ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
April 2, 2019 மாகந்துரே மதூஷின் மேலும் இரு சகாக்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். டுபாயில் பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துரே மதூஷுடன் 31 பேர் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பாடகர் அமல் பெரேரேவின் மகன் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் உட்பட சிலர் இலங்கைக்கு ஏற்கனவே நாடு கடத்தப்பட்டனர். இந்நிலையில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்த மொஹமட் சித்தீக் மொஹமட் ஷியாம் மற்றும் வீரசிங்க லங்கா சஜித பெரேரா ஆகியோர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று காலை 4.50 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலை…
-
- 0 replies
- 275 views
-
-
விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர் – பஷில் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் கிடையாது. இவர்கள் சுயநல சிந்தனை கொண்டவர்கள். இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தலைவர்களைவிட தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர். இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்குப் பிரதான காரணம…
-
- 5 replies
- 501 views
-
-
நிதி ஒதுக்கீடு தோல்வி : ஐந்தரை லட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் பிரச்சினை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தமிழ், சிங்கள புதுவருடத்திற்காக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான முழுப் பொறுப்பை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே ஏற்க வேண்டும் எனவும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த நிலையினால் பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கும் அவர்களுடன் தொடர்புள்ள மாகாண சபைகளுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட…
-
- 1 reply
- 476 views
-
-
சிங்கள இனத்தின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்ராஜகீய பண்டித தெரிபெஹா மேதாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பு அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் அண்மையில் நடைபெற்ற பௌத்த உரிமை ஆணை குழுவில் சாட்சியமளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் மேலும் கூறுகையில், சிங்கள மக்களின் வளர்ச்சி வேகம் பாரியளவு பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.கடந்த 2016ஆம் ஆண்டில் இந்ததொகை 0.5 வீதமாகவே காணப்பட்டது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் சிங்கள இன சமூகத்தின் வளர்ச்சி வேகம் சூன்யமாக கூடும்.அதாவது பெற்றோர் இரண்டு பிள்ளைகளுடன் நிறுத்தி கொள்ளும் நிலைமையே காணப்படுகின்றது. 2020ஆம் ஆண்டின் பின்னர் சிங்கள சமூகத்தின் வளர்ச்சி …
-
- 1 reply
- 553 views
-
-
இரு எரிவாயு, இரு எண்ணெய் படிமங்கள் கண்டுபிடிப்பு | மன்னார் கடற்பரப்பில் இரண்டு எரிவாயு படிமங்களும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ?இரண்டு எரிவாயுப் படிமங்களிலும், 9 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களிலும், 2 பில்லியன் பரல் எண்ணெயும் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எரிவாயுப் படிமங்களில் சிறியதான டொராடோ படிமத்தில் இருந்து 350 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுயைப் பெற முடியும். இதன் மூலம், 350 மெகாவாட் மின் நிலை…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசம் என்ற சொற்பதம் இலங்கை அரசுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கும் பொருந்துவதாகும். இதே கால அவகாசம் என்பதைக் கூட்டமைப்பின் மொழியில் கூறுவதாயின், இலங்கை மீதான ஐ.நாவின் மேற்பார்வை என்றும் அது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப் பட்டுள்ளது என்றே கூறவேண்டும். ஆக, இலங்கை அரசுக்குக் கால அவகாசமாக இருப்பது கூட்டமைப்புக்கு ஐ.நாவின் மேற்பார்வையாக இருக்கிறது. இங்கு ஒரு சொல் இரு வகையாகக் கையாளப்படுகின்றதேயன்றி, இரு வகைச் சொற்பதத்தினதும் பொருள் ஒன்றுதான் என்பது புரிதற்குரியது. அதாவது இலங்கை அர…
-
- 0 replies
- 514 views
-
-
இணை அனுசரணைக்கு இணங்கி இலங்கை அரசு கையயாப்பமிட்டால், அது கலப்பு நீதிமன்றை ஏற்றுக்கொள்வதாகவே பொருள்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் வைத்துக் கூறியுள்ளார். கலப்பு நீதிமன்றுக்கு உடன்பட மறுத்தால், பன்னாட்டு நீதிமன்றுக்கு எடுத்துச் செல்வோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நல்லது. தமிழனத்தின் அழிப்பை; வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை; ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனதை; போர்க்குற்றம் நடந்ததை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றுக்குக் கூட்டமைப்பு எடுத்துச் சென்றால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அது நடக்குமா? உங்களால் அது முடியுமா? என்பதுதான் நம் கேள்வி. இலங்கையில் நடந்த போர்க்க…
-
- 0 replies
- 528 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கு அன்பு வணக்கம். நீண்ட நெடுநாளாய் உங்களுக்குக் கடிதம் எழுதுவதை தவிர்த்து வந்தோம். காரணம் எழுதுகின்ற கடிதங்களுக்கு எந்தப் பதிலும் இல்லை எந்தப் பலனும் இல்லை. இருந்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை. விவகாரம் கையாளப்பட்ட விதம் கண்டு அடைந்த வேதனையின் பாற்பட்டு இக்கடிதம் எழுதுகின்றோம். இந்தக் கடிதம் ஏதேனும் பயனுடையதாக இருக்குமா என்பதை நாமறியோம். இருந்தும் எழுதுகின்ற இக்கடிதத்தால் நாமும் எம்போன்ற மனநிலையில் இருப்பவர்களும் ஆற்றுப்பட வாய்ப்புண்டு. இப்போதிருக்கின்ற நிலைமையில் ஆற்றுப்படுத்தல் அவசியமாகின்றது. அந்தவகையில்தான் இக்கடிதம் எழுதப்படுகிறது. இருந்தும் தமிழரசுக் கட்சி …
-
- 0 replies
- 385 views
-
-
ஏமாற்றாதே ஏமாறாதே... என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் என்ற சினிமாப் படத்தில் வரும் பாடல் வரிகளாகும். நம்ப நட, நம்பி நடவாதே என்ற பழமொழியைப் புதுப்பித்து கவிஞர் வாலி கொடுத்த புதுவடிவமே மேற்போந்த பாடலாகும். ஏமாற்றுதல் மிக மோசமான கொடுஞ்செயல். அதிலும் நம்ப வைத்து ஏமாற்றுதல் என்பது நம்பிக்கைத் துரோகம் என்பதன் பாற்பட்டதாகும். நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள் ஏழு பிறப்புக்கும் தங்கள் பாவத்தை கழுவாய் செய்ய மாட்டார்கள் என்று சமயதத்துவங்கள் கூறிநின்றாலும் இன்னமும் நம்பவைத்து ஏமாற்றுகின்ற நாடகங்கள் மனித சமூகத்தில் நடக்கவே செய்கிறது. அதிலும் ஏமாற்றுகின்ற வடிவங்கள் வேறுபட்டவையாக இருப்பதுதான் விசித்திரம். இப் போதெல்லாம் ஏமா…
-
- 0 replies
- 529 views
-
-
“மாற்று இடம்தர முடியாது உங்கள் வாழ்வாதாரத்தை நீங்களே பாருங்கள்” என்கிறார் யாழ் மாநகர முதல்வர்.. March 31, 2019 யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையங்களை எதிர்வரும் ஏப்ரல் 30 க்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமக்கு முன்னர் மாற்றிடங்கள் வழங்கப்படுமென கூறிய முதல்வர் தற்போது மாற்று இடம்தர முடியாது உங்கள் வாழ்வாதாரத்தை நீங்களே பாருங்கள் என தெரிவித்ததையிட்டு தாம் கவலை அடைவதாக அங்காடி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பில் அங்காடி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் எமது சங்கத்தினரை அழைத்த யாழ்.முதல்வர் உங்களுக்கு இடம் …
-
- 2 replies
- 784 views
- 1 follower
-
-
பிக்குவுக்கு புற்றுநோய்: கோயிலை அபகரித்து விகாரை அமைத்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு முல்லைத்தீவில் கோயிலை அபகரித்து விகாரை அமைத்த பௌத்த பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தியதுடன் குருகந்த ரஜமஹா விகாரையையும், பிரமாண்ட புத்தர் சிலையையும் அமைத்துள்ள பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பிக்கு நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே குறித்த ஆலயம் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னி…
-
- 19 replies
- 1.6k views
- 2 followers
-
-
வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது அரசியலமைப்புக்கு முரணானது : April 1, 2019 வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவந்து இலங்கை விவகாரத்தை கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது. உள்நாட்டு பொறிமுறை மூலம் யுத்த காலத்தில் நடந்து தவறுகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதில் அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ருவன்வெல்ல, வெந்தல விஸ்தரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை நேற்று (31) திறந்துவைத்தபின், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது; ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு அண்மையில…
-
- 2 replies
- 359 views
-
-
புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) முற்பகல் அமைச்சர் சஜித் பிரேமதாச அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார். இதேவேளை, புதுவருட காலத்தில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் தற்போது தயாராகியுள்ளன. புதுவருடத்திற்காக ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. புதுவருடத்தில் பிரதான பாதையிலும், களனிவெலி ரயில் பாதையிலும் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அற…
-
- 2 replies
- 510 views
-
-
வரவு- செலவு திட்டத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு வரவு- செலவு திட்டத்தில் ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து இன்னும் எந்ததொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி விடயங்கள் பற்றி கலந்துரையாடினோமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அரசாங்கத்தை எத…
-
- 1 reply
- 433 views
-
-
ஆணொருவர் எரியூட்டப்பட்டு கொலை: மட்டக்களப்பில் பரபரப்பு மட்டக்களப்பு, வாழைச்சேனையிலுள்ள விநாயகபுரம் பகுதியில் ஆணொருவர் எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 58 வயதுடைய குடும்ப தலைவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை, விநாயகபுரம் லயன்ஸ் கழக வீதியில் வைத்தே ஒரு குழுவினரால் குறித்த நபர், எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பில் அதே இடத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் …
-
- 0 replies
- 470 views
-
-
மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது! Published by Priyatharshan on 2019-04-02 05:05:33 மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் உபுல் அலவத்த குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/53143
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினமான இன்று யாழ்ப்பாணத்து இளைஞர்கள் நகரில் ஒன்று கூடி புகைப்பிடிப்பவர்களுக்கு வாழ்த்துக் கூறும் வகையில் பிறந்த நாள் கொண்டாடினர். “சிகரட் குடித்து முகத்தை அவலட்சனம் ஆக்கி, பாலியல் பலவீனம் ஏற்பட்டு, இன்னும் பல நோய்களை ஏற்படுத்தும் சிகரட்டை காசு கொடுத்து ஏமார்ந்து புகைப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள்” என தண்டு அறிக்கைகளையும் விநியோகித்தனர். https://newuthayan.com/story/17/புகைப்பிடிப்பவர்களுக்க.html
-
- 1 reply
- 507 views
- 1 follower
-
-
விக்கியின் நிராகரிப்பு – கம்மன்பில அதிர்ச்சி மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருப்பது குறித்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். “ஓய்வுபெற்ற நீதியரசர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது. மன்னார் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது. அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://…
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து தந்தையையும் மகனையும் வாளினால் வெட்டி காயப்படுத்தி , வீட்டின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த இளைஞன் மீதும் அவரது தந்தை மீதும் வாளினால் வெட்டி தாக்குதல் நடாத்தியதன் பின்னர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் வீட்டில் இருந்த தொலைகாட்சி பெட்டி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று இருந்தனர். குறித்த சம்பவத்தில…
-
- 0 replies
- 537 views
-
-
April 1, 2019 மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட வர்த்தக முறைமையான பிரமிட் வர்த்தக முறைமையை ஒத்த வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்குடன் யாழில் திறக்கப்பட்டு உள்ள அலுவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி யாழ்.உதவி காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறித்த வர்த்தக நடவடிக்கைக்காக யாழ் நகரில் புதிதாக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பில் ‘ காவல்துறை மா அதிபரிடம் சொல்லுங்கள்’ எனும் திட்டத்தின் ஊடாக யாழில் வசிக்கும் நபர் ஒருவர் காவல்துறைமா அதிபரின் கவனத்திற்கு அந்த விடயத்தை கொண்டு சென்றார். …
-
- 0 replies
- 413 views
-
-
April 1, 2019 கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அண்மைக்காலமாக மலையகத்தில் வறட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. 1979 ம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு நீர்மாணிக்கப்பட்ட போது பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க விகாரை மற்றும் ஆலயம் என்பன நீரில் மூழ்கியமை யாவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் தற்போது நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்படுவதுடன் …
-
- 0 replies
- 423 views
-
-
April 1, 2019 இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல் வேண்டாம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்துசெய்ய வலியுறுத்தி ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று மாலை பூண்டுலோயா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சுலோகங்களை ஏந்தியவாறு, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஜே.வி.பியின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். (க.கிஷ…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கையில் சிறிசேன முன்னிலையில் அழிக்கப்பட்ட 10,935 மில்லியன் ரூபாய் மதிப்பிலான கொகைன் 13 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் கடந்த மூன்று வருட காலங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 765 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய கொகைன் போதைப்பொருள் அழிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இந்த கொகைன்…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எல்லாளன் படைப் பிரிவைச் சேர்ந்தவருக்கு விளக்கமறியல் April 1, 2019 மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைப்பிரிவில் உள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு, வாள்கள் உட்பட ஹரோயிடன் போதைப் பொருளுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எல்லாளன் படைப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறைப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து கடந்த சனிக்கிழமை குறித்த நபர் மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்ட காவல்துறையினர் அவரை கைது செய்ததுடன் அவரிட்மிருந்து ; ஒரு கைக்குண்டு, ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 10, வாள்கள் 3, 70 மில்லிக் கிராம் ஹ…
-
- 0 replies
- 262 views
-
-
கூட்டமைப்பின் முடிவு பிரதமர் -ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்மானிக்கப்படும் April 1, 2019 வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்வுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பானது நாளை செவ்வாய்க்கிழமை பிரதமருடனும் நாளை மறுதினம் புதன்கிழமை ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் தமக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதியான நகர்வுகளை கையாளாவிட்டால் கூட்டமைப்பின் தீர்மானமும் காத்திரமானதாக இருக்கும் எனவும் அவர் க…
-
- 0 replies
- 242 views
-