Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க April 25, 2025 ‘ஷொப்பிங் பையுடன்’ புத்தளத்துக்கு வந்தவர்கள் இன்று பத்துக் கப்பல்களை வாங்கும் நிலைக்கு வந்துள்ளனர். டக்ளஸ் தேவானந்தா அனைத்து அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் எவரையும் பாரபட்சம் பார்க்கமாட்டோம். அனைத்து விடயங்களையும் விசாரிப்போம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது பிரச்சனைக்கு தீர்வு காண்பதே உண்மையான அரசியல். உங்களுக்குத் தெரியும் இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் அதிகாரம் படைத்…

      • Thanks
      • Like
    • 7 replies
    • 608 views
  2. கீரிமலையில் ஜனாதிபதி மாளிகையில் ஆய்வு – எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு! Published By: VISHNU 25 APR, 2025 | 09:02 PM கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை வெள்ளிக்கிழமை (25) பார்வையிடும் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டிடத்தின் எதிர்கால பயன்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இந்த விஜயத்தில், நகர அபிவிருத்தி, கட்டுமான மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு. அனுர கருணாதிலக, கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயர் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கட்டிடத்தை சமூக மற்றும் …

  3. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ள மாட்டாது அதுமட்டுமல்ல அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ஏக்கிய ராஜ்ய முறைமையை இலங்கை தமிழ் அரசு கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதாக அண்மைய தேர்தல் பரப்புரை கூட்டங்களில் எதிர்தரப்பினரால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒற்றையாட்சியை ஆதரிக்கிறது என்னும் கருத்தை நாம் தெளிவாக மறுத்துள்ள போதும் சிலர் பொது வெளியில் தொடர்ந்து பேசுகின்றனர். முத…

      • Like
      • Thanks
    • 9 replies
    • 632 views
  4. தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவு சதுக்கத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு, அவரது சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. https://athavannews.com/2025/1429571

  5. துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்! வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சமூக ஆர்வலரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான டான் பிரியசாத் (Dan Priyasad) உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி, சாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயம…

  6. கிழக்கு பல்கலையில் நிதி மோசடி தொடர்பாக விசாரணை; உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தல்..! கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலையடுத்து உயர்கல்வி அமைச்சு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கடித மூலம் அறிவித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிய மாகாபொல புலமைப்பரிசில், விளையாட்டுத்துறை, ஆய்வு மகாநாடுகள், மற்றும் அபிவிருத்திகளில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் விரிவுரையாளர்கள் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்த முறைப்பாட்டுக்கமைய ஜ…

  7. வடக்கில் நடக்குக்கும் இணைய குற்றங்களுக்கு வடக்கிலேயே தீர்வு adminApril 26, 2025 சமூக வலைத்தளம் உள்ளிட்ட இணையத்தளங்களில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு இனி விரைவான தீர்வை வடக்கு மாகாண மக்கள் பெற முடியும் என பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். வடக்கு மாகாணத்திற்கான கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணம் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பதில் காவல்துறை மா அதிபர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் பணம் சார்ந்த பிரச்சினைகள், கணக்குகளை முடக்குதல், சமூக வலைத்தள அவதூறுகள், சமூக வலைத்தளங்கள் ஊடான பாலிய…

  8. Published By: DIGITAL DESK 3 10 APR, 2025 | 04:31 PM நாட்டில் நுளம்புகளால் பரவும் சிக்கன்குன்யா நோய் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத்துக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளதாக என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன் தெவித்துள்ளதாவது, சிக்குன்குன்யா வைரஸ் முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு தன்சானியாவில் கண்டறியப்பட்டது. இந்நோய் 1960 ஆம் ஆண்டு இலங்கைக்கும் பரவியது. உலகளாவிய ரீதியில் 115 நாடுகளுக்கு சிக்கன்குன்யா நோய் பரவியுள்ளது. 2 முதல் 3 நாட்கள் வரை நீடித்த காய்ச்சல், மூக்கு மற்றும் கைகளில் நிறமாற்றம், தோல் வெடிப்புகள், பல ஆண்டுகளாக நீடிக்கும் மூட்டு வலி மற்றும் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை இந்நோய்க்கா…

  9. 19 JAN, 2025 | 05:09 PM மன்னார் நீதிமன்றத்துக்கு முன் கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் நடுக்குடா கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பின்னர், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. இந்நிலை…

  10. Published By: VISHNU 26 APR, 2025 | 01:34 AM ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், படுகொலைகளில் ஈடுபட்டோர், ஆட் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாரும் இம்முறை தப்பிக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. நாம் சரியான விடயத்தை முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் சட்டத்தில் இருந்த ஓட்டைகளை பாவித்து யாரும் தப்பித்தார்கள் என்றால் அது இனி வரும் காலங்களில் இடம்பெற முடியாது. என வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுதாவளை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கான காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெ…

  11. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பானை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர சம்பத் த…

  12. Published By: VISHNU 26 APR, 2025 | 01:21 AM ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தடையுத்தரவு கோரிய வவுனியா பொலிசாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸ்நாயக்கா சனிக்கிழமை (26) மாலை 4 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தரவுள்ளனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு கோரியிருந்தனர். இதனை கவனத்தில் எடுத்த மன்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வது மக்களின் ஜனநாயக உ…

  13. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார். முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து, ‘சிறி தலதா வழிபாடு’ மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். பின்னர், அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து, சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அஸ்கிரி பீடத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக கடமையாற்றும் வண,உருளேவத்த தம்மரக்கித நாயக்க தேரரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின்…

  14. கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – வௌியான முக்கியத் தகவல். கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் வு-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிய வந்துள்ளது. இவர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்ப…

  15. யாழ் மாநகரசபை மேயர் வேட்பாளர் கபிலனுடனான செவ்வி தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரங்களின் ஏன் அதிக அக்கறை காட்டுகிறது? ஜனாதிபதி தேர்தல், பா.மன்ற தேர்தலில் ஏற்பட்ட அநுர அலை உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் ஏற்படுமென நினைக்கிறீர்களா? தேர்தல் காலங்களின் தேசியமக்கள் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் உண்டு??? ஊழலை ஒழிப்போம் எனும் போர்வையில் அரசியல் பழிவாங்கலை தேசிய மக்கள் கட்சி செய்கிறதா? உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தெரிவு எப்படி இடம்பெறுகிறது? என் பி பிக்கும் ஜே வி பிக்கும் என்ன வித்தியாசம்? விரிவுரையாளாராக இருந்த நீங்கள் ஏன் அரசியலில் புகுந்துள்ளீர்கள்? யாழ் மாநகரசபை குறைபாடு…

    • 0 replies
    • 179 views
  16. Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:11 PM யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம். இது ஆபத்தானது. எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக சித்தமருத்துவ பீட கற்கை நெறி தமிழ்மொழியில் தொடரவேண்டும். இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் பல சான்றோர். பெருமக்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. எமது பிரதேசப் பல்கலைக்கழகம் …

  17. 24 APR, 2025 | 09:56 PM (இராஜதுரை ஹஷான்) ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் இன்று ஊழலற்ற வகையில் நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்று எமக்கு குறிப்பிடுகிறார்கள். ஊழல் மோசடியான அரச நிர்வாகத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். மீண்டும் அவ்வாறான முறையற்ற நிர்வாகத்தை மக்கள் தோற்றுவிக்கமாட்டார்கள் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். தங்காலை பகுதியில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் எளிமையாக இருப்பதையும் எதிர்கட்சியினர் இன்று விமர்சிக்கிறார்கள். கடந்த…

  18. 25 APR, 2025 | 05:15 PM முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நேற்றைய தினம் வடமாகாணத்தில் கடந்த 15 வருடங்களாக வேருன்றியுள்ள வடமாகாணத்தை சாரத ஒரு அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகரன் தேர்தல் பிரச்சார வேலையில் ஈடுபடுவதற்கு முல்லைத்தீவிற்கு சென்றிருந்தார். முல்லைத்தீவிலே கேப்பாபிலவிற்கு சென்று கடற்தொழில் அமைச்சர் என்ற வகையிலே மீன்பிடி அமைச்சர் என்ற வகையிலே, அவர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை வெளியில் கொண்டுவருவதற்கான முய…

  19. கனகராசா சரவணன் தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன், ஜே.வி.பி தமிழ் எம்.பி.க்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர். எனவே சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரையும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை எதிர்பார்க்க முடியாது. மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் என தமிழ் தேசிய கட்சி தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்தார். மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் களுவன்கேணியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை …

  20. 25 APR, 2025 | 11:19 AM தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) ஏற்பாட்டில், இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர்ஸ்தானியராலயத்தின் நிதி அனுசரணையுடன் பங்குபற்றல், பரிந்துரைத்தல், குரல் கொடுத்தல், வலுவூட்டல் (PAVE) எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான அணுகல் வசதி தொடர்பான ஆய்வு அறிக்கை வெளியீடு புதன்கிழமை (23) யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இச் செயற்பாடு PAVE செயற்திட்ட இளைஞர் குழுவின் ஒர் சமூக பரிந்துரை முன்னெடுப்பு முயற்சியாகும். ஆய்வறிக்கையின் முதற்பிரதியினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பெற்றுக்கொண்டு உரையாற்றுகையில், யாழ். மாவட்டத்தில் தேர்தல்களின் ப…

  21. Published By: DIGITAL DESK 2 25 APR, 2025 | 10:18 AM கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதால் வியாபாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். புதன்கிழமை (23) இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் இந்த நாசகார வேலையை செய்ததாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். தற்போது வெப்பமானது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. ஆகையால் மரங்கள் நிற்பதன் மூலம்தான் ஓரளவேனும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் கருத்தையும் மீறி மரத்தை வெட்டியதாக அவர்கள் குற்றம் சாட்டினர். சந்தையில் உள்ள மலசல கூடங்களும் பயன்படுத்த முடியாமல் மிகவும் அசுத்தமான முறையில் காணப்படுகின்றதாகவும் அவற்றினை சாவகச்சேரி பிரதேச சபையினர் சுத்தம் செய்வதில்லை என்றும் அவர்கள்…

  22. இந்த ஆண்டு 26 பேர் சுட்டுக்கொலை! [Thursday 2025-04-24 05:00] http://seithy.com/siteadmin/upload/gun-240425-seithy.jpg இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (22) வரையில் 112 நாட்களில், நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 14 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://seithy.com/listAllNews.php?newsID=332400&category=TamilNews&language=tamil

  23. ஸ்ரீ தலதா வழிபாடு; ஆரம்ப நிகழ்வுக்காக இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்! 16 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, இன்று காலை 7.00 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்பட்ட…

  24. செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் - தமிழ் தேசியப் பேரவை திட்டம் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை, எதிர்காலச் சந்ததியினருக்குக் கடத்தும் வகையில் செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படும். அத்துடன், தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என்று தமிழ் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது. உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பேரவை யாழ்.மாநகர சபைக்கான முன்மொழிவுகளை உள்ளிடக்கிய செயற்றிட்ட ஆவணத்தை நேற்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.ஸ்ரீகாந்தா ஆகியோரும் முன்னாள் வடமாகாண அமைச…

  25. துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் உயிரிழப்பு; மகன் படுகாயம்! மீத்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆணொருவரும், அவரது ஆறு வயது மகளும் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்களில் பயணித்த கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மீது அடையாளம் தெரியாத குழுவினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால், மோட்டார் சைக்கிளின் சாரதியான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகனும், மகளும் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, ஆறு வயது மகள் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.