ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
மார்ச் 8இல் வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சிறப்புச் செய்தியாளர்Feb 17, 2019 | 2:16 by in செய்திகள் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வரும் மார்ச் 8ஆம் நாள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்றும், எனினும், மார்ச் 8ஆம் நாள் நண்பகல் அது வெளியிடப்படும் வாய்ப்புள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதன் பிரதி ஒன்று வ…
-
- 0 replies
- 133 views
-
-
"சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்ய மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார்" - சுமந்திரன் யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இலங்கை சர்வதேச அழுத்தத்திற்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் கூறினார். தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாடு நல்லூரில் இன்று காலை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2011 ஆம் ஆண்டு முழுவதும் 18 தடவைகள் மஹ…
-
- 0 replies
- 128 views
-
-
ஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் February 17, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு கிழக்கு தழுவிய வகையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐநாவுக்கு வழங்க கையெழுத்துப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று முல்லைத்தீவிலும் இந்த கையெழுத்துப் சேகரிக்கும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி முல்லைத்தீவிவில் இன்று ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராடடத்தை நடத்திவருகின்றனர் இந்நிலையில் வடக்கு கிழக்கு தழுவிய வகையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐநாவுக்கு வழங்க கையெழுத்துப்…
-
- 0 replies
- 138 views
-
-
குடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : February 17, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த வருடம் சித்திரை மாதம் கிளிநொச்சி இரணைமாத நகரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட படகுகளில் இரணைதீவு மக்கள் தங்கள் பூர்விக கிராமமான இரணைமாத நகருக்கு சென்றனர். யுத்ததின் காரணாமாக இரணைதீவு மக்கள் தங்களுடைய பூர்விக கிராமமான இரணைதீவில் இருந்து கடற்படையினரால் கட்டாயத்தின் பெயரில் அப்புறப்படுத்தப்பட்டு இரணை மாதா நகரில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர். குடியமர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகியும் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் ஆகியும் தங்கள் பூர்விக கிராமமான இரணைதீவில் தாங்கள் குடியேற்றப் படவில்லை என தெரிவித்து பல நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டு இறுதியில் அரச …
-
- 0 replies
- 148 views
-
-
போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் February 17, 2019 போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்போதே போதைப் பொருள் ஒழிப்பு வெற்றி பெறும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டுக்கு தேவையான சட்டங்களை இயற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கெனினோ சூதாட்டம் ஆகிய முறையற்ற செயற்பாடுகளில் ஆளும் தரப்பிலும், எதிர்தரப்பிலும் உறுப்பினர்கள் உள்ளனர். சமூக விரோத செயற்பாடுகள் இடம் பெறும்போது அதில் அரசியல்வாதிகளின் பங்கு நிச்சயம் ஒரு பகுதியளவில் காணப்படுகின்…
-
- 0 replies
- 120 views
-
-
எனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார் February 16, 2019 புதியஅரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்றபோதும், இன்னமும் தாம் செய்த அபிவிருத்தி திட்டங்களையே பிரதமர் ரணிலும் அமைச்சர்களும் திறந்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெயாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் இன்றைய நாட்களில், மிகவும் மந்தகதியான முறையிலேயே திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களையும் மக்களால் காண முடியாது என்று தெரிவித்த…
-
- 0 replies
- 208 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் ஈரானிய போர்க்கப்பல்கள் ஈரானியக் கடற்படையின் மூன்று கப்பல்கள் பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த புஷ்ஷர், லாவன், பயன்டோர் ஆகிய பெயர்களைக் கொண்ட ஈரானிய கடற்படைக் கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். நான்கு நாட்கள் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பல்கள், நாளை கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் செல்லும். http://www.puthinappalakai.net/2019/02/17/news/36445
-
- 0 replies
- 138 views
-
-
சிறிலங்கா – ஜப்பான் கடற்படை அதிகாரிகளுக்கிடையில் முதலாவது கலந்துரையாடல் இந்த கலந்துரையாடலின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம்,சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கென்ராரோ சொனோரா ஆகியோரும் பங்கேற்றனர். இந்த இரண்டு நாள் கலந்துரையாடலில் சிறிலங்கா கடற்படையின் கடல் நடவடிக்கை பணிப்பாளர் கொமடோர் சஞ்சீவ டயஸ் தலைமையிலான 10 கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனர். ஜப்பானிய தரப்பு குழுவுக்கு, கடல் அதிகாரிகள் பணியகத்தின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பிரிவின் பணிப்பாளர் கப்டன் ஹிரோயுக் ஹபுச்சி தலைமை தாங்கியிருந்தார். இந்த இருதரப்பு அதிகாரிகள் மட்டத்தி…
-
- 0 replies
- 135 views
-
-
பாதுகாப்பு உறவுகள் குறித்து சிறிலங்கா- அமெரிக்கா பேச்சு சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று முன்தினம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பிலேயே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும், இந்தப் பேச்சுக்கள் சுமுகமாக இடம்பெற்றதாகவும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தரப்பில் இருந்து, இந்தப் பேச்சுக்கள் தொடர்பான எ…
-
- 0 replies
- 120 views
-
-
2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம் முல்லைத்தீவு – நாயாறில் குருகந்த ரஜமகாவிகாரை 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்று சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார் நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அதன் சுற்றாடலை ஆக்கிரமித்து பௌத்த பிக்கு ஒருவர் பௌத்த விகாரையையும், புத்தர் சிலையையும் அமைத்து வருகிறார். அங்கு கட்டுமானங்களை மேற்கொள்ள நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையிலும், புத்தர் சிலை அண்மையில் திறந்த…
-
- 35 replies
- 2.9k views
-
-
வரணிக் கொள்ளைக்கும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புள்ளது February 16, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொடிகாமம் வரணியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துக்கும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புள்ளது என்பது அந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் ஊடாக அறியக்கிடைத்துள்ளது என காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர். இயற்றாலைக் கொள்ளைச் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீடு தொடர்பில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபரே கொள்ளையர்களுக்கு வழங்கியுள்ளார். அதனால் அந்தச் சம்பவத்தில் பொதுமக்கள்ளால் பிடிக்கப்பட்ட நபரும் இணைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் காவல்துறையினா கூறினர். சம்பவத்துடன் தொடர்புடைய ப…
-
- 1 reply
- 474 views
-
-
கொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள் By ஈழமதி On Feb 10, 2019 Share வடதமிழீழம், யாழ்ப்பாணத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிக்கிய இளைஞர் மக்களினால் கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கொடிகாமம் வரணி பகுதியில் இடம்பெற்ற களவு மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் இளைஞர்களிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின…
-
- 58 replies
- 4.8k views
-
-
இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் சிறீலங்கா திரும்ப வேண்டும் | தூதுவர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ “அவர்களைது சொந்த இடங்களிலேயே மீளக் குடியமர்த்த சகல உதவிகளையும் செய்வோம்” இந்தியாவில் தங்கியிருக்கும் தமிழ் அகதிகள் சிறீலங்காவிற்குத் திரும்ப வேண்டும். அவர்கள் சிறீலங்காவின் பிரஜைகள், என இந்தியாவிற்கான சிறீலங்காவின் தூதுவர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தமிழ் அகதிகளை நேரடியாகப் பார்த்து அவர்களது வாழும் சூழலை அவதானிக்கவென பெர்னாண்டோ அவர்கள் சென்னை சென்றிருந்தார். இதன் பின் அவர் ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது அவர் இதைத் தெரிவித்தார். Srilankan Tamil Refugees in Tamilnadu “அவர்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டும். ஒரு …
-
- 1 reply
- 451 views
-
-
ரவிராஜ்க்கு ஒரு நீதி லக்ஸ்மன் கதிர்காமருக்கு ஒரு நீதியா? மறப்போம் மன்னிப்போம்! – சுமந்திரன் By Admin On Feb 16, 2019 Share “யுத்தக்குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்த போரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என்று எங்கும், எப்போதும் சரித்திரத்தில் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல, போரின் போது ஒரு தரப்பார் மட்டும்தான் குற்றம் இழைத்தார்கள் என்றும் எங்கும் நடக்கவில்லை. உண்மையை கண்டறிந்து, மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் கூறியிருக்கிறார். இதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2009 இலிருந்து வலியுறுத்தி வருகிறது“ இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்தரன். இன்று (16) யாழில் நடந்த தமிழரசுக்…
-
- 0 replies
- 393 views
-
-
அனுராதபுர நகர சபை குப்பை சேகரிக்கும் நிலையத்திற்கு அருகாமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை குப்பை கூளத்தினை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, குறித்த தொப்பி மற்றும் வெடிமருந்துங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த இடத்துக்கு சென்று வெடிமருந்துகளை மீட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த பொருட்களை விசாரணைக்காக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், இரகசியமான முறையில் குறித்த பொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர், இவ்வாறு குப்பை கூளத்தில் வீசி சென்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண…
-
- 0 replies
- 663 views
-
-
1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது. இது சில வாதப் பிரதி வாதங்களை உண்டாக்கி உள்ளது. இது உள்ளூர் மக்களுக்கா அல்லது வெளியூர் மக்களுக்குமா. ஏனெனில் இந்த பகுதியில் boom என்பது, முக்கியமாக வெளியூர் கொள்வனவாளர்கள் வருகையால் தான். பல முதலீட்டாளர்கள் வெளியூர்காரர்கள் இவர்கள் இந்தவகை வீடுகளை BOI அனுமதியுடனே கட்டிக் கொள்கின்றனர். வாங்குபவர்களும் வெளியூர்காரர்கள் எனில், VAT அறவிடமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்மாடி வீடுகளுக்கு மட்டும் தானா அல்லது சாதாரணமான வீட்டு வியாபாரத்துக்கும் ஆனதா? அவ்வாறானால், இலங்கை முழுவதுமே வீட்டு விலைகள் கூடுமே.... வீடே வாங்க முடியாமல் தவிக்கும் மத்திய தர மக்கள் மேலதிக 15% வரிக்கு எங்க போவது, தாங்க…
-
- 0 replies
- 371 views
-
-
மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர் அதிசங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தலைமைத்தேரரை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று சந்தித்து கலந்துரையாடியதுடன், ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார். வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக கண்டிக்குச் சென்றுள்ார். அங்கு பௌத்த மதபீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்ததோடு, வடக்கில் தான் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். ஆளுநருடன்ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண பிரதி முதன்மை செயலர் ஏ.ப…
-
- 2 replies
- 612 views
-
-
விக்னேஸ்வரனுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு- வியாழன்று விசாரணை ஆரம்பம் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீதான விசாரணை வரும் 21ஆம் நாள் ஆரம்பிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்ரமசிங்கவின் முன்பாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விசாரணைகள் 21ஆம் நாள் ஆரம்பிக்கப்படும் என்று நீதியரசர் அறிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த போது, சி.வி.விக்னேஸ்வரனும், அமைச்சர்களாக இருந்த அனந்தி சசிதரன் மற்றும் சிவனேசன் ஆகியோரும…
-
- 1 reply
- 201 views
-
-
தலைமன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையை ஆரம்பிக்க இருக்கின்றோம் – மன்னாரில் பிரதமர் February 16, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தலை மன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையையும் இவ்வாறு காங்கேசன்துறையிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவைகளை நடாத்த இருக்கின்றோம் என்ற நற்செய்தியை உங்களுக்கு இவ்விடத்தில் கூறிக்கொள்ளுவதுடன் மன்னார் யாழ்ப்பாணம் ஒரு சுற்றுலா மையமாக அமைய இருக்கின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் அமைச்சர் றிசாட் பதியுதின் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரைய…
-
- 0 replies
- 373 views
-
-
மன்னார் மாவட்டத்தில் குளங்கள், வயல் நிலங்களை ஆக்கிரமிக்கும் வன இலாகா : February 16, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வனவளப்பாதுகாப்புத் திணைக்களத்தினர் மன்னார் மாவட்டத்தில் விவசாயக் குளங் களையும் வயல் நிலங்களையும் அடாத்தாகக் கையகப்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரும், கமநல கேந்திர நிலையங்களும் அதைத் தட்டிக்கேட்கவில்லை எனவும் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள நானாட்டான் மக்கள் அதிகாரி களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பி…
-
- 0 replies
- 245 views
-
-
றோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவை நீதிமன்றில் நிறுத்தக் கோரி, அவரது மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றில், சமர்ப்பித்திருந்த ஆட்கொணர்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சட்ட நடவடிக்கை கோரப்படாததைக் காரணம் காட்டி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தீபாலி விஜேசுந்தரவும், அர்ஜூன ஒபேசேகரவும் இந்த ஆட்கொணர்வு மனுவை நேற்று தள்ளுபடி செய்தனர். றோகண விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி விஜேசேகர தாக்கல் செய்த இந்த மனுவில் சட்டமா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சிறில் ரணதுங்க, முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர்…
-
- 0 replies
- 291 views
-
-
கடன், தேர்தல்கள், பூகோள உறுதியின்மையால் சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடி – உலக வங்கி எச்சரிக்கை 2019ஆம் ஆண்டு, சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு கணிக்கப்பட்டதை விட, சற்று அதிகமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. சிறிலங்கா அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. எனினும், இந்த ஆண்டு வளர்ச்சி 3.5 வீதமாக அதிகரிக்கும். எனினும், அதிகளவு கடன் மீளளிப்பு, பூகோள நெருக்கடிகள், தேர்தல்களால் ஏற்படக் கூடிய அரசியல் உறுதியற்ற நிலை போன்றவற்றினால், சிறிலங்கா கடுமுமையான நெருக்கடிகளை …
-
- 0 replies
- 187 views
-
-
பாகிஸ்தான் – சிறிலங்கா கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரண்டு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும், பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபார் மொகமட் அப்பாசிக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்புடன் தொடர்புடைய கூட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் குறித்து, கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. http://…
-
- 0 replies
- 624 views
-
-
இலங்கைப் படையினரால் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் விதைக்க முற்பட்ட நிலையில் போதைப் பொருள் பாவனையின் கூடாரமாக மாறி வரும் கொழும்பு- கொட்டாஞ்சேனையில் பெண் மீது துப்பாக்கிச் சூடு அரசியல் செல்வாக்கினால் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாக ஜே.வி.பி.குற்றச்சாட்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் ஒழிப்புத் தொடாபான விழிப்புணர்வு நடவடிக்கையை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், போதைப் பொருள் வியாபரத்துடன் இலங்கைப் படையினருக்குத் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேங்களில் படையினர்…
-
- 0 replies
- 366 views
-
-
இனியும் ஜெனீவாவை நம்பியிருக்கலாமா? By வானகன் On Feb 15, 2019 Share ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்காவுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்வி சகல மட்டங்களிலும் எழுப்பப்பட்டுள்ளது. ஜெனீவா கூட்டத் தொடரை இலக்கு வைத்த இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் அனைத்துத் தரப்புக்களினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ.நா.வின் உயர் மட்டக்குழு ஒன்று சிறிலங்காவிலும், தமிழர் தாயகப் பகுதிகளிலும் விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கத் தரப்பும், தமிழ் மக்களும் எவ்வாறான உணர்வுகளைக் கொண்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் நாடி பிடித்துப் பார்ப்பதற்க…
-
- 0 replies
- 714 views
-