Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒரு மாத காலத்தில் மஹிந்த ஹெலிகொப்டருக்காக செலவு செய்த பணம் : சற்றுமுன்னர் அதிர்ச்சி தகவல் வெளியானது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் ரவி கருணாநாயக்க எம்.பி. சபையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாதகாலம் முடிவடையும் நிலையில், உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார். http://www.virakesari.lk/article/45403

  2. மஹிந்த அரசங்கத்திற்கு எதிராக நாளையும் ஒரு பிரேரணை – சரத் பொன்சேகா நாடாளுமன்றம் நாளை காலை மீண்டும் கூடும் போது மஹிந்த அரசங்கத்திற்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை தடை செய்து பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து நாடாளுமன்ற கட்டட தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்றம் நாளை காலை மீண்டும் கூடும் போது, நாம் நாளைய தினத்திலும் ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற…

  3. வடமாகாணத்தில் கல்வியை வளர்ச்சியடைய செய்வது தொடர்பில் விசேட கவனம் November 29, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர், வடமாகாணத்தில் கல்வியை வளர்ச்சியடைய செய்வதற்கு ஏனைய மாகாணங்களுக்கு அப்பாற்பட்ட சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். அது தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்தி வருவதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வசாவிளான் வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் இன்று (29.11.2018) கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ஏனைய மாகாணங்களில் உள்ள சட்டம் இங்கே போதாமல் இருக்கிறது கல்வித்துறையினை ஒழுங்குபடுத்துவதற்கு கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பாத…

  4. வடமாகாண மகளீர்விவகார அமைச்சு முறைகேடான முறையில் 320 இலட்சம் ரூபா செலவழிப்பு – விசாரணைக்குழு அமைப்பு November 29, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண மகளீர்விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளார். வடமாகாண அவைத்தலைவர் சிவிகே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள் பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். …

  5. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து ஒன்றில் உள்ள குறைப்பாடுகள் மற்றும் அதனால் எதிர்கொண்ட எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பயணி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பேருந்தின் உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்தவேளை, அவர் பயணியுடன் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியமை தொடர்பான ஒலிப்பதிவையும் அந்தப் பயணி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான சேவையில் நேற்றிரவு ஈடுபட்ட தனியார் அதிசொகுசு பேருந்தில் பயணித்த இளைஞர்கள் சிலர், ஆசனங்களில் மூட்டைப்பூச்சி கடிக்கு இலக்காகி உள்ளனர். உடனே பயண சீட்டில் இருந்த உரிமையாளரின்…

  6. தமிழரின் இரத்தம் தோய்ந்த கரங்களுக்கு எம்மவரொருவர் முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என தொடங்குபவர் 140 ஆயிரம் எமது உறவுகளை கொன்று குவித்த அரசுடன் இணைந்து எமது மக்களின் இரத்தம் தோய்ந்த அந்தக் கரங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார் என இலங்கைத் தரழரசுக் கடசியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இரத்தம் தோய்ந்த கரத்தை முத்தமிடுவதற்காகவா எங்களுடைய கரங்களால் உங்களுக்கு வாக்களித்தோம் என்பதை எமது மக்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு - செங்கலடி, பதுளை வீதியில் கொடுவாமடு கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. இ…

  7. “எழு நீ“ நிகழ்விற்கு சி.வியை அழைத்தமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு. “எழு நீ“ நிகழ்விற்கு தமிழ் மக்கள் கூட்டனியின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகான அமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரனை அழைத்தமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் குறித்த நிகழ்வினையும் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. வவுனியா நகரசபைக்கு ஒரு கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியதுடன் பல பேரின் வேலைவாய்ப்புக்களையும் இழக்கச் செய்து பல வர்த்தக நிலையங்களை மூடச் செய்த முன்னாள் வடமாகாண முதலமைச்சரை எவ்வாறு “எழு நீ“ நிகழ்விற்கு அழைக்க முடியும் என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் தி. செந்தில் ரூபன் கேள்வியெழுப்பியுள்ளார். வவுனியா நகரசபையின் 8ஆவது சபை அமர்வு நேற்று ப…

  8. படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு இன்று வியாழக்கிழமை, இக்கூட்டமைப்பு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும், மேற்படி கடிதத்தில் நாடள…

  9. ராணுவத்துக்குப் புணர்வாழ்வளிக்கத் தேவையில்லை - போர்க்குற்றவாளிகளுக்கு வெள்ளையடிக்கும் இந்து ! சிறிலங்காவின் ராணுவத்தளபதி, மஹேஸ் சேனநாயக்காவுடன் தமிழ்விரோதப் பார்ப்பனப் பத்திரிக்கை "ஹிந்து" செவ்வியொன்றை மேற்கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வினாக்கள், வேண்டுமென்றே விடப்பட்ட கேள்விகள் என்று, ராணுவத்தினை நியாயப்படுத்தும் நோக்கில் இச்செவ்வி அமைக்கப்பட்டிருந்தது. இச்செவ்வியிலுருந்து சில சுவாரசியமான பகுதிகளைப் பார்க்கலாம், கேள்வி : பாதுகாப்புத்துறையினரை சீரமைப்பது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் ? பதில் : " ராணுவத்தைச் சீரமைக்க வேண்டிய எந்தத் தேவையும் எமக்கு இல்லை. சமுதாயத்தைச் சீரமைப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்று நாம் முழுமையாக நம்பு…

    • 3 replies
    • 566 views
  10. ரணிலையும் மகிந்தவையும் நாங்கள் நம்பவில்லை - தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு புதியதொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம் மீறப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரணில் விக்கிரமசிங்கவையோ மகிந்த ராஜபக்சவையோ நாங்கள் நம்பவில்லை. இவ்விருவரும் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்வார்கள் என்று நாங்கள் நம்பவில்லை அத்துடன் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நாசகார செயலை எதிர்க்காமல் பார்த்துக் கொண்டிருப்போமேயானால் சிறுபான்மையினருக்கு மிகப்பெ…

  11. இர­ணை­ம­டுக் குளத்­தின் கீழ் 2019ஆம் ஆண்டு சிறு­போ­கத்­தில் 12 ஆயி­ரத்து 500 ஏக்­கர் நெற்­செய்கை மேற்­கொள்ள அனு­ம­திக்க முடி­யும் என்று பிராந்­திய நீர்ப்­பா­ச­ னப் பொறி­யி­ய­லா­ளர் சுதா­க­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இர­ணை­ம­டுக் குளத்­தின் கொள்­ள­ளவு 34 அடி­யில் இருந்து 36 அடி­யாக உயர்த்­தப்­பட்­டது. தற்­போது 34 அடிக்­குத் தண்­ணீர் சேமிக்­கப்­பட்­டுள்­ளது. சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர்­வரை அணைக்­கட்­டின் பாது­காப்­புக் கருதி 32 ௮டி உய­ரத்­துக்கு மட்­டுமே தண்­ணீர் தேக்­கப்­பட்­டது. தற்­போது 34 அடி­யா­கக் காணப்­ப­டும் தண்­ணீர் மழை வீழ்ச்சி கிடைத்­தால் 36 அ…

  12. முல்­லைத்­தீவு மாவட்­டம் ஐயங்­கன்­கு­ளம் பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரின் ஆழ ஊடு­ரு­வும் படை­ய­ணி­யின் கிளை­மோர்த் தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நேற்­று­முன்­தி­னம் அஞ்­சலி செலுத்தப்பட்டது. கிளை­மோர்த் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட 8பேரும் அடக்­கம் செய்­யப்­பட்ட இடத்­தில் நேற்­று­முன்­தி­னம் மதி­யம் 12.30 மணிக்கு அஞ்­சலி நிகழ்­வு­கள் இடம்­பெற்­றன. 2007ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27ஆம் திகதி மதி­யம் 12.30 அள­வில் இரா­ணு­வத்­தி­ன­ரின் ஆழ ஊடு­ரு­வும் படை­யி­னரின் கிளை­மோர்த் தாக்­கு­த­லில் அதே கிரா­மத்­தைச் சேர்ந்த பாட­சா­லைச் சிறு­மி­கள் நால்­வர் உட்­பட 8 பேர் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளின் உடல்­…

  13. நிபந்தனைகளை ரணிலிடம் மட்டும் விதிக்காமல் மஹிந்த ராஜபக்சாவுக்கும் கூட விதிக்கலாமே என்கிறார் சிவாஜிலிங்கம் நிபந்தனையை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் விதிக்க வேண்டும் என அவசியம் இல்லை. மஹிந்த ராஜபக்சாவுக்கும் கூட விதிக்கலாம். அதைவிடுத்து கண்ணை மூடி கொண்டு எவரையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. சமகாலத்தில் உள்ள அரசியல் நிலமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேரம் பேச கூடிய சக்த…

  14. சாவ­கச்­சேரி பொதுச் சந்­தை­யின் கட­லு­ணவு விற்­ப­னைப் பிரி­வில் குளி­ரூட்­டப்­பட்ட நிலை­யில் பழு­த­டைந்த மீன்­கள் மற்றும் கட­லு­ண­வு­கள் பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­க­ரால் நேற்று கைப்­பற்­றப்­பட்டு அவை அழிக்­கப்­பட்­டன. குறித்த கட­லு­ணவு விற்­ப­னைப் பிரி­வில் பழு­த­டைந்த மீன்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது என்று பொது­மக்­கள் கொடுத்த முறைப்­பாட்டை அடுத்து அங்கு சென்ற நக­ர­ச­பை­யின் பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர் பி.தளிர்­ராஜ், பெட்­டி­க­ளில் வைக்­கப்­பட்­டி­ருந்த மீன்­க­ளைப் பரி­சோ­தித்­த­போது 5 பெட்­டி­க­ளில் பழு­த­டைந்த நிலை­யில் இருந்த மீன்­க­ளைக் கைப்­பற்றி உரி­மை­யா­ளர்­க­ளின் சம்­ம­தத்­து­டன் அவற்றை அழித்­தார். …

  15. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, அரசியல் நெருக்கடியை விரைவில் சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்வது குறித்து இருவரும் தீவிரமாக ஆராய்ந்தனர். அத்துடன் இச் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆளும்கட்சியின் …

  16. யாழ் முஸ்லிம்களின் வீட்டுதவிக்கு போடப்படும் தடைகள் குறித்து பிரான்ஸ் தூதரகத்துடன் கலந்துரையாடல் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் 2000 இக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் யாழ் சென்று மீளக் குடியேறுவதற்கான பதிவுகளை யாழ் பிரதேச செயலகம் மற்றும் யாழ் கச்சேரியின் மீள்குடியேற்ற அதிகாரிகளுடன் மேற்கொண்டிருந்தனர். இன்நிலையில் 2015 ஆம் ஆண்டு எந்த ஒரு வீடும் மாவட்ட செயலகத்தினால் வழங்கப் படாமல் நீண்ட கால இடம்பெயர்வை இனச்சுத்திகரிப்பாக சந்தித்திருந்த யாழ் முஸ்ளிம்களுக்கு பொருந்தாத புதிய நிபந்தனைகளை மேற்படி அதிகாரிகள் விதித்திருந்தார்கள். அத்துடன் ஐந்து வருடங்கள் எந்த ஒரு வீட்டுத் திட்டமும் இம்மக்களுக்கு வழங்கப் படவில்லை. பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவ…

    • 5 replies
    • 1k views
  17. பதவி நிலைக்கும் சிறிலங்கா கடற்படைக் கோவைக்கும் துக்கமான நாள் இது என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி, றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இது தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான, றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தனது கீச்சகப் பக்கத்தில், நேற்று பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “பதவி நிலைக்கும் சிறிலங்கா கடற்படைக் கோவைக்கும் துக்கமான நாள்” என்று கூறியுள்ளார். http://w…

  18. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகுதிரி கொழுத்தி அஞ்சலி செலுத்தியமை அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களைப் புகைப்படமெடுத்துக்கொண்டிருந்த புலனாய்வாளர் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மக்களின் கண்ணீருடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தலைக் கண்டு உணர்வுப்பூர்வமாக தனது அஞ்சலியினை செலுத்தியமை காண முடிந்தது. http://www.virakesari.lk/article/45386

    • 6 replies
    • 1.3k views
  19. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணம் – வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் அந்த வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்தன. மோட்டார் சைக்கிள் இரண்டு அடித்துச் சேதமாக்கப்பட்டன. 8 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஆரியகுளம் சந்தியில் கராஜ் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கராஜ் உரிமையாளர் நேற்று இரவு முச்சக்கர வண்டிகள் இரண்டை வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளா…

  20. November 29, 2018 எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் நாளை (30.11.18) பிற்பகல் கலந்துரையாடி நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வொன்றை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள…

  21. யாழ் கொழும்பு பஸ் விபத்து- மூன்று பெண்கள் பலி ! யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த அதிசொகுசு பஸ்வண்டி நாத்தாண்டியாவில் தடம்புரண்டதில் மூன்று தமிழ்ப் பெண்கள் கொல்லப்பட்டதுடன் வேறு 19 பேர் காயமடைந்துமுள்ளனர். நாத்தாண்டியாவின் ஹமில்டன் கால்வாய்ப் பகுதியில் இன்று மாலை இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பிந்திக் கிடைத்த தகவல்களின்படி நான்குபேர் கொல்லப்பட்டதுடன், இன்னும் 24 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் பள்ளத்தில் வீழ்ந்திருப்பதால், மீட்ப்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதோடு, பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர். தனியாருக்குச் சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியிருக்கிறது. http://www.virakesari.lk/article/45446

  22. தமிழீழ விடுதலைப்போரியல் வரலாற்றில் தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூறுகின்ற இந்த மாவீரர் நாளினை இன்றைய தினம் தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கில் பூராகவும் பூரண உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுச்சுடரினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதியான லெப்.கேணல் கில்மன் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் ஆகியோரின் தந்தையார் பொதுச்சுடரினை ஏற்றினார் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுவதற்கு முன்பு பிரிகேடியர் தீபனே கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரை ஏற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. http://nakarvu.com/2018/11/27/தாயகம்-எங்கும்-உணர்வெழுச/ கோப்பாய் துயில…

    • 31 replies
    • 5k views
  23. யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் யாழ்ப்பாணம் – வைமன் வீதியில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் வீட்டில் தரித்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஆரியகுளம் சந்தியில் வாகானம் திருத்தும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு முச்சக்கரவண்டிகள் எரிந்து சேதமாகியுள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள்கள் வாளால் வெட்டப்பட்டும், வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும் காணப்பட்டதாக வீட்டின் உரிமையாளர…

  24. நீதிமன்றத்தில் சரணடைந்தார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்துள்ளார். கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு முன்னதாக கோட்டே நீதிவான், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார். நேற்று, அவருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்திருந்த நிலையில், அந்த விசாரணைக்கு முன்னிலையாகாத, அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இன்று நீதிமன்றில் முன்னிலையாகி சரணடைந்தார். …

    • 11 replies
    • 1.7k views
  25. ஏ - 9 வீதியில் கட்டாக்காலி மாடுகளால் பொதுமக்கள் பெரும் அவதி கிளிநொச்சி நகர் மற்றும் இரணைமடு சந்தி உள்ளிட்ட ஏ9 வீதியில் கட்டாக்காலி மாடுகள் வீதியின் நடுவில் நிற்பதால் போக்குவரத்துக்களில் பெரும் சிரமங்கள் ஏற்படுவதாகச் சாரதிகள் மற்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட குறித்த பகுதிகளில் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஏ9 வீதி ஊடாக போக்குவரத்து அதிகளவில் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறு வீதியின் நடுவில் மாடுகள் காணப்படுவதால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெற்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.