Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குளவிகள் கொட்டியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி ; வாகரையில் சம்பவம் மட்டக்களப்பு வாகரையில் இடம்பெற்ற குளவித் தாக்குதலில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் நிலைய வளாகத்தை அவர் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த கருங்குளவிகள் பொலிஸ் உத்தியோகத்தரின் தலையிலும் மார்பிலும் கொட்டியுள்ளன. உடனடியாக மயக்கமடைந்த அவர் அருகிலுள்ள வாகரை மாவட்ட வைத்தியசாலையில் சேர்ப்பிக்கட்டார். எனினும், கருங்குளவித் தாக்குதலுக்குள்ளாகி சுமார் 45 நிமிட நேரத்தில் அவர் உயிர் பிரிந்து விட்டது. அவரைப் பரிசோதனை செய்யதபோது அவரது தலையில் 4 இடங்களிலும் மார்பில் ஒரு இடத்திலும் …

    • 2 replies
    • 805 views
  2. சிறிலங்காவில் கால் வைக்கிறது சீன எண்ணெய் நிறுவனம் சினோபெக் (Sinopec) எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம், சிறிலங்காவில் எரிபொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்ளும் வகையில், இந்த எண்ணெய் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சினோபெக் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இந்த நிறுவனம் செயற்படவுள்ளது. இந்த நிறுவனத்தினால் கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. http://w…

    • 3 replies
    • 646 views
  3. இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா! அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டுமென இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார். அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “சீனா, இலங்கை போன்ற நாடுகள் மேற்கத்திய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை. எனவே அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய தலையீடுகள் சிக்கல்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர ஒருபோதும் நன்மைகளைத் தராது. சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடி…

  4. தமி­ழர்­கள் புலி­கள் போல் உறு­மிக்­கொண்டு திரள்­வ­தை­யும், சிங்­கள – பௌத்த மக்­களை அச்­சு­றுத்­து­வ­தை­யும் உடன் நிறுத்த வேண்­டும். இது சிங்­கள – பௌத்த நாடு என்­பதை அவர்­கள் கவ­னத்­தில்­கொள்ள வேண்­டும். கன்­னி­யாப் பிரச்­சினை தொடர்­பில் முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரம் சிங்­கள – பௌத்த மக்­க­ளுக்கே இருக்­கின்­றது. இவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பின் பொதுச் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­தார். கன்­னி­யா­வில் அமை­தி­வ­ழி­யில் போரா­டிய தமிழ் மக்­கள் மீது சிங்­க­ள­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல் தொடர்­பில் கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: பிரச்­சி­னை­க­ளுக்­குப் போராட்­டம் என்ற பெய­ரில் அச்­சு­றுத்­தல் விடு…

    • 2 replies
    • 717 views
  5. தொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் மரணதண்டனை: ஜனாதிபதி நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலேத ரஜமகா விகாரையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையின் பல தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் சுமார் 250 பேர் உயிரிழந்ததுடன் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர…

  6. July 17, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனவும், மீரிகம பிரதேசத்தில்…

  7. நுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்களால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட பகுதியில் உள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலநருவ பகுதியைச் சேர்ந்த தேரர் ஒருவரினால் இந்த பெளத்த கொடி ஏற்றபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தோட்ட மக்களால் கந்தபளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. பொலிஸ் அத்தியட்சகர், நுவரெலியா பிரதேச சபை தலைவர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கொடி அகற்றப்பட்டது. அதன் பின்னர்…

  8. July 17, 2019 A இனப் பிரச்சினைக்கு 2 வருடத்திற்குள் தீர்வு என்றும், பெரும்பான்மை பலம் தமக்கு இல்லை என்றும் பிரதமர் கூறுவது வேடிக்கையானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமா டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் இந்தக் கருத்துக்களில் ஒருவித உண்மையும் இல்லை என்பதுடன் வெறுமனே தேர்தலுக்கான வாக்குகளை தாம் பெற்றுக் கொள்வதே நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதமர் …

  9. தமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம் கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடுநீர்த்தாக்குதல் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை ஆதரித்த பின்னர் ஏன் சிவனேசன், சிறிதரன், யோகேஸ்வரன் கன்னியாவுக்கு சென்றார்கள் ?, அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா ச…

    • 0 replies
    • 796 views
  10. வறட்சியினால் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ! நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் நிலவும் வறட்சி காரணமாக 5 இலட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, புத்தளம், குருணாகல், வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, கண்டி, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை, அனுராதபுரம், அம்பாறை, திருகோணாலை மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 1,59,123 குடும்பங்களைச் சேர்ந்த 5,67,662 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மொத்தமாக 109 குடும்பங்களைச் சேர்ந்த 420 …

  11. கடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக் குள்ளாக்கப்பட்டவர்கள் எனக் கருத்த வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள ரஞ்சன் ராமநாயக்க, பௌத்த துறவிகள் கஞ்சுா புகைப்பது தொடர்பான காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோருவதற்கு 24 மணி நேரம் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இந்தக் காணொளியை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். நேற்று இந்தக் காணொளியை வெளியிட்டு சுமார் 10 நிமிடங்களில் முகநூலில் இருந்து அகற்றினார். இன்று மீண்டும் அதே காணொளியைப் பதிவிட்டுள்ளார். https://newuthayan.com/story/16/தேரர்கள்-தொடர்பில்-மற்றொ.html

  12. இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்ட தேவதாசன் வெலிக்கடைச் சிறையில் உண்ணாவிரதம் ஆயுள் தன்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதிக்குமாறு கோரியுள்ளார் இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு தமிழ் அரசியலை முன்னெடுத்தவரும், இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கனகசபை தேவதாசன், இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 62 வயதுடைய தமிழ் அரசியல் கைதியான தேவதாசன், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள்த் தன்டனைக்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு வசதியளிக்குமாறு கோரியே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி…

    • 0 replies
    • 406 views
  13. 46 வருடங்களுக்கு முன்னர் 10 வயதான தன்னையும் தனது இரு நண்பர்களையும், சுவிட்சர்லாந்தில் பிரஜை ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக் கூறி 56 வயதான ஒருவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் நீர்க்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் குடியுரிமை உள்ள சுவிட்சர்லாந்து பிரஜையான தற்போது 80 வயதான நபர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறினர். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ள 56 வயதான நபரும் சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் நிலையில், கடந்த வருடம் இலங்கைக்கு வந்து இங்கு தங்கியிருக்க ஆர…

  14. July 16, 2019 அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய, முஸ்லிம் அமைச்சர்கள், இந்த வாரம் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கமாட்டார்கள் என பாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். அடுத்த வாரமே இவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்தவொரு அமைச்சரும் தொடர்பில்லாததால், அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதில் பிரச்சினைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/126638/

  15. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சிங்கப்பூரில் உள்ள அவர் இருதய அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து குணமடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60521 கோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுனவினவ…

    • 1 reply
    • 614 views
  16. வவுனியாவிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாகனத்தில் சாவகச்சேரி பொலிசார் கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த பொலிசார் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். வவுனியா கல்கமுவ பகுதியிலிருந்து நேற்று வாகனம் ஒன்றில் சிலர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்றுள்ளனர். சாவகச்சேரிப்பகுதியில் வைத்து பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான பொருளினை அவதானித்தபோது அதனுள் 4கிலோ 400கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன்போது வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்து விசாரணகைளை மேற்கொண்ட பொலிசார் குறித்த நபர் வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் வன்னிந…

    • 2 replies
    • 656 views
  17. கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுப்பு! நெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு மாநகர சபை இணைந்து மேற்கொள்ளும் ‘CAR FREE ZONE’ என்ற கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் மற்றும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்க ஆகியோர் பங்குபற்றியுள்ளனர். இலங்கையில் முதல் தடவையாக கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்திருந்தது. கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் இன்று இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு காரணமாக கொழும்பு – குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்பட…

  18. "தமிழர் சிங்களத்தையும் சிங்களவர் தமிழையும் கற்பதால் இனப் பிரச்சினையை ஒழிக்க முடியும்" (செ.தேன்மொழி) சிங்களவர்கள் தமிழை கற்பதினாலும் தமிழர்கள் சிங்களத்தை கற்பதினாலும் எதிர்காலத்தில் இனப் பிரச்சினையைத் தடுக்கமுடியும் எனத் தெரிவித்த இந்து சமயவிவகார, தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், நான் பௌத்தன், நான் இந்து, நான் முஸ்லிம், நான் கிறிஸ்த்தவன் என்று பெருமைப்படுவதை விட நாங்கள் அனைவரும் இலங்கையர் என்று பெருமை கொள்ளவோமானால் நாட்டில் இனப்பிரச்சினை இல்லாது போகும் என்றும் குறிப்பிட்டார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு…

    • 1 reply
    • 465 views
  19. கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை ; சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் 50 மில்லியன் ரூபா வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனாலே இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லையென வினவிய போதே இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உண்மையிலே இரண்டு மாதங்களுக்கு முன்பாக அமைச்சர் கபீர் காசிம் எனக்கு நேரடியாக ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதாவது வவுனியா மாவட்டத்திலே வீதி புனரமைப்பு செய்ய வேண்டிய முன்னுரிமை அடிப்படையில் வீ…

  20. சிங்களவர்கள் இல்லாத இடத்தில் பௌத்த மதம் திணிக்கப்படுகிறது – சிறிதரன் சிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தின் இருமாடி வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இந்து ஆலயங்கள் அகற்றப்பட்டு அங்கே பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. பௌத்தர்கள் இல்லாத வடக்கு கிழக்கில் புதிதாக விகாரைகள் அமைக்கப்படுகின்றன. பெளத்த மதம் திணிக்…

  21. July 15, 2019 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தமிழ் அரசியல் தலைவர் அமிர்தலிங்கமும் சந்தித்துக் கொண்டதாகவும் பிரபாகரனை அமீர் ஊக்கப்படுத்தியதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்களே இப்போது அவரைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் தம்மால் புலிகளின் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார். வலி.மேற்குப் பிரதேச ச…

  22. பிரித்தானியா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருந்து, சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கழிவுப்பொருட்களை இலங்கைக்கு கொணர்ந்து அகற்றும் பாரிய வர்த்தகம் ஒன்று குறித்த விபரங்களை இலங்கை சுங்க அதிகாரிகள் திரட்டியுள்ளனர். நாட்டின் சுற்றுச்சூழல் சட்டங்களில் தளர்வு ஏற்பட்டுள்ளதால், சில நாடுகள் இலங்கை போன்ற வளரும் நாடுகளை கழிவுகளை அகற்ற தேர்வு செய்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள சர்வதேச கொள்கலன் முனையத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுக்கூளங்களை கொண்ட 102 கொள்கலன்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 8 ஆம் திகதி ஊடகங்களுக்கு முன்பாக இந்த கொள்கலன்களை திறக்க சுங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அது நடைபெறவில்லை. கொழ…

    • 0 replies
    • 439 views
  23. அதிகாரப் பகிர்வை வழங்க தாமும், தமது கட்சியினரும் அர்ப்பணிப்புடன் உள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதிகாரப் பகிர்வை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாட வேண்டும். குறிப்பாக, சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய தரப்பினரால் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மாகாண மட்டத்தில் மட்டுமல்லாது, உள்ளுராட்சி மன்றங்கள் ரீதியாக அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்தளிப்பது எ…

    • 4 replies
    • 858 views
  24. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியில் கூட, யாழ். வலி வடக்கில் பல ஆலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், யாழ் வலி வடக்கில் பல ஆலயங்கள் திறக்கப்படாமலும் ஒளியேற்றப்படாமலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தின்போது, போராடியே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தோம். ஜனாதிபதிக்காக மக்களிடம் வாக்கு கேட்டு நாங்களே அவரை தெரிவு செய்தோம். ஆனால் அவரை ஆட்சிக்க…

    • 0 replies
    • 516 views
  25. பாலியல் வதை முகாம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தபட்டிருக்கும் எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக களமறங்கவிருக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு முறைப்பாட்டின் தமிழாக்கம் இது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரின் பணிப்புரையால் மேற்கொள்ளப்பட்டதும், அவரின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டதுமான மோசகரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இந்த முறைப்பாட்டின் தமிழாக்கம் 107 பக்கங்களைக் கொண்டது. இந்த வழக்கைத் தொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.