ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
முட்டாள்தனம் செய்து விட்டார் மகிந்த – கோமின் தயாசிறி மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் நாள் வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மகிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று ராஜபக்ச விசுவாசியான, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். “பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, மகிந்தவுக்கு யார் ஆலோசனை கூறினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மகிந்தவின் சட்டவாளராக இருந்த போது, எனது ஆலோசனைகளை, அவர் சரியாக நடைமுறைப்படுத்தி வந்தார். இப்போது நடக்கும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்து, இப்போது நாட்டில், பிரதமரும், அ…
-
- 0 replies
- 376 views
-
-
ரணிலுக்கு நிபந்தனை விதிப்பது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக, நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இறுதி முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐதேமு ஆட்சியமைப்பதற்கு, கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதற்கு, முன்னர், தமிழர்களின் நலன்கள் தொடர்பாக எழுத்துமூலம் உறுதிமொழி பெற வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ வலியுறுத்தியுள்ளது. அத்துடன், ரெலோவின் கோரிக்கைக்கு அமைய, நேற்று மாலை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவரின் …
-
- 0 replies
- 235 views
-
-
குற்றவியல் பிரேரணை தான் ஒரே வழி – மங்கள சமரவீர சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் பிரேரணை கொண்டு வருவது தான் ஒரே வழி என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய பின்னரே, அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். “சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில், மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை, அவர் ஆட்சி நடத்த தகுதியற்றவர் என்பதை, சந்தேகமின்றி நிரூபிக்கிறது. பொய்கள், அதற்கு மேல் பொய்கள், உணர்ச்சிவாதம், தவறான முடிவு என்று அவரது நிலை உள்ளது. இந்தநிலையில் குற்றவியல் பிரேரணை ம…
-
- 0 replies
- 404 views
-
-
வவுனியாவில் நேற்று நண்பகல் 11.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் ஈரப்பெரியகுளம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் ரயில்ப் பெட்டியின் கடைசி இரு பெட்டிகளும் துண்டித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது இறுதி பெட்டியில் கடமையிலிருந்த ரயில் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கீழே வீழந்து காயமடைந்துள்ளார். இவ்விபத்து குறித்து அனுராதபுரம் ரயில் நிலையத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற யாழ் தேவி ரயில் வவுனியா ரயில் நிலையத்தினை சென்றட…
-
- 5 replies
- 852 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ இழைத்த முட்டாள்தனம்! - சட்டத்தரணி கோமின் தயாசிறி கவலை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் ம் திகதி வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மஹிந்த ராஜபக்க்ஷ பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று ராஜபக்ச விசுவாசியான, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். “பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, மஹிந்தவுக்கு யார் ஆலோசனை கூறினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மகிந்தவின் சட்டவாளராக இருந்த போது, எனது ஆலோசனைகளை, அவர் சரியாக நடைமுறைப்படுத்தி வந்தார். இப்போது நடக்கும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்து, இப்போது நாட்டில், பிரதமரும், அமைச்ச…
-
- 0 replies
- 316 views
-
-
மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு மட்டக்களப்பு பொலிஸ் தலைமைப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (புதன்கிழமை) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தலைப்பகுதி முற்றாக சிதைவடைந்துள்ளதன் காரணமாக சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் ரயில்வே பகுதியினரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ…
-
- 0 replies
- 328 views
-
-
இலங்கைக்கு தொடர்ச்சியான அழுத்தம் பிரயோகிக்கப்படும் – பிரித்தானியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்படும் என பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரின் வலியுறுத்தலை அடுத்து, பிரித்தானிய அமைச்சர் இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதன்போது, ஜெனிவா…
-
- 0 replies
- 349 views
-
-
தேசிய தொலைக்காட்சி பகுதியில் பதற்றம்! அதிரடி படையினர் குவிப்பு Report us Vethu 16 hours ago தேசிய தொலைக்காட்சி அலுவலக பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் தேசிய தொலைக்காட்சி சேவைக்குள் நுழைய முற்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் திகதி ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்ற அன்று, இரவு வேளையில் தேசிய தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தது. அங்கிருந்த ஊழியர்களை உடனடியாக வெளியேறும…
-
- 0 replies
- 399 views
-
-
மைத்திரி பதவி விலக நேரிடும்! அம்பலப்படுத்தும் அவரின் நெருங்கிய நண்பர் Report us Rakesh 58 minutes ago நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட்டு, அவமானப்பட்டு தலைகுனிய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று பிரதமரும் இல்லை, அமைச்சரவையும் இல்லை. எனவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியே மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதி இதற்கு தடையாக இருக்கின்றார். எனவே, அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் மனநல மருத்துவர்கள் Report us Steephen 29 minutes ago ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏதோ மனநோய் ஒன்றினால், பாதிக்கப்பட்டுள்ளதாக தாம் உணருவதாக கூறி, மனநல மருத்துவர்கள் சிலர் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி கடந்த சில மாதங்களாக நடந்துக்கொண்ட விதத்தை ஆராயும் போது தாம் இதனை உணர்வதாகவும் ஜனாதிபதியை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இந்த மருத்துவர்கள் கருதுகின்றனர். ஏதோ ஒரு வகையில், ஜனாதிபதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள போர் மற்றும் சமாதானத்தை அறிவிக்க மு…
-
- 0 replies
- 621 views
-
-
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்ட புதிய நெருக்கடி நிலை Report us Steephen 4 hours ago சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இலங்கைக்கு நீண்டகால வெளிநாட்டு அந்நிய செலாவணி கடன் வழங்குதல் தொடர்பான தரப்படுத்தலை B+ இல் இருந்து B நிலைமைக்கு குறைத்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமரை நியமித்ததுடன் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, கொள்கைகளில் காணப்படும் நிச்சயமற்ற நிலைமை, வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படாமை, வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள ஆபத்து போன்ற காரணங்களின் அடிப்படையில், இலங்கை கீழ் நிலைக்கு தரப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள…
-
- 0 replies
- 638 views
-
-
தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை…. மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சுப் பதவிகளை தொடருவதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஸ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தா…
-
- 1 reply
- 393 views
-
-
December 4, 2018 “புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பது அல்லது பிரதமர் மற்றும் அமைச்சரவை இல்லாது நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே நடத்திச் செல்வது ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய நிலைமைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார்” என விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். “பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து அவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத் தீர்ப்பில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை மட்டுமே பிறப்…
-
- 1 reply
- 652 views
-
-
முல்லைத்தீவில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை உயிரிழப்பு. முல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில் புகையிரதத்துடம் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் கடந்தகாலங்களிலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/முல்லைத்தீவில்-புகையிரத/
-
- 6 replies
- 1.1k views
-
-
December 4, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஸ …
-
- 0 replies
- 302 views
-
-
December 4, 2018 பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் முதலில் சட்ட ரீதியான அரசாங்கம் ஒன்றை அமைத்து பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் என்று கூறிக் கொண்ட அனைவரும் அரசியலமைப்பின் படி செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோ…
-
- 0 replies
- 230 views
-
-
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை -அ. அகரன் ‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்’ (553) என்ற திருக்குறள் வாசகத்தின் பிரகாரம், ஒவ்வொரு நாளும் குடிமக்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, முறை செய்யாத அரசன், நாள்தோறும் மெல்ல மெல்லத் தன் நாட்டை இழப்பான் என்பதற்கிணங்க, அரசியல் என்பது அமைந்திருக்க வேண்டும். அரசியல் என்பது, வெறுமனே மனித செயற்பாடோ அல்லது மனித மனங்களால் பின்னப்பட்ட சித்தார்ந்தமோ அல்ல. அது உன்னதமான கலை. அந்தக் கலையைச் செவ்வனே கற்காத, செயற்படுத்த முடியாதவர்கள் அந்தக் கலைக்குள் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதென்பது ஏற்புடையதல்ல. இது அரசியல் என்ற கலைக்கு மாத்திரமின்றி, அனைத்துக் கலைகளுமே இந்த வகைக்குள் வரையறுக்கப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
December 2, 2018 தமது ஆட்சியை பலமாக அமைத்தவுடன் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்வதே முதல் நடவடிக்கை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெற்ற மிக பெரிய ஊழலான மத்திய வங்கி ஊழல் குற்றத்தில் முதல் குற்றவாளி ரணில் விக்கிரமசிங்கவே எனவும் அவரை கைவிலங்கு போட்டு சிறையில் அடைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் நிலையான அரசாங்கத்தை அமைப்பது குறித்து கருத்தினை வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீதிமன்றின் தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளதாகவும் தீர்ப்ப…
-
- 2 replies
- 1k views
-
-
புதிய பிரதமராக சமல் அல்லது நிமல் – சிறிலங்கா அதிபர் ஆலோசனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, சமல் ராஜபக்ச அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை, கூடிய விரைவில் பிரதமராக நியமிப்பது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஆலோசித்து வருவதாக, அதிபர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையே நியமிக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசிய முன்னணி, உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதால், சமல் ராஜபக்ச, அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து சிறிலங்கா அதிபர், ஆலோசித்து வருகிறார் என கூறப்படுகிறது. அடுத்த கட்டம் அதேவேளை, …
-
- 1 reply
- 591 views
-
-
பிரதமருக்கு நீதிமன்றம் தடை – கொமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று சட்டவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ”இப்போது, இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக் கொண்டு, பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டியது சிறிலங்கா அதிபரின் அரசியலமைப்புக் கடமையாகும். கொமன்வெல்த் வரலாற்றைப் பின்பற்றி சிறிலங்கா அதிபர் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் போது, மகிந்த தர…
-
- 0 replies
- 428 views
-
-
பிரபாகரன் குண்டுகளால் செய்ய முடியாதவற்றை, சுமந்திரன் பேனாவால் செய்கிறார்…. December 4, 2018 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு ஜனவரி வரை வடக்கு கிழக்கில் ஒரு பட்டாசு கூட வெடிக்கவில்லை. 2015 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதியில் இருந்து ஆவா குழு உருவானது. அன்று வேலுப்பிள்ளை பிரபாகரனினால் குண்டுகளால் செய்ய முடியாமல் போனதை இன்று சுமந்திரன் பேனாவால் செய்துகொண்டுள்ளார் என ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று சுமந்திரன் தனது மதிநுட…
-
- 0 replies
- 558 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு…. December 4, 2018 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு இன்று பிற்பகல் மணியளவில் கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டு 54 உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ஸவின் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில் இன்று கட்சியின் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது அரச தலைவரின் விசேட உரையையும் ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார். அத்துடன் இந்த மகாநாட்டின்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 341 views
-
-
வடக்கில் யுத்தத்தின் பின்னர் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரிப்பு December 3, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து உள்ளதாக ஜெப்பூர் நிறுவன வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , எமது நிறுவனத்தில் யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயன்பெற்று உள்ளனர். அவர்களுக்கு எமது நிறுவனத்தின் ஊடாக செயற்கை அவயங்கள் பொருத்தி உள்ளோம். யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் விபத்துக்கள் மூலம் அதிகளவானவர்கள் அவயங்களை இழந்த நிலையில் செயற்கை அவயங்களை எமது நிறுவனத்தின் ஊ…
-
- 0 replies
- 549 views
-
-
ஒதியமலைப்படுகொலையை நினைவுகூறும் நினைவுத் தூபி! November 30, 2018 குளோபல் தமிழ் செய்தியாளர்…. ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத் தூபி அமைக்கும் பணி நிறைவுபெற்று வருகின்றது. எதிர்வரும் 2ஆம் திகதி இப் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் அடிப்படையில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டு வருகின்றது. வவுனியா வடக்கில் உள்ள ஒதியமலைப்படுகொலை 02.12.1984ஆம் ஆண்டு இலங்கை அரச படைகளால் நடாத்தப்பட்டது. இதன்போது 32 அப்பாவிப் பொதுமக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். கிராமத்தில் வைத்து அப்பாவி மக்கள் துடிதுடிக்க வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த நிகழ்வு அந்த மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை உருவாக்கிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கின் முதலாவது மாற்றுத்திறனாளிக்ளுக்கான சாரணர் படை சத்தியப்பிரமாணம். கிழக்கில் முதலாவது மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை நேற்று (திங்கட்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், சின்னமும் சூட்டப்பட்டது. மட்டக்களப்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம், விசேட தேவையுடையோர் சார்ந்து செயற்படும் அமைப்புகள் ,இணைந்து பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ,இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ யின் அனுசரணையில் , 32பேர் கொண்ட சாரணர் படை ஆரம்பிக்கப்பட்டு சின்னஞ் சூட்டப்பட்டது. குறித்த நிகழ்விற்கு ப…
-
- 0 replies
- 763 views
-