமிழ்செல்வன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் சசி…

    • 1 reply
    • 768 views
  24. தனது முதலாவது படத்தை அனுப்பியது ‘ராவணா 1’ செய்மதி இலங்கையின் முதலாவது செய்மதி ராவணா-1 சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து தனது முதலாவது படத்தை அனுப்பிவைத்துள்ளது. ஆர்தர் சி கிளார்க் நிலையத்தைச் சேர்ந்த, இலங்கை ஆய்வு விஞ்ஞானிகளான தரிந்து தயாரத்ன, துலானி சமிக்கா ஆகியோரால், ஜப்பானின் கையூஷூ தொழில்நுட்ப நிறுவனத்தினால் இந்த செய்மதி, வடிவமைக்கப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் செயற்படக் கூடிய இந்தச் செய்மதி இலங்கை மற்றும் அயல் நாடுகளைப் படம் பிடிக்கக் கூடிய வசதிகளும் உள்ளன. இது 11.3 செ.மீ x 10 செ.மீ. x 10 செ.மீ அளவுடையதும், 1.05 கிலோ எடையுள்ளதும் ஆகும். இந்தச் செய்மதி கிழக்கு வேர்ஜினியா கடற்கரையில் உள்ள நாசாவின் வலூப் ஏவுதளத்தில் இருந்து அன்ராரஸ் ஏவுகணை மூலம் சர்வ…

  25. ஆயுத கொள்வனவு செய்தபோதும் பொருளாதாரத்தை எமது அரசாங்கம் பலமாகவே வைத்திருந்தது – சந்திரிக்கா In இலங்கை August 3, 2019 9:42 am GMT 0 Comments 1112 by : Dhackshala 3 தசாப்தக் கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, முழுமையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்தும் நாட்டின் பொருளாதாரத்தை தமது அரசாங்கம் பலமான நிலையிலேயே வைத்திருந்தாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீரழித்துவிட்டே, கடந்த கால தரப்பினர் ஆட்சியை ஒப்படைத்தார்கள். 2005 ஆம்…

    • 1 reply
    • 420 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.