ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
பயங்கரவாத சூழலை அமைத்துக்கொடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளே - அநுர (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாத சூழலை அமைத்துக்கொடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளே. இப்போது இது கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இறுதியில் இந்த பூதம் முஸ்லிகளையும் அழித்துவிட்டே முடிவுக்கு வரும் என்பதை மறந்துவிட வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பாராளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் நாற்காலியை தக்கவைக்கவும், அடுத்ததாக தான் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வேண்டும் என்ற கவிழும் உள்ளதுடன், ஜனாதிபதி மீண்டும் தான் ஜனாதிபதி ஆசனக்தில் அமர வேண்டும் என்ற ஆசையிலும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாது அரசியல் க…
-
- 0 replies
- 934 views
-
-
வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி வவுனியா-மன்னார் வீதி சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை பதினைந்து அடையாள அட்டை மற்றும் பல ஆவணங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சாளம்பைக்குளம் பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது பூட்டியிருந்த வீட்டிலிருந்து அச்சுப்பிரதி செய்து லெமிலன்ட் செய்யப்பட்ட பதினைந்து அடையாள அட்டைகள் மற்றும் சில ஆவணங்களை மீட்டெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பூவரசங்குளம் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். எனினும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப…
-
- 0 replies
- 464 views
-
-
பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை - பிரதமர் எச்சரிக்கை (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையில் உள்ள பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டாலும் இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இவர்கள் வேறு எந்த வழியிலும் மீண்டும் வரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பு ஒன்றினை விடுத்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர், புனித உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட பல உண்மைகள் விசாரணைகளில் வெளிவந்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்பினால் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந…
-
- 0 replies
- 427 views
-
-
தீவிரவாதிகளின் தற்கொலை குண்டு தாக்குதலால் மூடப்பட்டிருந்த கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி வரை ஆலயம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆலயத்துக்கு வருகை தரும் பெரிய பைகள் எதுவும் எடுத்து வர வேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளது. பொலிஸார், கடற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். https://newuthayan.com/story/15/கொச்சிக்கடை-அந்தோனியார்.html
-
- 0 replies
- 376 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இ.விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கே. மாயாதுன்னே தெரிவித்தார். இதற்கான வர்த்தமானியில் உயர்கல்வி அமைச்சர் கையொப்பமிட்டுள்ளார் என்றுத் தெரிவிக்கப்படுகிறது. பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற விரிவுரையாளராவார். https://newuthayan.com/s…
-
- 0 replies
- 268 views
-
-
நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் என அறிமுகம் செய்து , அவர்களிடமிருந்த விலைமதிப்பு மிக்க தொலைபேசிகளை சோதனையிட வேண்டும் என கூறி அவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். அது தொடர்பில் இளைஞர்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. அதே போன்று நேற்றுமுன்தினம் திருநெல்வேலியை அண்டிய பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த முதியவரை மோட…
-
- 0 replies
- 589 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ––––––––––––––––––––––––––––– அலரி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு – – பிறவ்ஸ் ––––––––––––––––––––––––––––– உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலினால் நாடு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்களும் காயமடைந்தோரும் பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளனர். அதுமாத்திரமின்றி, முஸ்லிம் சமூகமும் இதனால் பெரும் அதிர்ச்சிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளது. …
-
- 1 reply
- 970 views
-
-
சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு தௌஹீத் ஜமாத்தின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் May 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இது முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, சுண்டுக்குளி கல்லூரி அதி…
-
- 9 replies
- 1.8k views
-
-
யாழ்.பல்கலைகழக மாணவா்கள் இருவரின் விடுதலை தொடா்பாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தா்ஷன ஹெட்டியாராச்சிக்கும் பல்கலைகழக பேரவை உறுப்பினர்களுக்குமிடையில் உயா்மட்ட கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பாக இன்று பலாலியில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/120967/
-
- 0 replies
- 313 views
-
-
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் கடந்த 02ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டநிலையில் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் முன்னிலப்படுத்தப்பட்ட போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். . குறித்த நபர் தேசிய தௌஹீத…
-
- 0 replies
- 373 views
-
-
May 7, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பாடசாலையின் பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 474 views
-
-
தனிமையிலிருந்த மூதாட்டி கொலை; தெல்லிப்பளையில் சம்பவம் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மூதாட்டியின் வீட்டுக்கு இன்று காலை சென்ற உறவினர்கள், அவர் …
-
- 2 replies
- 675 views
-
-
அசாதாரண சூழலை பயன்படுத்தி யாழில் ஆயுதமுனையில் 3 இடங்களில் கொள்ளை May 7, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குண்டு வெடிப்பு அச்சத்தால் இரவில் மக்கள் வெளியே போக அச்சப்படுகின்ற நிலையில் அசாதாரண சூழலை பயன்படுத்தி புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி மூன்று இடங்களில் நேற்று திங்கட்கிழமை ஆயுதமுனையில் வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை-புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி பகுதியில் மூன்று வீடுகளில் 27 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பன ஆயுத முனையில் அபகரித்து செல்லப்பட்டுள்ளன. வடமராட்சி- புலோலி தெற்கு உதயகதிர்காமர் கந்தமுருகேசனர் வீதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து அதிகாலை ஒருமணிக்கு ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டி…
-
- 2 replies
- 831 views
-
-
காத்தான்குடியில் 6 பேர் கைது காத்தான்குடியில் குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆறு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். குறித்த ஆறு பேரும் ஹம்பாந்தோட்டை பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் என குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் குறித்த ஆறு பேரையும் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/55433
-
- 0 replies
- 543 views
-
-
நேற்று இரவு நீர்கொழும்பு, பலகத்துறை, செல்லக்கந்த உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்களுடைய, வாகனங்கள் வீடுகள், வீட்டு பாவனை பொருட்கள் , கடைகள் என பல பெறுமதிமிக்க பொருட்கள் தாக்கி நாசம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுடைய சொத்துக்களை தாக்கி. சேதம் ஏற்படுத்துவதிலேயே வன்முறையாளர்கள் குறியாக செயற்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். https://www.madawalaenews.com/2019/05/yt.html
-
- 5 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவில் மௌலவி ஒருவர் கைது முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குறித்த மௌலவி நீராவிப்பிட்டி பகுதியில் தங்கி இருப்பதாக சிறப்பு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ளார்கள். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து இவர் இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் செயற்பட்டார் .அந்த அமைப்பின் கூட்டங்களை நடத்தினார். என்ற சந்தேகத்தின் பேரில் இவரை கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு சிறப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை நீதி…
-
- 0 replies
- 840 views
-
-
நீதிபதிகள் தவறிழைத்தால் முறைப்படி முறையிடவும்: அசாத் சாலிக்கு தலதா பதில் நீதிபதிகளின் செயற்பாடு தவறாக காணப்பட்டால் அதுகுறித்து தம்மிடமும் பிரதம நீதியரசரிடமும் முறையிடுமாறு மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியிடம் நீதியமைச்சர் தலதா அத்துகோரள கோரிக்கை விடுத்துள்ளார். அதனைவிடுத்து கமராக்களுக்கு முன் சென்று ஊடகங்களிடம் தெரிவித்துக்கொண்டிருக்க வேண்டாம் என அவர் மேலும் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீதிபதியொருவர் பயங்கரவாதிகளுக்கு உதவியுள்ளாரென அசாத் சாலி நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட கருத்திற்கு பதிலளித்துள்ள நீதியமைச்சர் மேற்குறித்தவாறு கூறியுள்ளார். நீதிபதிகள் தவறிழைத்ததாக ஊடகங்களிடம் தெரிவிப்பது முறையற்ற செயற்பாடென தெரிவித்துள்ள நீதியமைச்சர், அது சக…
-
- 0 replies
- 450 views
-
-
பயங்கரவாதிகளை இனங்காண மரபணு சோதனைக்கு உத்தரவு! இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட ஏனைய பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சஹரான் இறந்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் நம்புகின்றனர். எனினும், கடல் வழியாக அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சஹரானின் அடையாளத்தை உறுதிப்படுத்த அவரது மகள் மற்றும் சகோதரியின் மரபணுவை பரிசோதிக்க, அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தோடு, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக், சினமன் கிரான்ட் நட…
-
- 0 replies
- 247 views
-
-
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு – 7 பெண்கள் உட்பட 54 பேர் அதிரடியாக கைது! ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய 54 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்தோடு 19 சந்தேகநபர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/54-suspects-including-7-women-arrested-in-connection-with-the-easter-attacks/
-
- 0 replies
- 152 views
-
-
குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று பதவிவிலகப்போவதில்லை: மைத்திரிபால இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கி நேர்காணலிலேயே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தாக்குதலை தடுக்க முடியாமல் போனமையையிட்டு மிகவும் கவலையடைகின்றேன். ஆனாலும் குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம். மேலும் இத்தகைய சம்பவங்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றபோது அந்நாட்டு தலைவர்கள் எவரும் அதற்கு பொறுப்பேற்று பதவிவிலகியதில்லை. ஆகையால் நானும், இந்த தாக்குதல்…
-
- 0 replies
- 146 views
-
-
வவுணத்தீவு கொலைகள் – முன்னாள் போராளியை விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு May 1, 2019 மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு காவல்துறையினரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிப்பதாக ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த காவல்துறையினரை கொலை செய்தது தேசிய தௌஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற…
-
- 14 replies
- 1.6k views
-
-
பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை - விக்கி பாசாங்கு செய்வதாகவும் கூட்டமைப்பு சாடல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடயங்களை சரியாக அறியாது அல்லது விளங்காமை போன்று பாசாங்கு செய்வதாகவும் சாடியுள்ளது. இதுதொடாபில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறுதெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக் கழக நிர்வாகத்தின் கோரிக்கையின்…
-
- 5 replies
- 903 views
- 1 follower
-
-
குண்டு வெடிப்பில் அமெரிக்கா சதியா?-அதிர்ச்சியில் இலங்கை! இரா. இளையசெல்வன் இலங்கை தொடர்குண்டு வெடிப்பின் பின்னணியில் வெளிநாடுகளின் சதி இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. அவருடன் அரசியல் ரீதியாக மல்லுக்கட்டும் அதிபர் மைத்ரிபால சிறிசேனவும், "இந்த பயங்கரத்தில் சர்வதேச சதி இருப்பதை உணர முடிகிறது' என அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதிபருக்கும் பிரதமருக்கும் முரண்பாடுகளும் பகையும் அதிகரித்திருக்கும் சூழலில், இருவரும் ஒரே வித…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாண நகரில் வாழும், முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளை தளபதிக்கும் இடையில், இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது..
-
- 0 replies
- 256 views
-
-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச பாடசாலைகள் இன்று ஆரம்பம் (எம்.மனோசித்ரா) அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து முப்படைகளின் தீவிர சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைவாக தரம் - 6 லிருந்து 13 ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்கவும், தரம் - 1 தொடக்கம் தரம் - 5 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின…
-
- 1 reply
- 865 views
-