ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
1600 ஆவது நாளை நெருங்கும் போராட்டம் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டமானது எதிர்வரும் திங்கள்கிழமை 1600ஆவது நாளை எட்டவுள்ளது. எனவே அந்த நாளைக் குறிக்கும் வகையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். இன்று வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”எதிர்வரு…
-
- 0 replies
- 287 views
-
-
யாழ்ப்பாணத்தில் பல்லாயிரம் தமிழ்மக்கள் - தொலைக்காட்சி தகவலின்படி சுமார் ஒரு இலட்சம்பேர் - முக்கியமாக இளைஞர்கள் கலந்துகொண்ட தென் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது எனவும், அதை டன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பினார்கள் என்றும் உறவினர் ஒருவர் கூறினார். விரைவில் டன் தொலைக்காட்சியின் சேவையை இலவசமாக வட அமெரிக்காவிற்கும் விரிவுபடுத்தினால்.. யாழ்குடாநாட்டு தகவல்களை நாங்களும் அறியக்கூடியதாக இருக்கும்.
-
- 14 replies
- 2.2k views
-
-
இலங்கையில் காணாமல் போனோர் என்ற வகுதிக்குள் சேர்க்கப்பட்டவர் பலர் புதிய அடையாளங்களுடன் வெளிநாடுகளில் வசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் இலங்கையில் ஏற்கனவே காணாமல் போனவர் என்ற வகுதிக்குள் சேர்க்கப்பட்டிருந்தார் என்று கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த நபரின் தாயார், தனது மகன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று முறையிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு கடத்தப்பட்டவர் இலங்கை நீதிமன்றத்தில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது, காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விட…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேர்தல்களில் தமது கட்சி வெற்றியீட்டியதாக கருதப்பட முடியாது என சமூக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.பி.டியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்;ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் தமது கட்சியைச் சேர்ந்த 9 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை ஓர் வெற்றியாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகரசபைக்காக ஈ.பி.டி.பி. 20 வேட்பாளர்களை களமிறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல்களில் 17 ஆசனங்களை வென்றிருக்க முடியும் எனவும், சில காரணிகளினால் தம்மால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி கிட்டியதாக கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தேர்தல் தோல்வி…
-
- 5 replies
- 1.3k views
-
-
மோடியின் வருகை : மலையக அரசியல் கட்சிகள் வலியுறுத்த போகும் விடயம் என்ன..? (க.கமலநாதன்) இந்திய அரசாங்கத்திற்கு மலையகத் தோட்ட தொழிலாளர் சமூகத்தின் மேம்பாட்டிற்கு முழு உதவி வழங்கவேண்டிய கடமையுள்ளது என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடத்தில் வலியுறுத்துவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். அதேநேரம் இந்திய தலைவர் ஒருவரின் மலையகத்திற்கான விஜயம் முதல் முறையாக இடம்பெறும்போது அவரிடம் வலியுறுத்தும் காரணங்களை விடுத்து அவருக்கு வரவேற்பளிப்பதையே முதன்மையாக கருதுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். இந்திய பிர…
-
- 0 replies
- 176 views
-
-
தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் இருந்து சிறிலங்காப் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒரு பகுதியினரை அவர்களது பெற்றோர்கள் பார்வையிட்டுள்ளனர். கடந்த மே மாதத்தில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த சுமார் 3 லட்சம் மக்களில் இருந்து, விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இயங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு தொகுதியினர் அம்பேபுசவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறுவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு வேண்டிய பயிற்சிகள் முகாமில் வழங்கப்பட்டு வருவதாக அ…
-
- 0 replies
- 734 views
-
-
குளோபல் தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் : கொழும்பில் உள்ள ஐக்கியநாடுகள் சபை அலுவலகத்தில் பணியாற்றும் சிங்கள அதிகாரிகள் கடுமையாக செயற்படுவதாக இன்றைய சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் குளோபல் தமிழ்ச்செய்திகளுக்கு கூறினார். ஏழு ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை இன்று பிற்பகல் 4 மணிக்கு சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அமைப்புகளில் இருந்தும் ஏழு பிரதிநிதிகள் அலுவலகத்துக்கு சென்றபோது ஐந்து பேருக்கு மாத்திரமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் குழப்பமடைந்த ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு நின்ற சிங்கள பெண் அதிகாரியுடன் தர்க்கப்பட்டனர். ஆனாலும் அவர் இணங்கவில்லை. இதனால் ஏனைய மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் வெளி…
-
- 2 replies
- 492 views
-
-
சாவகச்சேரியில் அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதியதில் மூன்று இராணுவத்தினர் காயம் சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத நிலையத்து அண்மையில் இன்று அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவிரைவு புகையிரதத்துடனேயே இராணுவ வாகனம் மோதியுள்ளது. காயமடைந்த இராணுவத்தினர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/archives/26520
-
- 0 replies
- 254 views
-
-
2009 ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் 70,000 தமிழ் மக்களை கொன்றுக் குவித்தமையினை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்ற நிலையில், ஏன் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடாத்த வேண்டுமென கெலம் மெக்ரே கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் என்னுடைய வாழ்நாளிலே மிகவும் கொடுமையான புகைப்படங்களை பார்த்தேன். இவ்வனைத்து புகைப்படங்களும் இலங்கை இறுதிப்போரின் போது, இறுதி 138 நாட்களிற்குள்ளும் எடுக்கப்பட்டவை. இப்போர் நான்கு ஆண்டுகளிற்கு முன்னரே நிறைவுப்பெற்றுவிட்டதாயினும், இப்போரே எனது “நோ பயர் சோன் மற்றும் இலங்கையின் கொலைக்களங்கள்” ஆகிய ஆவணப்படங்களின் பிராதன கருப்பொருளாக இருந்தது. 40,000 மக்களே கொல்லப்பட்டனர் என இலங்கை அரசாங்கம் அறிவித்தது. காடுகள் வயல்வெளிகள் எங்கிலுமே மன…
-
- 0 replies
- 468 views
-
-
டெங்கு நோயை கட்டுப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு : அதிகாரிகளை அவசரமாக சந்தித்தார் தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ; அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். டெங்கு ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி தமது நேரடி பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொண்டார். அதேபோன்று டெங்கு ஒழிப்புக்காக அரச மற்றும் தனியார் துறை இணைந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறை…
-
- 0 replies
- 158 views
-
-
ஊடகவியலாளர் திச நாயகம் அவர்களுக்கு 20 வருட கடூழியச்சிறைத்தண்டனை யை சிங்கள நீதிமன்றம் இன்று தீர்ப்பாக கூறியுள்ளது.
-
- 4 replies
- 877 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட காலப்பகுதியில் இந்தியாவின் உளவு பிரிவான றோ அவரை பின்தொடர்ந்ததாக தெரியவருகிறது என திவயின தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆணையாளர் சிறீலங்காவில் தெரிவித்த கருத்துகள் மற்றும் சந்தித்த நபர்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய உளவு பிரிவு இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆணையாளர் இலங்கைக்கு வந்த நாள் முதல் அவர் இலங்கையில் இருந்து வெளியேறும் நாள் வரை அவரது சகல நடவடிக்கைகள் குறித்தும் றோ தகவல்களை திரட்டியுள்ளது. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் றோ புலனாய்வாளர்கள் அதிகளவான காலத்தை இலங்கையின் வடக்கில் செலவிட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் றோவின் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவரவி…
-
- 0 replies
- 449 views
-
-
கிழக்கின் ஆட்சியில் ‘மு.காவும் த.தே.கூவும் பங்குதாரர்கள்’ -வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன் “கிழக்கு மாகாண ஆட்சியின் பங்குதாரர்கள் என்ற அந்தஸ்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் நிரந்தர அந்தஸ்தாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நாங்கள். அதன்மூலமே, நாங்கள் பல விடயங்களைச் சாதிக்க முடியும்” என, மு.காவின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பிழைப்புவாத அரசியலையோ அல்லது சந்தர்ப்பவாத அரசியலையோ செய்யவில்லை என்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார். …
-
- 0 replies
- 254 views
-
-
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்ணிவெடிகளை அகற்றியுள்ள இடங்களில் கரையோரப் பிரதேசங்களில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளை வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் தகவல்களுக்கமைய, இந்தத் திட்டத்திற்கமைய முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அடுத்து கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட உறுதிப்படுத்தப்படும் பிரதேசங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களைக் குடியமர்த்தாது அரசாங்கம் வேறு சில நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றது. 375 சதுரக் கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றுப் பண…
-
- 0 replies
- 629 views
-
-
அமைச்சர்களின் மூளைகள் பழுதடைந்து விட்டதா? August 26, 2021 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இந்த மாத சம்பளத்தை சுகாதார செயற்பாடுகளுக்காக மாத்திரமே வழங்குவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, அரசாங்கம் கூறும் கொரோனா நிதியத்துக்கு எமது பணத்தை ஒப்படைக்கப் போவதில்லைஎனவும், ஏனெனில், அந்த நிதியத்துக்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25.08.21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், நாட்டின் நெருக்கடி நிலையின் மத்தியில்,…
-
- 0 replies
- 265 views
-
-
இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் அனைத்துலக சட்ட மரபு நெறிகளுக்கு உட்பட்டு, தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வரும் தமிழ் ஈழத்தவர்கள் தற்போது 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என்று அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்…
-
- 7 replies
- 1.1k views
-
-
இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, எதிர்வரும் தேர்தல்களில் அவர்களது வாக்குகளைத் திருடுவதற்காகத்தான் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அரச மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 287 views
-
-
படம்.| சி.வெங்கடாசலபதி. மனித உரிமைகளின் மகத்துவத்தை போற்றிக் காப்பாற்றவும், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையாளர் கேட் கில்மோருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இக்கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள்…
-
- 1 reply
- 473 views
-
-
சிறிலங்காவின் சிலாபம் நகரில் தரைப்படையினரும் காவல்துறையினரும் நேற்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 10 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 550 views
-
-
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லத் தயாராக இருப்பதாக, அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனது பெயரை வெளியிட விரும்பாத சிறிலங்கா அதிபரின் உதவியாளர் ஒருவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால், வடக்கு மாகாண முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், அரசியலமைப்புச்சட்டத்தின் படி, உறுப்பினர்கள், ஆளுனரின் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாக…
-
- 0 replies
- 828 views
-
-
முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் ஊழல்வாதிகளைக் கைது செய்து ஊழலைத் தட்டிக்கேட்டதற்கு தண்டனையா? மக்கள் புரட்சி வெடிக்கட்டும். எங்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஜயா, முதல்வரே எடுத்த முடிவை மாற்ற வேண்டாம். வாக்கிற்கு நாம், எம்மை சுரண்ட நீங்களா? போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாரா…
-
- 0 replies
- 141 views
-
-
யாழ். பல்கலை மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான தீர்வு ; வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் யாழ்.பல்கலைக் கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாச்சார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியினை தொடர்வதற்கு ஆவண செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக சாதமான தீர்வு எட்டப்பட்டதுடன் வடக்கு கிழக்கு கல்விச் சமுகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள், ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால…
-
- 1 reply
- 324 views
-
-
வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கிறோம் – இயக்குநர் சீமான் [காணொளி]தமிழினத்தை இழிவுபடுத்திப் பேசிய சிறீலங்கா துணைத்தூதரை நாட்டை விட்டு வெளியேற்றா விட்டால் தமிழ் இன உணர்வாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று “நாம் தமிழர் இயக்கத்தின்’ தலைவர் நடிகர் சீமான் எச்சரித்துள்ளார். வீடியோ காண: http://www.meenagam.org/?p=12877 இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தமிழர் இயக்கமே நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் என்று அதன் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள சிறீலங்கா துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இயக்குனர் சீமா…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-21#page-32
-
- 1 reply
- 187 views
-
-
இறுதிக் கட்டத்தில் தலைவரை அழைத்துச் செல்ல முனைந்த அமெரிக்கா விடுதலைப் புலிகளின் தலைவரை அழைத்துச் செல்ல முனைந்த அமெரிக்கா! அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், இறுதி யுத்தக் காலத்தில் யுத்தத்தை நிறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சித்ததாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க (S.B.Dissanayake) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இறுதி யுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்து செல்ல முயற்சித…
-
- 0 replies
- 644 views
-