ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
2009 போரில் மனித உரிமை மீறல் புகார் - எந்த விசாரணைக்கும் தயார்: இலங்கை ராணுவம் அறிவிப்பு Published : 18 Mar 2019 17:47 IST Updated : 18 Mar 2019 17:53 IST பிடிஐ கொழும்பு இலங்கை ராணுவத் தளபதி மஹேஷ் செனநாயகே. 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக வைக்கப்படும் புகார் தொடர்பான எவ்வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையை விசாரிக்க ஐநா சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் அந்நாட்டு ராணுவத் தளபதிகள் தங்கள் நிலைப்பாட்டை முன்மொழியத் தொடங்கியுள்ளனர். …
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி என்ற பயணத்தை ஆரம்பிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் தாம் அடிபணிந்த சமூகம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில் அதிகாரங்களை அவர்களுக்கும் வழங்கி தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஐக்கிய இலங்கை என்பதே மஹிந்த -ரணில் இருவரதும் நோக்கமாகும். ஆனாலும் அதனை அடைய முயற்சிக்கும் வழிமுறை வேறு எனவும் அவர் குறிப்பிட்டார். புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, வீடமைப்பு நிர்மாணத்துறை …
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து- நால்வர் பலி : March 18, 2019 கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றின் மீது எதிர்திசையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் வானில் பயணித்த மூவரும் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வானில் பயணித்த 8 பேர் மற்றும் பாதையில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்…
-
- 2 replies
- 715 views
-
-
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளுக்கு பெருமளவு நிதி செலவு: சாலிய பீரிஸ் மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளுக்காக இதுவரை 1 தசம் ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்களை புளோரிடாவிற்கு கொண்டு சென்று காபன் பரிசோதனைகளை நடத்த 1 தசம் 3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், காபன் பரிசோதனை அறிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள எச்சங்கள் குறித்த இறுதி முடிவை எட…
-
- 1 reply
- 277 views
-
-
காணாமல் போனோருக்கான அலுவலக வெற்றிடங்களுக்கு காணாமல்போனோரின் உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் March 18, 2019 காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கு புதிய ஆட்களை நிரந்தரமாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் குறித்த பதவிகளுக்கு காணாமல்போனோரின் நேரடி குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரப்பட்டுள்ள தகைமையை உடையவர்கள் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என காணாமல் போனோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் இது தொடர்பில் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் வெற்றிடங்கள் குறித்த விபரம், வயதெல்லை, சம்பள விபரம் மற்றும் தகைமைகள் உள்ளிட்ட விபர…
-
- 0 replies
- 356 views
-
-
கருகம்பனை சீதாவளை சவாரித்திடலில் இடம்பெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி March 18, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்ட சவாரி சங்கத்தின் அனுசரணையுடன் வலி.வடக்கு சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் கீரிமலை நகுலகிரி இளைஞர் கழகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தது. வலி. வடக்கின் சவாரி திடலான கருகம்பனை சீதாவளை சவாரித்திடலில் குறித்த போட்டி நடைபெற்றது. http://globaltamilnews.net/2019/116276/
-
- 0 replies
- 659 views
-
-
இலங்கை மீதான புதிய தீர்மானத்தை போலித் தேசியவாதிகள் எதிர்க்கின்றனர் – சுமந்திரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படக்கூடாது என போலித் தேசியவாதிகள் கூறி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு அத்தகைய சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், 34/1 என்ற தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கு கால அவகாசம் வழங்காவிடின் ஐ.நா.வில் இலங்கை சம்மந்தமாக ஒரு விடயத்தையும் கையாள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், இன்னொரு தீ…
-
- 0 replies
- 346 views
-
-
எதிர்வரும் தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு கொக்கேன் இரத்தப் பரிசோதனை கட்டாயம்- நாமல் நாட்டில் எதிர்வரும் தேர்தல்களில் வேட்பாளர்களாக வரும் சகலரினதும் உடம்பில் கொக்கேன் போதைப் பொருள் காணப்படுகின்றதா? இல்லையா? எனக் கண்டறிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இரத்தப் பரிசோதனையொன்றை நடாத்தினால் சிறந்தது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாக ரஞ்ஜன் ராமநாயக்க எம்.பி. கூறியுள்ள போதிலும் இதுவரையில் எவருடைய பெயரும் வெளிவரவில்லை. அவ்வாறானவர்கள் இருப்பதாக வாய் அளப்பதை மாத்திரமே அவர் செய்து கொண்டிருக்கின்றார். அப்படியானவர்கள் இருந்தால், ஊடகங்களின் முன்னாள் வந்து பெயர்களை அறி…
-
- 3 replies
- 2.7k views
-
-
மன்னார் மனித புதைகுழி குறித்து இறுதி தீர்மானம்? மன்னார் மனித புதைகுழி தொடர்பான இறுதி தீர்மானம், எதிர்வரும் 22ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த தினத்தில் மன்னார் நீதவானை, தடயவியல் பரிசோதனைக் குழு ஒன்றும், காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளும் சந்தித்து இதுதொடர்பான இறுதி முடிவை மேற்கொள்ள உள்ளனரென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கார்பன் பரிசோதனையின்படி, அவை 1400ம் ஆண்டு முதல் 1650ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மரணித்தவர்களுடையது என கூறப்பட்டிருந்தது. எனினும் இதனை ஏற்று…
-
- 1 reply
- 714 views
- 1 follower
-
-
யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது: பொன்சேகா யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் இடம்பெற்றபோது இராணுவத்தினர் சட்டவிரோத குற்றங்களிலோ, மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலோ ஈடுபடவில்லை. யுத்த காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இராணுவத் தலைமை மற்றும் அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. ஆனால் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், அதாவது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சில சட்டவிரோதச் செயல்கள் இராணுவத்தால் மேற்க…
-
- 1 reply
- 871 views
-
-
காலத்தை இனியும் இழுத்தடிக்க -இலங்கையை அனுமதிக்காதீர்கள் -மாவை. எம்.பி.!! பதிவேற்றிய காலம்: Mar 17, 2019 இலங்கை அரசு காலத்தை இழுத்தடிப்பதற்கு இனியும் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது. இது தொடர்பில் நாமும் பன்னாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்துகின்றோம். இங்கே இனத்தின் விடிவுக்காகப் போராடும் மாணவர்களுக்கு நன்றிகளைக் கூறுகின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பேரணி முடிவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ‘பிரிட்டன் தலைமையிலான ந…
-
- 2 replies
- 367 views
- 1 follower
-
-
யுத்தம் நிறைவுறாமல் இருந்திருந்தால் உயிரிழப்பு தொடர்ந்திருக்கும் - மஹிந்த (இராஜதுரை ஹஷான்) 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் இன்று மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் உயிரிழந்திருப்பார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மாத்தளை முவன்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாரிய போராட்டத்தின் மத்தியிலே 30 வருட கால யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவத்தினர் இன்று தண்டிக்கப்பட்டுகின்றனர். எமது நாட்டு இராணுவத்தினர் 09 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே…
-
- 2 replies
- 804 views
- 1 follower
-
-
கிழக்கில், மறத்தமிழர் கட்சி உதயம்! மட்டக்களப்பில் புதிய கட்சியொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுணதீவில் நடைபெற்றது. வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தில் மறத்தமிழர் கட்சி என்னும் பெயருடன் இந்த புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் ஆலோசகர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது தேசியக் கொடி, கட்சி கொடியேற்றப்பட்டு தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரினால் கட்சி அங்குரார்ப்பண பிரகடனம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து ஊடக சந்திப்பில் தலைமை ஒருங்கிணைப்பாள…
-
- 0 replies
- 966 views
-
-
ஐ.நா.வில் அரசு உறுதியளித்தாலும் செயற்பாட்டில் இழுபறி தொடரும் : போர்க்குற்ற விசாரணை அவசியம்: கேர்ணல் ஹரிகரன் (ஆர்.ராம்) ஐ.நா.வில் இலங்கையின் எந்த அரசு எத்தகைய உறுதி அளித்தாலும் செயல்பாட்டில் இழுபறி தொடரும். ஆகவே தென்னாபிரிக்காவைப்போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்ககைளை உடன் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் நாட்டின் நலனுக்காக போர்க்குற்ற விசாரணை அவசியமாகுமென இந்திய இராணுவத்தின் ஓய்வு நிலை புலனாய்வு நிபுணர் கேர்ணல் ஆர்.ஹரிகரன் வீரகேசரிக்குத் தெரிவித்தார். ஜெனீவா கூட்டத்தொடர் தற்பொது நடைபெற்று வரும் நிலையில் படையினர் இழைத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் சர்வதேச தரத்தில்செய்யப்பட என்று வேண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வல…
-
- 0 replies
- 522 views
-
-
யாழில் அதிரடிப்படையினருக்கு இடையூறு – பெண்கள் உட்பட ஐவர் கைது யாழ்ப்பாணம் -அரியாலை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாலை கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து அதனை முறியடிக்க சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று (சனிக்கிழமை) இரவு அங்கு சென்றிருந்தனர். அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்…
-
- 0 replies
- 229 views
-
-
தீவிர பகிடிவதை – மாணவர்கள் 15 பேருக்கு வகுப்புத் தடை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் 15 பேருக்கு இரு வார வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் மருத்துவ பீடத்தின் கனிஷ்ட மாணவர்களை மிக மோசமான பகிடிவதைக்கு உட்படுத்தியது விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, இவ்வாறான பகிடிவதைகள் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் இவ்வாறான பகிடிவதைகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்குவது சிறந்தது என சமூக ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஈவிரக்கமற்ற அநாகரிக பகிடிவதை புரிந்த மாணவர்க…
-
- 0 replies
- 391 views
-
-
ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வந்தால் இலங்கையுடனான உறவில் விரிசல் ஏற்படும் – அமெரிக்கா ராஜபக்ஷவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கை-அமெரிக்காவிற்கு இடையிலான உறவு பாதிப்படையுமென அமெரிக்காவின் பழமைவாத சிந்தனையாளரான, ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஹெரிரேஜ் பவுண்டேசனின் ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தயாரித்துள்ள ‘இலங்கை சுதந்திரமான திறந்த இந்தோ- பசுபிக் மூலோபாயத்துக்கு ஒரு சோதனையான வழக்கு’ என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலம் தெரிவிக்கையில், “இலங்கையுடன் இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகளுக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் 2015இல் மஹிந்த ராஜபக்ஷ வெளியேற்றப்பட்டதில் இருந்து, இலங்கை – அமெரிக்க உறவுகள், தளைத…
-
- 0 replies
- 269 views
-
-
தமிழீழ விடுதலை போராட்டம் தேங்கி கிடப்பதாக சிவமோகன் தெரிவிப்பு தமிழீழ விடுதலை போராட்டம் தற்போது தேங்கி கிடப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தின் திறப்பு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழர்களுக்கு தேவையானது ஒற்றுமையே ஆகும். தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டம் தற்போது தேங்கிவிட்டது. ஆயுதங்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டது என்றே போராட்டத்தின் இறுதியில் முல்லைத்தீவில் வைத்து கூறப்பட்டது. எனவே மீண்டும் அரசியல் போராட்டத்…
-
- 1 reply
- 754 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில்- எழுச்சிப் பேரணி!! பதிவேற்றிய காலம்: Mar 16, 2019 போர்க்குற்றம் தொடர்பில் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சமூகம் மேற்கொள்ளும் பேரணி இன்று இடம்பெறவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இந்தப் பெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை அவசியம், இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் கால அவகாசத்தையோ அல்லது கால நீட்டிப்புக்களையோ ஐ.நா. வழங்கக்கூடாது என்று வலியுறுத…
-
- 21 replies
- 2.6k views
- 1 follower
-
-
அவரோ கண் பார்வை இல்லாதவர். மனைவியை இழந்தவர். இரண்டு பெண் பிள்ளைகள். இருவருக்கும் வீடும், காரும் வாங்கி கொடுத்துள்ளார். மூன்றாவது வீட்டினை தனக்கு பின்னாளில் வருமானம் வரக்கூடிய வகையில், வாடைக்கு கொடுக்கும் நோக்கத்தில் இப்போது தான் கட்டி முடித்துள்ளார். மகள்மார் இருவருக்கும் நல்ல இடத்தில் கலியாணம் செய்து வைத்துள்ளார், மருமக்கள்மார்கள் நல்ல வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த வாரம், முச்சக்கர வண்டியில் வேலைக்கு வந்த அவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். அவரது வேலை.....? கம்பஹாவுக்கும், கொழும்பு கோட்டைக்கும் இடையேயான ரயிலில் பிச்சை எடுப்பது. பிச்சை எடுப்பது இலங்கையில் குற்றம் இல்லாத நிலையில், கைது செய்ததுக்கான காரணம் தெரியவில்லை. (குருடர் போல நடி…
-
- 1 reply
- 876 views
-
-
March 16, 2019 ஹம்பாந்தோட்டை கீழ் அந்தரவௌ பகுதியில், அதிசக்திவாய்ந்த 250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் நேற்றையதினம் சூரியவௌ விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பொருட்களை எடுத்துச் சென்ற பாரவூர்தியை சோதனையிடுவதற்காக நிறுத்தக்கோரி போதும், நிறுத்தாது வேகமாக ஓட்டிச் சென்றுள்ள நிலையில் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்று பாரவூர்தியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களுடன் சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற…
-
- 2 replies
- 514 views
- 1 follower
-
-
மீண்டும் அமெரிக்கா பறக்கிறார் கோத்தா – நீதிமன்றம் அனுமதி சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளார் என்று கூறப்படுகிறது. வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி வரும் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாக கூறியிருந்தார். எனினும், அவர் இன்னமும் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருக்கின்ற நிலையில், இம்மாத பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார். டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான நிதியில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச தற்போது, சிறப்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைகளை எதிர…
-
- 3 replies
- 626 views
-
-
லண்டன் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக் எதிரான வழக்கை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லண்டன் நீதிமன்ற ஊழியர்கள் இவ்வழக்கை முன்னிலைப்படுத்துவதில் ' தவறு இழைத்துள்ளதாக காணப்பட்டதன் அடிப்படையிலேயே பிரதமர் மெஜிஸ்ட்ரேட் எம்மா ஆர்புத்நொட் மீள் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இலங்கை தமிழர்கள் சுதந்திர தினத்தன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் ' கழுத்து அறு…
-
- 0 replies
- 630 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) இந்துக்கோயில்கள் இருக்கும் இடங்களில் புத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டுவரும் நிலைமைகள் இருக்கின்றன. ஆகவே இதுதொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கவனம் செலுத்தி இவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 321 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 3.55-தாக சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார். இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, ஹல்துமுல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலநடுக்கத்தினால் இ…
-
- 0 replies
- 328 views
-