ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
1 Min Read January 9, 2019 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் இன்று காலை 11 மணியளவில் உலங்குவானூர்தி மூலம் முல்லைத்தீவுக்கு சென்றிருந்த அவரை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வரவேற்றுள்ளார். தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க…
-
- 3 replies
- 948 views
-
-
கருணா செய்த அநியாயங்களிலிருந்து, தப்பிக்கவே முடியாது: யோகேஸ்வரன் கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது எனவும், அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். கருணா அம்மான் எனப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மைக்காலமாக வெளியிட்டுவரும் கருத்துக்களுக்குப் பதிலளித்து ஊடகங்களுக்கு இன்று (புதன்கிழமை) தெளிவுபடுத்துகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நீதி, தர்மம், நியாயம் எப்போதாகிலும் பதில் சொல்லித்தான் ஆகும். அதிலிருந்து கருணா அம்மான் தப்பிக்க முடியாது. அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவா…
-
- 1 reply
- 556 views
-
-
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் January 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் மின் கம்பி கூடியிருந்த மக்கள் மத்தியில் அறுந்து விழுந்ததில் 11 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக வீரசிங்கம…
-
- 1 reply
- 860 views
-
-
ரெஜினோல்ட் குரே, தேசிய இரத்தினக்கல், தங்க ஆபரண அதிகார சபையின் தலைவரானார்… January 10, 2019 வடமாகாண முன்னாள ஆளுனர் ரெஜினோல்ட் குரே தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த ரெஜினோல்ட் குரே அண்மையில் ஜனாதிபதியினால் பதவிநீக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மர கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/2019/109483/
-
- 0 replies
- 359 views
-
-
இராசாயன குண்டுகளைப் பயன்படுத்தாவிட்டால் ஏன் சர்வதேச விசாரணைக்குப் பயப்பட வேண்டும் : சிறீதரன் இறுதி யுத்தத்தில் இலங்கைப் படையினர் இராசாயன குண்டுகளையோ, கொத்தணி குண்டுகளையே பயன்படுத்தவில்லை என்றால், ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாய கட்டளை சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேசத்தின் விசாரணையை அரசாங்கத்திலுள்ளவர்கள் எதிர்க்கின்றார்கள். ஒரு இனத்தின் மீதான இனவழிப்பை மேற்கொள்ளவில்லை என்றால் ஏன் அந்த அரசாங்கம் பயப்பட வேண்டும். அ…
-
- 0 replies
- 412 views
-
-
காணாமல்போன மகனை தேடி அலைந்த தாய் மகனைக் காணுமுன் மரணமான சோகம் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த முல்லைத்தீவை சேர்ந்த தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு தேவிபுரம் 'அ 'பகுதியை சேர்ந்த சண்முகராசா விஜயலட்சுமி (வயது68) என்பவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணாமல் போயிருந்தார். அன்று தொடக்கம் தனது மகனை தொடர்ந்து தேடி வந்ததோடு பல போராடடங்களிலும் கலந்துகொண்டு தனது மகனை தேடி வந்தார். மகன் காணாமல் போன நாளிலிருந்து மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார். வடக்க…
-
- 1 reply
- 532 views
-
-
வடக்கு ஆளுநர் கைதடி முதியோர் இல்லத்திற்கு விஜயம் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கைதடியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டார். கைதடி முதியோர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அங்குள்ள முதியவர்கள் வரவேற்றனர். அவர்களுடனும் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொண்ட ஆளுநருக்கு உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார். ஆளுநரின் இந்த விஜயத்தின் போது ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவனும் உடனிருந்தார். http://www.virakesari.lk/article/47816
-
- 3 replies
- 964 views
-
-
போர்க்குற்றவாளி சவீந்திர சில்வாவை ராணுவப் பிரதானியாக்கிய சிங்களப் பேரினவாதம் 2009 மே மாதத்தில் முடிவுற்ற இனவழிப்புப் போரில் ஒபெரும்பாலான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களில் ஈடுபட்ட சிங்கள ராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ராணுவப் பிரதானியாகச் சிங்களம் இன்று அறிவித்திருக்கிறது. மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிங்களத் தூதுவராகக் கடமையாற்றிய காலத்தில் அங்கிருந்த தமிழ் ஆர்வலர்களுக்கும், சில பத்திரிக்கையாளர்களுக்கும் அச்சுருத்தல் கொடுத்த இந்தப் போர்க்குற்றவாளி பின்னர் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அழைக்கப்பட்டதும் நினவிருக்கலாம். அண்மைக் காலம்வரை சிங்கள ராணுவத்திற்கான மனிதவுரிமைகள் கப்பகத்தின் தலைமை அதி…
-
- 1 reply
- 609 views
-
-
பொங்கலன்று பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தீர்மானம் தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் இன்று (09) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை 688 ஆவது நாளாக முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இன்று மதியம் 12.00 மணிக்கு தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து நடைபவனியாக வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள உண்ணாவிரதக் கொட்டகையை சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த, தாயகத்தில் கையளிக்கப்பட்…
-
- 0 replies
- 433 views
-
-
ஒஸ்லோ பிரதி முதல்வர் குணரட்ணம் கம்சி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். குணரட்ணம் கம்சியின் தாயார் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தையும் தந்தை கைதடியையும் பூர்வீகமாக கொண்டவர்கள். இவர் தனது நான்கு வயதில் நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். 2007ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் முதன் முதலாக மாநகர உறுப்பினராகத் தெரிவானார். இன்று வரை அந்த மாநகரத்தின் உறுப்பினராகத் தொடர்கின்றார். 2015ஆம் ஆண்டுமுதல் ஒஸ்லோ பிரதி முதல்வராகவும் செயற்பட்டு வருகின்றார். இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் அண்மையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளார். அவருடனான செவ்வி. …
-
- 6 replies
- 1.5k views
-
-
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த காலத்திலும் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட நிலையிலும் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை. ஆனால் இம்முறை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தமிழர் ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இந்நியமனம் ஜனாதிபதி மைத்திரிக்கு சர்வதேசத்தின் பார்வையில் நன்மதிப்பைக் கொடுக்கக்கூடியதாகும். அதேநேரம் ஆளுநர் தொடர்பில், தமிழர்களின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் என்ற கருத்து நிலையும் ஏற்படவே செய்யும். இவை ஒருபுறமிருக்க, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரா…
-
- 4 replies
- 923 views
-
-
கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மற்றுமொரு சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு உயிரிழந்தவர்கள் பளை புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http:/…
-
- 5 replies
- 2.6k views
-
-
முஸ்லீம்களாக மாறிய சம்மந்தன் சுமந்திரன்?; அதிர்ச்சியில் கூட்டமைப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசுடன் பங்கு பற்றி தமிழ் மக்கள் விடயத்தில் உறுதியான தீர்வினை பெற்றுக் கொடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோரை முஸ்லிம்களாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், முஸ்லிம்களுக்கு 13 அமைச்சுக்களையும், ஆளுநரையும் பெற்றுக்கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாழ்த்து என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது காட்டும் உச்சக்கட்ட கோவத்தின் வெளிப்பாடாகவே கருதப்ப…
-
- 3 replies
- 945 views
-
-
வடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மதத் தலைவர்களின் ஆசிகளுடன் உத்தியோகபூர்வமாகக் கடமையேற்றார். https://newuthayan.com/story/10/வடக்கு-ஆளுநர்-சுரேன்-ராகவன்-கடமையேற்றார்.html
-
- 0 replies
- 680 views
-
-
ஹிஸ்புல்லாவையும் சுரேனையும் நியமித்தது மைத்திரியே … குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஹிஸ்புல்லாவையும் சுரேனையும் நியமித்தது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜனாதிபதியின் நோக்கம் ஒன்றே என்பதனை புரிந்துகொள்ள முடியும். அத்துடன் வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவன் நல்லவரா என்பது பிரச்சனை அல்ல என தெரிவித்த கஜன் அவரது செயற்பாடே முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2019/109443/
-
- 0 replies
- 798 views
-
-
1 Min Read January 9, 2019 Ad சிங்கராஜ தேசிய வனத்திற்கான லங்காகம – கெகுனஎல்ல பகுதியில் வீதி அபிவிருத்தி என்னும் பெயரில் பாரிய காடழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய அமைப்பாளர் வேகடவல ராகுல தேரர் தெரிவித்துள்ளார். இந்த வீதியை அபிவிருத்தி செய்வதன் ஊடாக சிங்காரஜ வனம் இரண்டாக பிரியும் ஆபத்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் இந்த வீதியை அபிவிருத்தி செய்வதன் ஊடாக எவ்வித …
-
- 0 replies
- 705 views
-
-
January 9, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் பிரதிவாதிகள் இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்…
-
- 0 replies
- 317 views
-
-
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… நாட்டின் அபிவிருத்திக்காக மக்கள் நிலத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று யுத்தம் முடிந்த பின்னர் வன்னி மாவட்ட படைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஒருமுறை குறிப்பிட்டார். கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடங்களை மறந்துவிட வேண்டும் என்றும் சொன்னார். இந்தச் சொற்கள் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை மிகவும் உக்கிரமாக்கியதே தவிர, அவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடவில்லை. பாரிய அரச அழுத்தங்கள், அச்சுறுத்தல்களை தாண்டிய நெடிய வெற்றிப் போராட்டத்தை இம் மக்கள் நடத்தி வருவது வரலாற்றுச் சிறப்பானது. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து பத்து …
-
- 0 replies
- 586 views
-
-
புதூர் ஆயுதப் பொதி – பிரதான சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பினார் வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்து, ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புதூரில் சிறிலங்கா காவல்துறையினரைக் கண்டதும், நபர் ஒருவர் தனது கையில் இருந்த பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்றிருந்தார். இதையடுத்து, சிறிலங்கா காவ…
-
- 1 reply
- 751 views
-
-
திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா? திருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு அமெரிக்காவுக்கு, அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், விமல் வீரவன்ச இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, “இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது அமைச்சின் கீழ் இந்த விடயம் இல்லை. இது பாதுகாப்பு அமைச்சுக்கு உட்பட்ட விவகாரம், பாதுகாப்பு அமைச்சிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பதிலளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக சிறிலங்கா அதிபரே பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 444 views
-
-
எல்லை மீறிச் செயற்படுகிறார் தயான் ஜெயதிலக – பிமல் ரத்நாயக்க ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலகவின் செயற்பாடுகள் தொடர்பாக, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அண்மைய கூட்டத்தில் கரிசனை எழுப்பப்பட்டதாக, ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று, இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குமறைகள் குறித்த விவாதத்தில், உரையாற்றிய அவர், “ஒரு தூதுவராக தயான் ஜெயதிலகவின் செயற்பாடுகள் கேள்விக்குரியது. தயான் ஜெயதிலக சரியான கல்வித் தகைமையைக் கொண்டிருக்கலாம். ஆனால், அவரது செயற்பாடுகள் ஒரு அரசியல் விஞ்ஞானி என்பதை விட, அரசியல் பரப்புரையாளர் என்பதாகவே உள்ளது. அவரது நடத்…
-
- 0 replies
- 627 views
-
-
சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக பெர்னான்டோ மன்னிப்புக் கோரினார் அரசியல் குழப்பங்களின் போது, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ நேற்று தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார். சிறிலங்கா அதிபரால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயன்றனர். கடந்த நொவம்பர் 16ஆம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்காக, மகிந்த ராஜபக்ச ஆதரவு உறுப்பினர்கள், சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்திருந்…
-
- 0 replies
- 703 views
-
-
வடக்கின் புதிய ஆளுநருக்கு சம்பந்தன் அறிவுரை யுத்தத்தினால் வடக்கு மகாணமும், அங்குள்ள மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்களின் தேவையறிந்தும், அவர்களின் மனதை வெல்லும் வகையிலும் திறம்பட பணியாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வட மாகாணத்தின் புதிய ஆளுநரான சுரேன் ராகவனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியேபோதே அவர் இந்த ஆலோசனையை வட மாகாண புதிய ஆளுநருக்கு வழங்கியுள்ளார். அத்துடன் இந்த சந்திப்பானது திருப்பதிகரமாக அமைந்ததாகவும், இதன்போது வடக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான கல்வி, காணி, தொழில், அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் …
-
- 0 replies
- 376 views
-
-
சாவகச்சேரி வர்த்தக நிலையத்தில் 10 இலட்சம் கொள்ளை January 9, 2019 யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று இன்று (09) அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது என சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து சி.சி.டீவி கண்காணிப்பு கருவியின் இணைப்புக்களை துண்டித்து விட்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இதன்போது, சுமார் ஏழு லட்சம் ரூபா பணம் மற்றும் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என சுமார் பத்து லட்சம் கொ…
-
- 0 replies
- 389 views
-
-
வடக்கு மாகாண புதிய ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்பு January 9, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புதிய வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட சுரேஸ் ராகவன் இன்று காலை 10 மணிக்கு யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். வடமாகாண ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே அண்மையில் ஜனாதிபதியினால் பதவி விலக்கப்பட்ட நிலையில் புதிய ஆளுநராக சுரேன் ராகவன் ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வட மாகாணத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் சுரேன் காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந் நிகழ்வினை தொடர்ந்து புதிய ஆளுனரை வரவேற்கும் நிகழ்வு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.…
-
- 0 replies
- 445 views
-